Tuesday, February 17, 2004

கோழி இறைச்சி விழிப்புணர்ச்சி பேரணி

இன்று தினமலரில் வந்த ஒரு விளம்பரம். இன்று சென்னை அண்ணாசாலை தாமஸ் மன்ரோ சிலையிலிருந்து அரசு விருந்தினர் மாளிகை வரை 'தென்னிந்திய கோழி உற்பத்தியாளர் மற்றும் விற்பனை சங்கம்' ஒரு பேரணியை நடத்தவுள்ளது. மதியம் 2.30 முதல் 5.30 வரை இந்தப் பேரணி நடக்கும்.

இதன் நோக்கம் கோழி இறைச்சி, முட்டை ஆகியவைகளை உட்கொள்வதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது; இந்தியக் கோழிகளுக்கு 'bird-flu' தொல்லை எதுவுமில்லை என்பதே.

மேற்கொண்டு தினமலர் செய்தியில் தெரிந்து கொண்டது: இந்தப் பேரணியில் கலந்துகொள்ளும் சங்கத்தவர்கள் கோழிக்கால் கறியை சுவைத்தபடியே நடப்பார்களாம். சாலையில் உள்ள பார்வையாளர்களுக்கும் இலவசமாக கோழிக்கால் கறியும், முட்டைகளும் கொடுக்கப்படுமாம். இதற்காக 1,500 கிலோ எடையுள்ள கோழிகள் வெட்டப்படுகின்றனவாம்.

ஆஹா! என்னவொரு விநோதமான பேரணி! இதையெல்லாம் பார்த்துவிட்டு தமிழகக் கட்சித் தொண்டர்கள் தங்கள் தலைவர்களையும் கோழிக்கறி பேரணி நடத்துமாறு கேட்டுக்கொள்ளலாம். தேர்தல் நெருங்குகிறதே?

இந்த வலைப்பதிவைப் படிக்கும் சென்னை வாசகர்கள் தவறாமல் இலவசக் கோழித்துண்டை ஒரு கை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

No comments:

Post a Comment