tag:blogger.com,1999:blog-5012938.post114318633469807516..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஹிந்துத் திருமணச் சட்டத்தை திருத்த வேண்டும்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-1147300837670411512006-05-11T04:10:00.000+05:302006-05-11T04:10:00.000+05:30பத்ரி திருமண முறை பற்றி பேசவில்லை என்று சொல்லி விட...பத்ரி திருமண முறை பற்றி பேசவில்லை என்று சொல்லி விட்ட போதிலும் ரூமி அதைப்பற்றியே பேசுகிறார்.<BR/><BR/>"இப்படிப் பொதுவான சட்டம் வந்தால் மக்களுக்கு அது நன்மை பயக்கும் என்று சொல்கிறீர்கள். எந்த மக்களுக்கு? அதுதான் பிரச்சனை".<BR/><BR/>இதில் என்ன பிரச்சினை? பொது கிரிமினல் சட்டம் எந்த மக்களுக்கு நன்மை தருகிறதோ அதேபோல்தான் பொது சிவில் சட்டத்தின் நன்மையும். <BR/><BR/>மத நம்பிக்கைகள் வேறு, அவற்றை governance-க்கு அடிப்படையாகக்கொள்வது வேறு. ஒன்று தனிமனித விஷயம்; மற்றொன்று ஒரு சமுதாயம் சார்ந்த விஷயம்.<BR/><BR/>மத நம்பிக்கை, காலம், இடம், குழு போன்ற காரணிகளால் வரையறுக்கப்பட்டது; அவற்றை விமர்சிப்பதோ மாற்றுவதோ எளிதில் இயலாத விஷயம். இப்படிப்பட்ட சூழலில், மாற்றங்களையே அடித்தளமாகக் கொண்ட வளரும் சமுதாயத்தினை மாற்றங்களை எதிர்க்கும் மதச்சட்டங்களைக் கொண்டு நிர்வகிக்க முயல்வது எவ்வாறு சரியான அணுகுமுறையாகும்? <BR/><BR/>"ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாமிய ஷரியத் அல்லாத ஒரு சட்டத்தின் அடிப்படையில் சொத்துரிமை வழங்கப்படுவது அவருக்கு நன்மை என்று அவர் நினைப்பார் என்று கருதுகிறீர்களா? " <BR/>ஷரியா அல்லாத குற்றவியல் சட்டங்கள் மட்டும் அவருக்கு நன்மை என்று நினைக்கிறாரா? பொது குற்றவியல் சட்டங்கள் இஸ்லாமியர்களால் ஒப்புக்கொள்ளப்படவில்லையா என்ன? <BR/><BR/>"இதே மாதிரியான கேள்வியை ஒவ்வொரு சமுதாயத்தவரும் கேட்பதாக வைத்துக் கொண்டு பாருங்கள்".<BR/>எல்லா சமுதாயத்திற்கும் இதே பதில்தான். சட்டம் இந்தியர் அனைவருக்கும் ஒருபோலத்தான் இருக்க வேண்டும். மதத்திற்கொரு சட்டம் என்பது சமுதாயத் தேக்கத்திற்கும், பிளவிற்கும், இவற்றை வைத்து அரசியல் செய்வதற்குமே உதவும்.<BR/><BR/>"ஷரியத் சட்டங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டவை என்று ஒரு முஸ்லிம் நம்பும்போது எப்படி இன்னொரு சட்டத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியும்?" <BR/>ஷரியத் அல்லாத குற்றவியல் சட்டங்களை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் மார்க்க நம்பிக்கையில் பழுதுள்ளவர்கள் என்றா அர்த்தம் கொள்ளுவீர்கள்? மத நம்பிக்கை என்பது தனி மனித சம்பத்தப்பட்டது (மட்டுமே). பல்வேறு தரப்பின்ர் பங்கெடுக்கும் சமூக நிர்வாகத்திற்கு மத நம்பிக்கையை அடிப்படையாகக்கொள்வது சமுதாய முன்னேற்றத்திற்கு ஒரு தடைக்கல்லாகவே அமையும். <BR/><BR/>"நீங்கள் சொன்ன மூன்று விஷயத்திலுமே பொதுக்கருத்து வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்".<BR/>பலதாரத்திருமணத்தடைச்சட்டம், பால்ய விவாகம் ஆகியவற்றிற்கெதிரான சட்டங்கள் கடைசி இந்துவின் மனமாற்றம் வரை காத்திருந்து பிறகு சட்டமாக்கப்படவில்லை. பொதுக்கருத்து வரும் சூழலை மத நம்பிக்கையாளரிடயே உள்ள முற்போக்கு சிந்தனையாளர் உருவாக்க வேண்டும். இதைப்பற்றிய விவாதங்களோ எதிர்ப்புக்குரல்களோ மதத்துவேஷம் என்ற அடிப்படையில் இனம் பிரித்து தாக்கப்பட்டு நசுக்கப்படுவதே அங்கே நடந்துவருகிறது. இடது சாரி சிந்தனையாளர் கூட இதைப்பற்றி வெளிப்படையாகப்பேச பயப்படுகின்றனர், அல்லது அதிகார மகுடியில் மயங்கி வசதியாக மறந்து விடுகின்றனர், எங்கே ஹிந்துத்துவா பட்டம் கிடைத்து விடுமோ என்ற வாக்கு வங்கி சார்ந்த பயம் வேறு.<BR/><BR/>சாதாரணமாக நடைமுறையில் இருக்க வேண்டிய ஒரு சட்டம், சென்சிடிவ்வான விஷயமாக்கப்பட்டு விட்டது துரதிர்ஷ்டவசமாக உண்மையே. குறைந்த பட்சம் ராஜதுரை சொல்வது போல ஒரு சில முக்கிய ("achilles heel") விஷயங்களிலாவது சட்டத்திருத்தங்கள் கொண்டு வருவது இந்த விஷயத்தில் நல்லதொரு முதல் படியாக அமையும்.arunagirihttps://www.blogger.com/profile/05803541583687756988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1147286841163752482006-05-11T00:17:00.000+05:302006-05-11T00:17:00.000+05:30Forget about UCC.Even changes to protect interests...Forget about UCC.Even changes to protect interests of Muslim women<BR/>are opposed as unislamic by many<BR/>muslims.muslims should change their<BR/>attitude and support moves to make muslim laws compatible with the<BR/>constitutional principles of equality between sexes and ending<BR/>discrimination on the basis of gender.India is a signatory to CEDAW.We should change presonal<BR/>laws of all faiths to reflect the<BR/>above principles and objectives<BR/>of CEDAW.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1146936096497340542006-05-06T22:51:00.000+05:302006-05-06T22:51:00.000+05:30சில தகவல்களுக்காக பார்க்கவும்http://marchoflaw.blo...சில தகவல்களுக்காக பார்க்கவும்<BR/><BR/>http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_114693563554390293.html<BR/><BR/>நன்றி<BR/><BR/>பிரபு ராஜதுரைPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1143913285263383822006-04-01T23:11:00.000+05:302006-04-01T23:11:00.000+05:30அன்பு பத்ரி, பொது சிவில் சட்டம் பற்றித்தான் பேசுகி...அன்பு பத்ரி, பொது சிவில் சட்டம் பற்றித்தான் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>ஆனால் நீங்களே கொஞ்சம் குழம்பியிருப்பதுபோல் தெரிகிறது. திருமணம், விவாகரத்து, சொத்துரிமைகள் ஆகியவை ஒரே விதமான சட்டங்களுக்குள் வரவேண்டும் என்று கூறுகிறீர்கள். அதேசமயம், அவரவர் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறீர்கள்.<BR/><BR/>இப்படிப் பொதுவான சட்டம் வந்தால் மக்களுக்கு அது நன்மை பயக்கும் என்று சொல்கிறீர்கள். எந்த மக்களுக்கு? அதுதான் பிரச்சனை. <BR/><BR/>ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்கள் வழக்கப்படி திருமணம், விவாகரத்து, சொத்துரிமை கோருதல் ஆகியவையே தங்களுக்கு நன்மை என்று கருதுகின்றனர். ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாமிய ஷரியத் அல்லாத ஒரு சட்டத்தின் அடிப்படையில் சொத்துரிமை வழங்கப்படுவது அவருக்கு நன்மை என்று அவர் நினைப்பார் என்று கருதுகிறீர்களா? இதே மாதிரியான கேள்வியை ஒவ்வொரு சமுதாயத்தவரும் கேட்பதாக வைத்துக் கொண்டு பாருங்கள்.<BR/><BR/>ஷரியத் சட்டங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டவை என்று ஒரு முஸ்லிம் நம்பும்போது எப்படி இன்னொரு சட்டத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியும்? <BR/><BR/>நீங்கள் சொன்ன மூன்று விஷயத்திலுமே பொதுக்கருத்து வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.<BR/><BR/>இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் எவராக இருந்தாலும் அவர் ஹெல்மெட் போட்டுக் கொண்டுதான் ஓட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் அது சரியான பொது சிவில் சட்டமாகும். அதை எந்த மதத்தவரும் பின்பற்றுவதில் பிரச்சனை ஏதும் வரப்போவதில்லை.<BR/><BR/>ஆனால் திருமணம் என்று வரும்போது, உதாரணமாக, ஆரம்பத்திலிருந்தே இஸ்லாமிய திருமணங்கள் ரிஜிஸ்டர் செய்யப்படுகின்றன. அதுதான் அவர்களின் திருமண முறையாக இருக்கிறது. ஆனால் ஹிந்து திருமணங்களை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்ற கருத்தே இப்போதுதான் உருவாகியுள்ளது.<BR/><BR/>எங்கள் சட்டம்தான் எற்கனவே முன்னேறிய சட்டமாக்கும் என்று ஒரு முஸ்லிம் சொல்ல வாய்ப்பிருக்கிறது.<BR/><BR/>ஹிந்து திருமண முறைகள்கூட இந்தியா முழுவதும் ஒரே மாதிரியானதாக இல்லை. சப்தபதி முறையை கேரளாவில் பின்பற்றுவார்களா? திகவினர் ஏற்றுக் கொள்வார்களா? தலித்துகள் திருமண முறைகளும் வேறு மாதிரியானவையே.<BR/><BR/>இதில் யூனிஃபார்மிட்டி வருவதற்கு வாய்ப்பே இல்லை.<BR/><BR/>பின் எப்படி இவற்றை ஒட்டிய பொதுவான சட்டம் கொண்டுவர முடியும்? அதுவும் அவரவர் சட்டங்களே அவரவர்க்கு நன்மை பயக்கப் போதுமானதாக இருக்கிறது என்று அவரவர் நினைக்கும்போது?!<BR/><BR/>உங்கள் அக்கறை எனக்கு புரிகிறது. ஆனால் இது மிகவும் சிக்கலான 'சென்சிட்டிவான' ஒரு பிரச்சனை.<BR/><BR/>முஸ்லிம் சட்டங்களில் ஏற்கத்தகாதவை என்று நீங்கள் நினைப்பதை முதலில் சொல்லுங்கள். அதை விவாதிக்கலாம். இதைப்போல ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் குறைகாணததக்க சட்டங்களை திறந்த மனதுடன் விவாதிப்போம். <BR/><BR/>பிறகு என்ன செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வரலாம். இப்போது இருக்கும் பல கேள்விகள் அப்போது மறைந்துவிடக்கூடும்.<BR/><BR/>அன்புடன்<BR/>நாகூர் ரூமிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1143194466590904742006-03-24T15:31:00.000+05:302006-03-24T15:31:00.000+05:30பதிவின் நோக்கம் பற்றியெல்லாம் யோசிக்காமல் எங்காவது...பதிவின் நோக்கம் பற்றியெல்லாம் யோசிக்காமல் எங்காவது எதாவது வார்த்தைகள் தென்பட்டால் அதைப்பிடித்துக்கொண்டே அப்பதிவை வேண்டுகிற திசைக்கெல்லாம் இழுத்துச்செல்ல முடிவது இங்கு பழகிப்போன விடயம்தானே நியோ?:)) <BR/><BR/>ஆனால் பத்ரி குறிப்பிட்டிருக்கிற கருத்துக்கள் உண்மையிலேயே சிந்திக்க வேண்டியவை. திருமணச் சட்டம் என்று மட்டுமின்றி நம் தண்டனைச்சட்டங்கள்கூட மாற்றங்களுக்குள்ளாகவேண்டியவையே. இங்கு, இருப்பதில் எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் பின்பற்றமுடிகிற நமக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்கிற, குறைந்தபட்சம் விரும்புகிற மனமாவது வாய்க்கும்வரை இப்படியேதான் நிலைமைகள் தொடரும். பதிவுக்கு நன்றி பத்ரி.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1143189738906662082006-03-24T14:12:00.000+05:302006-03-24T14:12:00.000+05:30"பொது சிவில் சட்டம்" கோருகிறீர்களோ என்று எண்ண வைக்..."பொது சிவில் சட்டம்" கோருகிறீர்களோ என்று எண்ண வைக்கும் படி எழுதப்பட்டுள்ளது பத்ரி. அம்மாதிரியானால், ஏகப்பட்ட வாக்குவாதங்கள்தான் மிச்சமாகும்!<BR/><BR/> உங்கள் பதிவு சரியான திசையில் செல்கிறதா என கணிக்க முடியவில்லை :)நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.com