tag:blogger.com,1999:blog-5012938.post111270254010652894..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சேவாக், தோனி அபார ஆட்டம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-1112822843807680442005-04-07T02:57:00.000+05:302005-04-07T02:57:00.000+05:30சென்ற கிரிக்கெட் பதிவின் பின்னூட்டத்தை இங்கு மீண்ட...சென்ற கிரிக்கெட் பதிவின் பின்னூட்டத்தை இங்கு மீண்டும் இடுகிறேன்.<BR/><BR/>Greg's column<BR/>http://www.hindu.com/2005/04/07/stories/2005040701182100.htm<BR/>the KING on sachin<BR/>http://www.hindu.com/2005/02/10/stories/2005021008151600.htm<BR/>http://www.hindu.com/2005/02/11/stories/2005021107792100.htm<BR/>ஆனாலும் எனக்கு பிடித்த பத்தி இதுதான் :)<BR/>Tendulkar stands still at the crease but loves to attack and is very positive. He could have scored more runs but then he is no Geoff Boycott. As a person, Tendulkar has invited less controversy than Brian. On a different note, I can't help commenting that when it comes to style, I find Rahul Dravid most stylish. In boxing parlance, he gets his punches without anyone noticing it. At the end of it, his opponent is bruised!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1112752671093912442005-04-06T07:27:00.000+05:302005-04-06T07:27:00.000+05:30கே: ஆட்டக்காரர்கள் நடுவரிடம் அவ்வப்போது சென்று விள...கே: ஆட்டக்காரர்கள் நடுவரிடம் அவ்வப்போது சென்று விளக்கங்கள் கேட்கலாமா? எந்த அளவுக்கு இதற்கு அனுமதி உண்டு?<BR/><BR/>ப: கேட்கலாம். பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று நடுவருக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் நல்ல நடுவர்கள் அழுத்தமாக, ஆணித்தரமாக, நேரத்தை வளர்க்காமல் பதில் சொல்வார்கள், சொல்கிறார்கள். முன்பெல்லாம் பதிலைக் கேட்டதும் ஆட்டக்காரர்கள் "thanks" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் இன்று பலர் முரட்டுத்தனமாக நின்றுகொண்டே இருக்கிறார்கள்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1112723457332838852005-04-05T23:20:00.000+05:302005-04-05T23:20:00.000+05:30//இந்த மாறுதல் தேவையில்லாதது போலவே தோன்றியது.//நல்...//இந்த மாறுதல் தேவையில்லாதது போலவே தோன்றியது.//<BR/><BR/>நல்ல ரன் ரேட்; நல்ல ஃபார்மில் ஷேவாக்; யாராவது strike rotate செய்து ஷேவாகை ஆட விட்டால் போதும் - என்ற நிலையில் தோனி களமிறங்குவதைக் கண்டதும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மாறுதல் என்று கங்குலி பேச்சிலிருந்து தெரிகிறது. எப்படியாகிலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தோனிக்கு பாராட்டுக்கள்! இந்த விஷயத்தில்தான் நமது தமிழக ஆட்டக்காரர்களெல்லாம் கோட்டை விட்டார்கள். (தற்போதைய தமிழக அணியின் ஆட்டக்காரர்கள் பற்றி உங்களிடமிருந்து ஒரு பதிவை எதிர் பார்க்கிறேன். முன்பெல்லாம் சுனில் சுப்ரமணியம், சரத், ஸ்ரீராம், டி. வாசு.. என்று பெயர் பெற்ற ஆட்டக்காரர்கள் இருந்தார்கள். இப்போது யார் நம்பிக்கையாக ஆடுகிறார்? சரத் இன்னும் அணியில் இருக்கிறாரா?)<BR/><BR/>//நிச்சயம் இந்தச் செய்கைக்காக அவருக்கு அபராதம் காத்திருக்கிறது.//<BR/>//கங்குலிக்குக் கோபம். நடுவர்களிடம் முறையிட்டார்.//<BR/><BR/>நடுவர்கள், தமக்கு ஏற்பில்லாத முடிவை எடுக்கும்பொழுதெல்லாம் பந்து வீச்சாளர்கள்/கேப்டன்கள் அவர்களிடம் சென்று விளக்கம் கேட்பதை பார்க்க முடிகிறது. இன்றுகூட சாமி தனக்கு அளிக்கப்பட்ட வைடுக்கு இவ்வாறு விளக்கம் கேட்டார். இதெல்லாம் எந்தளவு அனுமதிக்கப்படுகிறது? இதற்கு விதிமுறைகளில் இடமுண்டா?<BR/><BR/>//இப்பொழுதெல்லாம் 300, 350 போன்ற ரன்கள் கூட ஓர் அணியைக் காப்பாற்றாது போலிருக்கிறது//<BR/><BR/>20-20 கிரிக்கெட்டை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இதெல்லாம் சகஜம் பத்ரி. முன்பெல்லாம் 230+ என்பது நல்ல எண்ணிக்கை. 250+ அசாத்திய எண்ணிக்கை என்று இருந்தது. தடவி தடவி 18, 19வது ஓவரில் ஐம்பது அடிப்பார்கள். கடந்த பத்து வருடங்களில் ஆட்டம் எவ்வளவு மாறி விட்டது என்பதை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. பரபரப்பும், எண்டர்டெய்ன்மெண்டும் கூடி விட்டது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், அதிரடி ஆட்டக்காரர்களுக்கு மட்டுமேயான ஆட்டமாக ஒருநாள் கிரிக்கெட் மாறி வருவது வருத்தத்தை தருகிறது. நளினமான, நுணுக்கமான ஆட்டக்காரர்களுக்கு அங்கே இடமில்லை.<BR/><BR/>தற்போதைய இந்திய அணியின் இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம் - நெஹ்ரா தவிர, மற்ற கடைநிலை ஆட்டக்காரர்கள் அனைவரும் மட்டை வீசக் கூடியவர்களாக. தைரியமாக பந்தை எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இது சமீபமாக பல ஆட்டங்களில் நமக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது. இன்று ஆட்டத்தின் இறுதியில் பாலாஜியும், ஜாகீரும் ரன் குவித்திருக்கவில்லையென்றால் 300+ எண்ணிக்கையை பாகிஸ்தான் சுலபமாக எட்டியிருக்கக் கூடும். (சாமி வீசிய பவுன்ஸரை ஜாகீர் கான் முன்னங்காலில் சென்று அடித்த சிக்ஸர் இன்னும் கண்ணில் நிற்கிறது)<BR/><BR/>============<BR/>முதல் ஆட்டத்தின் முடிவில், இரவு ஜெயா டி.வியில் நீங்கள் பங்குபெற்ற நிகழ்ச்சி கண்டேன். ஒரு கேள்வியை கேட்டுவிட்டு பிறகு உங்கள் யாரையும் பேச விடாமல் அடிக்கடி குறுக்கிட்டு, தானே அதற்கு நீண்ட விளக்கம் கொடுத்து ரமேஷ் நிகழ்ச்சியை நடத்திச் சென்ற விதம் எரிச்சலையே தந்தது. இன்றும் நிகழ்ச்சி இருந்ததா என்று தெரியவில்லை.ராஜாhttps://www.blogger.com/profile/01544510822657612613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1112705939995252822005-04-05T18:28:00.000+05:302005-04-05T18:28:00.000+05:30//அடுத்து இந்தியாவின் காவல் தெய்வம் திராவிட் ஆட வந...//அடுத்து இந்தியாவின் காவல் தெய்வம் திராவிட் ஆட வந்தார்.//<BR/><BR/>காவல் தெய்வம்?! நீங்கள் திராவிட் ஆதரவாளர் மட்டுமல்ல. 'அம்மா' கட்சியை சேர்ந்தவர் என்பதும் இப்போதுதான் தெரிகின்றது.Anonymousnoreply@blogger.com