Monday, January 26, 2004

நெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3

மூன்றாவது அமர்வு 'முயற்சியும் பயிற்சியும்' என்ற கணினியில் தமிழைப் பாவிப்பது பற்றிய செயல்முறை விளக்கம். இதில் நான் கணினி வழியாக ஒரு காட்சித் தொடரை அமைத்திருந்தேன். [PDF கோப்பாக அதனை நீங்கள் இங்கு பெறலாம். (533 kb)]


வெள்ளைச்சட்டையில் ஐகாரஸ் பிரகாஷும், நீலச்சட்டையில் நானும்.


பின்னர் மலேசியாவிலிருந்து வந்திருந்த முகுந்தராஜ் (எ-கலப்பை, தமிழா! உலாவி மற்றும் தமிழ் ஓப்பன் ஆஃபீஸ் புகழ்...) பரிச்செயலிகள் பற்றியும், தானும் உலகு-தழுவிய தன் நண்பர்களும் சேர்ந்து என்னென்ன பரிச்செயலிகளைத் தமிழ்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம், இதைச் செய்யத் தூண்டிய காரணங்கள் யாவை என்பது பற்றிப் பேசினார்.

கூட்டத்திற்கு வந்திருந்த எழுத்தாள, வாசகர்களுக்கு இருந்த சந்தேகங்களை நீக்குமாறு நான், பிரகாஷ், முகுந்த் மூவரும் கேள்விகள் அனைத்திற்கும் விடை சொன்னோம்.


ஐகாரஸ் பிரகாஷ், பா.ராகவன், மலேசியா முகுந்தராஜ்

No comments:

Post a Comment