இப்பொழுது வார இறுதி விடுமுறையில் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறேன். இன்று காலை தொலைக்காட்சி செய்தியில் சென்னைக் கடற்கரை சீரணி அரங்கம் இரவோடு இரவாக பொதுப்பணித்துறையினரால், காவலர் உதவியுடன் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது காண்பித்தனர். ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று புரியவில்லை. மக்களுக்கு ஒரு விளக்கமும் காணோம். கண்ணகி சிலை, இப்பொழுது சீரணி அரங்கம் - நடுவில் இராணி மேரி கல்லூரி இடிக்கமுடியாது போய்விட்டது.
அடுத்தமுறை ஆட்சிப்பக்கமே வராதவாறு ஜெயலலிதாவை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.
ஓர் அமரகாதல்
4 hours ago
No comments:
Post a Comment