Sunday, March 20, 2005

SPB Golden Night

இன்று மாலை சென்னை காமராஜர் அரங்கில் லக்ஷ்மண் ஸ்ருதி இன்னிசைக்குழுவினருடன் SPB Golden Night என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.30க்குத் தொடங்கிய நிகழ்ச்சியில் எஸ்.பி.பி கீழ்க்கணட பாடல்களைப் பாடினார்.
  1. ராகங்கள் பதினாறு
  2. நிலவு தூங்கும் நேரம்
  3. மடை திறந்து பாயும் நதியலை நான்
  4. சம்சாரம் என்பது வீணை
  5. மன்றம் வந்த தென்றலுக்கு
  6. மாதமோ ஆவணி
  7. கணாக் காணும் கண்கள் மெல்ல
  8. வந்தனம்... என் வந்தனம்
  9. சுந்தரி கண்ணால் ஒரு சேதி
  10. பாரதி கண்ணம்மா
  11. பூந்தேனில் கலந்து
  12. இலக்கணம் மாறுதோ
  13. யார் வீட்டு ரோஜா
  14. நான் ஒன்ன நெனச்சேன்
  15. கண்ணுக்குள் நூறு நிலவா
  16. இதயம் ஒரு கோவில்

எங்கெல்லாம் பாடல்களுக்கான தளம் உள்ளதோ அதற்கான சுட்டிகளைக் கொடுத்துள்ளேன்.

9.00 மணியானதும் கிளம்ப வேண்டியிருந்தது. நிகழ்ச்சி அதற்கு மேலும் தொடர்ந்தது.

வயதானாலும் எஸ்.பி.பி குரலில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் அரங்கில் ஒலியமைப்பு சுமாராகத்தான் இருந்தது. அவ்வப்போது குரலை விட பக்கவாத்தியங்களின் சத்தம் தாங்க முடியவில்லை. தொடக்கத்தில் நிகழ்ச்சியை ரெகார்ட் செய்துகொண்டிருந்த விடியோ கேமரா இயக்குனர்களுடன் சில பார்வையாளர்கள், தங்கள் பார்வையை மறைப்பதாக, கடுமையாகச் சண்டை போட்டனர். எஸ்.பி.பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டும் சத்தம் அடங்கவில்லை.

பாடல்களுக்கு இடையே 'இந்தப் பாட்டைப் பாடுங்கள், அந்தப் பாட்டைப் பாடுங்கள்' என்று ஓயாத விண்ணப்பங்கள். பலமுறை எஸ்.பி.பி கோபப்பட்டார், ஆனால் பார்க்க வந்த ஜனங்கள் இதைப்பற்றியெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஒரு பாடகன் அனைத்துப் பாடல்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பதாக நம்மூர் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். "ம்.. பாடு" என்றால் உடனே பாடுவதற்கு. பின் எஸ்.பி.பி தான் இன்று பாடவந்துள்ள பாடல்களை ஏற்கெனவே ரிஹர்சல் செய்து வந்திருப்பதாகவும் வேறு பாடல்களைக் கேட்டவுடன் பாடுவது தம்மால் முடியாது, கூடவுள்ள இசைக்கலைஞர்களாலும் ஈடுகட்ட முடியாது என்று விளக்கியும் ரசிக சிகாமணிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

[Thanks: Prakash]

3 comments:

  1. நினைவில் நிற்கும் வலப்பதிவாய் பதித்துவிட்டீர் அய்யா!. வெகுஜனத்திடம் கலைஞனின் சிரமங்களை சித்தரிப்பதாய் இருக்கிறது.

    ReplyDelete
  2. நிறைய ரசிகசிகாமணிகளுக்கு ஆர்வம் ரொம்ப ஜாஸ்தி. சொல்றது காதில விழவே விழாது.

    ReplyDelete