Monday, April 20, 2009

தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009

சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், புத்தகம் பேசுது மாத இதழ் ஆகியவை இணைந்து இரண்டு நாள் கருத்தரங்கத்தை நடத்துகின்றனர்.

நாள்: 22, 23 ஏப்ரல் 2009
இடம்: பவள விழா அரங்கம், மெரீனா வளாகம், சென்னை பல்கலைக்கழகம்

நிகழ்ச்சி நிரல்:

22/4/2009

10.00-11.00: தொடக்க விழா, நூல் வெளியீடு

11.00: அமர்வு 1: புத்தக உருவாக்கமும் வெளியீட்டு வரலாறும்
தலைமை: இரா.முத்துக்குமாரசாமி
19-ம் நூற்றாண்டில் புத்தக உருவாக்கம்: வீ. அரசு
புத்தக உருவாக்கம் 1900-1945: அ.சதீஷ்
சுதந்தரத்துக்குப் பிந்தைய காலங்கள் - புத்தக உருவாக்கம் 1947-1990: ஸ்ரீரசா
பின்காலனிய உலகமயச் சூழலில் புத்தக உருவாக்கமும் வெளியீட்டு முறைகளும் 1990-2009: எஸ்.பாலச்சந்திரன்

14.00: அமர்வு 2: புத்தகத்தின் உள்ளடக்க முறைகள்
தலைமை: ச.தமிழ்ச்செல்வன்
புனைகதைகள் 19-ம் நூற்றாண்டு: பெருமாள் முருகன்
மரபு இலக்கியங்கள்: 1900-1945: கா.அய்யப்பன்
அரசியல் குறுநூல்கள்: 1947-1990: ஆ.சிவசுப்ரமணியன்

23/4/2009

10.00: அமர்வு 3: புத்தக உருவாக்கத்தில் தொழில்நுட்பம்
தலைமை: மா.சம்பந்தன்
19-ம் நூற்றாண்டில் எழுத்து வடிவங்களும் அச்சு முறைகளும்: தமிழ்நாடன்
இரண்டாம் உலகப்போருக்கு முன்பும் பின்பும் உருவான தொழில்நுட்பம்: அசோக்குமார்
இன்றைய தொழில்நுட்பம் - இணையத்தில் தமிழ் நூல்கள்: விருபா து. குமரேசன்
நூல் வடிவமைப்பு முறைகள் - செ.ச.செந்தில்நாதன்
தமிழும் கணிப்பொறியும் - ஆண்டோ பீட்டர்

14.00: அமர்வு 4: புத்தக வெளியீடுகளும் நிறுவனங்களும்
தலைமை: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி
பத்தொன்பதாம் னூற்றாண்டுத் தமிழ் இலக்கியப் பதிப்புப் போக்குகள் - வெ.ராஜேஷ்
காலனிய காலத்தில் செய்த பதிப்புகள்: பொ.வேல்சாமி
பதிப்பு உலகில் மறைமலையடிகள் நூலகத்தின் பங்களிப்பு (1947-90): ரெங்கையா முருகன்
பிந்தைய காலனியச் சூழலில் நூல் வெளியீடு (1990-2009): மனுஷ்யபுத்திரன்

17.00 நிறைவு விழா

4 comments:

  1. பகிர்விற்கு நன்றி பத்ரி.

    ஏப்ரல் 22 உலக புத்தக நாள் சிறப்பாக தானே இவையெல்லாம்.

    கிழக்கு சார்பாக ஏதும் விசேஷம் இல்லையா..??

    ReplyDelete
  2. விசேஷமாக எதும் இல்லை. அன்றும் புத்தகங்களை உருவாக்குவதில் ஈடுபட்டிருப்போம். மற்றுமோர் இடத்தில் - பல்லாவரத்தில் - புத்தகக் கண்காட்சி ஆரம்பிப்போம். விருகம்பாக்கத்தில் நடக்கும் கண்காட்சி தொடர்ந்து நடக்கும்.

    ReplyDelete
  3. ஒரு மொட்டை மாடி கூட்டம் போட்டிருக்கலாம்.


    ஒ.கே.

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. பின் காலனிய/பிந்தைய காலனிய என்று குறிப்பிட்டு 1990 என்று போடுபவர்களுக்கு
    பின் காலனியம் என்றால் என்னவென்று தெரியுமா.இல்லை post-modern என்பது
    போல் அதையும் சகட்டு மேனிக்கு பயன்படுத்துகிறார்களா.'பின்காலனிய உலகமயச் சூழலில் 1990' என்று எழுதுவதன்
    மூலம் என்னதான் சொல்லவருகிறார்கள்.

    ReplyDelete