Wednesday, August 27, 2003

மழைநீர் சேகரிப்பு

* காலையில் அலுவலகம் வரும் வழியில் வழக்கமாக சென்னை FM 2 கேட்டுக் கொண்டு வருவேன் (8.45-9.00 மணி). அதில் செய்திகளை அலசும் விவாதம் ஒன்று நடக்கும். இன்று வித்தியாசமாக ரேடியோ மிர்ச்சி 98.3 FM போட அதில் முதல்வர் ஜெயலலிதா அழகு தமிழில் மழைநீர் சேகரிப்பு பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இராமநாதபுரத்தில் மழைநீர் சேகரிப்பு + அரசு சார்பில் குளம், குட்டை, சாக்கடை, கால்வாய் எல்லாம் தூர் வாரப்பட்டு தண்ணீர் சேகரித்து வைத்ததில் அங்கு தண்ணீர்ப் பஞ்சம் போயே போய் விட்டது என்றும் வறட்சி சமயத்தில் பிழைப்புக்காக மற்ற ஊர்களுக்கு ஓடும் இராமநாதபுரம் மக்கள் இப்பொழுது' வரலாறு காணாத அளவில்' நிம்மதியாக ஊரோடே இருப்பதாகச் சொன்னார். நம்ப முடியவில்லை. ஆனாலும் மழைநீர் சேகரிப்பு மிக மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என் குடியிருப்பிலும் இன்றோடு வேலை முடிந்து விடும்.

* வக்கீல் K.M.விஜயன் (VOICE என்னும் அமைப்பு சார்பில்) பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார். இந்த மழைநீர் சேகரிப்புக்கான அமைப்பு இல்லாத வீடுகளுக்கு சென்னைக் குடிநீர் வாரியம் தண்ணீர் வழங்குவதை நிறுத்தி விடும் என்று சொல்வது நியாயமானதல்ல என்கிறார். அதுவும் மிகக் குறைந்த காலகட்டமே மக்களுக்குக் கொடுக்கப்பட்டது என்றும், PVC குழாய்கள் இப்பொழுது ஆனை விலை விற்பதாகவும், இதெல்லாம் சரியில்லை என்றும் அவரது வாதம். என்னுடைய பழைய வலைப்பதிவு ஒன்றையும் பார்க்கவும்.

No comments:

Post a Comment