Thursday, August 21, 2003

எப்படிச் செய்கிறேன்? 


மாநாட்டை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நீங்களும் அவ்வாறே என்று எண்ணுகிறேன்!

நண்பர்களோடு சந்திப்பு 


நேற்று இரவு உள்ளூர்க்காரர் மாலனுடன், சிங்கப்பூர் அருண் மகிழ்ணன், நாராயணன், மலேசியா 'முரசு' முத்து நெடுமாறன், சுவிட்சர்லாந்து 'மயிலை' கல்யாணசுந்தரம், யூனிகோடு பற்றிப் போராடும் அமெரிக்கா மணி மணிவண்ணன் ஆகியோரோடு சந்தித்துப் பேசினோம். மணிவண்ணன், நாராயணன் நீங்கலாக மற்றவர் அனைவரும் ஓட்டல் சவேராவின் மால்குடி உணவகத்துக்குச் சென்றோம். அப்பொழுது எடுத்த படம் மேலே. முத்து, அருண், மாலன், நான், கல்யாண் என்று வரிசை. நடக்கவிருக்கும் மாநாடு பற்றியும் மற்ற பல பற்றியும் நிறையப் பேசினோம்.

This page is powered by Blogger. Isn't yours?