Wednesday, October 17, 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - சுப்ரமணியன் சுவாமி

2ஜி விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து, திமுகவைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களான ஆ.இராசா, தயாநிதி மாறன் ஆகியோருடைய பதவிகளைக் காவு வாங்கியது. திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ. இராசா ஆகியோரைச் சிறையில் தள்ளியது. கலைஞர் டிவி மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் ஓயவில்லை. அவர்களுக்கு எப்படி 200 கோடி ரூபாய் ஷாஹித் பால்வா மூலமாக வந்தது என்பதுதான் கனிமொழி மீதான வழக்கு. அந்தப் பணம் கடனாகப் பெறப்பட்டது, வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டது என்பது கலைஞர் தொலைக்காட்சி வாதம். அந்தப் பணம் எப்படித் திரும்பக் கட்டப்பட்டது, பணத்தின் ஊற்று என்ன என்பதில் மேலும் சில குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன.

2ஜி வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இப்போது நடந்துவருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைக் கண்காணித்துவருகிறது.

இந்த வழக்கு இவ்வளவு தூரம் சென்றிருப்பதற்கு சுப்ரமணியன் சுவாமி ஒரு முக்கியக் காரணம். (பிரஷாந்த் பூஷன் இன்னொருவர்.)

சுப்ரமணியன் சுவாமி 2G Spectrum Scam (Har Anand publication, Delhi) என்ற தன் புத்தகத்தில் இந்த வழக்கின் ஆரம்பக் கட்டத்திலிருந்து தொடங்கி, பல்வேறு ஆவணங்களின் துணையுடன் தன் தரப்பை எடுத்துவைக்கிறார். சென்ற ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை இப்போது கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

இணையத்தில் இந்தப் புத்தகத்தை வாங்க

போன்மூலம் இந்தப் புத்தகத்தை வாங்க 094459-01234 என்ற எண்ணை அழையுங்கள்.

2 comments:

  1. Can you mention who did the translation for this (and also for Atanu dey book), atleast in you blog

    ReplyDelete
  2. ஊழலில் கூட புத்தகமாக வருமளவிற்கு ஒரு வரலாற்று ஊழல் செய்திருப்பது ஒரு தமிழன் என்று எண்ணும்போது பெருமையாக(?!) இருக்கிறது

    ReplyDelete