Friday, February 10, 2012

செல்ஃபோனில் ஆபாசப் படம்

தமிழ்பேப்பரில் நான் இன்று எழுதிய கட்டுரை: 
பாலுணர்வைத் தூண்டும் அசையும் அல்லது அசையாப் படங்களை, அதற்குரிய வயது வந்தவர்கள் பார்ப்பதில், என்னைப் பொருத்தமட்டில் தவறு ஏதும் இல்லை. இந்த ஆபாசப் படங்களைப் பார்த்தால் அவர்கள் கெட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும், இவர்களை அமைச்சர்களாக ஆக்கியதே தவறு என்று புனிதர்கள் பலரும் கொந்தளிப்பது கோமாளித்தனமாக இருக்கிறது.
 ...

19 comments:

  1. Badri,

    There is nothing wrong in watching such movies/pictures when they are at home or alone. But when and where you do this is the issue. This is a behavioral issue and breach of trust and oath. Do you accept your staff sitting and watching porn while in your office while they are paid to sell books?

    ReplyDelete
    Replies
    1. I will not encourage, or accept my staff watching porn when they should be working on a project. But if they have free time, I wouldn't mind them stealing a glance here and there. But if it bothers others sitting next to them, it will be seen as unacceptable.

      My staff are accountable to me, as I am accountable to my board.

      In the legislative assemblies across the state, the legislators are technically not accountable to anyone. They have to vote according to whip. Nothing more. They can sleep, shout, break things, stall proceedings, can even disrobe themselves and the opposition members. In such a scenario, watching a bit of porn is not that horrible.

      Let the speaker of Karnataka assembly clarify what rules they have violated and give them mild punishment accordingly. I am only against the outpouring of hypocritical outrage at the said act.

      Delete
    2. they are accountable to the speaker who can punish them with suspension or expulsion for any of the above mentioned clauses.MP s where expelled in cash for questions scam few years back.
      sleeping on duty is punishable only in armed forces.the involvement of sangh parivar which preaches morality is the reason for outrage and if it involved former chief minister kumarasamy it would have been ignored or just laughed at. his extramarital affairs with a actress is neither a breaking news nor used as a political tool as his vote bank will not be disturbed by it .
      extramarital affair of yogi adityanath or venkiah naidu will be a scandal than any affair involving T R Balu or sachin pilot.the outrage is against the hypocrisy of moral preaching sangh

      Delete
  2. 100% accepted.but watching in the assembly is not accepted. :)
    will we be able to watch it during a project presentation?

    ReplyDelete
  3. சங்க இலக்கியங்களில் கூட காதலியின் முலையை ரசிக்கும் பாக்கள்தான் உள்ளன, வேற்றுப்பெண்களை அல்ல. விரைவின் மகளிர் போற்றப்படுவதும் இல. பிறவை ஆரியம் கற்றுத்தந்த கலாச்சாரமே, நமதல்ல நாயைப்போல் அலைவது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். என்ன செய்வது... தமிழர்களின் போற்றத்தகு, ஏற்றமிகு வாழ்க்கை முறையை இந்தக் கன்னடிகர்கள் ஏற்காமல் ஆரியத்தைப் பின்பற்றுகிறார்களே...

      Delete
    2. தம்பி ரொம்ப புத்திசாலி தனமா பேசுறத நெனசுகாதீங்க,
      வெகு விரைவில் உங்களுக்கு அழிவு

      Delete
  4. மிகவும் ஏமாற்றமாக இருக்கு உங்க பதில், பத்ரி. எனக்கு மூன்று கேள்விகளுக்கு பதில் தேவை:

    இவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது , அவர்கள் குறை தீர்ப்பதற்கா இல்லை இதற்கா?

    அடுத்த தேர்தலில் தைரியமாக , ஆமாம் நாங்கள் இப்படிப்பட்ட படங்களை த்தான் சட்டசபையில் பார்ப்போம் என்று பகிரங்கமாக அறிவிப்பார்களா ?

    மெஜஸ்டிக்கில் சிலர் இந்தமாதிரி படங்களை பார்த்தால் ஒன்றும் நடவடிக்கை எடுக்கமாட்டார்களா?

    ReplyDelete
    Replies
    1. எம்.எல்.ஏக்களைத் தேர்ந்தெடுப்பது நம் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் ஒழுங்கான சட்டங்களை இயற்றுவதற்கும். இவர்களைத் தவிர மற்ற எல்லொரும் இதனை மிகச் சிறப்பாகச் செய்துவிட்டதாக நீங்கள் சொல்கிறீர்களா? கடைசி பெஞ்சில் உட்கார்ந்து குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கும் எம்.எல்.ஏவைவிட இந்த ஆசாமிகள் எந்தவிதத்தில் குறைந்துபோய்விட்டார்கள்?

      ஓ, அப்படிச் சொல்லி, ஜெயித்தும் காண்பிப்பார்கள். ஊழலில் கடைந்தெடுத்த தெய்வங்களை நாம் ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஜெயிக்க வைப்பதில்லையா என்ன?

      என் நடவடிக்க எடுக்கவேண்டும்? நம் ப்யூரிட்டானிகல் பிரசங்கங்களை மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியம்.

      Delete
  5. It's not wrong, but when and where they were did that..
    Sugar is good for all but sugar pas-sent can take sugar???

    ReplyDelete
  6. முற்போக்கு என்றால் ஹுசைன்.தஸ்லிமாவை,நீல படத்தை பார்ப்பதை ஆதரிப்பது பிற்போக்கு என்றால் அதை எதிர்ப்பது என்பதிலிருந்து எப்போது தான் விடுபட போகிறோமோ
    இவை அனைத்தும் trivia .ஆனால் சங்க பரிவாரத்தை பார்த்து சிரிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
    இதே கர்நாடகத்தில் தமிழகம் போல மதிய உணவோடு முட்டை போட எடுக்கப்பட்ட முடிவிற்கு எதிர்ப்பு கிளம்பிய போது (பல கோடி மக்களுக்கு உதவும் விஷயம்)சங்க பரிவாரம் ஆடிய ஆட்டத்தில் பணிந்து திட்டம் கைவிடபட்டதே அது நீல படம் பார்ப்பதை விட ஆயிரம் மடங்கு கேவலாமான செயல்.முட்டை வேண்டாம் என்றால் வாழை பழம் கேள்.ஆனால் யாருக்குமே முட்டை போட வேண்டாம் என்று போராடுவதும் அதை ?முற்போக்காளர்கள் லாவகமாக ஒதுக்குவதும் ஒழிந்தால் தான் (கைக்கூலி இயக்கங்கள் அங்கு தழைக்கவில்லையே ,முட்டை வேண்டாம் என்று கூறும் வாயை அடைக்க)முற்போக்கு.
    இன்றும் இதே கர்நாடகத்தில் கோவில்களில் அன்னதானம் சில சாதிகளுக்கு தனியாகவும் மற்றவருக்கு தனியாகவும் உண்டு.அது நம் முற்போக்காளர்கள் கண்ணில் படாது.ஒரு கோவிலில் எச்சில் இலையில் உரண்டு பிறந்தால் நோய் சரியாகும் என்ற பழக்கம் உண்டு.அதற்க்கு சங்க பரிவாரம் முழு ஆதரவு.எத்ரிக்க முயற்சித்தவர்களுக்கு அடி உதை.அதை எதிர்த்து போராடினால் முற்போக்கு.ஒரு குறிப்பிட்ட சாதியினர் உண்ணும் எச்சில் இலைகளில் உருண்டால் தான்.அனைவரையும் உணவு உண்ண வைத்தால் தன்னால் அந்த பழக்கம் ஒழிந்து விடும்.ஏன் என்றால் சாமி சாப்பிட்ட எச்சில் இலைகளுக்கு மட்டும் தானே சக்தி.
    இதற்க்கு ஆதரவாக சங்க பரிவாரம் அதன் சட்ட மந்திரி சங்கு கொண்டு சீறுவது கேவலமாக படுவதில்லை.ஆனால் தஸ்லிமா.ஹுசைன் மிகவும் முக்கியம்

    ReplyDelete
  7. துக்ளக் இதழில் டி வீ வரதராஜன் சில வாரங்களுக்கு முன் குஜாராத் புகழ் பாடி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.அதில் அவர் பெருமையாக எப்படி அங்கு செல்லும் ரயில் வண்டிகளில் முட்டை கூட கிடைக்காது என்று பெருமைகளில் ஒன்றாக அடுக்குகிறார்.அதையும் ஒரு பத்திரக்கை பிரசுரம் செய்கிறது.பல கோடி மக்களின் உணவு கேவலம் என்று எண்ணுவது,அது இருந்தால் நல்லவர்கள் ஒன்றும் வாங்க மாட்டார்கள் என்று சங்க பரிவாரத்தின் வெற்றி முரசு ஒலிக்கும் இடம் அதை ஒழித்து கட்டியதை பெருமையாக எழுதுவது என்ன நக்கீரனின் மாட்டு கறி கட்டுரையை விட உயர்ந்ததா.இரண்டும் ஒன்று தான்.ஆனால் நக்கீரன் தான் முர்போக்களார்களால் திட்டபடுகிறது.திட்டுவதில் தவறில்லை.ஆனால் அதே போன்ற கேவலத்தை செய்யும் மற்றவை புகழபடுவது தான் ஆச்சரியம் அளிக்கிறது
    மதிய உணவில் முட்டையும் குஅஜராட் செல்லும் வண்டிகளில் முட்டையும் தஸ்லீமா,ஹுசைன் முற்போக்கை விட பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள்.அதை மூடிமறைப்பது தான் முற்போக்கா .அதை போராடி பெற்று கொடுத்து விட்டு புத்தகங்களுக்கு கோடி பிடிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. பூவண்ணன்: உங்கள் கவிதைகளை நீங்கள் எழுதுங்கள். என் கவிதையை நான் எழுதுகிறேன். உங்கள் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

      Delete
    2. பத்ரி சார் கிரிக்கெட் மாதிரி தஸ்லிமாவும் ஹுசைனும் எல்லா எடத்தையும் புடிச்சிக்கிட்டா மத்த விளையாட்டு நலியுதேன்னு நினைக்கிறவங்க கிரிக்கெட்டை திட்ட மாட்டாங்களா .கிரிக்கெட்ட கொண்டாடரவங்கள ஹாக்கி ,கேரோம் ,கபடி மாதிரி மத்த விளையாட்டு மேலயும் கவனம் செலுத்துங்கன்னு சொல்றது தப்பா

      Delete
  8. பத்ரி - வியாபாரத்திற்காக நாட்டையே விற்று விடுவார்.
    அது அவர் மீது குற்றம் இல்லை,
    IIM - வெளிநாட்டு வணிகத்தை இந்தியர்களுக்கு கற்றுகொடுக்கும் கேவலக் கூடம்

    ReplyDelete
  9. சிலர் உழைத்து பிழைப்பார்கள் - உழைப்பாளி
    சிலர் பிச்சை எடுத்து பிழைப்பார்கள் - பிச்சைகாரர்கள்
    சிலர் பிளைபிற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள் - பத்ரி

    ReplyDelete
  10. திரு.அனாயமேதர்... ஏன் நீங்கள் உங்கள் நிஜ பெயரில் வந்து ஆட்சேபிக்க கூடாது ... ஒரு வேலை நீ அவனா இருக்குமோ !...

    ReplyDelete
  11. தார்மீக நெறிகள் என்று எதுவுமே இருக்கக் கூடாது என்பதுதான் உங்கள் கருத்தா பத்ரி? அப்படியானால் ஊழலில் கடைந்தெடுத்த தெய்வங்கள் என்று உங்களால் குறிப்பிடப்படுபவர்கள் சட்டத்தின் பார்வையில் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வாங்கி விட்டால் அந்த தெய்வங்களை உண்மையிலேயே வழிபடத் துவ்ங்கி விடுவீர்களா?
    நாளைக்கே ஊழல், லஞ்சம், கொலை, கற்பழிப்பு எதுவுமே சட்டசபைக்குள் நடந்தால் குற்றமல்ல, சட்டத்துக்கு அப்பாற்பட்டது என்றொரு சட்டத்தை அந்த தெய்வங்கள் நிறைவேற்றினால் இந்த எல்லாக் குற்றங்களையும் செய்வது தவறில்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டுமா? அப்படி ஒரு சட்டம் வந்தபின் ஒரு MLA சட்ட சபையில் 'விப்' பிரகாரம் வாக்களிக்கும் கடமையை முடித்து விட்டு அருகில் இருக்கும் நபரைக் கத்தியால் குத்தினால் தவறில்லை என்று வாதிடுவீர்களா?
    விதிகளின்படித் தவறு என்று இல்லாவிட்டால் இனி விதிகளை உண்டாக்க வேண்டுமே தவிர சரி என்று எப்படிக் கூற முடியும்?
    இது நாள் வரை மக்கள் பிரதிநிதிகள் செய்யும் தவறுகளைக்காட்டி இதையெல்லாம் செய்தால் போர்னோ படங்களைப் பார்க்கக் கூடாதா என்று கேட்கிறீர்கள், இப்படியே இன்னும் எத்தனை தவறுகளைக் காலப் போக்கில் அனுமதிக்கலாம் என்று சொல்லுங்கள்?
    இது போன்ற படங்களைப் பார்ப்பது ஒரு தனி மனிதன் தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் செயல், அரிப்பை சொரிந்து கொள்கிற மாதிரி. அது தனி மனித சுதந்திரத்துக்கு உட்பட்டதென்றால் விடுமுறை எடுத்துக் கொண்டு 24 மணி நேரமும் அதையே கண்டு களிக்கட்டும். அதற்காகக் கடமையை ஆற்ற வேண்டிய இடத்தில் இச்சையைத் தீர்த்துக் கொள்வது சரியாகி விடுமா? நம் உடம்பு நமதுதான். அதற்காக அரிக்கிறது என்றால் நான்கு பேர் எதிரில் கண்ட இடத்தில் சொரிந்து கொள்வோமா? அதை எந்த நாகரிகமடைந்த சமுதாயமும் ஏற்பதில்லையே? (even if no one is technically accountable to anyone for scraping/scratching one's own skin, even if it doesn't bother others, even if it is done in his free time)
    சிறு நீர் கழிப்பது கூடத்தான் தனிமனிதனின் இயற்கையான தேவை. அதற்காக நட்ட நடு சட்ட சபையில் ஒரு உறுப்பினர் (after voting according to whip, of course)சிறுநீர் கழித்தால் technically not accountable to any one என்பீர்களோ?
    அது சரி, எல்லாவற்றுக்கும் அமெரிக்கா, அமெரிக்கா என்று உதாரணம் காட்டுவீர்களே, அமெரிக்கர்கள் இது போன்ற விஷயங்களை அனுமதிப்பார்களா?
    இந்தப் பின்னூட்டத்தை வெளியிடுவது மட்டுமின்றி என் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலும் அளித்தால் என் நன்றி உங்களுக்கு உரித்தாகும்.

    ReplyDelete
  12. //My staff are accountable to me, as I am accountable to my board.

    In the legislative assemblies across the state, the legislators are technically not accountable to anyone. //

    How naive. Legislative assembly is not a for-profit business like yours that you may found and later trade it public. Even going by your argument, if one of your employees watch porn 'here and there' and if KP was a publicly traded multinational company, and if this porn issue was caught by media and starts to blow up, and if it blows up big enough to muck up your profits, you would have to answer to your board and your stakeholders. In that case, I am sure that you will duly fire this employee who watched only 'a bit here and bit there' during work to avoid further scandal, in euphemistic parlance 'to avoid further distractions from the core values and central mission of the company' - let's say, if the stocks of your company would plummet in some conservative part of the world where your business is booming.

    That said, your point is valid - assembly members can even jerk off if they want - personally I don't mind. However, even if legislative assembly was a private company, it's fair to expect that only the founder would have the right to jerk off, and not the employees - because the founder sets the rules for the company. It's valid because it's HIS company and all was built on HIS money. If the founder thinks only he has the right to jerk off and not the others, you can find fault with it on a moral level, but it is legally valid - I am sure you'd agree. Not so in a publicly traded business like elected office, eh?

    ReplyDelete