Saturday, January 03, 2009

மாலனின் கட்டுரைத் தொகுப்பு வெளியீடு

திங்கள் - 5.1.2009 - அன்று மாலை 6.00 மணிக்கு, மாலனின் “என் ஜன்னலுக்கு வெளியே...” என்ற கட்டுரைத் தொகுப்பு வெளியிடப்பட உள்ளது. கிழக்கு பதிப்பகம், எல்டாம்ஸ் ரோட், மொட்டை மாடியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சிங்கப்பூர் தமிழ் முரசு, புதிய பார்வை, உயிர்மை, தினமணி, இந்தியா டுடே ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள், திசைகள், மாலனின் வலைப்பதிவு, கில்லி விருந்தினர் பக்கம் ஆகியவற்றுக்காக எழுதியது ஆகியவை அரசியல், சமூகம், இலக்கியம், இரங்கல், மொழி என்று துறை வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ள. 392 பக்கம், விலை ரூ. 200.

நிகழ்ச்சி
பத்ரி சேஷாத்ரி வரவேற்பு + அறிமுகம்.
புத்தகத்தை வெளியிட்டு ஜென்ராம் பேசுகிறார்.
மாலன் ஏற்புரை.
பார்வையாளர்களுடன் விவாதம்.

அனைவரும் வருக.

No comments:

Post a Comment