Sunday, December 21, 2003

சங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு

'கவிமணியும் கலைவாணரும்' என்னும் புத்தகத்தின் ஆசிரியர் சிவ.கணேசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பேரன். இவருடன் மாலன் சன் நியூஸ் சங்கம் நிகழ்ச்சியில் உரையாடினார். வழக்க்கம் போலவே கிரிக்கெட் பார்ப்பதிலும், மற்றதிலும் நேரத்தைச் செலவிட வேண்டியிருந்தது. அங்கங்கே பார்த்ததிலிருந்து குறிப்புகள்.

* பலர் தவறாக தேசிய விநாயகம் பிள்ளை என்று இவரது பெயரைக் குறிப்பிடுகின்றனர். 'தேசிக விநாயகம்' என்பது விநாயகப் பெருமானின் ஒரு பெயர். இவரது பாட்டனாருக்கும் தேசிக விநாயகம் என்றுதான் பெயர். இவர்கள் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு ஆண்மகனுக்காவது தேசிக விநாயகம் என்று பெயர் இருக்குமாம்.

* புத்தக ஆசிரியருக்கும் தேசிக விநாயகம் என்றுதான் முதலில் பெயர் வைத்திருந்தனராம். ஆனால் இவருக்குப் படிப்பு அறிவு குறைவாக இருந்ததால், கிராமத்திலிருந்து நகரத்திற்குப் படிக்க அனுப்பும்போது, பெயரை மாற்றி சிவ.கணேசன் என்று வைத்துவிட்டாராம். அதற்காகத் தான் வருந்துவதாகச் சொன்னார்.

* ஒருமுறை போற்றிக்கண் என்பவர் கவிமணியிடம் பணம் வாங்கிக் கொண்டு கவிமணியில் குருவுக்கு உருத்திராட்சக் கொட்டை வாங்கப் போனவர், திரும்பி வரவேயில்லையாம். அப்பொழுது பக்கத்திலிருந்தவர் தூண்டுதலினால் அவன்மீது ஒரு பாட்டு எழுதி விட்டாராம். "நெஞ்செறிய, என் குருவின் வயரெறிய" காசை எடுத்துக் கொண்டு போன நீ "இனி இவ்வூரில் கால் வைக்காய்" என்ற அப்பாடல் இயற்றப்பட்ட சில நாட்களில் போற்றிக்கண் இறந்து விட்டாராம். இனியும் இதுபோன்ற பாடல்களை இயற்றப்போவதில்லை என்று அப்பொழுது முடிவு செய்தாராம் கவிமணி.

* உமர்கய்யாம், ஆசியஜோதி ஆகிய புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தவர், குழந்தைகளுக்கான பல பாடல்களையும் இயற்றியுள்ளார்.

* அதிகமாக யாருடனும் வெளியே வந்து பழக மாட்டார். ஆனால் இவரைப் பார்க்க எளியவரும் வருவர், ஆர்.கே.சண்முகம் செட்டியார், தி.க.சிதம்பரம் முதலியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, இராஜாஜி, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ஆகியோர் வருவர்.

* இரங்கற்பா எழுதுவதில் வல்லவர். தி.க.சி மறைவுக்கு மிக அருமையான ஒரு பாடலை எழுதியிருந்தார்.

* கல்கி, அமுதசுரபி, விகடன் ஆகிய பத்திரிக்கைகளுக்கு எப்பொழுதும் எழுதிக் கொண்டிருப்பார். கல்கியில் இவரது அட்டைப்படம் போட்டே இதழ்கள் வந்திருக்கின்றன.

மாலன், நன்னனொடு சந்திப்பு

No comments:

Post a Comment