Wednesday, October 15, 2003

நினைத்ததை முடிப்பவன்

ராயர்காபிகிளப்பில் தமிழில் தட்டச்சு செய்வதைப் பற்றிய விவாதம் நடக்கையில், பேச்சுணரி (speech recognition) வந்து விட்டால் இனி தட்டச்சு பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லப்பட்டது. அதற்கு வெங்கட் பேச்சுணரியெல்லாம் பழைய விஷயம், இப்பொழுது நடக்கும் ஆராய்ச்சியெல்லாம் மனதில் நினைத்ததை கணினியில் நிகழ வைப்பது என்றார். நம்ப முடியவில்லை எனக்கும். அது பற்றி ஒரு கட்டுரைத் தொடரை ஆரம்பித்துள்ளார்.

நேற்று இதைப்பற்றிய செய்தி ஒன்றை 'தி ஹிந்து'வில் பார்க்க நேரிட்டது. கூகிளில் தேடியதில் சற்றே விரிவான கட்டுரை ஒன்று கிடைத்தது. இந்தச் செய்திப்படி குரங்குகளுக்கு மூளை வழியாக அனுப்பும் சிக்னல்கள் மூலம் ஒரு ரோபோ கையை இயக்கப் பயிற்சி கொடுத்துள்ளனராம்.

No comments:

Post a Comment