tag:blogger.com,1999:blog-5012938.post954788122414619255..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மாமல்லை - 2: செய்வித்தவர்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-26753111423756738672013-09-29T06:42:29.265+05:302013-09-29T06:42:29.265+05:30பத்ரி சார்
பல்லவர்களுக்கு முன்னே அதாவது கிபி மூன...பத்ரி சார் <br /><br />பல்லவர்களுக்கு முன்னே அதாவது கிபி மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டுகளுக்கு முன்னே கோயில்கள் என்று எதுவும் இல்லை. தமிழர்களின் வழிபாட்டுக்கூடங்கள் பெரும்பாலும் குகை அல்லது பௌத்த சமண முறைப்படியான குடைவரைக் கோயில்கள் தாம் என "கோவில் நிலம் சாதி என்ற பொ வேல்சாமியின் புத்தகத்தில் படித்திருக்கிறேன். <br /><br />அவரே அதில் காஞ்சியின் கைலாசநாதர் கோயிலே தமிழகத்தில் இராஜசிம்மனால் கட்டப்பட்ட முதல் கோயில் என்றும் கூறியிருக்கிறார். <br />அப்போ, இந்த கோவில் கட்டடக் கலை என்பது தமிழர்களின் கலை இல்லை என்று தானே பொருள்படும்..?anandrajahhttps://www.blogger.com/profile/17971148567094725424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51096240178164504422010-02-03T00:13:25.332+05:302010-02-03T00:13:25.332+05:30பத்ரி சார்,
இது போல இடங்களுக்கு செல்லும் முன் ஒரு...பத்ரி சார்,<br /><br />இது போல இடங்களுக்கு செல்லும் முன் ஒரு அறிவிப்பு செய்தால் (மொட்டை மாடி கூட்டம் போல), ஆர்வமுடயவர்கள் பங்கேற்க வசதியாக இருக்கும். நன்றி.<br /><br />நகுல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-35154799458680060432010-02-02T07:24:28.214+05:302010-02-02T07:24:28.214+05:30ராம்:
1. நான் சொன்னது தர்மராஜ மண்டபம். தர்மராஜ ரத...ராம்:<br /><br />1. நான் சொன்னது தர்மராஜ மண்டபம். தர்மராஜ ரதத்தை அல்ல. தர்மராஜ மண்டபம்தான் கொஞ்சம் primitive style என்றேன். அங்குதான் ‘அத்யந்த காம’ ஸ்லோகம் பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.<br /><br />மற்றபடி தர்மராஜ ரதம் ஓர் அற்புதமான கட்டமைப்பு என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.<br /><br />2. சிம்மவிஷ்ணு காலத்தில் சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கலாமே? கோயில்களை அழியாத கல்லில் கட்டினேன் என்றுதான் மகேந்திரன் சொல்லியிருக்கிறான். (ஆனால் உண்மையில் மகேந்திரனுக்கு முன்னதாகவே பாண்டியர்கள் தமிழ்நாட்டில் கல்லில் கோயில்களைக் கட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்தியாவில் பிற இடங்களில் அசோகர் முதற்கொண்டு கல்லால் கோயில்கள் எழுப்பப்பட்டன.) சிம்மவிஷ்ணு உருவாக்கிய விஷ்ணு சிலைமீது அழியக்கூடிய செங்கல்லால் கோயில் இருந்திருக்கலாம். அந்த விஷ்ணு சிலையின் ‘primitive’ ஆன look and feel காரணமாக அது மகேந்திரனுக்கும் முந்தையதாக இருக்கலாம் என்பது ஒரு கருத்து என நினைக்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68111878789977692692010-02-01T19:17:48.563+05:302010-02-01T19:17:48.563+05:30>>>>தர்மராஜ மண்டபம் மிகவும் எளிமையான க...>>>>தர்மராஜ மண்டபம் மிகவும் எளிமையான கட்டுமானத்தில் இருக்கிறது. தூண்கள் அகலமாக, மேலும் கீழும் சதுரமாகவும், இடையில் எட்டு பட்டிகள் கொண்டதாகவும் உள்ளன. மகேந்திரன் கட்டுவித்த மண்டபங்கள் இப்படிப்பட்டவையே.<<<<<<br /><br />பத்ரி - தர்மராஜ ரதத்தின் கட்டுமானம் எளிமையானது அன்று. மிக மிகச் சிக்கலான ஒன்று.<br /><br />அதிஷ்டானம் எனப்படும் basement, மகேந்திரர் காலத்தில் பாதபந்த அமைப்பிலும், பிரதிபந்த அமைப்பிலுமே இருப்பதை நோக்கலாம். இவை இரண்டும் simple-ஆனவை. தர்மராஜ ரதத்தில், அடுத்த கட்ட வடிவமான கபோத பந்தம் இடம்பெற்றிருக்கிறது. <br /><br />மகேந்திரரின் தளவானூர் குடைவரையில் முயலப்பட்ட முன்றில் என்ற அமைப்பும், இங்கு முழுமை பெற்றிருக்கிறது. கர்ணசாலை போன்ற complex ஆர உறுப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன.<br /><br />முழுமை பெற்றிருந்தால், இது சாந்தார விமான அமைப்பில் இருந்திருக்கும் வாய்ப்பினை, முடிவு பெறடத அங்கங்கள் கூறுகின்றன. (காஞ்சி கைலாசநாதர் கோயிலும், தஞ்சை பெரிய கோயிலும் சாந்தார அமைப்பில் உள்ளவை), அங்கிருக்கும் மற்ற ஒற்ரைக் கல் தளிகளோடு கூர்ந்து ஒப்பு நோக்கினாலே, தர்மராஜ ரதம் ஒரு primitive structure என்னும் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள்.<br /><br />பனைமலை தாளகிரீஸ்வரர் கோயிலையும், காஞ்சி கைலாசநாதர் கோயிலையும் பார்க்கும் போது, ராஜசிம்மனின் கடற்கரை கோயில் மிக எளிமையான அமைப்பாகத் தோன்றும். இந்த வேறுபாட்டை வைத்துக் கொண்டே, இவற்றை இரு வேறு மன்னர்கள் கட்டியிருப்பார்கள் என்று கூற முடியுமா?<br /><br />>>>மாமல்லையில் இருக்கும் கடற்கரைக் கோயிலில் உள்ள சயனத் திருக்கோல விஷ்ணு மட்டும் மகேந்திரனுக்கும் முந்தைய காலத்தில் - சிம்மவிஷ்ணு காலத்திலேயே - உருவாக்கப்பட்டிருக்கலாம்.<<<<<br /><br />மகேந்திரரின் மண்டகப்பட்டு கல்வெட்டு இதனை பொய்யாக்கி விடுகிறது. மகேந்திரருக்கு முன், கல்லில் கோயில் அமைக்கும் முறை இல்லையெனில், சிம்மவிஷ்ணு எப்படி சயனத் திருக்கோல விஷ்ணு கோயிலை உருவாக்கி இருக்க முடியும்?<br /><br />லலிதா ராம்Ramhttps://www.blogger.com/profile/17366083888066062242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18661372373010016352010-02-01T16:41:40.112+05:302010-02-01T16:41:40.112+05:30அன்புள்ள பத்ரி,
சென்ற ஞாயிறன்று, ஆழ்வார்ப்பேட்டை ட...அன்புள்ள பத்ரி,<br />சென்ற ஞாயிறன்று, ஆழ்வார்ப்பேட்டை டேக் மையத்தில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில், மாமல்லபுரம் பற்றி டாக்டர் சித்ரா மாதவன் அவர்கள் ஒரு அருமையான உரை ஆற்றினார். பட விளக்கத்துடன். டாக்டர் சித்ரா வரலாறு, சமஸ்க்ருதம், தொல்லியல் ஆகிய துறைகளில் கரைகண்டவர். சுவாரசியமும் ஹாஸ்யமும் ஞானமும் நிறைந்த பேச்சு. மாமல்லபுர சரித்திரம் ஒரு மர்மம் நிறைந்தது. உண்டு என்றும் இல்லை என்றும், தெரியாது என்றும் ஒவ்வொருகேள்விக்கும் பதிலளிக்கக்கூடிய மர்மம் என்று குறிப்பிட்டார். ராஜசிம்மன் கட்டியதா - ஆமாம்; இல்லை. பீடத்தில் ஏன் லிங்கம் இல்லை? தெரியாது. அர்ஜுனன் தபசா? பகீரதன் தவமா? தெரியாது. இரண்டில் ஒன்றாக இருக்கலாம். திட்டவட்டமான முடிவு காணமுடியாத மர்மங்கள் நிறைந்த மாமல்லபுரம் என்று முடித்தார்.<br />இன்னொன்றும் சொன்னார்: சங்க காலகத்தில் - கி.மு. இரண்டாம் நூற்றாண்டு-கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு இடையில் தமிழ்நாட்டில் கோயில்கள் இருந்தனவா? அவற்றின் அமைப்பு எப்படி இருந்தன? என்ற கேள்விகளை எழுப்பி, மரத்தாலும், மண்ணாலும், செங்கல்லாலும், காரையாலும் கட்டப்பட்டிருக்கலாம்; காலப்போக்கில் தடங்கள் ஏதுமின்றி அழிந்திருக்கலாம் என்றும் பதிலளித்தார்.வழிப்போக்கன்https://www.blogger.com/profile/13692162311146007399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86290977888903496512010-02-01T12:34:58.813+05:302010-02-01T12:34:58.813+05:30நல்ல கட்டுரை அய்யா. எனக்குத் தெரிந்து மலையின் அடிப...நல்ல கட்டுரை அய்யா. எனக்குத் தெரிந்து மலையின் அடிப்பகுதியினைக் குடைந்து மண்டபம் அமைத்து இருப்பது மகேந்திரவர்மரின் காலம். மகிஷாசூர வதம் இந்த மண்டபத்தில் தான் உள்ளது. அவரைத் தொடர்ந்து நரசிம்மன் செய்வதாக கூறினாலும் விஷ்னு வர்ம பல்லவர் என்ற பெயரில் சில அமைப்புக்களை அவர் செய்ததாக கூறியிருக்கின்றார்கள். ஆனால் வரிசை முறையில் இறுதியில் வந்ததால் நிறைய வேலைப் பாடுகள் இராசசிம்ம பல்லவர் காலத்தில் செய்ததாக கூறப்படுகின்றது. பிடாரி இரதங்கள் பாதியில் நிற்க காரணம் சோழர்களின் யுத்தம் மற்றும் காஞ்சி கைலாச நாதர் கோவில் கட்டும் பணியால் தடை பெற்றது. <br /><br />பெருமாள் கோவில் முதலில் கடல் அருகில் தான் இருந்தது. இது அடிக்கடி கடலின் சீற்றத்தால் பாதிப்பு அடைவதால் இராச சிம்ம பல்லவன் தான் ஊருக்குள் கொணர்ந்து கோயில் கட்டினான். பழைய பெருமாள் கோவில் இப்போது கடல் அடியில் உள்ளது. அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடக்கின்றன. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com