Tuesday, August 24, 2004

தேர்தல் சீர்திருத்தங்கள் - 3

பிரதமர், பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்தம் பற்றிய மனுவிலிருந்து ஒருசிலவற்றைப் பற்றிப் பேசினார்.

1. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்பது: இப்பொழுது குற்றம் தீர்ப்பானால்தான் ஒருவர் தேர்தலில் நிற்க முடியாது என்றுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டிருந்தாலே, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை (chargesheet) தாக்கல் செய்யப்பட்டிருந்தாலே, இந்தக் குற்றங்களுக்கான தண்டனை 5 வருடத்திற்கும் மேற்பட்டிருக்கும் என்றால், அந்த நபர்கள் தேர்தலில் நிற்பது தடைசெய்யப்பட வேண்டும்.

கடந்த 57 வருடங்களில் நாட்டின் குற்றவியல் நீதித்துறையின் செயல்பாடு மோசமானதாகவே உள்ளது. குற்றங்கள் நீதிமன்றங்களில் விவாதிக்கப்பட்டு நீது வழங்குவதற்கு எக்கச்சக்க காலதாமதமாகிறது. குற்றவியல் நீதித்துறையின் செயல்பாட்டை சரி செய்வதற்கு முன், தாற்காலிகமாவது தேர்தல் ஆணையத்திடம் மேற்படி அதிகாரம் இருந்தால் அதன்மூலம் தேர்தலில் குற்றவாளிகள் கோலோச்சுவதைத் தடை செய்ய முடியும்.

அரசியல் கட்சிகள் சற்று விசாலமான மனதுடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்.

2. அச்சு/தொலைக்காட்சி ஊடகத்தில் வரும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆளும் அரசு அந்நேரங்களில் வெளியிடும் ஒருசில விளம்பரங்களை முழுவதுமாகத் தடைசெய்ய வேண்டும்.

3. வாக்குச்சீட்டில் (வாக்கு இயந்திரத்தில்) "என் வாக்கு யாருக்குமில்லை" என்ற தேர்வும் இருக்க வேண்டும். இப்படி 50% மேற்பட்டோர் 'என் வாக்கு மேற்குறிப்பிட்ட யாருக்குமில்லை' என்றால் மறு தேர்தல் நடத்த வேண்டும்.

4. அரசியல் கட்சிகள் தங்கள் கணக்குகளை முறையாக ஆடிட் செய்ய வைப்பது.

5. பல அரசியல் கட்சிகளின் தேர்தல் ஏஜெண்டுகள் (Polling Agent) தங்கள் வேட்பாளர்களுக்கு விசுவாசமாக இருப்பதில்லை. ஏதோ பயத்தினால் வாக்குச் சாவடியில் கள்ள வாக்கு வரும்போது அவற்றைச் சுட்டிக்காட்டத் தயங்குகிறார்கள். மறு வாக்குப் பதிவு என்றாலே நடுங்குகிறார்கள். அரசியல் கட்சிகள் ஏஜெண்டுகளை நியமிக்கும்போது கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

6. சிறு கட்சிகள் பற்றிய நாடு தழுவிய விவாதம் தேவை.

7. வெற்றி பெற்ற பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் அதிகாரம் (recall). அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த recall பற்றிப் பேசினார். [ஆனால் தவறாக நியூ யார்க் என்று சொல்லிவிட்டார்.] அதுபோன்ற அதிகாரம் ஏதாவது ஒருவகையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.

8. சுயேச்சைகளுக்கு பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் உரிமை கொடுக்கப்பட வேண்டுமா என்பது பற்றிய விவாதம். வேண்டுமானால் மாநில சட்டமன்றங்களுக்கு நிற்கும் உரிமை மட்டும் இருந்தாலே போதுமானது.

9. (பிரதமர் போன்ற) முக்கியப் பதவிகளுக்கு 'first past the post' முறையில் தேர்தல் நடத்தலாம். [இதைத்தான் சொன்னார் என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம்.]

No comments:

Post a Comment