Thursday, November 27, 2003

ஆந்திரம் நிசமாகவே முந்துகிறதா?

முந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம் என்ற இரு பகுதிக் கட்டுரை இண்டஸ்டிரியல் எகானமிஸ்டு ஆசிரியர் விஸ்வநாதன் எழுதி துக்ளக்கில் வந்தது. இக்கட்டுரையின் முதல் பகுதி பற்றிய என் வலைப்பதிவு இங்கே. இரண்டாம் பகுதி பற்றிய என் வலைப்பதிவு சனிக்கிழமைதான்.

இதற்கிடையில், ஆந்திராவில் வளர்ச்சி பற்றி இரு பகுதிக் கட்டுரை பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஆங்கில செய்தித் தாளில் நேற்றும், இன்றும் வெளியாகியுள்ளது. இணையத்தில் வெளியாகாத ஒப்பீட்டுப் படம் ஒன்றை செய்தித்தாளிலிருந்து வருடி இங்கே கொடுத்துள்ளேன்.

சாரம்:
* ஆந்திரா முயன்றும் அங்கிருந்து கணினி மென்பொருள் மற்றும் சேவை ஏற்றுமதி கர்நாடகத்தை விடக் குறைவு. கர்நாடகம்: ரூ. 12,350 கோடி, நோய்டா (தில்லி): ரூ. 7,450 கோடி, தமிழகம்: ரூ. 6,315 கோடி; ஆந்திரம்: ரூ. 3,668 கோடி.
* கையில் உள்ள ஆனால் செயல்படுத்தப்படாத முதலீட்டு - ஆந்திரம்: ரூ. 124,000 கோடி, கர்நாடகம்: ரூ. 115,000 கோடி, தமிழகம்: ரூ. 150,000 கோடி, குஜராத்: ரூ. 140,000 கோடி.
* செயல்படுத்தப்படும் திட்டங்களின் முதலீடு - ஆந்திரம்: ரூ. 49,000 கோடி, கர்நாடகம்: ரூ. 45,000 கோடி, தமிழகம்: ரூ. 43,000 கோடி
* ஆந்திரம் கடந்த எட்டு வருடங்களில் 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியை அதிகரித்திருந்தாலும் அங்கு மின்சாரக் கட்டணம் தமிழகத்தையும் மற்ற மாநிலங்களையும் ஒப்பிடுகையில் அதிகம்.
* ஆந்திரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நேரடி முதலீடு மிக அதிகமாக இருக்கிறது. இதனால் மாநில அரசு கிட்டத்தட்ட போண்டியாகும் நிலையில் உள்ளது. இதைப்போன்ற மற்றொரு மாநிலம் மகாராஷ்டிரமாம்.

இதையெல்லாம் வைத்து சந்திரபாபு நாயுடு வெறும் பேச்சளவில்தான், செய்கையில் தமிழகமும், கர்நாடகமும் முன்னணியில் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது. நாயுடு வந்தபொழுது இருந்த நிலையிலிருந்து திட்டமிட்டு கடந்த எட்டு வருடங்களில் ஆந்திரத்தை தமிழகம் மற்றும் கர்நாடகத்துடன் தீவிரமாகப் போட்டி போடும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். சென்னையில் கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வந்ததன் முக்கிய காரணமே இங்கிருக்கும் துறைமுகம்தான். இதுதான் ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு பாதகமாக உள்ளதொன்று. ஆனால் பெங்களூர் கணினி சார் துறையில் மிக அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆந்திரம் இதனைக் கருத்தில் கொண்டு உயிரியல் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பயோடெக் தொழிற்சாலைகள் வளர ஜீனோம் வேலி என்ற உயிரியல் பூங்காவைக் கட்டிக் கொண்டிருக்கிறார் நாயுடு.

No comments:

Post a Comment