Wednesday, September 01, 2004

திராவிட் - இந்தியப் பெருஞ்சுவர்

என்.சொக்கன் எழுதி விரைவில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவரப்போகும் "திராவிட் - இந்தியப் பெருஞ்சுவர்" என்னும் புத்தகத்திற்கு நான் எழுதிய முன்னுரை இந்த மாத திசைகள் இதழில்.

17 comments:

  1. பல அருமையான வாழ்க்கை வரலாறுகளை எழுதிப் பழகிய கை
    >>
    டெண்டுல்கர், அம்பானி தவிர வேறு 'பல' இருக்கா? சும்மாத் தெரிஞ்சுக்கத்தான் :-)

    (திசைகள் பக்கம் ஏன் TSCII-ல இருக்கு?)

    ReplyDelete
  2. குஷ்வந்த் சிங், அண்ணாதுரை.

    நாலுன்னா - பலன்னு சொல்லக்கூடாதா என்ன?

    ===

    அய்யோ? டிஸ்கியா? உடனடியா கவனிக்கச் சொல்றேன். வெப்மாஸ்டெர் ஊத்திட்டார் போலிருக்கு.

    ReplyDelete
  3. மத்த ரெண்டும் இப்போதான் தெரியும்.

    ReplyDelete
  4. பனைமரம் பற்றிக் கட்டுரை ஒன்று எழுதச் சொன்னால், மாட்டைப் பற்றி எழுதிவிட்டு, இப்பேர்பட்ட மாடு, அந்தப் பனைமரத்தில் கட்டப்பட்டிருந்ததுன்னு எழுதினானாம் ஒருத்தன். நீங்க என்ன, திரவிட் பத்தி சூப்பரா ஒரு கட்டுரை எழுதிட்டு, கடைசி நாலுவரில, சொக்கன் புஸ்தகத்துக்கு ஹைப்பர் லிங்க் குடுத்துட்டீங்க. புஸ்தகத்தை பத்தி இன்னும் நாலைஞ்சு வரி சொல்லி இருக்கப் படாதா?

    ReplyDelete
  5. பிரகாஷ்: நான் எழுதியது புத்தக விமரிசனம் அல்ல. புத்தகத்தினுள்ளே வரும் முன்னுரை. அதனால் அதில் புத்தகத்தைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை; அதில் எழுதப்பட்டிருக்கும் ஆளைப் பற்றித்தான்:)

    எனவே புத்தகம் அச்சாகி வந்ததும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

    வேறு யாராவது ரிவ்யூ எழுத வேண்டியதுதான்.

    ReplyDelete
  6. சொக்கன், அடிப்படையில் ஒரு சிறுகதை எழுத்தாளர். அவரது புனைகதை மொழியைக் கூர்மைப் படுத்திக் கொள்வதற்காகத் தான் கதையல்லாத எழுத்தை நிறைய எழுதிப் பயிற்சி செய்கிறார். பச்சை பார்க்கர் பேனா என்றொரு நல்ல சிறுகதைத் தொகுப்பு முன்னதாக வந்திருக்கிறது. விரைவில் இன்னொரு சிறுகதைத் தொகுப்பு வரவிருக்கிறது. அதற்கு முன்பாக இன்னொரு வாழ்க்கை வரலாறும்!

    ReplyDelete
  7. நான் கேட்டது என்னோட வழக்கம்போல விளையாட்டாக.(அது மட்டுந்தான் எனக்குத் தெரியும்.) யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை என்ற யாருக்கும் தேவையில்லாத விளக்கத்தைச்சொல்லிவிட ஆசைப்படுகிறேன், விழைகிறேன்.... இன்னும் என்னன்னமோ ...கிறேன்.

    (பத்ரி, என்னோட பேர comment போடறதுலேர்ந்து block பண்ணிடுங்களேன் :-) )

    ReplyDelete
  8. அட ஏன் பரி இவ்வளவு டென்ஷனாகிட்டீங்க? இப்ப நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டோமில்லையா? சொக்கன் 'பச்சை பார்க்கர் பேனா'ன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பு போட்டிருக்கார். அட்டை கூட பச்சை கலர்ல இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் இதுவரை ஐந்து வாழ்க்கை வரலாறு நூல்கள் எழுதியிருக்கார். அதுல ஒன்று சக்கைப்போடு போடும் அம்பானி பற்றியது. மற்றொன்று சொக்கனின் ஆதர்ச கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றியது. இப்பொழுது வரவிருப்பது (சொக்கன் மனதில்) டெண்டுல்கர் அளவுக்கு இல்லாவிட்டாலும் அடுத்த நிலையில் இருக்கும் திராவிடுடையது. இலக்கிய ரேஞ்சில் குஷ்வந்த் சிங், சல்மான் ருஷ்டி. அரசியல் என்றால் அண்ணதுரை பற்றி ஒன்று (ஏன், அண்ணாதுரை இலக்கியவாதியில்லையா என்று கேள்வி கேட்கக்கூடாது!). அடுத்த சிறுகதைத் தொகுப்பு அச்சுக்குப் போகும் வழியில் இருக்கிறது.

    நடுவில் நான்கு அல்லது ஐந்து சிறுகதைப் பரிசுகள். காலம் - கனடா இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, இப்பொழுது அமுதசுரபி நகைச்சுவைக் கதைப் போட்டியின் மூன்றாவது பரிசு.

    இதெல்லாம் உலகுக்குத் தெரிய வந்திருப்பது உங்கள் கேள்வியினால்தானே? இங்கு யார் யாரைப் புண்படுத்தினார்?

    விடாமல் கேளுங்கள்.

    ReplyDelete
  9. கரக்ட், தொகுப்பு பச்சைக் கலரில் தான் இருக்கும். அந்தத் தொகுப்பிலே ஒரு கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு நிறுவனத்தின் செக்யூரிட்டி பற்றிய கதையும், ஆஸ்பத்திரி வாசலில் காத்துக் கிடக்கும் அப்பா, பையன் பற்றிய கதையும் ரொம்ப ரசித்துப் படித்தது. சமீபத்தில் ' எழுத்தாளன் மனைவி'. இப்போதெல்லாம் அவர் கதை எழுதுவதை குறைச்சலாகவும், வாழ்க்கை வரலாறுகளை அதிகமாகவும் எழுதுவதில், ரொம்பக் கடுப்பாகிப் போன சென்மங்களில் நானும் ஒருத்தன் என்பதை கொஞ்சம் கூட பயமில்லாமல் இங்கே பதிவு செய்கிறேன். ( கதையை விட வாழ்க்கை வரலாறு எழுத அதிக உழைப்பு வேண்டும் என்று தெரியும்). ஆனால், ஒருக்கால், பா.ரா சொல்வது போல கதை அல்லாத எழுத்துக்களினால் தான் அவரது எழுத்து பண்பட்டு வருகிறதோ என்றும் தோன்றாமலில்லை. ( காலம், அமுதசுரபி பரிசுகள் உதாரணம்)

    ReplyDelete
  10. பிரகாஷ்: ஒரு கதை மட்டும்தான் பிடிக்குமா? வேறெதுவும் பிடிக்காதா?

    எனக்கு அதில் பல கதைகள் பிடித்தன. பொறுமையாக அந்தத் தொகுப்பு பற்றி பின்னர் எழுத வேண்டும்.

    அசோகமித்திரன், எழுத்து நன்றாகப் பழக வேண்டுமானால் ஒரு கதைக்கு, ஆறு non-fiction எழுத வேண்டும் என்றமாதிரி சொல்வதாக பாரா சொன்னார். அதனால்தான் ஒரு சிறுகதைத் தொகுப்புக்கு ஆறு வாழ்க்கை வரலாறுகள். கணக்கு சரியாகத்தான் இருக்கிறது! அடுத்த சிறுகதைத் தொகுப்பு வந்ததும் இன்னமும் ஆறு:-)

    ReplyDelete
  11. பரி: திசைகளில் என் கட்டுரை மட்டும் டிஸ்கியில் இருந்தது. அதைச் இப்பொழுது சரி செய்து விடடனர். அதில் இரண்டு குட்டித் தவறுகளும் இருந்தன. அதையும் சரி செய்து விட்டேன்.

    ReplyDelete
  12. அழகான முன்னுரை. 'தொப்பியில் இன்னொறு சிறகு' நெருடியது. இந்தியாவில் யார் சிறகு வைத்த தொப்பி போடுகிறார்கள்? தமிழில் எழுதும் போது தமிழ்/இந்திய உவமைகளைப் பயன்படுத்துவது அழகு. ஆங்கிலம் தெரியாதவருக்கு இந்த உவமை புரியாது. சுஜாதா ஆரம்பித்து வைத்த நல்ல விஷயங்கள் பல. ஆங்கில சொல்லாக்கங்களை, இப்படி நேரடியாக தமிழ்ப்படுத்துவது அவற்றில் ஒன்றல்ல.

    ReplyDelete
  13. மீனாக்ஸ்: தொப்பி, சிறகு - ஒத்துக்கொள்கிறேன். வேறு என்ன சொல்லியிருக்கலாம் இங்கே?

    "அவரது மார்பில் இன்னுமொரு பதக்கம்"

    "அவரது விரலில் இன்னுமொரு மோதிரம்" :-)

    வேறு ஏதாவது தோன்றுகிறதா?

    ReplyDelete
  14. பிரசன்னா:

    "வெளிநாட்டு ஆட்டங்களில் டெண்டுல்கர் மற்றும் திராவிட்டின் சராசரி, ஆட்டநாயகன் விருது, வெற்றி பெற்ற ஆட்டங்களில் ஆட்டநாயகன் விருது என்று விரிவாக அலசுங்கள். டெண்டுல்கர் எப்படி பிந்தங்குகிறார் என்று பார்க்கலாம்."

    இப்படியெல்லாம் சொல்லி மாட்டிக்கொண்டு முழிக்காதீர்கள்:-) இது ஆட்டம் தொடங்கும் முன்னரே 'வெற்றி உனதே' என்று சொல்லிவிட்டு ஓடிப்போவதற்கு ஒப்பாகும்!

    டெஸ்ட்கள் மட்டும்...

    திராவிட்: விளையாடியது 45, ரன்கள் 4193, அதிகபட்ச ஸ்கோர் 270, சராசரி 63.53, சதம் 11, அரை சதம் 19.

    டெண்டுல்கர்: விளையாடியது 67, ரன்கள் 5205, அதிகம் 241*, சராசரி 54.21, சதம் 18, அரைசதம் 22.

    டெண்டுல்கர் விளையாடிய காலத்தில் எட்டு வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகள். அதில் ஒரு மேட்சில் டெண்டுல்கர் விளையாடவில்லை. ஆட்ட நாயகர் விருதுகள்: மனோஜ் பிரபாகர் 1, சுனில் ஜோஷி 1, சிவ் சுந்தர் தாஸ் 1, சவுரவ் கங்குலி 1, விவிஎஸ் லக்ஷ்மண் 1, விரேந்தர் சேவாக் 1, ராகுல் திராவிட் 3.

    இந்த வெற்றிகளில் டெண்டுல்கருக்கும் நிச்சயமாகப் பங்கிருந்தது. உதாரணத்துக்கு இலங்கை 1993இல் சித்து, காம்ப்ளியோடு சேர்ந்து டெண்டுல்கரும் ஒரு சதமடித்தார். பிரபாகர் 95 ரன்களும், சில விக்கெட்டுகளும் பெற்று ஆட்ட நாயகரானார். திராவிட் ஆட்ட நாயகர் விருது பெற்ற ஹெடிங்லி டெஸ்டில் டெண்டுல்கர் திராவிடை விட அதிக ரன்கள் பெற்றிருந்தார். ஆனால் திராவிட் மிகக்கடினமான, பந்துகள் ஸ்விங் ஆகும் நிலையில் பேட்டிங் செய்தார், எனவே அந்த இன்னிங்ஸ்தான் முக்கியம் என்று அவருக்கு ஆட்ட நாயகர் விருது கொடுத்தனர்.

    ஒருவரை உயர்த்திச் சொல்லும்போது வேறு வழியின்றி அடுத்தவரைக் கீழிறக்க வேண்டியுள்ளது. என்னைப் பொருத்தவரை திராவிட் இந்திய டெஸ்ட் அணிக்கு டெண்டுல்கரை விட முக்கியமானவர். லாரா, டெண்டுல்கர் ஆகியோர் தனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது எதிராளியை அழ வைத்துவிடுவர். ஆனால் நாம் திண்டாட்டத்தில் இருக்கிறோம், எப்படியாவது என்னைக் காப்பாற்று, இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டால் இந்த டெஸ்டை ஜெயித்து விடலாம் என்று கெஞ்சினால் அதைச் சரியாகச் செய்தது கிடையாது. பாகிஸ்தானுக்கு எதிரான சென்னை டெஸ்ட் - டெண்டுல்கர் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

    இன்னொரு கேள்வி கேட்டீர்கள்...

    "திராவிடே சிறந்தவர் என்று டெஸ்ட் போட்டிகளை மட்டும் முன்னிறித்துச் சொல்வது எந்த வகையில் நியாயம்?"

    ஒருநாள் போட்டிகளையும் எடுத்துக்கொண்டால் திராவிட் நிச்சயமாக டெண்டுல்கருக்குக் கீழாகத்தான் வருவார். நான் ஏன் டெஸ்ட் போட்டிகளை மட்டும் எடுத்துக் கொண்டேன் - அதுதான் இப்பொழுதைய உலக வழக்கம். இன்றும் கூட ஒருவரது கிரிக்கெட் திறமையை முழுதாகக் கணிக்கச் சிறந்த இடம் டெஸ்ட் மட்டுமே.

    இன்னும் சில நாள்களில் இங்கிலாந்தில் விளையாடப்படும் 20/20 என்னும் ஓர் இன்னிங்ஸில் 20 ஓவர்கள் மட்டுமே இருக்கும் ஆட்டம் உலகெங்கிலும் விளையாடப்படும். அதில் இந்தியாவிற்காக சேவாகோ, யுவ்ராஜ் சிங்கோதான் தலைசிறந்த ஆட்டக்காரராக வெளிப்படக் கூடும்!

    ஹாங் காங்கில் நடந்த ஹாங் காங் சிக்சஸ் என்னும் போட்டிகளில் (ஓர் அணிக்கு இன்னிங்ஸில் 5 ஓவர்கள் மட்டும்தான்!) ராபின் சிங்தான் இந்தியாவின் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக இருந்திருக்கிறார். வாசிம் அக்ரம்தான் பாகிஸ்தானின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்! இங்கும் திராவிடால் டெண்டுல்கருக்கு ஈடாக விளையாட முடியாது.

    இரட்டை விக்கெட் போட்டிகள் பல நடந்திருக்கின்றன. அதிலெல்லாம் டெண்டுல்கர் திராவிடை அநாயாசமாக அடித்து நொறுக்கிவிடுவார்.

    ReplyDelete
  15. It wil be intresting to see if Dravid can maintain his lead over tendulkar, when dravid plays his 67th overseas test match. At this moment i am not sure if Dravid will be around to play 22 more overseas tests. Comparisions have to be made between like objects and we have to take a lot of things in to consideration before making a judgement.
    Expectations, Burden of carrying people's expectations, Class, Consistency, Workload and Fan following are some of the key aspects which we might have to consider. Afterall Cricket is what it is just because of the millions who follow it and i guess we all know who has more fan following. I still remember the comment made by one of the writers "when sachin is at the crease,the TV viewers in india is much more than the entire population of Europe" So lets not put Tendulkar down for the sake of holding Dravid high.

    ReplyDelete
  16. It wil be intresting to see if Dravid can maintain his lead over tendulkar, when dravid plays his 67th overseas test match. At this moment i am not sure if Dravid will be around to play 22 more overseas tests. Comparisions have to be made between like objects and we have to take a lot of things in to consideration before making a judgement.
    Expectations, Burden of carrying people's expectations, Class, Consistency, Workload and Fan following are some of the key aspects which we might have to consider. Afterall Cricket is what it is just because of the millions who follow it and i guess we all know who has more fan following. I still remember the comment made by one of the writers "when sachin is at the crease,the TV viewers in india is much more than the entire population of Europe" So lets not put Tendulkar down for the sake of holding Dravid high.

    ReplyDelete
  17. கணேஷ்: ஒரு குறிப்பிட்ட அளவு டெஸ்ட்களைத் தாண்டி விட்டால் நிச்சயமாக இருவருடைய புள்ளிவிவரங்களை ஒப்பிடலாம். திராவிட் 67 டெஸ்ட் வரை வரவேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தால் டெண்டுல்கர் அதற்கும் மேல் விளையாடியிருப்பார். அதனால் அந்த எண் வரட்டும் என்றெல்லாம் இருக்க முடியுமா?

    ஒப்பிடுதல் என்று பார்க்கும்போதே இவர் அவரைவிட உசத்தி என்று சொல்லத்தான் வேண்டியுள்ளது.

    மற்றபடி, டெண்டுல்கர் விளையாடும்போது அணியின் பலம், அவரது பக்கத்துணை, அந்நேரத்தில் பவுலிங் திறன் எப்படி இருந்தது என்று பலவற்றையும் பார்க்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கங்குலி தற்போது அணித்தலைவரானபிறகு திராவிடும், டெண்டுல்கரும் ஒரே பலமுள்ள அணியில்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தனியொரு ஆளாக இருந்து டெண்டுல்கர் இன்னமும் இந்தியாவிற்காக டெஸ்ட்களை ஜெயித்ததில்லை. இதை டெண்டுல்கரே ஒப்புக்கொள்வார்.

    இன்னமும் ஒரு வருடத்திற்கு வெளிநாடுகளில் டெஸ்ட்கள் ஏதும் கிடையாது. இதற்காக நாம் வெளிநாட்டுக்குத்தான் போகவேண்டும் என்பதில்லை. அடுத்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகியோரோடு இந்தியாவில் டெஸ்ட்கள் விளையாடுகிறோம். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

    ReplyDelete