Monday, October 20, 2003

தீபாவளி

அதிக ஆர்வமில்லாமல் இந்த வருடமும் தீபாவளி. ஸ்ரீரங்கம் போகவேண்டும். எல்லோருக்கும் இருக்கும் உற்சாகத்தைப் பார்க்கும் போது அதிசயமாய் இருக்கிறது.

அப்படி என்ன குதூகலிக்க இந்நாள் என்று.

எப்பொழுது வேண்டுமானாலும் துணி வாங்கிக் கொள்ள இப்பொழுது முடிகிறதென்பதால் தீபாவளியும் புதுத்துணியும் என்ற உறவு இல்லாமல் போனதாலா? இனிப்புகளும் அப்படியே. வேண்டும்போது வேண்டியதை வாங்கி உண்ண முடிவதாலும், உடுக்க முடிவதாலும், இந்த விழாக்களுக்கான அடிப்படைக் காரணங்களுடன் மனம் ஒன்ற முடியாததாலும் (நரகாசுரன் செத்தால் எனக்கென்ன? இராமனை அவனது நாட்டு மக்கள் வரவேற்றால் எனக்கென்ன?) தீபாவளி என்று ஒன்றின் மேல் பற்றுதல் இல்லை.

வெடிகள் மீது வெறுப்புதான் வருகிறது. வீண் சத்தமும், புகையும். சுற்றுச் சூழல் மாசுபடுவதுடன் உயிருக்குப் பெருத்த அபாயமும் கூட. குடிசை வீடுகளின் அருகே கூட எந்தக் கவலையும் இன்றி வெடி வெடிக்கும் மக்களைப் பார்த்திருக்கிறேன். எப்படி முடிகிறது இவர்களால்?

No comments:

Post a Comment