Wednesday, April 04, 2007

உலகக்கோப்பை - 3

கிரிக்கெட்டில் தோற்றால் உயிரே போனதுபோல அத்தனை தொலைக்காட்சி நிலையங்களும் செய்தித்தாள்களும் நெஞ்சில் அடித்துக்கொள்கின்றன.

இயான் சாப்பல் டெண்டுல்கர் ஓய்வுபெறவேண்டும் என்கிறார். கும்ப்ளே இயான் சாப்பல் வாயை மூடிக்கொள்ளவேண்டும் என்கிறார். கிரேக் சாப்பல் கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதி அனுப்பியதாக ஏகப்பட்ட விஷயங்கள் வெளியாகியுள்ளன. அதில் டெண்டுல்கர் முதலான சீனியர் வீரர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக வதந்திகள் தெரிவிக்கின்றன. உடனே டெண்டுல்கர் சோகக்கண்ணீர் வடிக்கிறார். என் வாழ்நாளில் இதுவரை என்னை யாரும் இப்படிச் சொன்னதில்லை என்கிறார்.

சரி, நாமும் நமக்குத் தோன்றியதை எழுதிவிட்டுப் போவோமே!

1. டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகவேண்டும். இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடினால் போதும். (அதற்கும் காலக்கெடு வைத்து நகரவேண்டும்...)

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குமுன், ஜூலை 2004-ல் டெண்டுல்கரின் ஆட்டத்தில் அழகு குறைந்துவிட்டது, ஆனால் ரன் எடுக்கும் திறன் குறையவில்லை என்று எழுதியிருந்தேன். இப்பொழுது ஒருநாள் போட்டிகளில் ரன் எடுக்கும் திறனும் குறைந்துவிட்டது. இனியும் தொடர்ந்து இருந்தால் அவமானம்தான்.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அடுத்த ஒரு வருடமாவது தொடர்ந்து விளையாடலாம். விளைவைப் பொருத்து, தொடரலாமா, வேண்டாமா என்று அவரே முடிவுசெய்துகொள்ளலாம்.

2. கிரெக் சாப்பல் தானாகவே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவேண்டும். இது இந்தியாவின் தோல்வியைக் காரணமாக வைத்து அல்ல. அவருக்கு இருக்கும் ஆதரவு பலவேறு திசைகளிலும் குறைந்துவிட்டது. எனவே எந்தச் சின்னத் தவறுக்கும் அவரது கழுத்தை வெட்ட எதிரிகள் முனைவார்கள். இது தேவையற்ற டென்ஷன். இதற்குபதில் கொஞ்சம் புரொஃபஷனலான கிரிக்கெட் வாரியத்துக்கு வேலை செய்யப்போகலாம்.

3. ராஹுல் திராவிட் - தொடரவேண்டும். இளைஞர்களை வழிநடத்த திராவிட் இன்னமும் மூன்று ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக இருக்கவேண்டும்.

4. கங்குலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவேண்டும். ஒருநாள் போட்டியில் அவருக்கான நேரம் இன்னமும் ஒரு வருடம் மட்டுமே என்று நினைக்கிறேன்.

5. கும்ப்ளே அடுத்த ஒரு வருடத்துடன் டெஸ்ட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறவேண்டும்.

இவை அனைத்தையும் செய்தாலும் இந்திய அணி அடுத்த சில வருடங்கள் மேல் நிலைக்கு (முதல் அல்லது இரண்டாம் இடம்) வரமுடியாது. இந்திய கிரிக்கெட்டில் எக்கச்சக்கமான பணம் இருக்கிறது. அது கொஞ்சம் குறையவேண்டும். கிரிக்கெட் வாரியம் மிக மோசமான அரசியல் நடத்தும் களமாக இருக்கிறது. அது மாறவேண்டும். அதற்கெல்லாம் பத்தாண்டுகள் அல்லது அதற்கும் மேல் ஆகும். அதுவரையில் பிரச்னைகள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

ரஞ்சி அணி அளவில் விளையாட்டு வீரர்கள் தேர்வில் எக்கச்சக்கமான குழப்பங்கள், தில்லுமுல்லுகள் உள்ளன. ரஞ்சி அணித் தேர்வாளர்கள், முன்னுக்கு வரும் இளைஞர்களை பழிவாங்குவது, காசு வாங்கிக்கொண்டு திறமையில்லாதவர்களைத் தேர்ந்தெடுப்பது, சில வீரர்களைத் துரத்தி துரத்தி அடித்து வேறு மாநிலங்களுக்கு அனுப்பி ஆட்டத்திலிருந்தே ஒழித்துக்கட்டுவது, ஜூனியர் கிரிக்கெட்டில் (U-19, U-16, U-14) ஊழல் என்று அடிப்படையிலேயே ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன.

இவற்றை ஒரேயடியாகத் தீர்க்க முடியாது. ஆனால் கீழ்க்கண்ட வழிகளைச் செய்யவேண்டும்.

1. பிசிசிஐ ஆண்டாண்டுக்குத் தேர்தல்களை நடத்தி தால்மியாவும் ஷரத் பவாரும் கத்திச் சண்டை போட்டுவிட்டுப் போகட்டும். ஆனால் கிரிக்கெட் வாரியத்துக்கு என்று தலைமைச் செயல் அலுவலர் (CEO), பிற முழுநேரப் பணியாளர்கள் ஆகியோரை புரொஃபஷனல்களாகத் தேர்வு செய்யவேண்டும்.

2. இதே பாணியைப் பின்பற்றி ஒவ்வொரு ரஞ்சி அணியும் தொழில்முறை நிர்வாகிகளைப் பணியில் அமர்த்தவேண்டும்.

3. கிரிக்கெட் வாரியம் தான் சம்பாதிக்கும் கணக்கற்ற பணத்தைவைத்து என்ன செய்கிறது என்பதை பொதுத் தணிக்கை மூலம் மக்களுக்குச் சொல்லவேண்டும். தேவைப்படும்பொதெல்லாம் கிரிக்கெட் வாரியம் தன்னை ஒரு தனியார் அமைப்பு என்றும், பிற நேரங்களில் தான்தான் இந்திய நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் ஏகபோகப் பிரதிநிதி என்றும் மாற்றி மாற்றிச் சொல்கிறது. இந்தியக் கிரிக்கெட் வாரியம், தன்னாட்சி பெற்ற ஆனால் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அமைப்பு என்றும், அதன் வரவு செலவுக் கணக்குகள் கட்டாயத் தணிக்கைக்கு உட்பட்டது என்றும் சட்டம் இயற்ற வேண்டும்.

4. கிரிக்கெட் வாரியத்தின் உபயோகப்படாத உபரிப் பணத்தை அரசு கையகப்படுத்தி பிற விளையாட்டுகளின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தவேண்டும்.

5. கிரிக்கெட் அணித் தேர்வில் நிறைய முன்னேற்றங்களைக் கொண்டுவரலாம். ஆனால் ஒழுங்கான நிர்வாகிகளைக் கொண்டுவந்தால் இது தானாகவே நடக்கும்.

6 comments:

  1. நூறு கோடி ரூபாய் முதலீட்டிலே, zee குழுமம், இந்தியன் கிரிக்கெட் லீக் என்று புதுசாக ஒன்று துவக்கி இருக்கிறார்களே... தேறுமா அல்லது புட்டுக்குமா?

    ReplyDelete
  2. இத்தனை நாள் பல அடிதட்டு மக்கள் கிரிக்கெட் ஆட அனுமதிக்காத்தால் அவர்களுக்கும் இதில் இட ஒதுக்கீடு கொடுத்து
    அவர்களை முன்னேற்றலாம்.
    :-))

    ReplyDelete
  3. அடடா! இங்க இப்படி போட்டுவிட்டு பார்த்தால்- ஹரி, விப்ரோ பிரேம் ஜி சொன்னதாக ஒரு பதிவு இதைப்பற்றி போட்டுள்ளார்.

    ReplyDelete
  4. சுபாஷ் சந்திரா சரியான நேரம் பார்த்துதான் குட்டையைக் குழப்புகிறார். வாரியம் இதற்கு ஒப்புதல் தராது. அதனால் வாரியத்துடன் சண்டை போட்டுக்கொண்டுதான் இந்த லீகை நடத்தமுடியும்.

    ஒரு ஐந்து வருடம் சண்டை நடக்கும். சுபாஷ் சந்திராவுக்கு திடமான நுரையீரல் இருந்தால்...

    ReplyDelete
  5. விப்ரோ பிரேம்ஜி மெயில் ஒரு hoax. அதுபோல் நிறைய ஏமாத்து மெயில் இணையத்தில் உண்டு. அப்துல் கலாம் ஸ்பீச் ஒண்ணும் வேற விஷயத்துல உண்டு. இதெல்லத்தையும் கண்டுக்கவே கூடாது.

    ReplyDelete
  6. //1. டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகவேண்டும். இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடினால் போதும். (அதற்கும் காலக்கெடு வைத்து நகரவேண்டும்...)//

    But coming to the next point, I don't think that there is any justification to Drop Any Senior Players.....

    Team should be selected from the best 11 available in the country

    Reward or Punishment is a bad

    By reward, we mean selecting an individual for "some reason" (past performance) when we have a better individual outside 11

    By punishment, we mean omitting an individual for "some reason" (failure in two matches), when we don't have a person who can match him

    Indian selectors did the first mistake for a long time

    And now they are planning to do the second mistake now....

    It is agreed that Sachin of Today is not the sachin of yesterday..... but are there 11 players (or 5 batsman) who can play better than him ..... I don't think so. See the following table prepared by Vivek Kumar (http://vivekspace.wordpress.com/2007/03/27/dropping-tendulkar-and-others/)



    You see the average from your table.... I don't think that any player with an average of 44 can be said to be "out of form"... He is pretty much "in form"....

    If you are going to drop some one with an average of 44, you need to bring in some one who can score better than that.... I don't think that India has the bench strength of that calibre at present....

    It is time to think with head rather than heart

    When Ian Healy was dropped by Australia, they had Gilchrist in Waiting…. and hence healy was “not dropped”… But Gilchrist was “selected” as he was “better” than Healy….

    The only time, our selectors did this was in April 1996…. Other than that, our selection policy had been either “Reward” or “Punishment” including once dropping Kapil for a bad shot he played as a batsman, when it was very evident that he was the best bowler in the country at that time…

    While every one shouts loudly that “inclusion” in the team should be based on evidence and not on emotion, I am surprised as to why they want “exclusion” based on Emotion rather than evidence….

    Learn from what South Africans did with Pollock after World Cup 2003… If he had been in India, we would have wasted his bowling also by dumping him totally !!!

    ReplyDelete