Monday, March 05, 2012

இட ஒதுக்கீடு - உள் ஒதுக்கீடு - முழு ஒதுக்கீடு

திராவிட இயக்கம் தொடர்பாக ஏற்கெனவே எழுதிய இரு பதிவுகளை முதலில் படியுங்கள்.  திராவிட இயக்கத்தின் 100-வது ஆண்டு விழா | திராவிட இயக்கம் x பார்ப்பனர்கள்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வாராவாரம் ஒளிபரப்பாகும் ‘நண்பேன்டா’ என்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் நானும் கலந்துகொள்கிறேன். அதில், முஸ்லிம் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றது. வரும் ஞாயிறு அன்று இரவு 7.30-க்கு ஒளிபரப்பாகும். (நேற்று திராவிட இயக்கம் தொடர்பான விவாதம் நடைபெற்றது.)

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இட ஒதுக்கீடு என்பதற்குப் பெரும் ஆதரவு உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம், சென்னை மாகாணத்தில்தான் இது முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. வேறு சில இடங்களில் இதற்குமுன்னரேயே இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் சட்டம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து விரிவாக்கப்பட்டு, இன்று மொத்த இட ஒதுக்கீடு 69% என்ற ஒரு நிலை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது.

இதன் பின்னர்தான் உச்ச நீதிமன்றம் மண்டல் கமிஷன் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 50%-ஐத் தாண்டக்கூடாது என்று சொன்னது. எனவே ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசு நீதிமன்றம் சென்று தாற்காலிகமாக 69% இட ஒதுக்கீட்டைத் தொடர அனுமதி பெற்றவண்ணம் உள்ளது.

தமிழகத்தின் 69% இட ஒதுக்கீட்டில், 18% அட்டவணை சாதியினருக்கு (தலித்துகளுக்கு), 1% பழங்குடியினருக்கு, 50% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்கள் உண்டு. முந்தைய பதிவு ஒன்றில் கூறியபடி, பார்ப்பனர்கள் மற்றும் சில சாதிகள் தவிர்த்து கிட்டத்தட்ட அனைவருமே இட ஒதுக்கீட்டின்கீழ் வருவார்கள். (சுமார் 87% மக்கள் தொகைக்கு 69% இட ஒதுக்கீடு என்கிறது விக்கிபீடியா.)

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் பலன் பெறுவது பெரும்பாலும் முன்னேறிய சாதிகளே என்றும் தங்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் வன்னியர்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்போதுதான் மருத்துவர் ராமதாஸ் பிரபலம் அடைந்தார். அதன்பின்னர் அவர் பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கினார். பின்னர் 50% பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் 20% தனியாக எடுக்கப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. வன்னியர்கள் இப்பிரிவுக்குள் வந்தனர்.

கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தனி இட ஒதுக்கீடு கேட்டதால், சென்ற ஆட்சியில் இரு சமூகத்துக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கான 30% ஒதுக்கீட்டிலிருந்து ஆளுக்கு 3.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. விரைவில், கிறிஸ்துவர்கள் இந்த ஒதுக்கீடு தங்களுக்கு வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்துவிட்டனர். ஏனெனில் 30%-ல் உள் ஒதுக்கீடு இல்லாமலேயே அவர்களுக்கு 3.5%-ஐவிட அதிக இடங்கள் கிடைத்துவந்தன. 3.5% உள் ஒதுக்கீடு என்பது அவர்களுக்கு ஆதரவானதாக இல்லை. ஆனால், முஸ்லிம்கள் 3.5% இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திவருகின்றனர். சொல்லப்போனால், அதைவிட அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்கின்றனர்.

அட்டவணை சாதியினருக்கான 18% ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு என்று 3% உள் ஒதுக்கீடு தரப்பட்டது. இதற்கு பிற தலித் சாதிகளிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் முதலில் எதிர்ப்பு வந்தது. பின்னர் எதிர்ப்புகள் பின்வாங்கிக்கொள்ளப்பட்டன. ஆக இன்றைய ஒட ஒதுக்கீட்டு நிலை இவ்வாறு உள்ளது:

1. அட்டவணை சாதிகள்: 18%. அதில் 3% அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு
2. பழங்குடியினருக்கு: 1%
3. பிற்படுத்தப்பட்டோருக்கு: 30%. அதில் 3.5% முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு
4. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு: 20%

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலர் பேராசிரியர் ஹாஜா கனி, விவாதத்தின்போது, அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப மொத்த இடங்களைப் பிரித்துக் கொடுத்துவிடலாமே என்றார். இதைத்தான் பெரியாரும் சொன்னதாக அவர் சொன்னார்.

ஓப்பன் கோட்டா எனப்படும் மீதமுள்ள 31% இடத்துக்கு அனைவரும் போட்டியிடுவதாக இப்போது உள்ளது. ஆரம்பத்தில் பிற சாதியினர் (இட ஒதுக்கீடு இல்லாதவர்கள்) இந்த இடத்தில் பெரும்பான்மையைப் பிடித்துக்கொண்டனர். அப்படி இருப்பதால், பார்ப்பனர்கள், தம்முடைய சுமார் 3% மக்கள் தொகையைவிட அதிக இடங்களைக் கைப்பற்ற முடிகிறது என்பது சிலரது வாதம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் வெளியாகியுள்ள பொறியியல், மருத்துவக் கல்லூரி இடங்களைப் பார்க்கும்போது, பிற்படுத்தப்பட்ட சாதியினர் பலரும் இந்த 31% இடத்தில் பெரும் பங்கைப் கைப்பற்றியுள்ளது தெரிகிறது.

மொத்தத்தில் அவரவர் சாதித் தொகைக்கு ஏற்ப அவரவருக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்னும் கருத்தைப் பலர் முன்வைக்கிறார்கள். உதாரணமாக, ஹாஜா கனி போன்றோர்.

மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும் வேலைகளிலும் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அட்டவணைப் பிரிவினருக்கும் (15%) பழங்குடிகளுக்கும் (7.5%) மட்டும்தான் முதலில் இட ஒதுக்கீடு இருந்தது. வி.பி.சிங் பிரதமராக இருக்கும்போது மண்டல் கமிஷன் பரிந்துரையை முன்வைத்து இதர பிற்பட்ட சாதிகளுக்கு என்று 27% இட ஒதுக்கீடு தரப்பட்டது. நிறைய வழக்குகளுக்குப் பிறகு இந்த இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின்போதுதான் கிரீமி லேயர், மொத்த இட ஒதுக்கீடு 50%-ஐத் தாண்டக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கிரீமி லேயர் என்றால், இட ஒதுக்கீட்டைப் பெற, சம்பந்தப்பட்ட நபருடைய குடும்ப வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் இருக்கக்கூடாது; அவருடைய பெற்றோர்கள் குறிப்பிட்ட தரத்துக்கு மேற்பட்ட அரசு வேலைகளில் இருக்கக்கூடாது.

இந்த கிரீமி லேயர் என்ற பொருளாதார அடிப்படையை தமிழகம் ஏற்க மறுக்கிறது. அதற்கு அரசியலமைப்புச் சட்ட ஆதரவு இல்லை என்பது பலரது கருத்து. Ad hoc-ஆக இந்தக் கருத்தையும் 50% உச்ச வரம்பையும் உச்ச நீதிமன்றம் புகுத்திவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மாற்றம் கொண்டுவரும்வரை, இதுதான் செல்லுபடியாகும். ஆனால் நான் முன்பே சொன்னதுபோல, இதுநாள்வரை தமிழகத்தில் இது செல்லுபடி ஆகவில்லை.

ஓப்பன் கோட்டா என்பதே இருக்கக்கூடாது; ஒவ்வொரு சாதிக்கும் அவரவர் தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் உள் ஒதுக்கீடு என்பது தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட சாதியில் தகுதியான நபர் யாரும் இல்லை என்றால் அந்த இடங்கள் அடுத்து யாருக்குப் போகவேண்டும் என்பதற்குத் தெளிவான விதிகள் தேவைப்படும். மேலும் 4,000 - 5,000 சாதிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் இட ஒதுக்கீடு என்று பார்த்தால், வெறும் 4 அல்லது 5 இடங்கள் காலியாக இருக்கும்போது எப்படி அவை நிரப்பப்படும் என்பதில் பெரும் குழப்பங்கள் இருக்கும். இதற்கும் தெளிவு தேவை.

அடுத்து தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. அரசு வேலைகள் குறைந்துகொண்டே வரும் நிலையில், பெரும்பாலான புதிய வேலைகள் தனியார் துறையில் உருவாகும்போது அங்கு இட ஒதுக்கீடு இல்லையென்றால் சமூக நீதி என்ற வார்த்தைக்கே இடமில்லை என்பது இதன் ஆதரவாளர்கள் முன்வைக்கும் கருத்து. தனியார் நிறுவனங்கள் இதனை வரவேற்பதில்லை. அரசும் இப்போதைக்கு இது தொடர்பாக ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதாகத் தெரியவில்லை.

இட ஒதுக்கீடு அவரவர் சாதி விகிதாசாரப்படி ஏற்படுமாயின், பார்ப்பனர்கள் மட்டுமின்றி பல சாதிகளுக்கும் இழப்பு ஏற்படும். இன்று பிற்படுத்தப்பட்டோரில் சில முன்னேறிய சாதிகள்தாம் பெருமளவு இடத்தைக் கைப்பற்றுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி சமீபத்தில் வெளியிட்ட ஒரு கோப்பு, இது தொடர்பான சில புள்ளிவிவரங்களை முன்வைக்கிறது.

மதரீதியான இட ஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது. மத மாற்றத்தை உந்தும் ஒரு சக்தியாக அது விளங்கும் என்பது பாஜகவின் வாதம். எனவே இட ஒதுக்கீடு வேண்டுமென்றால் கூடவே மதமாற்றத் தடைச் சட்டமும் கொண்டுவரப்படவேண்டும் என்கிறது அக்கட்சி.

திராவிட இயக்கத்தின் மிகப் பெரும் சாதனை இட ஒதுக்கீடு. அந்த இயக்கத்தின் 100-ம் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது, கீழ்க்கண்ட தலைப்புகளில் தீவிரமான விவாதங்கள் நடைபெறும்:
  1. ஓப்பன் கோட்டா என்பது ஒழிக்கப்பட்டு, சாதி விகிதாசார இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவேண்டுமா?
  2. மதங்களுக்கென தனி இட ஒதுக்கீடு தரலாமா? அதற்கும் மதமாற்றத் தடைச்சட்டத்துக்கும் என்ன தொடர்பு?
  3. தனியார் கல்விக்கூடங்களில் படிப்புகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமா? அப்படியானால் எம்மாதிரியான இட ஒதுக்கீடு?
  4. இடங்களுக்கு மட்டும்தான் ஒதுக்கீடா அல்லது புரமோஷன் போன்றவற்றுக்கும் இட ஒதுக்கீடு தேவையா?
  5. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இடங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகள், பிரதமர், முதல்வர், ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகிய இடங்களுக்கும் ஒதுக்கீடு தேவையா?

101 comments:

  1. By now the arguments and counter-arguments in this issue are well known. I also know that it invokes strong passions and informed debate is not possible when passions and ignorance rule the roost.
    V.P.Singh implemented the recommendation for 27% reservation in central govt. jobs for other backward classes.Much later only i.e only in 2006 it was extended to higher educational institutions like IITs,NITs,IIMs. The 50% limit has been upheld by judgment given in Indra Sawhney vs UOI aka Mandal I case.Subsequent judgments by different benches of Supreme Court have upheld that. Hence it is here to stay unless a 11 member bench in a future case decides to set that aside. But that possibility is too remote.

    ReplyDelete
  2. இடஒதுக்கீடு குறித்து தருமி அய்யா ஒரு விவாதமே நடத்தியுள்ளார். அவரின் இடஒதுக்கீடு கட்டுரைக்காக சிங்கப்பூர் சென்றதாக நினைவு.. அதையும் படியுங்கள் கூடுதல் விவரம் கிடைக்கும்.. நல்ல அலசல்…

    ReplyDelete
  3. தமிழகத்தின் 69% இட ஒதுக்கீட்டிற்கு பங்கம் வராமலிருப்பதற்குத்தான் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதையொட்டி அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனால்தான் ஜெ வை சமூக நீதி காத்த வீராங்கனையென்று திராவிடர் கழக வீரமணி விழா எடுத்து விருதளித்தார். நீங்கள் சொல்வது போல் நீதி மன்றம் சென்று ஒவ்வோர் ஆண்டும் அனுமதி பெறுவதென்பது இத்தோடு ஒத்துப் போகவில்லையே? விளக்க முடியுமா?

    ReplyDelete
  4. Dear Mr Badri

    Can the Goverment enact law to bring reservation in Private Sector? If so, what would happen if the same is challenged in Supreme Court?

    Is there any study conducted to find out the performance of government departments/offices/companies from 1970 when resrvation came into existence and before 1970 where mainly the merit was considered for appointments.

    Why Creamy layer is not enforceable?

    How to ensure that in reservation, the real benefit is enjoyed by the down trodden and not by others?

    ReplyDelete
  5. SIR, neenga ithellam eppidi therunjukkureenga?

    ReplyDelete
  6. did u saw Nanban movie? i got a question! "book publish panrathuku ethuku mechanical engineering padikkanum, athuvum rendu thadava?" Plz answer, i just want to know...

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு பிடித்திருந்தது. படித்தார். அவ்வளவுதான். நீங்கள் ஏன் நண்பன் படம் பார்த்தீர்கள்? பத்து பைசா உபயோகம் உண்டா? உங்களுக்கு படம் பார்க்கப் பிடித்திருந்தது. பார்த்தீர்கள். அவருக்கு படிக்கப் பிடித்திருந்தது, படித்தார்.

      Delete
  7. அடுத்தவன்Tue Mar 06, 03:15:00 AM GMT+5:30

    தமிழகத்திலிருந்து சாதியும் மதமும் ஒழியவே ஒழியாது. ஒருசில ஜாதிகள் மறையலாம். கலப்புத்திருமணம் செய்துகொண்டாலும், அடுத்தவேளையாக பிள்ளைக்கு சாதிச்சான்றிதழ் வாங்கத்தான் புறப்படுவான் தமிழன். அல்லது மதச்சான்றிதழுக்கு.

    ReplyDelete
  8. ஒரே ஒரு இடத்தைத்தவிர**,

    இந்தியாவில் உள்ள,

    எல்லா மத்திய மாநில அரசு பதவிகளுக்கும்,

    எல்லா அரசு,தனியார் நிறுவனங்களின் உயர்,நடு,கீழ் பதவிகளுக்கும்,

    எல்லா பள்ளி கல்லூரிகளில் அத்தனை வகுப்பிற்கும்,

    எல்லா மருத்துவ மனைகளின் அனைத்து படுக்கைகளுக்கும்,

    எல்லா விளையாட்டு குழுக்களின் தேர்விற்கும்,

    எல்லா சிறைசாலை கைதிகளுக்கும்,

    ஜாதி விகிதாசார அடிப்படையில்

    இட ஒதுக்கீடு மிக மிக அவசியம்..

    **தி.மு.கழக தலைமைப்பதவி

    ReplyDelete
  9. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஆதரிப்போருக்கு

    சுதந்திரம் பெற்று இத்துணை வருடமாகியும் நம் நாடு பின்னோக்கி போவதை பார்த்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.
    என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் வசதி படைத்த மக்களே இந்த பலனை மீண்டும் மீண்டும் அனுபவித்து வருகிறார்கள். ஏழ்மையில் வாழும் கீழ் ஜாதியினருக்கு இதனால் எந்த பலனும் இதுவரெயில் இல்லை. இனிமேலும் இருக்கபோவதில்லை. என்று நாம் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல் படுத்துகிறோமோ அது வரையில் பலன் இல்லை. அப்படி அமல் படுத்தப்படும் ஒதுக்கீட்டையும் குறிப்பிட்ட கால வரைமுறைக்கு மட்டும் என அறிவிக்க வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இது மிகவும் அவசியம். உலக நாடுகள் ஆராய்ச்சி முதலான துறைகளில் முன்னேறிகொண்டிருக்கும் பொழுது நாம் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து தேறினாலும் மருத்துவம் முதலான படிப்பிற்கு இடமளிப்பது என்பது தரத்தை குறைப்பதர்கேயான வழிமுறைக்கு வித்திடும்.

    ஜாதி அடிப்படையிலேயே எல்லாம் இருக்கவேண்டும் என்றால் பேருந்து இருக்கை வரை ஒதுக்கீட்டைகொண்டு வரலாம். ஜாதி ஒழியப்போவதில்லை என்பது தின்னமாகிவிடும். அவ்வாறு பலனடைவோரையும் ஜாதி பெயர் சொல்லி அழைக்கலாம் அல்லவே?

    ReplyDelete
    Replies
    1. Above comment is posted by KeeYes

      Delete
  10. sabash You have taken bull by its horns. I have raised this issue in my detailed comments for your earlier article. Let me see the comments of the 'psudo social reformers' of Dravidian parties, clarifying their position on the issues raised by you.

    K.

    ReplyDelete
  11. Earlier Mr. Karunanidhi's rule (10 years back) Rural quota of 15% was introduced (Students studied in Govt school). I found it was working very well and good number of real downtrodden targeted people were benefited. People sitting in town and city has got access to good infrastructure and nearer to the power center are taking full benefit. It was right move which helped rural poor but was struct down in the court. Unfortunate.

    ReplyDelete
  12. Tamilnadu Govt follows the following style:

    1. First allocates seats on 69%
    2. Then it considers the people who would have got admission if the quota is only 50%.
    3. People in class 2 will be given seats by creating additional seats.
    Thus both 69% reservation as well as supreme court order are maintained.

    ReplyDelete
  13. பத்ரிக்கு அதிக பின்னூட்டம் பெறும் ஆசை வந்துவிட்டது என நினைக்கிறேன் :-) முதலில் திராவிட-பார்ப்பன விவாதம். இப்போது இட ஒதுக்கேடு. இனி வரப் போகும் பதிவுகள் பற்றிய ஒரு கணிப்பு: ராமர் கோவில், சேது சமுத்திர திட்டம், மூவர் தூக்கு... "ஆயிரம் பின்னோட்டம் பெற்ற அபூர்வ சிகாமணி " என்ற பட்டத்தை முன்கூட்டியே அளிக்கிறேன்.

    ReplyDelete
  14. Eco Globe:

    The constitutional provisions cannot be changed by a resolution in a state assembly. The must be enacted only in the parliament. What the tamilnadu govt has done is to recommend such a change to the center through an assembly resolution and send it for presidential assent. In other words, the president should refer it to the parliament for a vote and which in turn will be incorporated in the constitution. So far, the president has not done that. Hence, every year the TN govt is doing what already anon above has mentioned.
    1. First allocates seats on 69%
    2. Then it considers the people who would have got admission if the quota is only 50%.
    3. People in class 2 will be given seats by creating additional seats.
    Thus both 69% reservation as well as supreme court order are maintained.

    ReplyDelete
  15. பத்ரி,

    வணக்கம்,

    //மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும் வேலைகளிலும் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அட்டவணைப் பிரிவினருக்கும் (15%) பழங்குடிகளுக்கும் (7.5%) மட்டும்தான் முதலில் இட ஒதுக்கீடு இருந்தது.//

    எனவே மத்திய அரசால் தலித்துகள் அனைவருக்கும் வழங்கப்படும் மொத்த ஒதுக்கீடு=22.5%

    //1. அட்டவணை சாதிகள்: 18%. அதில் 3% அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு
    2. பழங்குடியினருக்கு: 1%//

    தமிழகத்தில் தலித்துகள் அனைவருக்கும் வழங்கப்படும் மொத்த ஒதுக்கீடு= 19%

    எனது கேள்வி மத்திய அரசின் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவை விட குறைவாக தமிழகத்தில் ஒதுக்கீடு கொடுக்கும் போது அது எப்படி தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குதில் முன்னணியில் இருப்பது திராவிட இயக்கம் என சொல்ல முடியும்?

    மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை அப்படியே தலித்துகளுக்கு வழங்க எந்த தடையும் இல்லை ஏன் எனில் அது இந்திய அரசியல் சட்டத்தாலேயே அங்கிகரிக்கப்பட்ட ஒன்று, சிறப்பு சட்டம் போட்டு செய்ய கூட வேண்டாம்.ஆனால் அப்படி செய்யாமல் குறைத்து வழங்குவது எப்படி சரியாகும்.

    அருந்ததியர்களுக்கு தனியாகவே 3 சதம் கொடுத்திருந்தாலும் மொத்த ஒதுக்கீடு 22 % என தேசிய ஒதுக்கீட்டு அளவுக்குள்ளாகவே வந்திருக்கும் ஆனால் அப்படி செய்யாத திராவிட இயக்கங்கள் யார் நலனுக்காக இயக்கம் நடத்துகின்றன?

    ***
    //ஓப்பன் கோட்டா என்பது ஒழிக்கப்பட்டு, சாதி விகிதாசார இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவேண்டுமா?//

    கொண்டு வரலாம், பெரும்பான்மை மக்களுக்கு பாதிப்பு இருக்காது.மிக முன்னேறிய வகுப்புகளுக்கே அவர்கள் எண்ணிக்கையை விட கிடைத்த கூடுதல் இடங்கள் பறிப்போகும்.

    //மதங்களுக்கென தனி இட ஒதுக்கீடு தரலாமா? அதற்கும் மதமாற்றத் தடைச்சட்டத்துக்கும் என்ன தொடர்பு?//

    எந்த மதங்களுக்கு என சொல்லாமல் எப்படி? மைனாரிட்டி மதங்களுக்கு தான் கேட்கிறார்கள்.
    இஸ்லாத்தில் எடுத்துக்கொண்டாலும் அஹமதியா, ஷியா பிரிவினரை சன்னிக்கள் அடக்கப்பார்க்கிறார்கள்,அவர்களுக்குள் உள் ஒதுக்கீடு செய்யப்படுமா?

    கிருத்துவத்திலும் ஏகப்பட்ட பிரிவுகள் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்குமா?

    மத மாற்ற தடைச்சட்டமே அபத்தமானது, இட ஒதுக்கீடுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

    //தனியார் கல்விக்கூடங்களில் படிப்புகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமா? அப்படியானால் எம்மாதிரியான இட ஒதுக்கீடு?//

    தேவை.இப்போது நடைமுறையில் உள்ள விகிதத்தையே கடைப்பிடித்தால் போதும்.

    //இடங்களுக்கு மட்டும்தான் ஒதுக்கீடா அல்லது புரமோஷன் போன்றவற்றுக்கும் இட ஒதுக்கீடு தேவையா?//

    தேவை, இல்லை எனில் துறை ரீதியாக பழிவாங்கப்படுதல் ,புறக்கணித்தல் தொடரும், இப்போதும் அது தான் நடைப்பெறுகிறது.

    //ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இடங்கள்//

    இதில் ஏற்கனவே இட ஒதுக்கீடு உள்ளதே.

    //நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகள், //

    தனித்தொகுதிகள் இருக்கு, மற்றவர்களுக்கும் கொடுக்கலாம், ஆனால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன் எனில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஜாதிப்பார்த்து தானே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.அதுவே அதிகாரப்பூர்வமற்ற இட ஒதுக்கீடு தானே.

    //பிரதமர், முதல்வர், ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகிய இடங்களுக்கும் ஒதுக்கீடு தேவையா?//

    இது வேண்டுமென்றே குழப்புவதற்காக சேர்த்துக்கொண்ட விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. பழங்குடியினர் எனபது தனி பிரிவு.அவர்களுக்கு மதம் கிடையாது முஸ்லிமாக இருக்கும் பழங்குடியினரோ/கிறுத்துவராக இருக்கும் பழங்குடியினரோ அனைவருக்கும் இட ஒதுக்கீடு உண்டு.இந்திய அளவில் 7 .5 %. பழங்குடியினர் அதிகம் வாழும் மாநிலங்களில் அவர்களுக்கு ஒதுக்கீடு அதிகமாக இருக்கும்.அவர்கள் குறைவாக வாழும் மாநிலங்களில் குறைவு.
      SC ஒதுக்கீடிர்க்கும் ST ஒதுக்கீடிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவை தனி தனி ஒதுக்கீடுகள்.இருவருக்கும் ஒன்றாக வாரியம் அமைத்து ஒரே association கீழ் வருவதால் அதை ஒரே பிரிவாக எண்ணுவது தவறு
      தமிழகத்தில் பழங்குடியினர் எண்ணிக்கை குறைவு என்பதால் அவர்கள் S C ஒதுக்கீட்டின் கீழே சேர்க்கப்பட்டு வந்தனர்.அது தவறு.பழங்குடியினரின் எண்ணிக்கை ஐந்து சதவீதம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் வந்தால் அவர்களுக்கு ஐந்து சதவீதம் வழங்க எந்த தடையும் இல்லை.ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால் ஒரு சதவீதம் வழங்கப்பட்டது
      கலைஞரின் அரசு 1989 இல் அவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கியது.

      Delete
  16. //3. People in class 2 will be given seats by creating additional seats.
    Thus both 69% reservation as well as supreme court order are maintained.//

    அனானி சொல்வது சரியே,கூடுதலாக 19% இடங்கள் உருவாக்கப்பட்டு 50% ஓபன் கோட்டா என்ற விகிதம் இருந்த போது அடைந்த பலன்கள் குறையாமலே அளிப்படுகிறது,அதன் அடிப்படையில் தனிச்சட்டம் இயற்றப்பட்டு அரசியல் நிர்ணய சட்டத்திலும் இணைக்கப்பட்டு விட்டது. எனவே ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதி மன்றம் போய் அனுமதி வாங்குவதில்லை.76th அரசியல் சட்ட திருத்தத்தின் ஒன்பதாவது ஷெடியிலி 1994 இல் சேர்க்கப்பட்டு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் தொடர்ந்து சிலர் வழக்குப்போட்டுக்கொண்டிருந்தார்கள் அதற்கு தான் தமிழக அரசு வாதாடிக்கொண்டிருந்தது,2010 இல் உச்ச நீதிமன்றமும் தமிழக சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்து விட்டது.

    சட்ட திருத்தம்

    ReplyDelete
  17. திராவிடக் கட்சிகள் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்கவேண்டும் என்கின்றனர். இந்த விகிதாச்சார அடிப்படை மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டிலும் கடைபிடித்தால் திராவிட கட்சிகள் ஒத்துக்கொள்வார்களா ? ம.பி, உ.பி போன்ற பஞ்சப் பராரி மாநிலங்களுக்கு கஷ்டப்பட்ட தமிழகத்து வரி பணம் சென்று சேரும். விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதும் இதே போலத்தான் உள்ளது.

    ReplyDelete
  18. இட ஒதுக்கீடு என்றால் சாதி ஒதுக்கீடு மட்டும் தான் எனபது போல் எழுதுவது ஞாயமா
    உத்தர் பரதேஷதிர்க்கு 80 லோக்சபா இடங்கள் கேரளாவிற்கு 20 விஹிதாச்சார அடிப்படியிலா மார்க் மெரிட் அடிப்படையிலா
    இன்று முலாயம் செய்த்து விட்டார்.முன்பு மாயாவதி.பல வருடங்களாக ஆட்சி செய்த பண்ட/திவாரி போன்றார் மெரிட்@ வோட் வாங்கி நாம் செய்ய்க முடியாது என்று அவர்கள் அதிகமாக இருக்கும் பகுதியை தனியாக வாங்கி கொண்டு போய் உற்றக்ஹாந்து என்று வெறும் பிராமணர்கள் /ராஜ்புட் மட்டுமே முதலவராக ஆகிறார்களே அது தான் உள் ஒதுக்கீடு
    முதல்வர் பதவியை பிராமணர்கள் முலாயம் மாயவதியோடு போட்டி போட்டு செயிக்க முடியாது என்று தனியாக பிரித்து கொண்டு போய் முதல்வர் ஆகிறார்களே அது ஏற்கனவே முதல்வர் பதவிக்கு ஒதுக்கீடு இருப்பதை காட்டவில்லையா

    ReplyDelete
  19. மாநில வாரி ஒதுக்கீடு நூறு சதவீதம்.தமிழகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் படிக்கவில்லை என்றால் தமிழக கல்லூரிகளில் சேர முடியாது.தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் மேற்கு வங்காளம் போல மூன்று மடங்கு இடங்கள்.அங்கு +2 படிக்கும் மாணவர் இங்கு இருப்பவரை விட அதிகம்.அவர்கள் இங்கு வந்து படிக்க முடியுமா.

    சாதிவாரி இட ஒதுக்கீடு இல்லையென்றால் அவனவுனும் போராடி நாடார் நாடு வன்னியர் வூடு முதலியார் காடு மள்ளர் தேசம் என்று உட்டர்க்ஹாந்து/புதுசேரி போல பல குட்டி/மிக குட்டி மாநிலங்களை உருவாக்கி இருப்பார்கள். சாதி வாரி இட ஒதுக்கீடு இருப்பதால் அப்படி நடக்காமல் இருக்கிறது.அப்படி நடந்தால் அந்த அந்த மாநிலத்தில் மெரிட்படி அனைத்து இடங்களும் அவர்களுக்கே கிடைக்குமே

    ஆந்திரத்தில் டேலேன்கானவில் இருக்கும் கல்லூரிகளில் 85 சதவீதம் அந்த பகுதியை சார்ந்த மாணவர்களுக்கு தான்.மற்ற இரு பகுதிகளான ராயலசீமா ,கடலோர ஆந்திராவிற்கு 15 சதவீதம் தான்.அவர்கள் இடத்தில் இருக்கும் கல்லூரிகளில் அவர்களுக்கு 85 %
    உலகத்தின் பெரிய பதவியான ஐ நா சபை பொது செயலாளர் பதவி இந்த முறை ஆசியாவிற்கு ஒதுக்கப்பட்டு அதற்க்கு ஆசியாவை சார்ந்த மூவர் போட்டியிட்டனர்.அதற்க்கு முன்பு ஆப்ரிக்கா.அதற்க்கு முன்பு தென் அமெரிக்கா

    ReplyDelete
  20. VavvAL:
    Please don't give wrong information. The amendment to schedule 9 of the constitution is yet to be enacted by the parliament. Your link also says that it is * to be * enacted by the parliament. Supreme court gave approval in 2010? In your dreams perhaps!

    ReplyDelete
    Replies
    1. the tamilnadu reservation act for 69% was included in ninth schedule of constitution which prohibits judicial review of acts included under it.
      the constitutional bench gave a judgement that even those included under 9th schedule can come under judicial review.
      lawyer vijayan running voice consumer care a antireservation crusader fought against it for 2 deacdes and was confident of getting the 50% limit after the supreme court judgement of permitting review of acts included under 9th schedule but the courts just asked the tamilnadu govt to justify the high percentage with data
      http://www.asianage.com/india/top-court-relaxes-50-cap-freeze-quotas-984
      While disposing of petitions against the laws of the two states, a three-member bench of Chief Justice S.H. Kapadia and Justices K.S. Radhakrishnan and Swatanter Kumar held that these states could “revisit” their enactments to “exceed” reservations beyond the 50 per cent limit if they had collected “quantified” data to support the increase.
      The difference in the laws of the two states was that Tamil Nadu had protected its enactment from judicial review by placing it in the Constitution’s Ninth Schedule, while the Karnataka law was stayed by the Supreme Court in 1994 itself in the absence of such protection.

      Delete
    2. தாறுமாறு,

      இந்த பின்னூட்டம் போட்ட நேரத்தில் கூகிள் செய்து உண்மையான தகவலை நீங்க ,கண்டுப்பிடிச்சு இருக்கலாமே, சரி போகட்டும் வாழைப்பழத்தை உரித்து வாயில் வைக்கனும்னு எதிர்ப்பார்க்கிறீர்கள் போல :-))

      உரித்த வாழைப்பழம் இதோ,

      2010 judgement

      மேலும் 1994 இல் கொண்டுவரப்பட்ட திருத்தம் இன்னமும் பார்லியமெண்ட்ல ஓப்புதல் வாங்காம தான் இருக்குமா? அதெல்லாம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற்று சேர்க்கப்பட்டாச்சு அதை எதிர்த்து போடப்பட்ட வழக்குக்கு தான் 2010 இல் தீர்ப்பு.(வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்டது எல்லாம் இதனால தான் என நீண்ட வரலாறு இருக்கு எல்லாமே எடுத்து சொல்லிக்கிட்டு இருக்க முடியாது ,தேடிப்படிச்சு பாருங்க)

      Delete
  21. சாதி ஒரு குறியீடு தான்.நாடு/மாநிலம்/மாவட்டம்(மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு ஒதுக்கீடு இருக்கிறது)ஒதுக்கீடு என்பதே அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் முறை தான்.முடியாட்சி மெரிட் என்றால் (ராஜா நினைத்தால் ஒரே சாதியை சேர்ந்தவர்களை எல்லா பதவிக்கும் நியமிக்கலாம்.இவன் சரிப்பட மாட்டான் என்று சில சாதிகளை சேர்க்காமல் விடலாம்.அவர் மனத்துக்கு பிடித்த போட்டியை வைத்து தேர்ந்தெடுக்கலாம்)மக்களாட்சி என்பதே ஒதுக்கீடு தான்.
    முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீடு இருக்கிறது.அதில் வருபவர் /வாரிசுகள் எல்லாம் பெரிய அதிகாரிகளின் மகன்களா இல்லை கடைநிலை செபோய்களின் மகன்களா.சாதிக்கு மட்டும் கிரீமி லேயர் கேட்பது ஏன்.
    மாநில ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் வைக்கலாமே.ஒவ்வொரு சாதி குழுமங்களின் இடங்களுக்குள் ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து விட்டு இடங்கள் நிரப்பபடாவிட்டால் அவற்றை கிரீமி லேயர் உக்கு கொடுக்கலாம் என்ற மத்திய அரசின் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தான் அடித்து
    களிக்னரால் அனைத்து சாதிகளை (others உட்பட)சிறந்த மாணவர்களின் பெற்றோர் பட்டதாரியாக இல்லாமல் இருந்தால் வழங்கப்பட்ட சலுகை மதிப்பெண் திட்டத்தால் அனைத்து சாதி மக்களும் பயன் பெற்றனர்.அதை செல்லாமல் ஆகியது நீதிமன்றங்கள்
    சாதியோடு சேர்த்து பெற்றோரின் கல்வி நிலை,பொருளாதாரம்,படித்த பள்ளி போன்றவற்றை கணக்கில் கொள்வது ஞாயம் ஆனால் அதை விட்டு இங்கு பலர் வெறும் பொருளாதாரத்தை மட்டும் பிடித்து கொண்டு கத்துவதால் எந்த பலனும் இல்லை

    ReplyDelete
  22. The poonools only 1 percentage in tamilnadu...moreover they dont need reservation ...because they have their own source in hand..the bell and plate...

    ReplyDelete
    Replies
    1. What about u? you require others' bells and plates. Correct?

      Delete
    2. yup, non-poonools like ramsaamee, karuna, etc. have many wives. they can do any business. they are also 1%. so they also dont need reservation.

      Delete
    3. In olden days, everbody want to learn and enlighten themselves with knowledge, but now everyone wants to degrade himself and try to get the opportunity. So you will see the impact of it. For the past 40+ years only dravida katchi's ( DMK or ADMK) was in power. Why can't they bring up the people? If they r not able to do in 40 yrs then they wouldn't be doing it in other 100 yrs. How many of you are ready to give up our quota, once we are self sufficient with the knowledge? None!!!!!! Ellaam oorukku than obathesam. Once it comes to u and your family ( then its no sacrifice). Ellam vetti nayam pesura kootam.

      Delete
  23. vavvAl:

    I just went through the 2010 judgment of the supreme court. What it said was TN could go ahead for the year 2010 with the 69% quota and in order to justify it for the forthcoming years the state has to get the consent of the backward classes commission that such a high quota is justified in view of local social conditions. In 2011, the same issue cropped up again through the usual litigation of Voice (of advocate Vijayan) and TN said the issue was still pending with the backward classes commission but the state could carry out the usual increase that it had been doing. Approval granted as before. That's all. It's quite possible that tomorrow the commission will also give a positive reply. But please note; That still will not solve the constitutional problem. If some one files a petition for a revision before a constitutional bench the whole thing will drag on. The advantage TN has is through its move to amend schedule 9 and its ability to increase seats to cover up the sealing of 50%. So, the best course is still to get it enacted as a law by the parliament that the quota could be fixed by the respective states based on local conditions. Till that time these litigations will keep cropping up.

    ReplyDelete
    Replies
    1. தாறு மாறு,

      //So, the best course is still to get it enacted as a law by the parliament that the quota could be fixed by the respective states based on local conditions. Till that time these litigations will keep cropping up.//

      ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்து, பார்லிமெண்டில் குரல் வாக்கெடுப்பிலும் ஒப்புதல் வாங்கி ,சட்ட திருத்தமாக செய்து சேர்க்கப்பட்டுவிட்டது. அப்படி செய்யப்பட்ட சட்டதிருத்ததினை சேலஞ்ச் செய்து தான் வழக்கே தவிர, சட்ட திருத்தம் செய்யவில்லை என்று செய்தியில் இல்லை.

      Delete
  24. என்ன மதமாக இருந்தாலும் பழங்குடியினருக்கு பழங்குடியினர் பட்டியல் கீழ் ஒதுக்கீடு உண்டு
    பல மாநிலங்களில் பிற்பட்ட வகுப்பை சேர்ந்த சாதிகளில் இருந்து மதம் மாறிய கிருத்துவ/இஸ்லாமிய மக்களுக்கு ஒதுக்கீடு உண்டு.
    பாவப்பட்டவர்கள் sc பட்டியலில் இருக்கும் சாதிகளில் இருந்து மதம் மாறியவர்கள் தான்.தமிழகம் போன்ற மாநிலங்களில் அவர்கள் பிற்பட்ட பிரிவின் கீழ் வருகிறார்கள்
    அவர்கள் அனைவருக்கும் தர்தம் பிரிவுகளின் கீழ் சேர்த்து கொண்டால் இந்த மத ஒதுக்கீடு பிரச்சினை குறைந்து விடும்
    ஒட்டுமொத்தமாக மதத்திற்கு என்று ஒதுக்கீடு வழங்குவது சாத்தியமானதல்ல .

    ReplyDelete
    Replies
    1. How hindus converted to Christian (By Joshua Project - http://www.joshuaproject.net/people-profile.php), by creating database of no of people in each caste and stratagize each caste people conversion by NGO funded money from International Christian Organization? Now claim them as minority?

      Also in Muslim there are different castes, why can't you provide the quota based on different castes?

      Delete
    2. Did you know the Current status of North Eastern States - Manipur and Nagaland. Christians were 95%. Whether Hindus were given minority quota in that state?

      Delete
  25. The additional seat created to coverup the changes in 50-69% is below 1%, which shows that already in OC, Most of the seats are taken by BC,MBC and others.

    We are missing the main issue. Why cant Government open more colleges/Schools and offer free education. More colleges and More Oppertunities. Then No question of Reservation.

    Discussions and actions should go in that direction.

    Sankar

    ReplyDelete
  26. //இடங்களுக்கு மட்டும்தான் ஒதுக்கீடா அல்லது புரமோஷன் போன்றவற்றுக்கும் இட ஒதுக்கீடு தேவையா?//

    தமிழகத்தில் பணி உயர்விற்கு என்று தனியாக இடப்பங்கீடு இல்லை

    ஆனால்

    இன்று நீங்கள் கணக்கெடுத்துப்பார்த்தால் மாவட்ட அளவிலான பணி வரை இந்த விகிதாச்சாரம் சரியாகவே கடைபிடிக்கப்படுகிறது

    அதற்கு முக்கிய காரணம் இங்கு கடைபிடிக்கப்படும் 200 புள்ளி சுழற்சி முறை

    ReplyDelete
    Replies
    1. மானிட மருத்துவர் புருனோ,

      //தமிழகத்தில் பணி உயர்விற்கு என்று தனியாக இடப்பங்கீடு இல்லை//

      தெரியவில்லை எனில் சும்மா இருக்கனும் :-))
      ஆரம்பத்தில் இட ஒதுக்கீடு பணிக்கும், பதவி உயர்வுக்கும் என்றே இருந்தது.

      இட ஒதுக்கீடு என்பது பணி நியமனத்திற்கு மட்டுமே என இந்திரா சாகானே என்பவர் 1992 இல் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் அவருக்கு சாதகமான தீர்ப்பை அளித்தது. எனவே தலித்துகள் பதவி உயர்வு பெறுவது பாதிக்கப்பட்டதால் 1995 இல் மத்திய அரசு அரசியல் நிர்ணய சட்டத்தில் ஒரு திருத்தம் செய்து,(76ஆவது திருத்தம்) பதவி உயர்விலும் அதே இட ஒதுக்கீடு கொள்கை செல்லுபடியாகும் என சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கிவிட்டது.

      இந்த விவரம் பதிவு எழுதியவருக்கும் தெரியவில்லை அதனை "அறிவுப்பூர்வமாக அலசும்" மானிட மருத்துவருக்கும் தெரியவில்லை.

      reservation for promotion

      மேலும் பணி நியமனத்தின் போது பெறப்பட்ட தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் பதவி உயர்வு செய்யாமல் இருப்பதிலும், பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு பெறும் போதும் இட ஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கவும் அரசியல் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது, 82 ஆவது மற்றும் 85 ஆவது சட்ட திருத்தம்.
      82 வது சட்டதிருத்தம்

      85வது திருத்த சுட்டியில் முழு விவரம்ம் இல்லை , ஏற்கனவே உள்ள சட்டத்தில் இது ஒரு சிறிய திருத்தம் என்பதால் விளக்கம் இல்லை என நினைக்கிறேன்.
      85 வது திருத்தம்
      சட்டப்படி கிடைக்க வேண்டிய பதவி உயர்வினை தட்டிக்கழிக்க கொண்டு வரப்பட்டதே ரோஸ்டர் பாயிண்ட் சிஸ்டம் ,பழி வாங்கவே இப்புள்ளி முறை பயன்ப்படுத்தப்படுகிறது.ஆனால் அதனை ஒரு சாதகமான அம்சமாக சொல்லிக்கொள்கிறார் மானிட மருத்துவர்.

      இப்படி புள்ளி முறையினால் பதவி உயர்வு பாதிக்கப்பட்ட சமிபத்திய உதாரணம் உமாஷங்கர் ஐ ஏ எஸ், அவர் வழக்கும் தொடர்ந்திருப்பதாக கேள்வி.

      Delete
  27. //Why Creamy layer is not enforceable?
    //

    கிருமி லேயர் வந்தால், தமிழகத்தில் அதனால் பாதிக்கப்படப்போவது எந்த பிரிவு என்று நினைக்கிறீர்கள் !!

    ReplyDelete
  28. //How to ensure that in reservation, the real benefit is enjoyed by the down trodden and not by others?//

    down trodden என்றால் யார் ?

    ReplyDelete
  29. //என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் வசதி படைத்த மக்களே இந்த பலனை மீண்டும் மீண்டும் அனுபவித்து வருகிறார்கள். ஏழ்மையில் வாழும் கீழ் ஜாதியினருக்கு இதனால் எந்த பலனும் இதுவரெயில் இல்லை.//

    உங்களுக்கு அனுபவம் போதவில்லை

    ReplyDelete
  30. // என்று நாம் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல் படுத்துகிறோமோ அது வரையில் பலன் இல்லை. //

    இடப்பங்கீடு என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யவதற்கு

    பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கு அல்ல

    --

    நோய் எதுவோ அதற்கு தான் வைத்தியம் பார்க்க வேண்டும்

    பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடியும்
    செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு காது கேட்கும் பொறியும் தான் வழங்கப்பட வேண்டும்

    --

    செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடியும், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு காது கேட்கும் கருவியும் வழங்குவது பலனற்றது

    ReplyDelete
  31. //1. First allocates seats on 69%
    2. Then it considers the people who would have got admission if the quota is only 50%.
    3. People in class 2 will be given seats by creating additional seats.
    Thus both 69% reservation as well as supreme court order are maintained.//

    Additional Seats are not created !

    ReplyDelete
  32. Suppose Creamy Layers are excluded from Reservation in TN MBBS Admission, will Forward Castes get more seats or less seats

    Can you answer this

    ReplyDelete
  33. நம் நாட்டில் கல்வி 2000 வருடங்களாக கல்வி அளிக்கப்பட்டதற்கோ மறுக்கப்பட்டதற்கோ பணம் ஒரு அளவு கோல் கிடையாது (சுய நிதி கல்லூரிகள் எல்லாம் சமீபத்தில் வந்தவை)..

    2000 வருடங்களாக 60 தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்டது ஒருவனின் பணத்தை பார்த்து அல்ல, பிறப்பை பார்த்து.

    எனவே இப்பொழுது கல்வி என்று வரும் பொழுது எந்த வரைமுறையினால் கல்வி மறுக்கப்பட்டதோ, அதே வரைமுறையைத்தான் கடை பிடிக்க வேண்டும்.

    நிங்கள் சொல்லும் Montford /DAV / BVB /Don Bosco school studentக்கு உதவித்தொகை தருவதற்கும் அல்லது தராமல் இருப்பதற்கும் (அவனிடம் பணம் இருக்கிறது. எனவே பணம் தர வேண்டாம்) அவனுக்கு இடப்பங்கீடு தருவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

    புரிகிறதா.

    மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால்

    ”காது கேட்கவில்லை என்றால் தான் கண்ணாடி தருவேன். காது நன்றாக கேட்பவர்களுக்கு கண்ணாடி கிடையாது” என்று ஒரு கண் மருத்துவர் கூறுவது எவ்வளவு “புத்தி சாலித்தனமோ” நீங்கள் சொன்ன க்ரீமி லேயரும் அவ்வளவு புத்திசாலித்தனமானது

    காது கேட்கவில்லை என்றால் அதற்கு காது கேட்கும் கருவி வழங்க வேண்டும்

    பார்வை மங்கலாயிற்று என்றால் கண்ணாடி வழங்க வேண்டும்.

    நல்ல பார்வை உள்ளவர்களுக்கு காது கேட்கும் கருவி கிடையாது என்றும் காது நன்றாக இருப்பதால் கண்ணாடி கிடையாது என்றும் கூறலாமா

    ReplyDelete
    Replies
    1. Mr Bruno, read the words of Lord Macaulay - who is founding father of current educational system. Do you know why he brought this system - To divide and rule the people. Better know the History correctly and then argue about it.

      Lord Macaulay said the following about India in 1835 in British Parliament.

      "I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation."

      Delete
  34. தமிழகத்தில் மாநில பங்கில் 1687 இடங்கள் உள்ளன

    எனவே 2011 மருத்துவ இளங்கலை மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் இடப்பங்கீடு 50 சதவிதமாக இருந்திருந்தால் 198.50/200 வரை மதிப்பெண் எடுத்த முற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். அதாவது தர வரிசையில் 844 வரை

    அது 69 சதவிதமாக இருப்பதால் 198.75 வரை எடுத்த மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது

    எனவே 198.50 மதிப்பெண் வரை உள்ள முற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது

    அவ்வாறு பெற்றவர்கள் 21 பேர்

    இவர்கள் பொது தரவரிசையில் 524 முதல் 819 வரை உள்ளனர்

    (அதற்கு அடுத்து தரவரிசை 846ல் 198.25 மதிப்பெண்ணில் ஒரு முற்பட்ட வகுப்பு மாணவர் உள்ளார்)

    ReplyDelete
  35. //எனது கேள்வி மத்திய அரசின் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவை விட குறைவாக தமிழகத்தில் ஒதுக்கீடு கொடுக்கும் போது அது எப்படி தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குதில் முன்னணியில் இருப்பது திராவிட இயக்கம் என சொல்ல முடியும்?//

    http://www.luckylookonline.com/2012/02/blog-post_28.html 3:12 PM, March 02, 2012 அன்று poovannan எழுதியது

    தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு செய்யபடுகிறது.தமிழகத்தில் பழங்குடியின மக்கள் குறைவு. 6 லட்சத்திற்கும் குறைவே. எனவே ஒரு சதம் மட்டும் வழங்க்கப்டுகிறது

    புரிகிறது வவ்வால் அவர்களே

    ReplyDelete
  36. //மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை அப்படியே தலித்துகளுக்கு வழங்க எந்த தடையும் இல்லை ஏன் எனில் அது இந்திய அரசியல் சட்டத்தாலேயே அங்கிகரிக்கப்பட்ட ஒன்று, சிறப்பு சட்டம் போட்டு செய்ய கூட வேண்டாம்.ஆனால் அப்படி செய்யாமல் குறைத்து வழங்குவது எப்படி சரியாகும். //

    தவறான கருத்து

    அட்டவணை பிரிவினருக்கு அதிகம் வழங்கப்படுகிறது

    பழங்குடியினருக்கு 1 சதம் வழங்கப்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. புருனோ,

      யோசிக்காமல் பேசுவது மட்டுமில்லாமல் , அடுத்தவர்களை வசைப்பாடுவதுமே உங்கள் பொழைப்பா போச்சு :-))

      //தவறான கருத்து

      அட்டவணை பிரிவினருக்கு அதிகம் வழங்கப்படுகிறது//

      தமிழகத்தில் அட்டவணைப்பிரிவினருக்கு(sc) அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கையை விட அதிகம் இட ஒதுக்கீடு வழங்குவதாக உங்களால் நிறுபிக்க முடியுமா?அப்படி செய்தால் நான் வலைப்பதிவு எழுதுவதை விட்டு விடுகிறேன், செய்யவில்லை எனில் உங்களுக்கும் அதே தான் :-))

      Delete
    2. http://elections.tn.nic.in/delimitation.htm

      The size and shape of the Parliamentary and Assembly Constituencies are determined, according to section 4 of the Representation of the People Act, 1950, by an independent Delimitation Commission. Under a constitutional amendment of 1976, delimitation was suspended until after the census of 2001. However, certain amendments to the Constitution made in 2001 and 2003 have, while putting a freeze on the total number of existing seats as allocated to various States in the House of People and the State Legislative Assemblies on the basis of 1971 census till the first census to be taken after the year 2026, provided that each State shall be delimited into territorial Parliamentary and Assembly Constituencies on the basis of 2001 census and the extent of such constituencies as delimited shall remain frozen till the first census to be taken after the year 2026. The number of seats to be reserved for SC/ ST shall be re-worked out on the basis of 2001 census. The constituency shall be delimited in a manner that the population of each Parliamentary and Assembly Constituency in a State so far as practicable be the same throughout the State.

      SC/ST பிரிவினரின் கணக்கெடுப்பு எல்லா மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் உண்டு.மத ரீதியான கணக்கெடுப்பும் உண்டு.இந்த முறை பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
      மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பாராளுமன்றம்,சட்டமன்றத்தில் ஒதுக்கீடு செய்யப்படும்.இந்த முறையினால் மக்கள் தொகை வளர்ச்சியில் நன்கு செயல்ப்பட்ட மாநிலங்கள் தொகுதிகளை இழப்பதும் அதை பற்றி கவலைப்படாத மாநிலங்கள் அதிக இடங்களை பெறுவதும் நடந்து வந்தது.இதை எதிர்த்த மாநிலங்கள் இடங்களை குறைக்க கூடாது என்று போராடி இடங்களை 2026 வரை freeze செய்யப்பட்டுள்ளது.ஆனால் அந்த நடவடிக்கை SC /ST தொகுதிகளுக்கு பொருந்தாது


      Based on the Census figures published by the Registrar General of India, the Delimitation Commission prepared Paper I containing district-wise 2001 population data and the entitlement of seats for each district. The Commission also prepared Paper II indicating entitlement of seats for SC and ST in the Assembly/ Parliament and distribution of ST/SC seats in the districts. The total number of SC seats increased from 42 to 44, while the total number seats reserved for ST which was 3 as per 1976 delimitation got reduced to 2. With reference to population changes, some districts gained in number of Assembly Constituencies while some others suffered a reduction in number of Assembly Constituencies.
      ப்ருனோ அவர்கள் மத்திய தொகுப்பான 15 சதவீதத்தை விட அதிகமாக 18 சதவீதம் மக்கள் தொகை அடிப்படையில் தரப்படுகிறது என்று தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.பழங்குடியினரின் ஒதுக்கீடு 2/234 என்பதால் கல்வி,வேலை வாய்ப்புகளில் ஒரு சதவீதம் ஒதுக்கீடு.44/234 முன்பு 42/234 என்பதால் 18சதவீதம் வழங்கப்பட்டது.

      Delete
  37. //தேவை, இல்லை எனில் துறை ரீதியாக பழிவாங்கப்படுதல் ,புறக்கணித்தல் தொடரும், இப்போதும் அது தான் நடைப்பெறுகிறது.
    //

    தமிழகத்தில் உள்ள 200 புள்ளி சுழற்சி முறையினால் பதவி உயர்விலும் இடப்பங்கீடு வந்து விடுகிறது

    ReplyDelete
  38. //SC ஒதுக்கீடிர்க்கும் ST ஒதுக்கீடிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவை தனி தனி ஒதுக்கீடுகள்.இருவருக்கும் ஒன்றாக வாரியம் அமைத்து ஒரே association கீழ் வருவதால் அதை ஒரே பிரிவாக எண்ணுவது தவறு
    தமிழகத்தில் பழங்குடியினர் எண்ணிக்கை குறைவு என்பதால் அவர்கள் S C ஒதுக்கீட்டின் கீழே சேர்க்கப்பட்டு வந்தனர்.அது தவறு.பழங்குடியினரின் எண்ணிக்கை ஐந்து சதவீதம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் வந்தால் அவர்களுக்கு ஐந்து சதவீதம் வழங்க எந்த தடையும் இல்லை.ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால் ஒரு சதவீதம் வழங்கப்பட்டது//

    புரிகிறதா புத்திசாலி வவ்வால் அவர்களே

    ReplyDelete
  39. //அனானி சொல்வது சரியே//
    ??

    //கூடுதலாக 19% இடங்கள் உருவாக்கப்பட்டு 50% ஓபன் கோட்டா என்ற விகிதம் இருந்த போது அடைந்த பலன்கள் குறையாமலே அளிப்படுகிறது,அதன் அடிப்படையில் தனிச்சட்டம் இயற்றப்பட்டு அரசியல் நிர்ணய சட்டத்திலும் இணைக்கப்பட்டு விட்டது.//

    கூடுதல் இடங்கள் எல்லாம் உருவாக்கப்படுவதில்லை

    தமிழகத்தில் 19 சதம் என்பது 380 இடங்கள். ஒருவேளை தரவரிசயில் 380 பேர் இருந்தால் பிரச்சனை
    ஆனால்
    தரவரிசையில் அந்த இடத்தில் இருப்பது 21 பேர் மட்டுமே
    இவர்களுக்கு BC/MBC இடங்களில் இருந்து வழங்கப்படுகிறது

    http://www.tn.gov.in/results/dme/UG_2011_2012/waitlist_MBBS_IPhase.pdf பாருங்கள்

    புரியும்

    ReplyDelete
  40. //The additional seat created to coverup the changes in 50-69% is below 1%, which shows that already in OC, Most of the seats are taken by BC,MBC and others.//

    ஆமாம் !

    //We are missing the main issue. Why cant Government open more colleges/Schools and offer free education. More colleges and More Oppertunities. Then No question of Reservation.//

    நல்ல கருத்து !

    ReplyDelete
  41. 2011 MBBS Cut Off

    OC : 198.50
    BC : 197.75
    BC Muslim : 196.5
    MBC : 196.25
    SC : 192.25
    ST : 189.25
    SC Arundhathiyar : 188.25


    Difference between these are just one or two percentages

    ReplyDelete
  42. --

    OC : 99.25 %
    BC : 98.875 %
    BC Muslim : 98.25 %
    MBC : 98.125 %
    SC : 96.125 %
    ST : 94.625 %
    SC Arundhathiyar : 94.125 %

    ReplyDelete
  43. Among the 20lakh government workers, whether everyone is ready to give up their quota if their monthly income is greater than Rs 20,000/-? Also among the population if any one is BC, MBC SC or ST - if their son or daughter is in IT / Doctor / Lawyor / Teachers(Govt) industry, whether they are ready to give up the quota and ready to compete in Open quota?No way....If you take into account only the above mentioned group of people only uses the quota or false certify to become eligible for quota.

    ReplyDelete
    Replies
    1. dear friend
      there are so many quotas in the country.the only quota whcih benefits the poor to a certain extent is caste based reservation.
      state quota/district quota/exservicemen quota/physically challenged quota are almost fully dominated by the creamy layer.
      the army now has medical/dental/engg/nursing colleges on its own where children from navy/airforce too doesnt have any seats and almost all seats are reserved for wards of serving and retired army men.a glance at the beneficiaries of this reservation will show how its dominated by the castes which cry hoarse against caste based reservation
      the anger against caste based quota is because of castes which doesnt come under its purview but enjoy most of the other quotas.a rajput general or brahmin general or uttarkhand brahmin never fails to use the quota available to them but cries hoarse against caste based quota
      the seats under reserved category remain unfilled (special recruitments to fillbacklog vacancies happen regularly but the backlog keeps increasing)and the arguments of creamy layer cornering all is a big blatant lie.certain states like tamilnadu which has done well in making primary education affordable and easy to access to all castes and has a long and successful histroy of implementaion of reservation needs some finetuning with additional criterias of parents educational status/school studied(both these factors where tried by karunanidhi but was struck down in the courts which tries hard to defame reservation policies and attempts by democratically elected govts to help the needy by affirmative actions

      Delete
    2. Friend, i understand about the quota and i support it (If it is 1950's or 60's). What i can't able to digest is - the benefit of quota system is not going to right people. Quota system should be dynamic with multiple Criteria(Finance / Education / Work / Region etc...). What's happening now is purely based on Caste / religion. Which should be eliminated. All politician's are using that nicely and trying to split the people based on the caste.

      Delete
  44. @Bruno
    Suppose Creamy Layers are excluded from Reservation in TN MBBS Admission, will Forward Castes get more seats or less seats //

    If creamy layer is introduced in TN it will not benefit forward castes unless the percentage of reservation quota which has been occupied by those in creamy layer BC/MBC is also reduced proportionately. To execute this government needs to conduct accurate caste census.

    In my opinion reservation should never go beyond 50% in order to send out a message that there is always enough scope for open competition.Some castes like Mudhaliars, Gounders, Nayakkars do not deserve to enjoy reservation as they did not suffer much discrimination like SC/ST and also their curent social status is comparable to that of other forward castes. Creamy layer castes like this should be excluded from purview of reservation and reservation should be reduced to 50%.

    In the longer run better strategy would be to have reservation for SC/ST according to their population and reservation for poor people in all castes according to their proportion in the total population. This should be implemented with a maximum cap of 50%.

    After a century when government is confident that discrimiation against SC/ST is non-existant government can retain only reservation for people below poverty line.

    ReplyDelete
  45. Till what level reservations are going to be extended? How it will be extended to Private ?

    Tomarrow Badri may have to publish books based on quota. OC authors 20%, BC authors 30% MBC 20% and so on

    sankar

    ReplyDelete
  46. 2000 வருடங்களாக 60 தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்டது ஒருவனின் பணத்தை பார்த்து அல்ல, பிறப்பை பார்த்து.

    எனவே இப்பொழுது கல்வி என்று வரும் பொழுது எந்த வரைமுறையினால் கல்வி மறுக்கப்பட்டதோ, அதே வரைமுறையைத்தான் கடை பிடிக்க வேண்டும்.?|//

    இந்த வாதப்படி பார்த்தால் இந்தியாவை கிட்டதட்ட ஆயிரம் வருசம் ஆண்டு மத்தவனுகளை ஜிசியா வரி போட்டு தாக்கிய முசல்மான்களுக்கு எதுக்கு சார் BC Muslim கோட்டா? அவர்களை யார் கீழ்சாதி போல் அடக்கியது? அவர்களுக்கு கிருத்துவர் போல ஒபனில் அல்லவா வரணும்?

    ReplyDelete
  47. 2000 வருடங்களாக 60 தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்டது ஒருவனின் பணத்தை பார்த்து அல்ல, பிறப்பை பார்த்து.//

    இவ்வாறு வரலாற்று தவறுகளை எல்லாம் சரி செய்ய கிளம்பி 1000 வருசம் ஆண்ட முசுலிம்களுக்கு இனி 1000 வருடத்திற்கு ஆட்சிக்கு வரக்கூடாது என அறிவிக்க இயலுமா?

    ReplyDelete
    Replies
    1. Learn the history properly. What caste is Valmiki, Kambar, Sekilar etc.....Don't talk like karunanadhi ( If I doesn't understand / known - then it is bad ).

      Delete
  48. //மானிட மருத்துவர் புருனோ,

    //தமிழகத்தில் பணி உயர்விற்கு என்று தனியாக இடப்பங்கீடு இல்லை//

    தெரியவில்லை எனில் சும்மா இருக்கனும் :-))
    ஆரம்பத்தில் இட ஒதுக்கீடு பணிக்கும், பதவி உயர்வுக்கும் என்றே இருந்தது.

    இட ஒதுக்கீடு என்பது பணி நியமனத்திற்கு மட்டுமே என இந்திரா சாகானே என்பவர் 1992 இல் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் அவருக்கு சாதகமான தீர்ப்பை அளித்தது.//

    இன்று இல்லை என்று தெரிந்து தான் நான் கூறினேன்

    உங்கள் புரட்டுக்களை நிறுத்தவும்

    ReplyDelete
  49. //

    எனவே தலித்துகள் பதவி உயர்வு பெறுவது பாதிக்கப்பட்டதால் 1995 இல் மத்திய அரசு அரசியல் நிர்ணய சட்டத்தில் ஒரு திருத்தம் செய்து,(76ஆவது திருத்தம்) பதவி உயர்விலும் அதே இட ஒதுக்கீடு கொள்கை செல்லுபடியாகும் என சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கிவிட்டது.

    இந்த விவரம் பதிவு எழுதியவருக்கும் தெரியவில்லை அதனை "அறிவுப்பூர்வமாக அலசும்" மானிட மருத்துவருக்கும் தெரியவில்லை.

    reservation for promotion

    மேலும் பணி நியமனத்தின் போது பெறப்பட்ட தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் பதவி உயர்வு செய்யாமல் இருப்பதிலும், பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு பெறும் போதும் இட ஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கவும் அரசியல் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது, 82 ஆவது மற்றும் 85 ஆவது சட்ட திருத்தம்.
    82 வது சட்டதிருத்தம்

    85வது திருத்த சுட்டியில் முழு விவரம்ம் இல்லை , ஏற்கனவே உள்ள சட்டத்தில் இது ஒரு சிறிய திருத்தம் என்பதால் விளக்கம் இல்லை என நினைக்கிறேன்.
    85 வது திருத்தம்
    சட்டப்படி கிடைக்க வேண்டிய பதவி உயர்வினை தட்டிக்கழிக்க கொண்டு வரப்பட்டதே ரோஸ்டர் பாயிண்ட் சிஸ்டம் ,பழி வாங்கவே இப்புள்ளி முறை பயன்ப்படுத்தப்படுகிறது.ஆனால் அதனை ஒரு சாதகமான அம்சமாக சொல்லிக்கொள்கிறார் மானிட மருத்துவர்.

    இப்படி புள்ளி முறையினால் பதவி உயர்வு பாதிக்கப்பட்ட சமிபத்திய உதாரணம் உமாஷங்கர் ஐ ஏ எஸ், அவர் வழக்கும் தொடர்ந்திருப்பதாக கேள்வி.//

    தமிழக அரசு விதிகள் குறித்து பேசும் போது

    நடுவண் அரசு குறித்து பேசி குழப்பும் அதி புத்திசாலி வவ்வால் அவர்களே

    உங்களுக்கு வெட்கமாக இல்லையா

    ReplyDelete
    Replies
    1. மானிட மருத்துவர் புருனோ,

      வெட்கத்தைப்பற்றி எல்லாம் நீங்க பேசாதிங்க ,அதற்கான தகுதி எல்லாம் உங்களிடம் இல்லை.

      நீங்களே எழுதினாலேயே அது ஆதாரம் என்பது போல பேசிக்கொண்டு ஆதாரம் என சொல்லிக்கொள்ளுங்கள்.

      அரசியல் நிர்ணய சட்டத்தில் திருத்தம் செய்துக்கொண்டு வந்துவிட்டால் அது மத்திய/மாநில அரசுகள் இரண்டுக்குமே பொருந்தும் என்ற அடிப்படை கூற தெரியாமல் பேசுபவரிடம் என்ன பேசுவது. மேலும் சட்ட திருத்தத்தில் தெளிவாக மாநிலங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதை , நான் அளித்த சுட்டியில் போய் பார்த்தால் காணலாம்.

      ஐ.ஏ.ஏஸ். ஐ.பி எஸ், எல்லாம் மத்திய தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பதவி உயர்வை அந்த மாநில அரசுகள் தானே அளிக்கின்றன.மத்திய தேர்வாணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதியையும் மாநில அரசுகள் மீறுகின்றன என்பதற்கு லத்திகா சரண், ஆர்.நடராஜ் வழக்கே உதாரணம்.

      மேலும் ஐ.ஏ.எஸ்/ ஐ.பி.எஸ் பதவி உயர்வுகளை மாநில அரசு இஷ்டம் போல செய்வதும் வழக்கமாக இருக்கிறது. உமா ஷங்கர் தலைமை செயலாளருக்கே நோட்டிஸ் அனுப்பியதும் செய்தியாக வந்து இருக்கு. எனவே தான் உதாரணம் காட்டினேன்.

      இட ஒதுக்கீட்டின் படி பதவி உயர்வு அளிக்க வழி இருந்தும் மாநில அரசுகளாக இஷ்டம் போல புள்ளீ முறையை வைத்துக்கொள்கின்றன. பழி வாங்க வேண்டுமெனில் குறைத்து மதிப்பீடு செய்வார்கள்.

      //தமிழக அரசு விதிகள் குறித்து பேசும் போது

      நடுவண் அரசு குறித்து பேசி குழப்பும் அதி புத்திசாலி வவ்வால் அவர்களே//

      தமிழ் படிக்க தெரியுமா சார், பதிவில் என்ன சொல்லி இருக்கு மாநில அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு என்று எங்காவது குறிப்பிட்டு சொல்லி இருக்கா? ஆனால் நீங்களாக தமிழகத்தில் என்று திசை திருப்பிக்கொண்டு வந்தீர்கள். திசை திருப்பல் வேலையை செய்தாலும் சரியாக செய்ய வேண்டாமா? அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்ட உரிமை மத்திய/மாநில அரசுகள் இரண்டுக்கும் செல்லும்.

      பதிவில் பொதுவாக இட ஒதுக்கீடு பதவி உயர்விலும் கடைப்பிடிக்கனுமா என்று தான் கேட்டு இருக்கு. விளக்கெண்ணய் இருந்தா கண்ணில் ஊற்றிக்கொண்டோ அல்லது தமிழ் படிக்க தெரிந்தவர்களை படிக்க சொல்லி விளக்கம் கேட்ட பிறகு பதில் சொல்லவும் :-))
      பதிவில் இருப்பது,

      //இடங்களுக்கு மட்டும்தான் ஒதுக்கீடா அல்லது புரமோஷன் போன்றவற்றுக்கும் இட ஒதுக்கீடு தேவையா?//

      இதன் அடிப்படையில் பேசாமல்ல் பொய்யாக ஒன்றை நீங்களாகவே உருவாக்கிக்கொண்டு அதனை நிருபிக்க மேலும் பொய்களை சொல்லிக்கொண்டு போகிறீர்கள்.

      ***

      அட்டவணைப்பிரிவினருக்கு அதிகம் இட ஒதுக்கீடு எங்கே தரப்பட்டுள்ளது , அதிகம் என்றால் என்ன பொருள் என்றாவது தெரியுமா? நீங்கள் ஏன் இதே அதிகம் என்ற வார்த்தையை மற்ற பிரிவினரின் இட ஒதுக்கீடுகளுக்கு பயன்ப்படுத்தவில்லை? இவர்களுக்கான ஒதுக்கீடு மட்டும் உங்கள் குறுகிய மனதிற்கு அதிகமாக தெரிந்து உங்கள் கண்களை உறுத்துகிறது போலும்.

      அதிகம் என்றால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மக்கள் தொகையை விட அதிகமாக இருந்து இருக்க வேண்டும், அல்லது தலித்துகளின் மொத்த தேசிய ஒதுக்கீடான 22.5 % விட தமிழக மொத்த ஒதுக்கீடு அதிகமாக இருந்து இருக்க வேண்டும், ஆனால் எதுவுமே இல்லாமல் அதிகம், அதிகம் என்றால் எப்படி?

      Delete
  50. //இப்படி புள்ளி முறையினால் பதவி உயர்வு பாதிக்கப்பட்ட சமிபத்திய உதாரணம் உமாஷங்கர் ஐ ஏ எஸ், அவர் வழக்கும் தொடர்ந்திருப்பதாக கேள்வி.//

    இந்திய ஆணை படிவ அதிகாரிகள்

    தமிழக அரசு அதிகாரிகளா
    நடுவண் அரசு அதிகாரிகளா

    ReplyDelete
  51. //Mr Bruno, read the words of Lord Macaulay - who is founding father of current educational system. Do you know why he brought this system - To divide and rule the people. Better know the History correctly and then argue about it.

    Lord Macaulay said the following about India in 1835 in British Parliament.

    "I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation."//

    அப்படியா

    http://gauravsabnis.blogspot.in/2008/01/propaganda-about-macaulays-speech.html வாசித்து பாருங்கள்

    Recently, I received an email forward which I have received dozens of times over the last few years. The supposed speech of Lord Macaulay to the English Parliament in 1835 which basically says that Indians are such amazing people, that to break them and rule them, it is necessary to force upon them the English education system. Here's the jpeg file -



    The problem is, this smells too much like propaganda mixed with a dash of conspiracy theory. Why would Macaulay be stupid enough to go on the record saying that Indians are the salt of the earth, and hence need to be broken? The whole thing stunk so I emailed a few people even as I was googling the test. Salil Tripathi replied back pointing out something I had missed - the fact that "calibre" is spelt as "caliber", the way an American would spell it. He also sent the link to the full text of "Macaulay's Minute" dated 2nd February 1835, which is reproduced on a Columbia University page.

    ReplyDelete
  52. Here is the full text.

    http://www.columbia.edu/itc/mealac/pritchett/00generallinks/macaulay/txt_minute_education_1835.html

    ReplyDelete
  53. If you go through the page, you will notice that the supposed paragraph does not appear anywhere. Additionally, Macaulay's tone is extremely condescending and disrespectful towards Indian people, Indian culture, traditions and literature. He is making a case for imposing an English-based education system. But his whole argument is that the existing system, and existing literature in Arabic, Sanskrit and other regional languages is inferior and even false.

    So the aforementioned paragraph is obviously a fabrication. A piece of propaganda to be used while decrying Macaulayism. Who concocted this paragraph? Rudimentary googling does not tell me that. But it would be safe to assume it would be someone with an RSS-ist ideological bent.

    It would also be safe to conclude that whoever felt the need to concoct this must have been stupid beyond belief. The actual text itself is damning and offensive enough to be used in arguments against Macaulayism. It shows that the education system which we have in place today is the remnant of a system put in place at the behest of a man who, by his own admission, was at the very least ignorant about the existing Indian body of knowledge, and at the most was hostile towards it. Our education system is a remnant of a system designed only to produce "intermediaries" who could act as agents of the British government while ruling the country. A system built to create an army of brown sahibs.

    Yet our friend the concocter felt the need to fabricate a para which praises Indian people and Indian culture, and paint Macaulay as a scheming colonialist who was hell-bent upon causing the downfall of this great culture. If this piece of propaganda weren't so willy-nilly swallowed by everyone with an email address, it would be extremely hilarious.

    ReplyDelete
    Replies
    1. You have chosen the link from the study of southasia ( Source: http://www.mssu.edu/projectsouthasia/history/primarydocs/education/Macaulay001.htm
      Numbers in square brackets have been added by FWP for classroom use. )

      Project south asia is funded by the Western Churches. So you will get the sugar coated result of original information only.

      Read the book Beingdifferent by Rajiv malhotra, he has given enough examples with the orignial source.

      Delete
  54. //புருனோ,

    யோசிக்காமல் பேசுவது மட்டுமில்லாமல் , அடுத்தவர்களை வசைப்பாடுவதுமே உங்கள் பொழைப்பா போச்சு :-))//

    நான் எழுதிய அனைத்து கருத்துக்களுக்கும் ஆதாரம் தந்துள்ளேன்

    உங்கள் கருத்து தவறு

    ReplyDelete
  55. //தவறான கருத்து
    அட்டவணை பிரிவினருக்கு அதிகம் வழங்கப்படுகிறது//

    தமிழகத்தில் அட்டவணைப்பிரிவினருக்கு(sc) அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கையை விட அதிகம் இட ஒதுக்கீடு வழங்குவதாக உங்களால் நிறுபிக்க முடியுமா? அப்படி செய்தால் நான் வலைப்பதிவு எழுதுவதை விட்டு விடுகிறேன், செய்யவில்லை எனில் உங்களுக்கும் அதே தான் :-))
    //


    46.14 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவித இடப்பங்கீடும்
    20.87 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவித இடப்பங்கீடும்
    19.00 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 18 சதவித இடப்பங்கீடும்
    01.04 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 01 சதவித இடப்பங்கீடும்
    உள்ளது

    இந்த ஆதாரம் போதுமா

    வேறு ஏதாவது வேண்டுமா

    ReplyDelete
    Replies
    1. //46.14 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவித இடப்பங்கீடும்
      20.87 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவித இடப்பங்கீடும்
      19.00 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 18 சதவித இடப்பங்கீடும்
      01.04 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 01 சதவித இடப்பங்கீடும்
      உள்ளது

      இந்த ஆதாரம் போதுமா//


      ஹி..ஹி... மூளை கலங்கினவன் கூட இத போல ஆதாரம் தர மாட்டான் :-))

      Delete
  56. //Among the 20 lakh government workers, whether everyone is ready to give up their quota if their monthly income is greater than Rs 20,000/-?//

    ஐயா

    சமூக ஏற்றத்தாழ்வு என்பது வேறு
    பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது வேறு

    எனவே உங்கள் கேள்வியே தவறு

    ReplyDelete
    Replies
    1. இட ஒதுக்கீட்டினால் சமூக ஏற்றத் தாழ்வு மறைந்துள்ளதா ? ஆதாரம் கொடுங்கள் பிளீஸ்.

      Delete
  57. //
    Also among the population if any one is BC, MBC SC or ST - if their son or daughter is in IT / Doctor / Lawyor / Teachers(Govt) industry, whether they are ready to give up the quota and ready to compete in Open quota?No way....If you take into account only the above mentioned group of people only uses the quota or false certify to become eligible for quota.//

    இதில் false certify என்று எழுதியுள்ளீர்களே
    அப்படி என்றால் என்ன

    ReplyDelete
  58. //the anger against caste based quota is because of castes which doesnt come under its purview but enjoy most of the other quotas.a rajput general or brahmin general or uttarkhand brahmin never fails to use the quota available to them but cries hoarse against caste based quota//

    நெத்தியடி !

    ReplyDelete
  59. //If creamy layer is introduced in TN it will not benefit forward castes unless the percentage of reservation quota which has been occupied by those in creamy layer BC/MBC is also reduced proportionately. To execute this government needs to conduct accurate caste census.//

    சாதி வாரி கணக்கெடுப்பை யார் எதிர்க்கிறார்கள்

    முற்பட்ட வகுப்பினரா

    அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரா

    ReplyDelete
  60. //மானிட மருத்துவர் புருனோ,
    வெட்கத்தைப்பற்றி எல்லாம் நீங்க பேசாதிங்க ,அதற்கான தகுதி எல்லாம் உங்களிடம் இல்லை.//

    ஆதாரங்களில் அடிப்படையில் எழுதும் எனக்கு அந்த தகுதி உள்ளது

    //நீங்களே எழுதினாலேயே அது ஆதாரம் என்பது போல பேசிக்கொண்டு ஆதாரம் என சொல்லிக்கொள்ளுங்கள்.//
    சுட்டிகள் தந்துள்ளேன்
    நீங்கள் சரி பார்த்துக்கொள்ளலாம்

    மாநில அரசு குறித்து பேசும் போது மத்திய அரசு குறித்து திருப்பும் புரட்டு ஆசாமி நீங்கள் தான்

    ReplyDelete
  61. //இதன் அடிப்படையில் பேசாமல்ல் பொய்யாக ஒன்றை நீங்களாகவே உருவாக்கிக்கொண்டு அதனை நிருபிக்க மேலும் பொய்களை சொல்லிக்கொண்டு போகிறீர்கள்.//

    நான் எழுதியதை மீண்டும் ஒரு படித்து பாருங்கள்

    தொடர்ந்து பொய்களை கூறாதீர்கள்

    ReplyDelete
  62. //அட்டவணைப்பிரிவினருக்கு அதிகம் இட ஒதுக்கீடு எங்கே தரப்பட்டுள்ளது , அதிகம் என்றால் என்ன பொருள் என்றாவது தெரியுமா? நீங்கள் ஏன் இதே அதிகம் என்ற வார்த்தையை மற்ற பிரிவினரின் இட ஒதுக்கீடுகளுக்கு பயன்ப்படுத்தவில்லை? இவர்களுக்கான ஒதுக்கீடு மட்டும் உங்கள் குறுகிய மனதிற்கு அதிகமாக தெரிந்து உங்கள் கண்களை உறுத்துகிறது போலும். //


    இது குறித்து தெளிவாகவே விளக்கியுள்ளேன்

    படித்து பாருங்கள்

    15ஐ விட 18 அதிகம் என்பது மன நலன் பாதிப்படையாத அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று

    ReplyDelete
  63. //அதிகம் என்றால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மக்கள் தொகையை விட அதிகமாக இருந்து இருக்க வேண்டும், அல்லது தலித்துகளின் மொத்த தேசிய ஒதுக்கீடான 22.5 % விட தமிழக மொத்த ஒதுக்கீடு அதிகமாக இருந்து இருக்க வேண்டும், ஆனால் எதுவுமே இல்லாமல் அதிகம், அதிகம் என்றால் எப்படி?//

    இது குறித்து தெளிவாகவே விளக்கியுள்ளேன்

    படித்து பாருங்கள்

    15ஐ விட 18 அதிகம் என்பது மன நலன் பாதிப்படையாத அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று

    ReplyDelete
  64. //You have chosen the link from the study of southasia ( Source: http://www.mssu.edu/projectsouthasia/history/primarydocs/education/Macaulay001.htm
    Numbers in square brackets have been added by FWP for classroom use. )//

    நான் கூறியது கொலம்பியா பல்கலை கழகம் தானே !!!

    http://www.mssu.edu/projectsouthasia/history/primarydocs/education/Macaulay001.htm சுட்டி வேலை செய்யவில்லை

    ReplyDelete
  65. //ஹி..ஹி... மூளை கலங்கினவன் கூட இத போல ஆதாரம் தர மாட்டான் :-))
    //

    மூளை கலங்காமல் தெளிவாக இருப்பவர்கள் மூளை கலங்காமல் தெளிவாக இருப்பவர்களுக்காக இந்த ஆதாரம் தான் தருவார்கள்

    அதில் என்ன தவறு என்று முடிந்தால் கூறுங்கள்

    இப்படி வெட்டி பேச்சு பேசுவது தரங்கெட்ட செயல்

    ReplyDelete
    Replies
    1. மானிட மருத்துவர் புருனோ,

      //அதில் என்ன தவறு என்று முடிந்தால் கூறுங்கள்

      இப்படி வெட்டி பேச்சு பேசுவது தரங்கெட்ட செயல்//

      இதுவரைக்கும் அரைகுறையாகவாது தமிழ் தெரியும் உங்களுக்குனு நினைச்சேன், இப்போ தான் புரியுது அதுவும் இல்லைனு . என்ன தப்பா ,பக்கத்தில் யாரையாவது படிக்க சொல்லி கேட்டு இருக்கலாம் அதுக்கு :-))

      ஆமாம் எங்கே இருந்து காபி &பேஸ்ட் செய்றிங்க, ரொம்ப தப்பா இருக்கு, பின்னூட்டம் போடும் முன் சரியா இருக்கானு கூட பார்க்காமல் வாய் மட்டும் வங்களா விரிகுடா போல :-))

      அப்புறம் சுட்டி போட்டேன்னு போடாமல் பெருமைப்பட்டுக்கொள்வதும் ஆதாரம் தந்தேன்னு பொய் சொல்லிக்கொள்வதுமே வழக்கமா போச்சு ,எங்கே சுட்டி, ஆதாரம் :-))

      ஒடுக்கப்பட்ட மக்களின் மீது உங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி மட்டுமே உங்கள் பின்னூட்டங்களின் வாயிலாக தெரிகிறது, கல்வி என்பது சிந்தனையை மேம்படுத்த வேண்டும் , ஆனால் உங்களைப்போன்றவர்களுக்கோ அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்க கற்றுக்கொடுக்கிறது!
      2001 இல் 19%,2011 இல் 20% இருக்கிறார்கள் அட்டவணையினத்தினர் ஆனால் 18% கொடுக்கப்படுகிறது , அதனை அதிகம் என்பது எப்படி?

      அதே சமத்தில் தேசிய ஒதுக்கீடு ஒட்டு மொத்தமாக 22.5% வருகிறது, அந்த அளவுக்கு தமிழ் நாட்டில் கொடுக்க வேண்டும், sc/st அவர்களுக்குள் உள் ஒதுக்கீடு செய்துக்கொள்ள செய்யலாம்.

      மேற்கு வங்கத்தில் sc=22% மற்றும் st=6% என மொத்தம் 28% ஒதுக்கீடு. அது தேசிய ஒதுக்கீடை விட அதிகம். ஆனால் இங்கே மொத்த தேசிய ஒதுக்கீடும் எட்டப்படவில்லை, தனிப்பட்ட ரீதியாக மக்கள் தொகை அடிப்படையிலும் இல்லை, ஆனால் வரட்டு ஆதிக்க மனப்பான்மையுடன் பேசும் மன நோயாளிகளே அதிகம் :-))

      Delete
  66. //இட ஒதுக்கீட்டினால் சமூக ஏற்றத் தாழ்வு மறைந்துள்ளதா ? ஆதாரம் கொடுங்கள் பிளீஸ்.//

    என் பதிவில் விரிவாக விளக்கியுள்ளேன்

    படித்து பாருங்கள்

    ReplyDelete
  67. "Read the book Beingdifferent by Rajiv malhotra, he has given enough examples with the orignial source."

    Is there any link available to this so called 'original' source? Macaulay's Minute in the all available sources doesn't have the paragraph.He didn't make any speech in parliament in 1835.

    http://www.parliament.uk/business/publications/parliamentary-archives/archives-practical/archives-faqs/records-frequently-asked-questions/#jump-link-29

    Macaulay's Minute, sometimes referred to as a speech given in Parliament or a minute presented to Parliament, is not a Parliamentary record so is not held by the Parliamentary Archives. Baron Macaulay, historian, essayist and poet, was an MP between 1830-1834, 1840-1847 and 1852-1857. His famous Minute on Indian Education is dated 2 February 1835, when he was not an MP. He had resigned his Parliamentary seat in early 1834 and sailed for India, as he had been made a member of the Supreme Council in India. The Minute was therefore presumably written for the Supreme Council, not the British Parliament.

    ReplyDelete
  68. //இதுவரைக்கும் அரைகுறையாகவாது தமிழ் தெரியும் உங்களுக்குனு நினைச்சேன், இப்போ தான் புரியுது அதுவும் இல்லைனு . என்ன தப்பா ,பக்கத்தில் யாரையாவது படிக்க சொல்லி கேட்டு இருக்கலாம் அதுக்கு :-))//

    தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள்

    இல்லை உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்

    இது போன்ற கேவல உத்திகள் வேண்டாம், வெட்கங்கெட்ட அனானி வவ்வால் அவர்களே

    ReplyDelete
  69. //

    இதுவரைக்கும் அரைகுறையாகவாது தமிழ் தெரியும் உங்களுக்குனு நினைச்சேன், இப்போ தான் புரியுது அதுவும் இல்லைனு . என்ன தப்பா ,பக்கத்தில் யாரையாவது படிக்க சொல்லி கேட்டு இருக்கலாம் அதுக்கு :-))

    ஆமாம் எங்கே இருந்து காபி &பேஸ்ட் செய்றிங்க, ரொம்ப தப்பா இருக்கு,
    //


    இது அரசின் அதிகார பூர்வ தகவல்
    இது சரியானதே

    ReplyDelete
  70. // பின்னூட்டம் போடும் முன் சரியா இருக்கானு கூட பார்க்காமல் வாய் மட்டும் வங்களா விரிகுடா போல :-))//
    சரி பார்த்த பின்னரே எழுதினேன்

    உங்களை போல் தவறான தகவல்களை தரவில்லை

    ReplyDelete
  71. //அப்புறம் சுட்டி போட்டேன்னு போடாமல் பெருமைப்பட்டுக்கொள்வதும் ஆதாரம் தந்தேன்னு பொய் சொல்லிக்கொள்வதுமே வழக்கமா போச்சு ,எங்கே சுட்டி, ஆதாரம் :-))//

    அனைத்து தகவல்களுக்கு ஆதாரம் தந்துள்ளேன்

    ஏதாவது விடு பட்டிருந்தால் , அதை சுட்டி காட்டவும்

    ஆதாரம் தரத்தயார்

    ReplyDelete
  72. //
    ஒடுக்கப்பட்ட மக்களின் மீது உங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி மட்டுமே உங்கள் பின்னூட்டங்களின் வாயிலாக தெரிகிறது, கல்வி என்பது சிந்தனையை மேம்படுத்த வேண்டும் , ஆனால் உங்களைப்போன்றவர்களுக்கோ அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்க கற்றுக்கொடுக்கிறது!
    //

    தங்கள் பக்கம் நியாயம் இல்லாத கேவலமானவர்கள் செய்யும் தனி நபர் தாக்குதலில் இறங்கி விட்டீர்கள்

    இதுவே யார் பக்கம் உண்மை என்பதை தெளிவாக சொல்கிறது

    ReplyDelete
  73. //
    2001 இல் 19%,2011 இல் 20% இருக்கிறார்கள் அட்டவணையினத்தினர் ஆனால் 18% கொடுக்கப்படுகிறது , அதனை அதிகம் என்பது எப்படி?
    //

    பிற்பட்டவகுப்பினரின் சதவிதம் எவ்வளவு
    அவர்களுக்கு எவ்வளவு வழங்கப்படுகிறது

    ReplyDelete
  74. //அதே சமத்தில் தேசிய ஒதுக்கீடு ஒட்டு மொத்தமாக 22.5% வருகிறது, அந்த அளவுக்கு தமிழ் நாட்டில் கொடுக்க வேண்டும், sc/st அவர்களுக்குள் உள் ஒதுக்கீடு செய்துக்கொள்ள செய்யலாம்.//

    தேசிய ஒதுக்கீட்டில் உள்ள 22.5 என்பது 15 + 7.5 என்று பல முறை பலரால் தெளிவாக விளக்கப்பட்டு விட்டது

    மீண்டும், உங்கள் திசை திருப்பும் புரட்டு வாதத்தை தொடராதீர்கள்

    ReplyDelete
  75. //மேற்கு வங்கத்தில் sc=22% மற்றும் st=6% என மொத்தம் 28% ஒதுக்கீடு. அது தேசிய ஒதுக்கீடை விட அதிகம்.//

    சரி

    ReplyDelete
  76. //ஆனால் இங்கே மொத்த தேசிய ஒதுக்கீடும் எட்டப்படவில்லை,//
    தவறான வாதம்
    SC க்கு இங்கு அளிக்கப்படும் 18 சதவிதம் என்பது தேசிய அளவில் அளிக்கப்படும் 15 சதவிதத்தை விட அதிகம்
    மொத்தமாக இங்கு அளிக்கப்படும் 69 சதவிதம் என்பது தேசிய அளவில் அளிக்கப்படும் 49.5 சதவிதத்தை விட அதிகம்
    எனவே உங்கள் கூற்று முழு பொய்

    ReplyDelete
  77. // தனிப்பட்ட ரீதியாக மக்கள் தொகை அடிப்படையிலும் இல்லை,//
    தவறான வாதம்
    SC க்கு இங்கு அளிக்கப்படும் 18 சதவிதம் என்பது தேசிய அளவில் அளிக்கப்படும் 15 சதவிதத்தை விட அதிகம்
    மொத்தமாக இங்கு அளிக்கப்படும் 69 சதவிதம் என்பது தேசிய அளவில் அளிக்கப்படும் 49.5 சதவிதத்தை விட அதிகம்
    எனவே உங்கள் கூற்று முழு பொய்

    ReplyDelete
  78. // ஆனால் வரட்டு ஆதிக்க மனப்பான்மையுடன் பேசும் மன நோயாளிகளே அதிகம் :-))//
    தங்கள் பக்கம் நியாயம் இல்லாம பொய்யர்களின் வழக்கமான கேவல விவாத முறை !!

    ReplyDelete