Friday, March 08, 2013

திருக்குறள் வழியில் தலைமைப்பண்பு

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை மாதாமாதம் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒருவர் பேசுவார். இந்தப் பேச்சு இலக்கியம், இலக்கணம், ஓவியம், இசை, சிற்பம், கோவில் கட்டுமானம், வரலாறு, அல்லது தொடர்புடைய ஏதேனும் ஒன்றாக இருக்கும்.

பொதுவாக மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலை, தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் நடைபெறும். இந்த மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை (நாளை மாலை) நடைபெறுகிறது.

இந்த மாதத்துக்கான தலைப்பு ‘திருக்குறள் வழியில் தலைமைப் பண்பு’. இதைப் பற்றி பேச இருக்கும் கண்ணன், கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தவர். இளைஞர். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, எச்.சி.எல் சிஸ்டம்ஸ், எம்பசிஸ் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்தவர். இப்போது திருக்குறளின் அடிப்படையில் தலைமைத்துவத்தைச் சொல்லித் தரும் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார்.

தமிழர்கள் அனைவருக்கும் பெயரளவிலாவது நன்கு தெரிந்திருக்கும் திருக்குறளிலிருந்து நாம் நவீன நிர்வாகவியல் கருத்துகளாக என்ன தெரிந்துகொள்ளமுடியும்?

கண்ணன் இதுபற்றி நாளை ஒரு காணொளி உரையை அளிக்க உள்ளார். அனைவரும் தவறாமல் வாருங்கள்.

மேலும் விவரங்களுக்கு

No comments:

Post a Comment