Sunday, September 28, 2003

யாஹூ குழுமங்கள் மீதான் முழுத் தடை

இன்று விடியற்காலை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகாவினரோடு சண்டை போட்டுவிட்டு வந்து சேர்ந்தால் மதிப்புக்குறிய இந்திய நடுவண் அரசு கடைசியாக இந்திய இணையச் சேவை நிறுவனங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக யாஹூ குழுமங்களை (http://groups.yaho.com/) தடை செய்ய வைத்திருப்பதை அறிந்தேன். இந்திய அரசும், இந்திய இணைய நிறுவனங்களும் இணையத்தைப் பற்றி சிறிதும் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியாது.

இந்தத் தடையினால் பொது மக்களுக்கு எவ்வளவு தொல்லைகள் என்பதை முட்டாள்கள் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். யாஹூ குழுமங்களைப் படிப்பவர்கள் அடுத்துள்ள கட்டுரையினால் பயன்பெறலாம்.

No comments:

Post a Comment