Saturday, September 26, 2009

கிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு

இன்று (சனிக்கிழமை), 26 செப்டெம்பர் 2009, மாலை 6.00 மணிக்கு, த.வி.வெங்கடேசுவரன், ‘இருள் பொருள், இருள் சக்தி’ என்ற தலைப்பில் இயல்பியலில் புதிதாக வந்துள்ள கொள்கையை, எளிமையான முறையில் விளக்கிப் பேசுவார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை), 27 செப்டெம்பர் 2009, மதியம் 12.00 மணி தொடங்கி 1.00 மணி வரை, ஆஹா FM, 91.9 MHz பண்பலை வானொலியில் கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி 10-வது வாரமாக நடக்கிறது. இந்த வாரம், ‘சித்தர்கள்’ பற்றிய நிகழ்ச்சி. ஸ்ரீநிவாச ராகவன், உமா சம்பத், சித்ரா ஆகியோர் கலந்து பேசுவார்கள்.

1 comment:

  1. அன்பின் பத்ரி,

    தங்களின் மறு அறிவிப்பு இடுகைக்கு மிக்க நன்றி. இதைப்பற்றி அறிவதற்காகவே நான் நாகையில் இருந்து வந்துள்ளேன். மேலும் இயற்பியலில் எனக்கு சிறுவயதிலேயே அதிக ஈடுபாடு உண்டு. இந்த பிரபஞ்சத்தில் உள்ள காந்தப்புலத்தை பற்றி அறியவும் ஆவல். இந்த காந்தப்புலத்தைப்பற்றி நான் தெரிந்தவைகளையும் இந்த நிகழ்வில் தெளிவுபடுத்திக் கொள்ளவும் காத்திருக்கின்றேன். இறைவன் நாடினால் நாம் இன்று சந்திப்போம். நன்றி.

    ReplyDelete