Thursday, May 13, 2004

சுப்ரமணியம் சுவாமி

மதுரை பாராளுமன்றத் தொகுதியில் சுப்ரமணியம் சுவாமி பெற்ற வாக்குகள் 12,009. வெற்றி பெற்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் P.மோகன் பெற்ற வாக்குகள் 4,14,433. அதிமுக வேட்பாளர் A.K.போஸ் பெற்ற வாக்குகள் 2,81,593.

சுவாமியை விடவும் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார் ஜனதா தள் (U) வேட்பாளர் P.சக்திவேல் (12,093). இனிமேலும் வெத்துவேட்டு சுவாமி நாங்கள் ஐந்து தொகுதிகளில் ஜெயிப்போம், இத்தைச் செய்வோம், அத்தைச் செய்வோம் என்று பேசாமல் நடையைக் கட்டிவிடலாம்.

இவர் கட்சிக்காரர்கள் (!) ஆந்திராவில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஜெயித்து விட்டார்கள் (எப்படியென்று தெரியவில்லை). உடனே சுவாமி அறிக்கை விட்டு விட்டார் - இவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் சட்டமன்றம் ஆரம்பித்ததும் முதல் வேலையாக 'தெலுங்கானா தனியாகப் பிரிக்கப்பட வேண்டும்' என்ற தனி உறுப்பினர் மசோதா ஒன்றைக் கொண்டுவருவார்களாம். அதை யாரும் சட்டை செய்யவில்லையென்றால் போராட்டம் நடத்துவார்களாம்!

What a joker!

No comments:

Post a Comment