Thursday, December 04, 2003

சத்தீஸ்கரிலும் பாஜக

எங்கும் காவி மயம்? அஜீத் ஜோகி தலைமையிலான காங்கிரஸ் தோற்றது சரியே என்று தோன்றுகிறது. ஆனால் பாஜகவால் சத்தீஸ்கரிலோ, அல்லது புதிதாக ஜெயித்த மற்ற இரண்டு மாநிலங்களிலோ நல்லாட்சி கொடுக்க முடியுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காங்கிரசுக்கு இது மிகவும் வருத்தம் கொடுக்கக் கூடிய நிகழ்வு. மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ். பாராளுமன்றப் பொதுத்தேர்தல் இதனால் சீக்கிரம் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment