Monday, January 08, 2007

பர்வேஸ் முஷரஃப், In the Line of Fire

நாளை (செவ்வாய்), 9 ஜனவரி 2007, மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டை ஹோட்டல் டே'ஸ் இன், டெக்கான் பிளாஸாவில் (Day's Inn, Deccan Plaza), பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப் எழுதிய "In the Line of Fire, A Memoir" என்னும் புத்தகத்தின் தமிழாக்கம் "உடல் மண்ணுக்கு" வெளியிடப்படுகிறது. புத்தகத்தை நாகூர் ரூமி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேச உள்ளோர்:

1. பி.எஸ்.ராகவன், Former Director (Political), Ministry of Home Affairs, Govt. of India
2. பி.ராமன், Former Additional Secretary, Cabinet Secretariat, Govt. of India
3. Col. R.ஹரிஹரன், Retd. Military Intelligence Officer

இவர்கள், பாகிஸ்தானும் இந்தியாவில் பயங்கரவாதமும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கார்கில் போர், மற்றும் பிற எல்லைப் பிரச்னைகள், இந்தியா-பாகிஸ்தான் அமைதி ஆகியவை பற்றி பேச உள்ளனர்.

வரவேற்பு: பத்ரி சேஷாத்ரி, நன்றியுரை: நாகூர் ரூமி

அரங்கில் அதிக இடங்கள் இல்லாததால், வரவிரும்புபவர்கள் முன்கூட்டியே வந்து இடங்களில் அமர்ந்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

5 comments:

  1. B.Raman? ரிடிஃப்.காம் இலே , பத்தி எழுதுகிறாரே... அவரா?

    ReplyDelete
  2. ஆமாம். அவரேதான்!

    ReplyDelete
  3. இன்னைக்கே துண்டு போட முடியுமான்னு பார்க்கணும் ;)

    ReplyDelete
  4. இதை பார்த்தீர்களா..??

    http://thatstamil.oneindia.in/news/2007/01/12/pak.html

    ReplyDelete
  5. சுந்தர்:

    பார்த்தேன். ஆனால் விழாவில் கலந்துகொண்டவர்களின் பதவிகளைச் சொதப்பி விட்டனர்.

    பி.எஸ்.ராகவன் இவர். CBI ஆசாமி கிடையாது. உள்துறைச் செயலகத்தில் வேலை செய்த ஐ.ஏ.எஸ். பி.ராமன் RAW, IB இல் இருந்த ஐ.பி.எஸ். ரீடிஃப் பத்தி எழுதுபவர். கர்னல் ஹரிஹரன் ஆர்மி இண்டெலிஜென்ஸ். ஐ.பி.கே.எஃபுடன் இலங்கையிலும் 1971 போரின்போது பங்களாதேசத்திலும் இருந்தவர்.

    ReplyDelete