Friday, March 16, 2007

நிலம் கையகப்படுத்தல்

சில நாள்களாகவே மனத்தில் போட்டு உழப்பிக்கொண்டுவரும் விஷயம் இது. நந்திகிராமத்தில் நடந்த போராட்டம், துப்பாக்கிச்சூடு, தொடர்ந்து இன்று நடந்த பஸ் எரிப்பு ஆகியவை வேதனை தரவைக்கின்றன.

ஆளும் கட்சிகள் - கம்யூனிஸ்டுகளோ, காங்கிரஸோ, பாஜகவோ, திமுகவோ - மக்களுக்கு விருப்பமில்லாததைக் கட்டாயமாகப் புகுத்த முயற்சி செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

நிலம் கையகப்படுத்தல் என்பது உணர்ச்சிகளைத் தூண்டும் விஷயம். மத்திய, மாநில அரசுகளுக்கு "Eminent domain" என்ற அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'ஓர் அரசு, தனியார் நிலங்களை பொது உபயோகத்துக்காக, அந்த நிலத்துக்குரிய நியாயமான விலையைக் கொடுத்துவிட்டு எடுத்துக்கொள்ளும்' அதிகாரம் என்று பொருள்.

தனி மனிதர் ஒருவரிடம் அதிகபட்சமாக இவ்வளவுதான் நிலம் இருக்கலாம் (நில உச்சவரம்பு) என்ற சட்டத்தின்படி அதிகமாக உள்ள நிலங்களைக் கையகப்படுத்தி அவற்றைப் பிரித்து பிறருக்குக் கொடுப்பது வேறு. இந்த eminent domain விஷயத்தில் ஒரு தனி நபரிடம் எவ்வளவு குறைவாக நிலம் இருந்தாலும் அந்த நிலம் பொது உபயோகத்துக்குத் தேவை என்று ஓர் அரசு தீர்மானித்தால்போதும்.

சாலைகள் அமைக்க அல்லது விரிவாக்க, அணைகள் கட்ட என்று பல பொதுக்காரியங்களுக்காக அரசுகள் தனியார் நிலங்களை ஆக்ரமித்துள்ளன. இவ்வாறு செய்யும்போது தனி நபர்கள் நீதிமன்றங்களை அணுகினால் நீதிமன்றங்கள் தனி நபர்களுக்குச் சாதகமான தீர்ப்புகளை இதுவரை வழங்கியதில்லை. இப்பொழுது நடக்கும் நர்மதா அணை போராட்டம்வரையில் பல தனி நபர்களது வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன.

பொதுவாக நிலம் கையகப்படுத்தப்படும்போது என்னென்ன பிரச்னைகள் இருக்கலாம்?

1. அந்த நிலத்திலே காலம் காலமாக விவசாயம் செய்துவரும் மக்கள் வேறு எங்கும்போய் வாழ்ந்து பிழைக்க வழியற்றவர்களாக ஆகி, பிச்சைக்காரர்களாகவும் சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும் ஆகிவிடலாம். அதுதான் அரசு பணம் தருகிறதே என்று நீங்கள் கேட்கலாம். நம்மைப் போன்ற, அலுவலகங்களில் வேலை செய்வோர் வசிக்கும் இடங்களை அரசு எடுத்துக்கொண்டு அதற்குரிய நியாயமான விலையைக் கொடுத்தால் அது வேறு விஷயம். வேறு இடத்தில் வீட்டை வாங்கி/கட்டி/வாடகைக்கு எடுத்து நாம் பிழைத்துக்கொள்ளலாம். ஆனால் வைகை ஆற்றங்கரையிலோ நர்மதா ஆற்றங்கரையிலோ விவசாயம் செய்பவனைத் துரத்தினால், அவனது வாழ் நிலமும் உழு நிலமும் அழிகிறது. வேறு நல்ல இடத்தில் விவசாய நிலம் கிடைக்குமா? அப்படிப்பட்ட நிலம் கிடைக்கும் இடம் எங்கோ ஒரு கோடியில் என்றால் இதுநாள்வரையில் வாழ்ந்துவந்த இடத்தைவிட்டு எந்த அறவியல் அடிப்படையில் அந்த மனிதனைத் துரத்தமுடியும்? ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி பல நூறு மனிதர்களின் வாழ்வை அழிப்பதிலிருந்துதானா கிடைக்க வேண்டும்?

2. அரசு கொடுக்கும் நஷ்ட ஈடு - இதைப்பெறத் தேவையான கடுமையான சட்டதிட்டங்கள், அடிமட்ட அரசு அலுவலர்களின் மெத்தனமான அல்லது மோசமான போக்கு, லஞ்சம் ஆகியவை சட்டங்களைக் கண்டு மிரளும் சாதாரண மனிதர்களை எவ்வளவு மோசமாக பாதிக்கும்?

3. அரசு கொடுக்கும் நியாயமான விலை - இது எந்த அடிப்படையில் நியாயம் எனத் தீர்மானிக்கப்படுகிறது? நிலம் என்பது வெறும் அதற்கான சந்தை விலை மட்டும்தானா? நிலம் என்பது டீமேட் செய்யப்பட்ட பங்கு கிடையாது. அதன் விலை அதிலிருந்து கிடைக்கும் வாழ்வு. அந்தக் கண்ணியமான வாழ்வை அரசு கொடுக்கும் நஷ்ட ஈடு கவனித்துக்கொள்ளுமா? மற்றொன்று உளவியல் சம்பந்தமானது. தான் வாழ்ந்த வீட்டை, தான் படித்த பள்ளியை, தான் வேலை செய்த அலுவலகத்தை விட்டுப் பிரியும்போது பலர் கண்கலங்குகிறார்கள். அதைப்போலத்தானே இந்த நிலத்தைவிட்டுப் பிரியும் / கட்டாயமாக பிரிக்கப்படும் மக்களும்?

இதனால் விவசாயப் பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்காக அணைகள் கட்டுவதே கூடாது, சாலைகள் போடப்படவே / விரிவாக்கப்படவே கூடாது என்று நான் சொல்லவில்லை. இவற்றைச் செய்யும்போது அதிகபட்ச இரக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும். மக்களோடு பேசி, அவர்களே ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை முன்வைக்க வேண்டும். எவ்வளவு அதிகபட்சமான நஷ்ட ஈடு தரமுடியுமோ அவ்வளவு தரவேண்டும். அந்த மக்களுக்குத் தேவையான கல்வி, வேலை, காப்பீடு போன்ற பிற உதவிகளைத் தரவேண்டும். இதற்கெல்லாம் காலதாமதம் ஆகிறது என்று அலுத்துக்கொள்ளக் கூடாது.

ஒரு கல்யாண மண்டபத்தை இடிக்கிறார்கள் என்று புலம்பிக்கொண்டு நீதிமன்றம் செல்கிறார் எக்கச்சக்கமாகப் பணம் படைத்த ஒரு புதுக்கட்சித் தலைவர். கையில் உள்ள அத்தனையையும் இழக்கப்போகும் மக்கள் எவ்வளவு துடிதுடிப்பார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.

அடுத்தது தனியார் நிறுவனங்களுக்கான நிலம் கையகப்படுத்தல். சிங்கூர், நந்திகிராமம் முதற்கொண்டு தனியார் தொழிற்சாலைகளுக்காகவோ, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காவோ ஓர் அரசு முன்னின்று நிலத்தைக் கையகப்படுத்துவது. பின் அந்த நிலத்தை இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த விலையிலோ தனியார் நிறுவனங்களுக்குக் கொடுப்பது. இது மிகவும் தவறான முடிவு.

தனியார் நிறுவனங்கள் உருவாக்கும் வேலைவாய்ப்புகளை மதிக்கிறேன். தனியார் முதலீடுகள் பெருமளவு நம் நாட்டுக்குத் தேவை. ஆனால் பிரச்னைக்குரிய இடங்களைத் தனியார் தவிர்க்கவேண்டும். சிங்கூரில் பிரச்னை என்றதுமே (நான் மிகவும் மதிக்கும்) ரத்தன் டாடா அந்த இடத்தைத் தவிர்த்திருக்க வேண்டும். ஓர் அரசியல்வாதிபோல தன்னுடைய எதிரிகள்தாம் இந்தப் பிரச்னையைத் தூண்டிவிடுகிறார்கள் என்று பேசியிருக்கக்கூடாது. புத்ததேவ் பட்டாச்சார்யா அகங்காரத்தைக் கைவிட்டு ("நான் டாடாவுக்கு என்ன பதில் சொல்வேன், எப்படி அவர் முகத்தில் முழிப்பேன்" என்றெல்லாம் பேசக்கூடாது!) என் மக்கள் இந்த இடத்தில் நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்கவில்லை, அதனால் வேறு இடம் தேடுவேன் என்று சென்றிருக்க வேண்டும்.

நெருக்கமான மக்கள்தொகைப் பரவல் மிகுந்த இந்தியாவில், அதுவும் பெருநகரங்கள் அருகில், பெரிய அளவில் இடம் கிடைப்பது மிகக்கடினம். விளைநிலங்களைக் கவனமாகத் தவிர்த்து, மக்கள் வசிக்கும் இடங்களாகப் பார்த்து, அங்குள்ள மக்களை வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டு அதன்பிறகே அந்த இடங்களை தொழிற்சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றுக்குத் தரவேண்டும்.

எதிர்க்கட்சிகளையும் மாநில சட்டமன்றங்களையும் கருத்தில் கொண்டு, அவர்களோடு முழுமையாக விவாதித்து, மக்களைத் தயார்படுத்தியபின்னரே இதில் இறங்கவேண்டும். மூடிமறைத்து, நிறுவனங்களுடன் செய்துகொண்ட உடன்பாடுகள் என்ன என்பதை வெளியே தெரிவிக்காது இருந்தால் கடுமையான பிரச்னைகள் ஏற்படும்.

(சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் குறித்துத் தனியாக எழுதுகிறேன்.)

இப்பொழுது மேற்கு வங்கத்தில் நடைபெறுவதை நாடே உன்னிப்பாகக் கவனிக்கிறது. இதுதான் ஹரியானாவிலும், தமிழகத்திலும், மும்பையிலும், நர்மதா பள்ளத்தாக்கிலும் நடக்கும். மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள். துப்பாக்கிச் சூடு, மக்களைக் கொல்வது ஆகியவற்றின்மூலமாக எந்த அரசுமே தன் மக்களுக்கு வளர்ச்சியைக் கொண்டுவர முடியாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கோ, வேலைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளுக்கோ, சாலைகள், மேம்பாலங்களுக்கோ நிலம் வேண்டுமானால் ஓர் அரசு அதிரடியாக இறங்கி, மக்களை மிரட்டிப் பணியவைத்து, கையகப்படுத்தக்கூடாது. மீறினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதையே நாம் காண்கிறோம்.

3 comments:

  1. Nanshigram incident is very shocking!. First problem regarding SEZ came from communist ruling West Bengal. There are more SEZ are planned in all over india. Whats going going to happen. I think SEZ and its land aquiring method must be changed. Purticularly Govts will not be authoriesd to aquire land.
    -Vibin, Coimbatore

    ReplyDelete
  2. Hi,

    I was discussing disputes on river Kauveri with my Dad who has an experience of working in Cauvery Delta for several months as a PWD contractor. My argument started saying, why there are no dams except Kallanai in the delta region to store the surplus. The Dads words were very interesting, in the sense, kind of an eye opener to me.
    1.The terrain/landscape is so flat and an elevation of a couple of meters is measured only in a length of few thousand meters. And there is no significant downward elevation. Due to this, even with latest technologies to support the soft soil in the area, if a Dam is built the water level is not going to raise, until a huge artificial reservoir area is digged out. Other wise the water is going to spread over the banks in the fertile land. Using 'Eminent Domain' on the farmers will lead to a miserable future both politically and economically.

    ---- The conversation switched over to linking rivers across India. My Dad said that occupying peasants land for the very purpose of solving his water problem doesnt make any sense. Though government might have such an idea, it will take its own time, first slowly trying to leak the matter in to air so that people start discussing about it and over the years, it could sell the idea and change the mindset of people to hand over the land with out any protest or with little protest. Its all about governments [not politicians but policy makers] stand in doing good things in such a way that it looks good and do good.
    ------
    What the CPI or communist part and buddhadev have done in West Bengal shows their immaturity and kind of hurryness in getting it done and also it looks very evident as if Buddhadev has committed to some one on this. It could also be taken as a stand of Buddha and his party to prove their strength. I am really confused about comrades, though I never had any clear idea about them except for their slogan 'ULLATHUM POCHI LOLLAKANNA'

    - Regards,
    Gopinath Selvaraj.

    ReplyDelete