எல்லா நிறுவனங்களும் 2003இல் தாங்கள் என்ன சாதித்தோம் என்று அறிக்கை வழங்குவதுபோல் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் அறிக்கை வழங்கியுள்ளது.
2003இல் பக்த'கோடி'கள் வெங்கடேசனது உண்டியலில் ரூ. 190 கோடியை காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். இது 2002ஐ விட ரூ. 12.5 கோடி அதிகமாம் (7% அதிகம்). இதற்கு மேற்பட்டு, தங்கம், வைரம் என்றெல்லாம் குவிந்திருப்பதைப் பற்றி தனிக்கணக்கு போடவேண்டுமாம். பக்தர்கள் வேண்டி அடித்துக் கொள்ளும் மொட்டை கூட தேவஸ்தானத்துக்கு ரூ. 30 கோடி அளவில் பைசா கொடுத்துள்ளது.
ஆக 2003இல் திருப்பதியின் வருமானம் 500 கோடிக்கும் மேலாகிறதாம். நடக்கும் 2003-04 ஆண்டிற்கான திட்டச் செலவு ரூ. 552 கோடி ரூபாயாம். அப்படியானால் வருமானம் நிச்சயமாக அதற்கு மேல் இருக்க வேண்டும். தேவஸ்தானத்தின் கையிருப்பு ரூ. 1000 கோடிக்கும் மேல் வங்கிகளில் போடப்பட்டிருக்கின்றனவாம்!
Thursday, January 01, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment