Sunday, December 26, 2004

உயிரிழப்புகள்

காலை 6.30க்கு நில அதிர்வுகள் ஏற்பட்டதும், இந்தியாவில் உயிர்ச்சேதம் ஏதும் இருக்காது, மிகவும் மெலிதானதுதானே என்று தோன்றியது.

பின் 8.30 மணிக்குப் பிறகு சிறிது சிறிதாக தகவல்கள் வர ஆரம்பித்ததும் உயிர்ச்சேதம் நூறுகளில் இருக்கும் எனக்கருதினேன்.

பின் மதியம் ஆனதும், இந்தியாவில் மட்டுமே ஆயிரத்தைத் தொட்டுவிடும் என்று தோன்றியது.

இப்பொழுதைக்குக் கிடைத்த தகவல்கள்படி இந்தியாவின் மொத்த உயிர்ச்சேதம் மட்டுமே பத்தாயிரத்தைத் தொடும் என்று தோன்றுகிறது. இது அதிகாரபூர்வத் தகவல் இல்லை. எனது யூகம் மட்டுமே.

எண்ணிக்கையில் இதைவிடக் குறைவுதான் பிற நாடுகளில் இருக்கும் என்று தோன்றுகிறது. இலங்கையில் ஐந்தாயிரம் வரை இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

சென்ற வருடத்தைய இரானிய நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30,000. ஆனால் இம்முறை அதைவிடக் குறைவாக இருந்தாலும் பரவலாக, பல்வேறு நாடுகளில், பரந்த கடற்கரையோரத்தில் நிகழ்ந்த இந்தக்கொடுமை மிக அதிகமான மக்களைத் தொட்டுள்ளது.

பொதுவாகவே நிலநடுக்கம் ஏழை-பணக்கார வித்தியாசம் இல்லாது கொல்லும்.

ஆனால் இப்பொழுதைய சுனாமி ராட்சத அலைகளால் இந்தியாவில் இறந்தவர்கள் யார் யார் என்று மேலோட்டமாகப் பார்க்கும்போது நமக்குத் தெரிவது:

1. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்
2. கடலோரத்தில் உள்ள மீனவர் குடியிருப்புகள்
3. சில சுற்றுலாப்பயணிகள், சென்னையில் கடற்கரஒயோரம் உடற்பயிற்சி செய்த சிலர், ஏதோ பண்டிகையையொட்டி கடலில் குளிக்கச்சென்ற இந்துக்கள், வேளங்கண்ண்ணி போன்ற இடங்களில் கடலோர தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடச்சென்ற கிறித்துவர்கள்.

மொத்தத்தில் இந்தியாவில் பேரிழப்பு மீனவர்களான ஏழைகள்தான்.

ராட்சத அலைகள் பற்றிய புரிதல் பசிபிக் கடல் வாசிகளுக்கு இருக்கும் அளவுக்கு இந்துமாக்கடல் வாசிகளுக்கு இல்லை என்றார் ஒரு நிபுணர்.

அதேபோல கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி இருக்கும் என்பது நில அறிவியலாளர்களுக்குத் தெரிந்துள்ளது, ஆனால் அரசுகளுக்கு இந்தப் புரிதல் இல்லை. இரண்டு மணிநேர அவகாசம் இருந்துள்ளது இந்தியர்களுக்கு. (இலங்கைக்கு 1.5 மணிநேரம்). இதற்குள் கடலோர கிராமங்களில் உள்ளவர்களை ஓரளவுக்கு அரை கிலோமீட்டர் உள்ளே கொண்டுவந்திருக்க முடியும். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றவர்களை ஹெலிகாப்டர் மூலம் சீக்கிரமாக உள்ளே வரவைக்க முடிந்திருக்கும். உயிர்ச்சேதத்தைப் பெருமளவுக்குக் குறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

7 comments:

  1. /உயிர்ச்சேதத்தைப் பெருமளவுக்குக் குறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது/ அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் 'ஹெலிகாப்டர் மூலம் சீக்கிரமாக உள்ளே வரவைக்க முடிந்திருக்கும். ' என்றெல்லாம் நம் ஊர் சூழலிலெதிர்பார்ப்பது ஓவராய்தான் தெரிகிறது. பூகம்பத்தை தொடர்ந்து பொதுவாய் புயல்வரும் முன் தருவது போன்ற எச்சரிக்கையாவது தந்திருக்கலாம்.

    குறைந்த படசமாய் இனியாவது துரிதாமாய் ஒரு அரசு செயல்பட்டால் நல்லதாய் இருக்கும்.

    ReplyDelete
  2. புயலைப் போல இதுவும் தவிர்க்கப்படக் கூடியதே. சுனாமி எச்சரிக்கை மையங்கள் பசிபிக் கடற்பகுதிகளுக்கு இருப்பது போல நம் பகுதிகளில் தீவிரமாக இல்லையெனத் தெரிகிறது. இனியேனும் ஆசிய நாடுகள் இத்தகைய எச்சரிக்கை மையங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. தொலைபேசி லைன்கள் வெகுநேரத்துக்கு ஜாம் ஆகியிருந்தன, சிறிதுநேரம் கழித்து எங்கள் பக்கம் பெரிதாகச் சேதமில்லை என்று தெரிந்துகொள்ளமுடிந்தது. அந்தமட்டில் ஆசுவாசமென்றாலும், வீடிழந்தவர்களுக்கும் பலியானவர்களுக்கும் என் அஞ்சலிகள். ஐ வலுப்படுத்தவேண்டியதன் அவசியத்தை இதுபோன்ற இயற்கைச்சீற்றங்கள் தொடர்ந்து நிரூபித்தவண்ணமுள்ளன. தமிழ்நாட்டிலிருப்பவர்கள் முடிந்தளவு விஷயங்களைத் தொடர்ந்து தெரிவித்தவண்ணம் இருந்தால் உபயோகமாயிருக்கும்., நிம்மதியாயிருக்கும். இது நிகழ்வதற்கு முன்பு வெள்ளிக்கிழமை நான் எழுதிய ஒரு கதைப்பதிவு (இந்தியப் பெருங்கடல்) கிட்டத்தட்ட இதேபோன்றிருப்பதை நினைத்தால் இப்போது குமட்டுகிறது.

    By: Montresor

    ReplyDelete
  4. டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட் என்பது 'ஐ'க்குமுன்பு காணாமற்போயிருக்கிறது சென்ற பின்னூட்டத்தில்.....

    By: Montresor

    ReplyDelete
  5. பற்றிய புரிதல் இல்லை என்பது உண்மை. ஆனால், இதுப்போன்ற இயற்கை சீற்றங்கள் இந்துமாக்கடலில் குறைவு என்பதை எண்ணி பாருங்கள். பத்ரி சொல்வது போல், எனக்கு அரசின் முயற்சிகள் இன்னமும் தீவிரமாக இல்லையோ என்ற ஐயம் உள்ளது. என்ற விஷயம் இந்தியாவில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. எந்த ஆறுதலும் பயனளிக்காத சுழல் இது என்பது மட்டும் உண்மை.

    By: narain

    ReplyDelete
  6. Tusnami பற்றிய புரிதல் இல்லை என்பது உண்மை. ஆனால், இதுப்போன்ற இயற்கை சீற்றங்கள் இந்துமாக்கடலில் குறைவு என்பதை எண்ணி பாருங்கள். பத்ரி சொல்வது போல், எனக்கு அரசின் முயற்சிகள் இன்னமும் தீவிரமாக இல்லையோ என்ற ஐயம் உள்ளது. டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட் என்ற விஷயம் இந்தியாவில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

    எந்த ஆறுதலும் பயனளிக்காத சுழல் இது என்பது மட்டும் உண்மை.

    By: narainBy: narain

    ReplyDelete
  7. மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு October 13, 2008

    மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம்

    தெரிவித்துள்ளது.சுமாத்திர தீவு பகுதியில் தட்டுக்களின் நகர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.இதனால்

    எதிவரும் வரும் தினங்களில் சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் பூமியதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக

    தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவு கடற்பகுதியிலுள்ள மீன் இனங்கள் இலங்கை கடற்பரப்பில் தற்போது

    காணப்படுகின்றன.கடலுக்கடியில்
    பூமியதிர்வு போன்ற ஆபத்து ஏற்படும் என்பதனை கடல்வாழ் உயிரினங்கள் உணரும் பட்சத்தில் அவை

    இடம்பெயரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.


    1. http://www.paristamil.com/tamilnews/?p=15315

    2. http://www.tamilnews.dk/article/SpecialNews/6722/

    3. http://www.ajeevan.ch/content/view/6565/11/



    30 Oct 2008
    03:33 PM IST

    மேல் கண்ட செய்தியை தற்போது தான் பார்க்க முடிந்தது.இதனை சாதரணமாக விட்டு விட

    முடியாது.மேலும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும்.

    ஏனெனில் ஆற்றிவு உள்ள மனிதர்களை விட ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் நிலநடுக்கத்தையும் அதற்கு பின்

    வரும் சுனாமியையும் முன்னறியும் ஆற்றல் உண்டு.காரணம் மனிதர்களால் 20Hz to 20KHz வரையிலான

    அதிர்வுகளை மட்டுமே
    உணர முடியும்.ஆனால் மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. இதற்கு கடந்த 2004-ல் ஏற்ப்பட்ட சுனாமியின்

    போது விலங்குகளின் செயல்பாடுகளே சிறந்த ஆதாரம். அமேரிக்காவில் இதன் அடிப்படையில் அமைந்த

    http://www.petquake.org என்ற இணையதளமே உண்டு. மேலும் தற்பொழுது (28 Oct 2008

    to 29 Oct 2008) வரை பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் இந்தியதட்டு ஈரேசிய

    தட்டுடன் மோதி்யதால் ஏற்ப்பட்டதாகும். ஆகவே இந்த இடைவெளியை சரிப்படுத்த இந்திய தட்டுடன் பர்மிய

    தட்டே அல்லது ஆஸ்திரேலிய தட்டு மோதும் அபாயம் உள்ளது. அதனால் சுமத்திரா தீவுகளுக்கு அருகில்

    பெரும் பூகம்பம் ஏற்ப்பட்டு மற்றொரு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.



    இந்தியதட்டைப்பற்றிய விக்கிபீடியாவின் பக்கம்.

    http://en.wikipedia.org/wiki/Indian_Plate



    என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள். நீங்கள் சுனாமி தாக்க்கூடிய

    வாய்ப்புள்ள கடற்கரை அருகே வசித்து வந்தால் உங்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்ணை

    (Number) என்னுடைய +919442093300 என்ற புதிய செல்லிட பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக

    (SMS) அனுப்பி வைத்தால் உங்களின் எண்ணை எங்களின் "ஒருங்கிணைக்கப்பட்ட ஆழிப்பேரலை

    கண்காணிப்பு சேவை" யின் (http://www.ina.in/itws/) தகவல் தளத்தில் இணைத்து விடுவேன்.

    அதன் பிறகு "இறைவன் நாடினால்" உங்களின் செல்லிட பேசிக்கு சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை

    குறுந்தகவலாக வந்து சேரும்.பூகம்பங்களை இன்று வரை முன்னறிய எந்த தொழில்நுட்பமும் கிடையாது.

    ஆனால் ஆழிப்பேரலையை தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் முன்னறிய இயலும். இது அனைத்து

    படைப்பினங்களையும் இயற்கை பேரழி்வில் இருந்து காக்க எங்களால் முடிந்த 100% இலவச

    சேவையாகும்.ஏனெனில் எங்களைப் பொருத்தவரை சில நானொகிராம் எடை கொண்ட அமீபாவாகட்டும்

    அல்லது பல டன் எடை கொண்ட நீலத்திமிங்கலமாகட்டும் இரண்டுமே ஒன்றுதான். இவை இரண்டிற்க்கும்

    அந்த "உயிர்" என்னும் விஷயம் போய் விட்டால் அதன் இயக்கம் நின்று போய் செத்து மிதந்து விடும். இதில்

    மனிதன் என்ற உயிரினமும் அடங்கும். என்ன சொல்வது சரிதானே?



    உங்களின் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதென்ன "இறைவன் நாடினால்" ? இதற்கான

    விளக்கம் இதே,பெரும் பூ்கம்பங்களின் பொழுது கடலடியில் மனிதர்களால் போடப்பட்டிருக்கும்

    ஒளிவடக்கம்பிகள் (Fiber Optic Cable) பூமித்தட்டுகளின் நகர்வால்அறுந்து போக வாய்ப்புகள் மிக

    அதிகம். ஏற்கனவே பல முறை இது போல நடந்துள்ளது.உலகின் பெருமளவு தகவல் தொடர்பு இந்த

    ஒளிவடக்கம்பிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றது. மேலும் ஒளிவடக்கம்பிகள் அறுபட்ட அச்சமயத்தில்

    தகவல்கள் (Datas) அனைத்தும் செயற்கைகோள்களின் வாயிலாகவே அல்லது மற்ற அறுபடாத

    ஒளிவடக்கம்பிகளின் வளைய இணைப்பின் (OFC Ring Network) மூலமாகவே அனுப்பி

    வைக்கப்படும்.இதனால் அச்சமயத்தில் பிணையத்தில் பெருமளவு தகவல் நெரிசல் (Network

    Congestion) ஏற்ப்பட்டு அனுப்பட வேண்டிய தகவல்கள் சேருமிடத்திற்க்கு கால தாமதமாக (Network

    Delay and Packet Latency) வந்து சேரும் அபாயம் உண்டு. மேலும் அந்நேரத்தில் சூரியனால்

    மின்காந்தப்புயல் ஏற்ப்பட்டால் (Solar Flare) செயற்கைகோள்களின் வாயிலாக நடைபெறும் தகவல்

    பரிமாற்றம் முற்றிலும் பாதிக்கப்படும்.எங்களது சேவைக்கான கணணிகள் உலகின் பல இடங்களில்

    நிறுவப்பட்டிருந்தாலும் சரியான நேரத்தில் குறுந்தகவல் வந்து சேரும் என்பதற்க்கு எந்த ஒரு உறுதியும்

    தரவியலாது. அதனால் தான் உங்களிடம் அப்படி கூறினேன்.இதைத்தான் விஞ்ஞானத்தில் நிச்சயமற்றதன்மை

    (Uncertainty) எனக்கூறுவார்கள். ஆதலால் இதன் பொறுப்பினை அந்த ஆதி இறையிடமே ஒப்படைத்து

    விட்டோம். வேறன்ன செய்ய ?



    சுருங்க கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள, மனித இனம் State of Art -

    Cutting Edge Technology என்று பீற்றி கொள்ளும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இயற்கையின்

    சக்திக்கு முன்னால் State of Worst - Rusted Edge Technology தான். இதுதான் நிதர்சனமான

    உண்மையுங்கூட. இந்த விஷயத்தில் உலக வல்லரசு ஆகட்டும் அல்லது வல்லூறு அரசு ஆகட்டும்.

    அனைவரின் நிலையும் ஒன்றுதான். நாம் யாரையும் குறை கூறவியலாது. அந்த ஆதி இறை எதை நிர்ணயம்

    செய்த்தோ அது நடந்தே தீரும். ஆகவே நாங்கள் உங்களைனைவரையும் வேண்டிக்கொள்வது ஒரெ

    விஷயம்தான். நீங்கள் எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாகவே அல்லது அந்த ஆதி இறையே இல்லை எனக்

    கூறுபவர்களாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் சில

    நொடிகள் உங்களின் தூய ஆழ்மனத்தினால் எங்களின் இந்த சிறிய முயற்சி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை

    செய்யுங்கள் அல்லது வாழ்த்துங்கள்.அது போதும் எங்களுக்கு.தனி மனிதனின் பிரார்த்தனையின் அதிர்வை

    விட அனைவரின் பிரார்த்தனைக்கான அதிர்வனாது மிக அதிகம். இப்பிரபஞ்சத்தில் ஒளியை (Light) விட

    வேகமானது மனதின் வேகம்.அதன் ஆற்றலும் அபாரமானது. இது நாங்கள் கண்டுணர்ந்த உண்மை.



    இதற்கென ஹிந்து கோவிலிலே, யூத ஸவுலிலே, புத்த விகாரையிலே, கிறிஸ்த்தவ சர்ச்சிலே,

    இஸ்லாமிய மசூதிக்குள் அல்லது சீக்கிய குருத்துவாராவிலே சிறப்பு பிரார்த்தனைகள் தேவையில்லை.அது

    தேவையற்றதும் கூட. எங்களுக்கு இந்த கடவுள் & கோ மீது சிறு பயமுண்டு. ஏதாவது சிறு காரணத்தை

    காட்டி இந்த கடவுள் & கோ மக்களிடையே பெரும் பிளவை ஏற்ப்படுத்தி விடுகின்றனர். மேலும்

    இப்பிரபஞ்சத்தை அளவிடும் போது நம் பூமியானது மிகச்சிறிய மண்ணுருண்டை தான். அந்த மண்

    உருண்டையின் ஏதோவொரு சிறு பகுதியில் இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தி வசிக்கின்றது என்பது

    அசாத்தியமானது.ஆகவேதான் நாங்கள் மறுபடியும் உங்களின் ஆழ்மனத்திலிருந்து அந்த ஆழ்மனத்தில்

    வசிக்கும் மனசாட்சி வழியாக பிரார்த்திக்க வேண்டுகிறாம். இதைவிட சிறப்பான கருவி இப்பிரபஞ்சத்தை

    உருவாக்கிய சக்தியிடம் தொடர்பு கொள்வதற்க்கு இப்பிரபஞ்சத்தில் வேறொங்கும் இல்லை. அந்த யோகனா

    (யூனுஸ் நபி) சமூகத்தை போல, தற்போதைய சமூகமும் பேரழிவில் இருந்து தப்புமா என்று பார்ப்போம்.

    இதற்க்கு காலம் தான் சரியான பதில் தரும்.



    இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்திற்க்காக
    (Indian Techies Zone)

    முஹம்மது இஸ்மாயீல். ஹ,
    Muhammad Ismail .H, PHD,
    +919442093300

    ReplyDelete