Saturday, December 17, 2005

இட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update

சுயநிதி, தனியார் professional கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டுக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதா இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, அடுத்த வாரமே கொண்டுவரப்படும் என்று பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறியுள்ளார். ஏற்கெனவே கேபினட்டால் உருவாக்கப்பட்ட முன்வரைவு அப்படியே தாக்கல் செய்யப்படும் என்றும் அதில் எந்த மாறுதலும் செய்யப்படாது என்றும் சொல்லியுள்ளார்.

இப்பொழுதுள்ள வரைவில் சிறுபான்மைக் கல்விக்கூடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை பாஜக, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் இரண்டும் எதிர்த்திருப்பதை என் முந்தைய பதிவில் சுட்டியுள்ளேன்.

No comments:

Post a Comment