Wednesday, March 16, 2005

தமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு

2 பிப்ரவரி 2005, மாத்ருபூமி செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றை இரா.முருகன் தமிழில் மொழிபெயர்த்து எனக்குக் கொடுத்தார். அதை நான் என் வலைப்பதிவில் சேர்த்திருந்தேன். குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு

மாத்ருபூமி செய்தியைப் பார்த்தபின்னர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கே.ராமகிருஷ்ணன் திருச்சூர் சென்று விஷயத்தை உறுதிப்படுத்தியபின் இதுபற்றி சேலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் 4 பிப்ரவரி 2005 அன்று புகார் செய்துள்ளார். ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றிய தினமணிச் செய்தி இதோ.

இப்பொழுது தமிழகச் சட்டமன்றம் அமர்வில் உள்ள நேரம். இதுபோன்ற விஷயங்கள் சட்டமன்றத்திலே எழுப்பப்பட வேண்டும். ஆனால் நம் சட்டமன்ற உறுப்பினர்களோ "யார் வீரர்" - தண்டவாளத்தில் தலையைக் கொடுத்தால் வீரனா இல்லை வீரப்பனைச் சுட்டுக்கொன்றால் வீரனா என்பது பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள்.

எந்தத் தமிழ் ஊடகமும் கண்டுகொள்ளாத இந்தப் பிரச்னையில் தீவிர ஆர்வம் காட்டிய ராமகிருஷ்ணனைப் பாராட்டுவோம். இவர் போன்றவர்கள் நம் நாட்டுக்கு நிறைய தேவை. இப்பொழுது நீதிமன்றம் வாயிலாக தமிழக உள்துறைச் செயலருக்கும் சேலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை இன்று செய்தித்தாளில் படித்தபின்னராவது நடக்கும் சட்டமன்ற அமர்வில் இதைப்பற்றி சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிப்பார்களா?

No comments:

Post a Comment