Thursday, March 31, 2016

ஜெயமோகனின் காண்டீபம் - செம்பதிப்பு முன்பதிவு

ஜெயமோகனின் மகாபாரதத் தொடர் நாவல்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தமிழ்ப் படைப்புலகில் இது மாபெரும் சாதனை. இதுவரையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திர நீலம் என்று ஏழு தொகுதிகள் வெளியாகியுள்ளன.

தற்போது எட்டாவது தொகுதியான ‘காண்டீபம்’ செம்பதிப்புக்கான முற்பதிவு தொடங்கியிருக்கிறது.
அர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான். 
மகாபாரத அர்ஜுனன் வெறும் வில்லேந்தி அல்ல. தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்து, கடந்து அவனே மெய்மைதான் என்றானான். அந்த அருந்ததவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல். 
வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரததின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது. 
இந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் இல்லை.
இதன் விலை ரூ. 900/- ஏப்ரல் 20-ம் தேதி வரையில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் ஆசிரியர் கையெழுத்துடன் மே முதல் வாரத்தில் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும். முன்பதிவு செய்ய நீங்கள் செல்லவேண்டிய இடம் இது.

வெண்முரசு தொடர்வரிசையில் உள்ள முந்தைய புத்தகங்களை வாங்க, கீழ்க்கண்ட சுட்டிகளைப் பயன்படுத்துங்கள். இவை எல்லாமே பேப்பர்பேக் - சாதா அட்டைப் பதிப்புகள். இவை அனைத்தும் கெட்டி அட்டை, கிளாசிக் பதிப்புகளாகவும் கிடைக்கின்றன. ஏழில் சிலவற்றில் ஒருவேளை ஸ்டாக் இல்லாமல் போகலாம். அப்படியானாலும் மே முதல் வாரத்துக்குள் கிடைக்கும். சாதா அட்டைப் பதிப்புகள் எப்போதும் கிடைக்கும்.

இந்திர நீலம்
வெண்முகில் நகரம்
பிரயாகை
நீலம்
வண்ணக்கடல்
மழைப்பாடல்
முதற்கனல்

இவைதவிர, இவற்றிலிருந்து பிரித்தெடுத்து, சிறு நூலாக ஐந்து புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். விலை குறைவான, கையடக்கப் பதிப்புகள் இவை. பரசுராமன், திருதராஷ்டிரன், அம்பை, கர்ணன், துரோணர் ஆகியோரின் கதைகள் முறையே ஆயிரம் கைகள், இருள்விழி, எரிமலர், செம்மணிக் கவசம், புல்லின் தழல் என்னும் புத்தகங்களாக வெளியாகியுள்ளன.

ஆயிரம் கைகள்
இருள்விழி
எரிமலர்
செம்மணிக்கவசம்
புல்லின் தழல்

No comments:

Post a Comment