Monday, February 17, 2014

அர்விந்த் கெஜ்ரிவாலாக இருப்பதன் முக்கியத்துவம்

கடந்த இரு தினங்களாக தில்லியில் உள்ள வாகன ஓட்டிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது தில்லி விமான நிலையம் வரும்போது கடைசியாக அதே. பேச்சு அர்விந்த் கெஜ்ரிவால் பற்றியே இருந்தது. அவருக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு மலைக்கவைப்பதாக இருக்கிறது. எங்கோ தொலைதூரத்தில் இருக்கும்போது தில்லியில் மக்கள் நினைப்பதைப் புரிந்துகொள்ள முடியாது. அந்தவகையில் இந்த தில்லிப் பயணம் எனக்கு முக்கியமானது.

தொலைக்காட்சிகள் காட்டுவதுபோல் நான் பேசியவர்கள் இல்லை. அவர்கள் ஆம் ஆத்மி கட்சிமீதும் கெஜ்ரிவால்மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையில் சிறிதுகூடக் குறைவு இல்லை. 40 நாள்களில் ஒருவரால் ஒன்றும் செய்துவிட முடியாது என்றுதான் சொல்கிறார்கள். மீண்டும் தில்லி சட்டமன்றத் தேர்தல் நடந்தால் அவருக்கே வாக்களிப்போம் என்கிறார்கள்.

சட்ட அமைச்சர் பற்றிக் கேட்டேன். அவர் கெட்டவர் என்றார்கள். ஆனால் கெஜ்ரிவாலுக்கு டெஃப்லான் கோட்டிங். குற்றம் கெஜ்ரிவால்மீது இல்லையாம். புதியவர் என்பதால் இப்படி, அடுத்தமுறை நல்ல ஆசாமியைப் பிடித்துவிடுவார் என்றார்கள். இந்த அளவுக்கு கெஜ்ரிவாலை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

காங்கிரஸின் ஊழல் குறித்துக் குமுறினார்கள். காமன்வெல்த் ஊழல்தான் அதிகம் பேசப்பட்டது. எல்லா காண்டிராக்டிலும் லஞ்சம், ஒவ்வொரு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் கோடி கோடியாக அடித்துவிட்டார்கள் என்றார்கள். பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டீர்களா என்று கேட்டேன். பாஜகவுக்கு வாக்களித்த ஒருவர், அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மிக்குத்தான் வாக்கு என்றார். நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு என்று கேட்டேன். அதற்கு இன்னும் நாள்கள் உள்ளன; பார்க்கலாம் என்றார்.

40 நாள்களில் அரசு அலுவலகங்களில், போக்குவரத்துக் காவலில் லஞ்சம் வாங்குவது கடுமையாகக் குறைந்துள்ளது என்றார்கள். ஆனால் இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி தொடங்குவதால் மீண்டும் ஊழல் ஆரம்பித்துவிடும் என்றார்கள். ஜன் லோக்பால் சட்டம் ஊழலைக் கட்டுப்படுத்தும், தவறு செய்யும் அதிகாரிகளை ஜெயிலில் போடும் என்று நிஜமாகவே நம்புகிறார்கள்.

மத்திய அமைச்சர்கள்மீது வழக்கு தொடுக்கலாமா, அவர்களை ஜெயிலில் போடும் அதிகாரம் தில்லி முதல்வருக்கு இருக்கலாமா என்று கேட்டேன். அதில் என்ன தப்பு என்று பதில் கேள்வி கேட்டார்கள். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுதானே என்றார்கள். பிறகு ரிலையன்ஸைக் கடுமையாகத் திட்டினார் ஓட்டுனர் ஒருவர். காங்கிரஸும் பாஜகவும் முகேஷ் அம்பானியின் பைக்குள் இருக்கிறார்கள் என்றார். கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்திவிடுவார் என்றார்.

காங்கிரஸ் ஆட்சியில்தானே மெட்றோ ரயில் போடப்பட்டது, அது நல்ல விஷயம்தானே என்றேன். இவ்வளவு நாள்கள் ஆட்சியில் இருந்தவர்கள் அதுகூடச் செய்யவில்லை என்றால்? என்று பதில் கேள்வி கேட்டார்.

ஆம் ஆத்மி, அரசுப் பள்ளிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக மாற்றிவிடுவார்கள் என்று நம்புகிறார் ஓர் ஓட்டுனர். அரசு ஆசிரியர்களையெல்லாம் கடுமையாக ஏசினார். அவர்கள் வேலையே செய்வதில்லை என்றார்.

48 நாள்கள் வெளியே இருக்கும் நாம் கெஜ்ரிவால் செய்வதை வெறும் டிராமா என்பதாக நினைத்தோம். ஆனால் நான் பேசியவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது!

கெஜ்ரிவால் காலில் ஷூகூடப் போட்டுக்கொள்வதில்லை, சாதாரண சப்பல்தான் என்றார் ஒருவர். நான் கவனிக்கவில்லை. அவருடைய உடைகள் குறித்துப் பிறர் கேலி செய்வதை இவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. ஏதோ ஒருவிதத்தில் கெஜ்ரிவால் இவர்களைப் பொருத்தமட்டில் நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார். 

கெஜ்ரிவால் பாஜகவுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தல். (காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக தில்லியில் காலி.)

14 comments:

  1. Yes Badri. Kejarwal will get more seats in Delhi assembly. - Sankarnarayanan

    ReplyDelete
  2. CONGRESS NOT ONLY WILL BE VOTED OUT IN DELHI, IT WILL BE
    VOTED OUT IN INDIAN PARLIAMENT ELECTIONS ALSO.
    BUT BJP WILL BE THE SINGLE LARGEST PARTY BOTH IN DELHI AND
    INDIAN PARLIAMENT ELECTIONS PAVING WAY FOR A
    COALITION GOVT AT CENTRE.BUT BJP SHOULD NOT GET ABSOLUTE
    MAJORITY AS THEY WILL FOLLOW THE SAME CONGRESS GOVT POLICY OF PRIVATISATION AND WOOING THE AMBANIS, TATAS,

    ReplyDelete
  3. //48 நாள்கள் வெளியே இருக்கும் நாம் கெஜ்ரிவால் செய்வதை வெறும் டிராமா என்பதாக நினைத்தோம். ஆனால் நான் பேசியவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது//

    Remove the capitalist spectacles and see...only you were thinking like this..we know who he is and what he is all along..



    ReplyDelete
  4. சூப்பர்... மக்களவை தேர்தல்தான் ஒரே குழப்பமாக உள்ளது... ஆம் ஆத்மிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்று...

    ReplyDelete
  5. In this current scenario of our country`s status, as a honest INDIAN, I will vote AAP for theSTATE & MODI (not i mean the BJP) for the CENTER.

    ReplyDelete
  6. badri, from the first line pessimism is apparent. u don't trust the delhites. u have already 'decided' what they say is not true & they are as if brainwashed.. don't sell your heart and mind to anybody or any party...

    ReplyDelete
  7. For some reason, your new posts (after top 245 from exhibition) are not coming in the RSS feeds. Not sure if it is a problem with my client or something at your side. But wanted to inform you.

    ReplyDelete
    Replies
    1. I just now tried http://feeds.feedburner.com/badriseshadri/qJsz and on my browser, it gives the latest post as well. I will check elsewhere and see what the issues are.

      Delete
    2. Sorry. The problem was at my end. The process to fetch new posts was not running as I thought. Fixed that and I can get your posts.

      Delete
  8. மக்கள் எப்போதுமே அப்பாவிகள்தான். நல்ல மீட்பர் வருவார் என காத்துக்கிடப்பவர்கள் கண்களுக்கு தெய்வமெனத் தெரியும் ஒருவரை கண்மூடி ஆதரிப்பார்கள். கடவுளாய்க் காணப்பட்டவர்கள்தான் அவர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்றி வந்துள்ளனர். அர்விந்த் கடவுளாவது பாவிகளை ஏமாற்றாமல் காக்கட்டும் :)

    ReplyDelete
  9. http://ibnlive.in.com/news/aap-apologises-to-transparency-international-for-claims-by-leaders/452790-37-64.html

    ReplyDelete
  10. necessarily corruption to be eradicated in total but by spending crores of public money only the elections are conducted . changes as expected by the then CM is possible but for that little patience is very much essential. in that aspect voters disappointed very badly. this is my view.

    ReplyDelete
  11. Even after such blatant misuse of power, Congress is projected to secure a min. of 100 seats. It only means that there are significant number of indifferent people who are willing to be cheated and are actually looking forward to it. AK's popularity is no different.

    ReplyDelete