Thursday, December 11, 2008

மொட்டைமாடிக் கூட்டம் - ஞாநி, மும்பை பற்றி

16 டிசம்பர் 2008, செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6.00 மணி அளவில், சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் ரோட், கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடியில் பத்திரிகையாளர் ஞாநி, ‘மும்பை பயங்கரவாதத் தாக்குதல்’ குறித்துப் பேசுவார்.

அதில் முக்கியமாக, ஊடகங்களின் நடத்தை பற்றியும், உளவு ஏஜென்சிக்களின் தோல்வி பற்றியும் பேசுவார். மேற்கொண்டு, பங்கேற்போரின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.

கட்டாயம் வாருங்கள்.

7 comments:

  1. ஞானியைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?

    ReplyDelete
  2. ஞாநி இரண்டு முறை இதைப் பற்றி எழுதிவிட்டார்.புதிதாக என்ன சொல்வார் என்பதை அறிய ஆவல்.

    ReplyDelete
  3. ஞானியிடம் யாராவது "நாயை விட கேவலமான குடும்பம்" என்று கூறிய கேரள முதல்வரின் நிதானத்தையும், புத்திசாளித்தனத்தையும், புரிதலையும் பற்றிய கேள்வி எழுப்ப முடியுமா ? ஞானியின் பதிலை கேட்க ஆவலாக இருக்கிறேன்.

    என்னால் வர இயலாமையால், இந்த கேள்வியை அங்கு செல்லும் யாரோ ஒருவர் கேட்க பணிக்கிறேன்.

    ReplyDelete
  4. தமிழக பத்திரிகைகள் / ஊடகங்கள் குறித்த உள்/வெளி குத்துகளை நன்கறிந்தவரான ஞாநியிடம் ஊடகத்துறையில் தனது அனுபவங்களைப் பற்றிப் பேசச் சொல்லியிருக்கலாம்.

    மும்பை பயங்கரவாதத் தாக்குதல் பற்றியோ, இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியோ அவரால் அயோக்கியத்தனமாக மட்டுமே பேசவும், இடதுசாரிகளின் வழக்கமான பொய்களை மட்டுமே சொல்லவும் முடியும்.

    ஞாநிக்கு இந்தத் தலைப்பைக் கொடுத்ததற்கு உங்களுக்கு இந்த வாரக் குட்டு!

    ReplyDelete
  5. //ஞானியிடம் யாராவது "நாயை விட கேவலமான குடும்பம்" என்று கூறிய கேரள முதல்வரின் நிதானத்தையும், புத்திசாளித்தனத்தையும், புரிதலையும் பற்றிய கேள்வி எழுப்ப முடியுமா ? ஞானியின் பதிலை கேட்க ஆவலாக இருக்கிறேன். //

    அமைதிக்குப் பெயர் போன கேரள முதல்வரையே அதுபோல பேசவைத்த அந்த இராணுவ அதிகாரியின் தகப்பனார் பற்றி போடுபோடுவென்று போடுவார் என்று நினைக்கிறேன் :)

    ReplyDelete
  6. MEDIA IS MAKING THE MOLE AS HILL AND THE HILL AS A MOLE, FOR THEIR COMMERCIAL BENIFIT RATHER FOR THE NATIONAL INTEREST. THIS APPLIES FULLYB TO THE RECENT BLOGGERS WHO WISH TO DOMONATE IN ALL TOPICS WETHER IT IS KNOWN TO THEM OR NOT. KINDLY ACCEPT OTHER`S VIEWS. THEY TOO HAVE EVERY RIGHT TO EXPRESS THIER FEELINGS AS RIGHTLY AS YOU DID EXPRESS. REMEBER THE QOUTE `` I MAY DISAGREE WITH YOUR VIEWS BUT FIGHT FOR YOUR RIGHTS TPO SAY THAT``

    ReplyDelete