Friday, January 30, 2004

நீதிமன்ற ஊழல் பற்றி

நேற்றைய கதையின் நாயகன் மெட்ரோபாலிடன் மேஜிஸ்டிரேட் பெயர் பிரஹ்மபட். (தினமலர் இவர் பெயரை 'பிரகாம் பட்' என்று குதறுகிறது. குதறப்பட வேண்டியவர்தான்.) நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரவி ஸ்ரீனிவாஸ் பின்னூட்டத்தில் கூறியது போல், இந்தப் பொதுநல வழக்கினால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருசில இடைக்காலப் பணிநீக்கங்கள்? ஆனால் நீதித்துறையின் ஊழலை கவனிக்கவென்றே ஆம்பட்ஸ்மேன் (Ombudsman) பதவிகளை உருவாக்கலாம். நீதித்துறையில் லஞ்சம் வாங்கினார் என்ற ஏதேனும் சாட்சி ஒருந்தால் லஞ்சம் வாங்கியவருக்கு உடனடிப் பதவி நீக்கம் என்றும் அவருக்கு ஓய்வூதியம் போன்றவைகள் முடக்கப்படும் என்றும் நிர்வாக விதிகளைக் கொண்டுவரலாம். அதாவது ஊழல் என்று வரும்போது, நீதித்துறை மற்றும் காவல்துறையின் ஊழல்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படவேண்டும்.

நேற்றைய பதிவு

No comments:

Post a Comment