Wednesday, September 05, 2007

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்


நேற்று ரஷ்ய கலாசார மையத்தில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

கார்த்தி சிதம்பரம் தொகுத்து வழங்க, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியவர்கள் அரசியல் பின்னணி இல்லாதவர்கள். மூவர் இந்திய அணு ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள்: பிளேசிட் ரோட்ரிகே, பாலசுப்ரமணியன், எல்.வி.கிருஷ்ணன். நான்காமவர் அறிவியல் கட்டுரைகள் எழுதும் இதழியலாளர் ராமதுரை.

கடைசியில் மக்கள் நிறையக் கேள்விகளைக் கேட்டனர். அதற்கு இந்த நால்வரும் கொடுத்த பதில்களையும் சேர்த்தே ஒலிப்பதிவாகத் தொகுத்துள்ளேன்.

கலந்துரையாடல்

கூட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் 'கூட்டத்துக்குச் சேர்க்கப்பட்ட ஆள்கள்' - வண்டியில் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட அப்பாவிகள். கொஞ்சம் பேர் கார்த்தி சிதம்பரத்துக்காக முன் வரிசையில் வந்து அமர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள். எனக்குப் பின்வரிசையில் ஏதோ கல்லூரியிலிருந்து வந்திருந்த 15-20 மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களது ஆசிரியர் இந்த விவகாரம் பற்றி கேள்விகள் கேட்பார் என்று தோன்றியது. விஷயம் என்ன என்று தெரிந்துகொள்ள வந்திருந்த பொதுமக்கள் சுமார் 70 பேர் இருந்திருப்பார்கள். மிச்சம் பத்திரிகையாளர்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் செல்கிறது மேற்கண்ட இந்த ஒலிப்பதிவு.

இன்று இடதுசாரிச் சிந்தனையாளர் ஒருவரின் (Dr. T.Jayaraman, BARC) பேச்சு LLB கட்டடத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. அதிலும் ஆஜர் ஆகி, பேச்சை, கேள்வி-பதில்களை ஒலிப்பதிவு செய்வேன்.

1 comment:

  1. உங்களது அனைத்து பதிவுகளும் அருமை..

    வாழ்த்துக்கள்..

    தங்களை சந்திக்க இயலுமா..??

    சூர்யா
    சென்னை.
    butterflysurya@gmail.com

    ReplyDelete