Tuesday, October 28, 2003

ஜெயலலிதாவின் குட்டிக் கதைகள்

எனக்கு முதல்வர் ஜெயலலிதாவின் குட்டிக்கதைகள் மீது பயங்கர ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் விடாது இவைகளை வலைப்பதிவிட வேண்டும் என்று ஆர்வம். இன்று முதல் ஆரம்பிக்கிறேன்.

தினமலர் தினசரி இவைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அத்தனையும் தினமலர் ஆன்லைனில் இருக்காமல் போகலாம். கீழ்க்கண்ட 'format'ஐ நடைமுறைப் படுத்துகிறேன்: எங்கு பேசினார் - ஆன்லைன் சுட்டி இருந்தால் அது - கதைச் சுருக்கம் - யாரைப் பற்றி.

நேற்றையது: இடம்: தஞ்சாவூர்; நாள்: 27 அக்டோபர் 2003; மேடை: அரசு திட்டப் பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டு விழா

கதை:
ஒரு ஊரில் ஒரு பயில்வான் இருந்தான். ஒரே நேரத்தில் ஆறு, ஏழு பேரை அடித்து வீழ்த்தும் ஆற்றல் பெற்றவன். இதில் வேடிக்கை என்னவென்றால், காற்றடித்தால் பறந்து விடும் நோஞ்சான் ஒருவன், இவனைத் தொடர்ந்து அடித்து வந்தான். பயில்வான் திரும்ப அடிக்கவில்லை. ஏன் திரும்பித் தாக்கவில்லை என்பது ஊர் மக்களின் கேள்வியாக இருந்தது. பயில்வானிடம் இதுபற்றி மக்கள் கேட்டனர். அத்துடன் "திருப்பி அடி, திருப்பி உதை" என்று கூக்குரல் இட்டனர். இவர்களைப் பார்த்த பயில்வான் கோபமடைந்தான். "என்னை என்ன ஏமாளி என்றா நினைத்தீர்களா?, நான் யார்?, ஒரு லட்சம் ரூபாய் பந்தயம் கட்டினால் தான் சண்டை போடுவேன், பைசா ஏதும் தராமலேயே ஒருவரை அடி என்கிறீர்களே, பணம் வாங்காமல் சண்டை போட நான் என்ன ஏமாளியா?" என்றான்.

யாரைப் பற்றி:
கருணாநிதி "இவர்கள் ஆட்சி செய்வார்கள். எதிர்க்கட்சிக்காரர்கள் சென்று காவிரித் தண்ணீரை கொண்டு வர வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தாராம். அதற்கு பதில்தான் மேற்கூறிய குட்டிக் கதை.

No comments:

Post a Comment