Sunday, February 16, 2003

இராக் போர்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இப்பொழுது நடந்து கொண்டிருப்பதால் வேலை பளு அதிகமாக உள்ளது. தொலைதொடர்பு நிறுவனங்கள் பற்றிய எண்ணங்கள் தொடரும் - சிறிது கால இடைவெளிக்குப் பிறகு.

அமெரிக்காவும், பிரிட்டனும் இராக் மீது போர் தொடுத்தே தீறுவேன் என்று ஏகாதிபத்திய அறிக்கை வெளியிட்டுக்கொண்டிறுந்தாலும், மற்ற நாடுகள், முக்கியமாக ஃபிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகள் அதை எதிர்த்திருப்பது வரவேற்கத் தகுந்தது. இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இதையே வலியுறுத்தியிறுப்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், இதையெல்லாம் விட மேலாக, 5 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அமெரிக்க மக்களே நியூயார்க் நகரில் போர் எதிர்ப்பு மாநாடு நடத்தியிருப்பது பெருமகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. இன்னும் ஒரு சில அமெரிக்கர்கள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு தன்னாதிக்கமாக இராக் மீது போர் தொடுக்க அதிகாரம் இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட் (Senate) மற்றும் கீழவையின் (House of Representatives) அனுமதி இல்லாமல் அவர் இந்த விஷயத்தில் இயங்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளனர்.

இதனால் தேவையில்லாத போர் நடக்காது என்று நம்புவோம். இராக் அதிபர் சத்தாம் ஹுஸைன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு இடம் கொடுத்து தன் நாட்டில் உள்ள பொது அழிவு ஆயுதங்களை ஒட்டுமொத்தமாக அழித்தல் அவருக்கும், அவரது நாட்டு மக்களுக்கும், பிற நாட்டு மக்களுக்கும் மிகவும் நல்லது.

No comments:

Post a Comment