Wednesday, May 21, 2008

இரு புத்தகங்கள்: சென்னை + இலங்கை

Oxygen Books என்னும் பதிப்பு வாயிலாக இந்த வாரம் நாங்கள் வெளியிட்டிருக்கும் நான்கு புத்தகங்களில் இரண்டு பற்றி இங்கே:

1. Madras: Tracing the Growth of the City since 1639 by KRA Narasiah

சென்னை என்று இன்று நாம் அழைக்கும் நகரத்தின் கடந்த சில நூற்றாண்டு வரலாறு இந்தப் புத்தகத்தில் உள்ளது. நரசய்யா தமிழில் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் வாயிலாக 2006-ல் வெளியான புத்தகம் 'மதராசபட்டினம்'. இதனை ஆங்கில மொழியாக்கமாக இல்லாமல், நரசய்யாவே மீண்டும் ஆங்கிலத்தில் புதிதாக எழுதியிருக்கிறார். நிறைய திருத்தங்கள், மாற்றங்களுடன் செறிவாக எழுதப்பட்டுள்ளது.

2. Heroes or Villains: Sri Lanka circa 2007 by N Sathiya Moorthy

2006, 2007-ம் வருடங்களில் சென்னை அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் சத்திய மூர்த்தி, இலங்கை அரசு, ராணுவம், விடுதலைப் புலிகள், இந்திய அரசு, தமிழக அரசு, தமிழகக் கட்சிகள், இலங்கைக் கட்சிகள், புலி எதிர்ப்பாளர்கள், மனித உரிமை போன்ற பலவற்றைப் பற்றி கொழும்புவிலிருந்து வெளியாகும் The Daily Mirror பத்திரிகையில் எழுதிய கருத்துப் பத்திகளில் தொகுப்பு.

1 comment:

  1. சென்னையின் வர்த்தகம், வணிக நிறுவனங்கள் எல்லாம் கவர் செய்யப்பட்டிருக்கிறதா?

    ReplyDelete