Thursday, February 23, 2006

நுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு

நுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் 2006 (Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act 2006) ஐ எதிர்த்து வழக்கு ஒன்று இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற பெஞ்ச் சில சுவாரசியமான தகவல்களை எடுத்துக் கூறியுள்ளது:

* இந்தச் சட்டம் தமிழக ஸ்டேட் போர்டில் படிக்கும் கிராம மாணவர்களை பிற போர்டுகளில் படிக்கும் மாணவர்களிடமிருந்து காப்பதற்காக என்று சொல்வது தவறானது. ஏனெனில் சென்ற ஆண்டு மருத்துவத் துறைக்குத் தேர்வானவர்களில் ஒருவர்கூட CBSE அல்லது பிற போர்டுகளிலிருந்து வரவில்லை.

* கிராம மாணவர்களை பிற போர்டுகளிலிருந்து காப்பதைவிட நகரங்களில் இருக்கும் ஸ்டேட் போர்டிலேயே படிக்கும் மாணவர்களிடமிருந்துதான் காக்க வேண்டும்.

* நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் டூ இறுதித் தேர்வு மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் இதே பிரச்னைதான் இருக்கும். [காலச்சுவடு இதழில் ரவிக்குமார் இதைப்பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.]

தி ஹிந்து செய்தி ஒன்று | இரண்டு

2 comments:

  1. PMK made this a big issue and raised the bogey of rural students
    being affected by entrance test.PMK
    did not bother about the complex nature of the issue.Ravi Kumar is silent on this aspect.He tries to defend reservations and yet scoffs at populist measures.

    ReplyDelete
  2. Badri,

    Can you pl. change your template so as to have your "blogpost name" appear in technorati தமிழ்ப்பதிவுகள் , rather than your "blogname" itself ?

    ReplyDelete