Tuesday, October 28, 2003

குருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்துகள்

துக்ளக் 29 அக்டோபர் 2003 தேதியிட்ட இதழ், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" கட்டுரைத் தொடரின் 56ஆவது பகுதியிலிருந்து

[முன்கதை: சுகந்தி என்ற பெண்மணி தன் கணவனுடன் வாழப் பிடிக்காமல் விவாகரத்து கோரியிருக்கிறார். வலயப்பட்டி என்று கிராமத்தில் வசித்து வந்த இவர், கணவனுடன் பிரிந்து வேறிடத்தில் வசித்து வந்திருக்கிறார். சுகந்தியின் கணவன் வலயப்பட்டி பஞ்சாயத்திடம் புகார் செய்ய - இந்தப் பஞ்சாயத்தானது குடியுரிமைச் சட்டத்தில் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, ஆனால் வழக்குகளை தள்ளுபடி செய்யும் கிராம நிறுவனம், சினிமாக்களில் காண்பிக்கப்படும். - வலயப்பட்டி பஞ்சாயத்தார் சுகந்தியை கணவனுடன் சேர்ந்து வாழச் சொல்லியுள்ளனர். அதற்கு அவள் மறுக்க சுகந்தியை அபராதம் கட்டச் சொல்லியுள்ளனர். சுகந்தியிடம் பணம் இல்லை என்பதால் அவளையும், அவளது தாயையும் தங்கள் முன் கீழே விழுந்து வணங்கச் சொல்லி, ஒவ்வொரு முறை கீழே விழுவதற்கும் இத்தனை பணம் குறைத்துக் கொண்டு கடைசியாக அபராதத் தொகை ரூ. 19,058.75 என்று முடிவாக்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து சுகந்தி சென்னை உயர் நீதிமன்றத்திடம் தாக்கல் செய்ய, வழக்க்கு நீதிபதி கற்பக விநாயகம் அவர்களிடம் வந்திருக்கிறது. தவறு செய்த பஞ்சாயத்துக் காரர்களை தண்டித்த பின் நீதிபதி "உங்களுக்கு வேலை வெட்டியில்லை... அதனால்தான் நீங்கள் சீட்டாடிக் கொண்டும், குடித்துக் கொண்டும் அலைகிறீர்கள். மற்ரவர்களை அழைத்து வக்கிரமான சந்தோஷம் அடைகிறீர்கள்" என்றும் "உங்களுக்கு வேலை வெட்டி இல்லையென்றால், நீங்கள் ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு சட்டத்துக்கு விரோதமாக தீர்ப்பு கொடுக்கக் கூடாது. நாங்கள் இதுபோன்ற பழக்கங்களை நிறுத்துவோம். இதுபோன்ற வழக்குகளை நடத்த சட்டம் இருக்கும்போது நீங்கள் யார் அவர்களை ஊரை விட்டுத் தள்ளிவைப்போம் என்று மிரட்ட...? நீங்கள் அவர்களை ஊரை விட்டுத் தள்ளி வைத்தால், நீங்கள் தமிழ்நாட்டை விட்டே தள்ளி வைக்கப் படுவீர்கள். இனிமேல் ஏதாவது விஷமம் செய்தால் உங்களை ஓராண்டுக்கு சிறையில் தள்ளுவோம்" என்று கருத்து கூறியிருந்தார்.]

இதுபற்றிய குருமூர்த்தியின் கருத்துகள் மற்றும் என் கருத்துகள் பின்னர்.

No comments:

Post a Comment