Tuesday, May 05, 2015

மதுவிலக்கு

ஒரு புத்தகத்துக்கான முன்னோட்டப் பதிவு மட்டுமே இது. Daniel Okrent எழுதியிருக்கும் Last Call: The Rise and Fall of Prohibition என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

அமெரிக்காவில் பூரண மதுவிலக்கு ஒரு காலத்தில் அமல்படுத்தப்பட்டது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். மொடாக் குடிகாரர்களால் நிரம்பியிருந்த நாடு அது. ஆனாலும் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு 1920-ல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலகட்டம் அது. மதுவிலக்கை அமல்படுத்த முனைந்த போராட்டம்தான் பெண்களுக்கான வாக்குரிமைக்கு ஆதரவாகவும் இருந்தது. ஏனெனில் பெண்களுக்கு வாக்குரிமை இருந்தால் அவர்கள் கட்டாயம் மதுவிலக்கை ஆதரிப்பார்கள். இதன் காரணமாகவே சாராய கம்பெனிகள் பெண்களின் வாக்குரிமைக்கு எதிராக இருந்தனர். மதுவிலிருந்து வரும் வருமானம் போய்விட்டால் அரசை எப்படி நடத்துவது என்ற குரல்கள் எழுந்தன. அதனால் அதுவரை இல்லாத வருமான வரி நுழைக்கப்பட்டது.

மதுவிலக்கு அமலுக்கு வந்தாலும் அதைச் செயல்படுத்தும் ஆர்வம் அரசுக்கு அவ்வளவாக இருக்கவில்லை. இதன்காரணமாக கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கடத்தல், காவல்துறையிலிருந்து நீதித்துறைவரை லஞ்சம், ஊழல் என்று பெருகியது. இதன் இறுதிவிளைவாக அமெரிக்காவின் கிரைம் சிண்டிகேட் மாஃபியாக்கள் உருவாயின.

1933-ல் பூரண மதுவிலக்கு, மற்றொரு அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் நீக்கிக்கொள்ளப்பட்டது.

இவ்வளவுதான் விஷயம். ஆனால் இந்தக் காலகட்டத்தின் அமெரிக்க வரலாறு அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. இதனை டேன் ஆக்ரென் எழுதியிருக்கும் விதம் மிக மிகப் பிரமாதம்.

***

இந்தப் புத்தகம் சொல்லியிருக்கும் வரலாறு இந்தியாவுக்கு, முக்கியமாக தமிழகத்துக்கு மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

தமிழகம் இன்று மதுவின் ஆதிக்கத்தில் அதலபாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கான எதிர்ப்பு ஒரு முனையில் குவிக்கப்படாமல் இருக்கிறது. உண்மையிலேயே மதுவை ஒழிக்க விரும்புபவர்கள் அமெரிக்காவின் ஆண்ட்டி சலூன் லீகைக் கூர்ந்து படிக்கவேண்டும். எப்படி ஓர் அமைப்பு தனக்கு வேண்டிய ஒன்றை சட்டத்துக்கு உட்பட்டு, கடுமையான எதிர்ப்புகளைத் தாண்டி சாதித்துக்கொண்டது என்பதனை ஆண்ட்டி சலூன் லீகிடமிருந்து தெரிந்துகொள்ளலாம்.

மது வருமானம் தமிழக அரசுக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டிருக்கிறது. அதனால்தான் திமுகவும் அஇஅதிமுகவும் மதுவிலக்கு குறித்துப் பேசுவதே இல்லை. பாமகவும் மதிமுகவும் மதுவிலக்கு குறித்துப் பேசும்போது இதனால் நேரப்போகும் வருமான இழப்பை (இப்போது ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய்) எப்படிச் சரிக்கட்டப் போகிறார்கள் என்று அதிகம் சொல்வதே இல்லை. இதனைப் பற்றி யோசிக்காமல் முன்னேறவே முடியாது.

மூன்றாவதாக, மதுவை முற்றிலுமாக ஒழிக்கவேண்டுமா அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமா என்பதைப் பற்றியும் யோசிக்கவேண்டியிருக்கிறது. மதுவை ஒழித்தவுடன் அமெரிக்காவில் என்ன நடந்தது? ஊழலும் குற்றமும் பெருகியது. மது அருந்துதல் வெறும் 30% மட்டுமே மட்டுப்பட்டது. இன்று பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் என்ன நடக்கிறது என்று விசாரித்தால் உங்களுக்குத் தெரிந்துவிடும்.

நான்காவதாக, பூரண மதுவிலக்கு அமலில் இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏழைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மது தாறுமாறாக ஓடியபோது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளே. இன்று தமிழகத்தில் ஏழைக் குடும்பங்கள்தான் மதுவால் பாதிக்கப்படுகிறார்கள். மதுவை வைத்துக்கொண்டு ஏழைகளின் தரத்தை மேலே உயர்த்துவது சாத்தியமே அல்ல. எனவே இதையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டியிருக்கும்.

***

நான் சந்திக்கும் அரசியல்வாதிகள் சிலரிடம் இந்தப் புத்தகம் குறித்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்தை இன்னமும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. படித்தபின், சில பதிவுகளாவது எழுதுவேன்.

6 comments:

  1. வெறும் பெயரளவுக்கு பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்தால் பயனில்லை. மது விலக்கு சட்டம் கண்டிப்புடன் முழுமையாக அமல்படுத்தும் நிலைமை இருக்க வேண்டும். அப்படி அது கண்டிப்புடன் ஊழலுக்கு இடமின்றி அமல்படுத்தப்படும் என்று தோன்றவில்லை. அந்த நிலையில் கள்ளச்சாராயத் தொழில் பெருகும். அதற்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள் நிறையப் பணம் பண்ணுவர். ஊழல் இராது என்ற நிலையில் தான் பூரண மதுவில்க்கு பலன் அளிக்கும்.

    ReplyDelete
  2. It is interesting to observe the US govt poisoned alcohol during prohibition to enforce strict enforcement through forced keeping away from drinking,

    http://www.slate.com/articles/health_and_science/medical_examiner/2010/02/the_chemists_war.html

    ReplyDelete
  3. Bringing uncontrolled prohibition is not a good idea. Also allowing people to drink and drive is also not good. But that's what is permitted. Police check only late night drivers.

    ReplyDelete
  4. http://majpoovannan.blogspot.in/2013/08/blog-post_5780.html

    மதுவிலக்கு இருக்கும் மாநிலங்களில் வாழ்ந்தவன்... என்ற முறையில் கூறுகிறேன்.அது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.முட்டாள்தனமான கொள்கை
    மணிப்பூரில் ஒவ்வொரு வீட்டிலும் அரிசியில் இருந்து சாராயம் காய்ச்சுவார்கள்.அதில் போதையை அதிகமாக்க என்ன சேர்க்க வேண்டும் என்பதில் தான் வேறுபாடு
    பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தல்/அங்கு இருக்கும் ராணுவ வீரர்களிடம் இருந்து அதிக விலைக்கு வாங்கி விற்றல் போன்றவை மிக அதிகம்
    போக்குவரத்து வசதிகள்/சாலைகள் பெருகிய இந்நாளில் அண்டை மாநிலங்களுக்கு செல்ல அதிக நேரம் எடுக்கும் ஊர் எதுவும் தமிழகத்தில் கிடையாது.புதுவை/ஆந்திரம்,கேரளம்,கர்நாடகம் என்று மற்ற மாநிலங்களில் சென்று மது அருந்துவதோ,அங்கிருந்து ரகசியமாக வாங்கி வந்து விற்பதோ மிகவும் எளிதான ஒன்று.விலை குறைவு என்று பாண்டியில் இருந்து வாங்கி வரும் சரக்கில் நூற்றில் ஒரு பங்கு கூட பிடிபடுவதில்லை.பிடிபட்டாலும் போலிசுக்கு அதிக வருமானம்.அவ்வளவு தான்
    2500 க்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் இருந்தால் அங்கு மருத்துவ உதவி நிலையம் அவர்களுக்காக ஆரம்பிக்க வேண்டும் என்று விதி.அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதை விட அதிக எண்ணிகையில் தான் முன்னாள் ராணுவத்தினர் உள்ளனர்.அவர்கள் மது வாங்குவதை மாநில அரசின் மதுவிலக்கு தடை செய்ய முடியாது.ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மாசம் வாங்கும் பாட்டில்கள் மூன்று லட்சத்திற்கும் அதிகம்.மது விலக்கு வந்தால் இப்போது கிடைக்கும் விலையை விட இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கிடைக்கும்.அவர்களுக்கு அதிக வருமானம்.குஜராத்தில் இப்படி பெரும்பணம் சம்பாதித்தவர் பலர்.

    ReplyDelete
    Replies
    1. Mr Poovannan, even if all military men of TN sell their quota of liquor
      It will be minuscule compared to the present TASMAC sales. It will not pose a danger. But spurious liquor will. Government should stop it aggressively. The free drinking allowed gives opportunities and youngsters go and drink there. That bar must be closed and drinking in public places must be strictly banned. If they do that then prohibition is welcome. If people go out to get drunk it is their funeral. You can't stop all from drinking.

      Delete
    2. Sir you have missed the elephant in the room@availability of liquor lawfully in neighbouring state and courtesy development of raod/rail infrastructure no neighbouring state is beyond 2hrs from any part of tamilnadu

      Every potential passenger in bus/train/private vehicle/lorries is a potential smuggler and millions cross every day from other state to TN.The liquor shops in state borders will make a killing and prohibition in a single state will only help that state police harass anyone in the name of liquor check
      What prevents a drunkard to go to neighbouring state on salary day , drink legally and turn a smuggler of dozens of bottles for the month using his wife and children as conduits to it. Prohibition if attempted should be for all states and evn that will fail miserably as brewing liquor and its alcoholic content is childs play with advancements in technology.

      Every alternate household in manipur which had prohibition will brew rice beer and depending upon the kick one wants adds syrups/drugs to make it highly effective

      http://archive.indianexpress.com/news/drugs-worth-rs-20-crore-seized-in-manipur-5-arrested/1200929/

      http://www.thehindu.com/news/national/other-states/rs8crore-worth-cocaine-seized-in-manipur/article6352114.ece

      Delete