Saturday, April 07, 2007

SEZ - கொஞ்சம் முன்னேற்றம்

நந்திகிராமக் கலவரத்துக்குப் பிறகு [1, 2, 3], சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடர்பாக சில மாற்றங்கள் வந்துள்ளன.

* மிக முக்கியமானது - அரசு எமினெண்ட் டொமைன் (Eminent Domain) அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்தி அவற்றை தனியார் நிறுவனங்களுக்கு வழங்காது. தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் மக்களிடம் நேரடியாகச் சென்று நிலங்களை, அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியது - கம்பெனிகள் நிலம் வைத்துள்ள மக்களை மிரட்டித் துன்புறுத்தாமல் இருக்கவேண்டும். அதற்கு சட்டபூர்வமான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளவேண்டும்.

* ஏற்கெனவே அரசு தனியாருக்குக் கொடுக்கவென்று கையகப்படுத்தியிருக்கும் நிலங்கள் செல்லாது. SEZ நிறுவனங்கள் மீண்டும் மக்களிடம் நேரடியாகச் சென்று நிலங்களை வாங்கவேண்டியிருக்கும்.

* SEZ பகுதியின் பரப்பளவு 5,000 ஹெக்டேரைவிட அதிகமாக இருக்க முடியாது. (1 ஹெக்டேர் = 2.47 ஏக்கர்.) கலவரத்துக்கு முன்னர் ரிலையன்ஸ் மும்பையில் கட்டவிருந்த SEZ-இன் அளவு 12,000 ஹெக்டேர்! இந்த 5,000 ஹெக்டேர் பரப்பளவே தேவையா அல்லது இன்னமும் குறைக்கவேண்டுமா என்ற கேள்வி எழலாம். அதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளின் கையில் கொடுத்துள்ளது மத்திய அரசு.

* நிலம் கையகப்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று இயற்றப்படும். ("eGoM has requested the Ministry of Rural Development to reformulate a comprehensive land acquisition Act to address all relevant issues.")

* நிலத்தை விற்போரின் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு SEZ நிறுவனம் கட்டாயமாக வேலை தரவேண்டும்.

-*-

நிலத்தை விற்க விரும்புபவர்களுக்கு
- பணம்
- வேலை
- அந்த SEZ நிறுவனத்தில் சில பங்குகள்
- மாற்று இடம்
- கல்வி/பயிற்சி
என ஒரு பேக்கேஜாகத் தருமாறு சொல்ல அரசுக்கு அதிகாரம் உள்ளது. நிலத்தை வாங்கும் கம்பெனிகளும் இவை அனைத்தையும் செய்யவேண்டும்.

[SEZ என்பது தேவையா? அது இந்திய மக்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தி, அந்த நிலத்தை அந்நிய நாடாக அறிவிக்கும் ஒரு மறுகாலனியாதிக்கத் திட்டமா? SEZ ஏதாவது ஒரு வகையில் நம் நாட்டுக்கு உதவுமா? SEZ மூலம் எக்கச்சக்கமான வரி ஏய்ப்பு நடக்குமா? ஆகியவை பற்றிய தீவிரமான விவாதம் தேவை.]

No comments:

Post a Comment