இன்று வலைப்பூ மூலம் பெயரிலி (anonymous) என்பவரது வலைப்பதிவைப் பார்த்தேன். மரத்தடி, ராயர்காபிகிளப் மற்றபல தமிழ் யாஹூ குழுமங்களில் உறுப்பினராக இருக்கும் ஒருவரது வலைப்பதிவு என்று புரிகிறது.
வேண்டுமென்றே மொழியைக் குழப்பி கொச்சைத் தமிழில் எழுதியிருந்தாலும் பல 'புனிதப் பசுக்களை' அங்கதம் செய்வதாக அமைந்திருக்கிறது (என் வலைப்பதிவுகளையும், யாஹூ குழும அஞ்சல்களையும் சேர்த்துத்தான்). நான் அ.மார்க்ஸ் பற்றி எழுதியிருந்ததைக் கண்டித்து "[மார்க்ஸ்] பத்ரியவிட தமிழ நெடுங்காலம் அறிஞ்சவருங்கிறத பத்ரி தெரிஞ்சுக்கிறது நல்லது" என்று சொல்லியிருக்கிறார். ஒத்துக் கொள்கிறேன். மார்க்ஸ் கடுமையான உழைப்பாளி. அவர் வெளியிட்டிருக்கும் புத்தகங்களும், ஒவ்வொரு வாரமும்/மாதமும் அவர் எழுதும் கட்டுரைகளும் அவரது தரப்பு நியாயத்தை வெகு அழகாக முன்வைக்கின்றன. அவர் கருத்துக்களோடு அனைவரும் ஒத்துப் போகாவிட்டாலும், மரியாதை தரவேண்டிய அறிஞர்.
மாலனின் திசைகள் முதல் தமிழ் யூனிகோடு மின்னிதழா? இல்லை மகேனின் எழில்நிலா முதல் மின்னிதழா? ஏன் சாரு நிவேதிதாவைக் கண்டித்தவர்கள் மாலனைக் கண்டிக்கவில்லை என்பது போல் எழுதியுள்ளார். மகேனின் தளம் உபயோகமானது, ஆனால் மின்னிதழ் என்ற வரையறைக்குள் அதைக் கொண்டுவர முடியாது என்பது என் எண்ணம்.
Tuesday, January 20, 2004
இந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி
இன்று நடந்த போட்டியில் இந்தியா எளிதாகவே வெற்றி பெற்றது. கடைசியில் ஸிம்பாப்வே எதிர்பாராத விதத்தில் போராட ஆரம்பித்ததால் அதை எதிர்பார்க்காத இந்திய அணி சற்றே தடுமாறியது. ஆனால் ஸிம்பாப்வே விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து கொண்டே வந்ததால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகி விட்டது.
இன்றைய போட்டியில், டெண்டுல்கருக்குப் பதிலாக பார்த்திவ் படேல் விளையாடினார். கங்குலி மீண்டும் டாஸில் வென்று முதலில் பேட்டிங் என்று தீர்மானித்தார். கங்குலியும், படேலும் ஆட்டத்தைத் துவக்கினர். படேல் ஒருசில ஆக்ரோஷமான அடிகளை விளையாடிய பின்னர் ஹீத் ஸ்டிரீக்கின் பந்தை 'புல்' செய்யப் போய் ஸ்டம்பை இழந்தார். இவர் அடித்ததில் மிக அழகானது பிலிக்நாட்டின் பந்தில் ஸ்கொயர் லெக்கில் அடித்த ஒரு 'புல் ஷாட்'. பயமின்றி, ஆஃப் திசையில் எழுந்து வந்த பந்தை சுழற்றி, மடக்கி ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். கங்குலி, ஷான் இர்வைனின் ஒரு அளவு குறைந்து வந்த பந்தை ஹூக் செய்யப் போய், பந்து மட்டையில் மேல் விளிம்பில் பட்டு ஷார்ட் ஃபைன் லெக் திசையில் போக, அங்கு ஹோண்டா மிக அருமையாக, பின்னால் சாய்ந்து, எம்பி, வில்லைப வளைத்தது போல் உடம்பைப் பின்னோக்கி வளைத்து, கையின் விளிம்பில் அருமையாகப் பிடித்தார். நிச்சயமாக இந்த கேட்ச் இந்தத் தொடரின் ஒரு அற்புதங்களில் ஒன்று என்று சொல்லலாம். அதன்பின், லக்ஷ்மண் அதிக நேரம் நிற்காமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
திராவிட் மீண்டும் ஒருமுறை மிக அருமையாக விளையாடினார். யுவ்ராஜ் களமிறங்கியதால் திராவிட் பொறுமையாக அணிக்கு வலு சேர்ப்பதாக நின்று, நிதானித்து ஆட, யுவ்ராஜ் அடித்து, ஓட்டங்கள் சேர்க்கலானார். பந்து களத்தில் பட்டு மெதுவாகவே வந்ததனால் இந்திய மட்டையாளர்களால் எளிதாக ஓட்டங்களைக் குமிக்க முடியவில்லை. திராவிடும், யுவ்ராஜும் நான்காவது விக்கெட்டுக்கு 114 ரன்களை நேர்த்தபின்னர், ரே பிரைஸின் உள்நோக்கி வந்த சுழற்பந்தில் யுவ்ராஜ் ஆஃப் திசையில் அடிக்க முயன்று, தோற்று, பந்து ஸ்டம்பில் பட்டு அவுட்டானார். அதன் பின்னர் ரோஹன் காவஸ்கரும், திராவிடும் பந்துக்கு ஒரு ரன் வீதம் அடித்து 61 ரன்கள் சேர்த்தனர். கடைசியில் ஓட்டங்களை அதிகரிக்க முயன்று, காவஸ்கர் ஸ்டிரீக் பந்தில் 'பவுல்ட்' ஆனார்; திராவிட் புல்-டாஸ் ஒன்றை கவருக்கு அடித்து கேட்ச் கொடுத்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 255 ரன்களையே எடுக்க முடிந்திருந்தது. இது சற்றே குறைவாகத் தோன்றினாலும், ஆடுகளத்தில் பந்து மிகவும் வேகம் குறைந்து வருவதாலும், ஸிம்பாப்வே அணியில் அனுபவக் குறைவாலும் இதுவே போதும் என்று தோன்றியது.
ஹேமங் பதானியை காவஸ்கருக்கு பதில் அனுப்பியிருந்திருக்க வேண்டும்.
ஸிம்பாப்வே தன் இன்னிங்ஸை ஆரம்பித்த போது நேஹ்ராவும், பதானும் நன்கு பந்துகளை வீசினர். பதான் வீசிய ஒரு அளவு குறைந்து வந்த பந்து, மட்டையின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டின் கம்பிக்கு மேல் புகுந்து மார்க் வெர்முலனின் வலது புருவத்துக்கு மேல் ஆழமாக வெட்டியது. அவர் பாதியில் களத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பதான் வீசிய மற்றொரு பந்தில் டிராவிஸ் பிரெண்டின் கையிலும் அடிபட்டது. ஆனால் இன்ரைய ஆட்டத்தின் ஸ்டார் பௌலர் பாலாஜியே. இன்று நடுவருக்கு அருகாமையிலிருந்து பந்துகளை வீசினார். பந்துகளை ஆஃப் ஸ்டம்பிலிருந்து வெளியே நகருமாறு செய்தார். நல்ல வேகத்துடனும் வீசினார். இவரும், பதானும் வீசிய பந்துகளை அடிக்க முடியாமல், 'பின்ச் ஹிட்டர்' என்று வேகமாக ரன்களை அடிக்க வேண்டியவராக வந்த பிரெண்ட், அவசரமாக ஒரு ரன்னைத் திருடப் போய் கங்குலியால் ரன் அவுட் ஆனார். அதுவரை நிதானமாகவும், திரமையுடனும் ஆடி வந்த கிராண்ட் பிளவர் நேஹ்ராவின் பந்தை டீப் கவருக்குத் தூக்கி அடித்து லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரன்கள் அதிகம் அடிக்காமல் ஆண்டி பிலிக்நாட்டும், பாலாஜியின் பந்து வீச்சில் யுவ்ராஜ் சிங்கிடம் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இன்று கங்குலி காவஸ்கரைப் பந்து வீச அழைக்காமல் தானே ஐந்தாவது பந்து வீச்சாளராகப் பந்து வீச ஆரம்பித்தார். எதிரணி கேப்டன் ஸ்டிரீக்கின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
சிறிது நேர மழை இடைவெளிக்குப் பின்னர், பெருமளவு பின்தங்கியிருந்த ஸிம்பாப்வே ததேந்திர தாய்புவின் விக்கெட்டை கங்குலியிடம் இழந்தது. மிகவும் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த கார்லைல் கங்குலியின் பந்தை வெட்டியாட முயல, பந்து விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலின் கால் காப்பின் மேல் மடலின் இடுக்கில் பொதிந்தது. கேட்ச் பிடித்து விட்டேன் என்று படேல் அழும்பு பிடிக்க, நடுவர் அதை அவுட் என்று தீர்மானித்தார்! (அது அவுட்தான்! ஒருவர் கையால்தான் கேட்ச் பிடிக்க வேண்டும் என்றில்லை, உடலின் பாதுகாப்புக் கவசங்களுக்குள் பந்து மாட்டிக்கொண்டாலும் அது கேட்ச் என்றே தீர்மானிக்கப்படும்.) இப்படியாக கங்குலிக்கு மூன்று விக்கெட்டுகள் கிடைத்திருந்தன. ஆட்டம் இனி இந்தியா கையில் என்றிருக்கும்போது ஒரு மாற்றம் ஏற்பட்டது.
சாதாரணமாகத் துவக்க ஆட்டக்காரராக இருக்கும் டியான் இப்ராஹிம் ஒன்பதாவதாகக் களமிறங்கினார். ஏற்கனவே உள்ளே இருந்த ஷான் இர்வைனுடன் ஒன்று சேர்ந்து கும்ப்ளே, மற்றும் கங்குலியை இருவரும் பந்தாடத் துவங்கினர். ஓட்டங்கள் எங்கிருந்தெல்லாமோ வரத் துவங்கின. ஒரு ரன்னே கொடுக்க வேண்டிய இடங்களில் இந்தியத் தடுப்பாளர்கள் இரண்டு ரன்களை வழங்க ஆரம்பித்தனர். ஆட்டம் மிகவும் நெருக்கமாகப் போய் முடியும் என்ற எதிர்பார்ப்பு ஸிம்பாப்வே ரசிகர்களுக்கு வர ஆரம்பித்தது. ஆனால் இர்வைன், இப்ராஹிம் இருவருமே பந்தை உயரத் தூக்கி அடித்து கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள். கடைசியாக ரே பிரைஸ் ரன் எடுக்கப் போய் ஹோண்டாவை ரன் அவுட்டாக்கினார். அடிபட்டிருந்த வெர்முலன் விளையாட வரமுடியாததனால், ஸிம்பாப்வே இன்னிங்ஸ் முடிந்தது.
யுவ்ராஜ் சிங்கிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
இன்றைய சிறப்பான ஆட்டம்: ராஹுல் திராவிடின் நேர்த்தியான பேட்டிங், யுவ்ராஜ் சிங்கின் பேட்டிங், மற்றும் பாலாஜியின் மிக அருமையான பந்து வீச்சு. இரண்டு விக்கெட்டுகள்தான் இவருக்குக் கிடைத்தது என்றாலும் நேரிலோ, தொலைக்காட்சியிலோ பார்த்தவர்கள் இவரது பந்து வீச்சு எப்படி முந்தைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலிருந்து இன்றைக்கு வெகுவாக முன்னேறியுள்ளது என்பதை உணர்வார்கள். (ஒருவேளை இவர் என்னுடைய வலைப்பதிவைப் படிக்கிறாரோ என்று நினைக்கிறேன். நான் சொன்ன அறிவுரைகளை இன்று நன்கு பின்பற்றியிருந்தார்.)
ஸ்கோர்போர்டு
முந்தைய ஆட்டம்: இந்தியா v ஆஸ்திரேலியா ஒன்று | இரண்டு
இன்றைய போட்டியில், டெண்டுல்கருக்குப் பதிலாக பார்த்திவ் படேல் விளையாடினார். கங்குலி மீண்டும் டாஸில் வென்று முதலில் பேட்டிங் என்று தீர்மானித்தார். கங்குலியும், படேலும் ஆட்டத்தைத் துவக்கினர். படேல் ஒருசில ஆக்ரோஷமான அடிகளை விளையாடிய பின்னர் ஹீத் ஸ்டிரீக்கின் பந்தை 'புல்' செய்யப் போய் ஸ்டம்பை இழந்தார். இவர் அடித்ததில் மிக அழகானது பிலிக்நாட்டின் பந்தில் ஸ்கொயர் லெக்கில் அடித்த ஒரு 'புல் ஷாட்'. பயமின்றி, ஆஃப் திசையில் எழுந்து வந்த பந்தை சுழற்றி, மடக்கி ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். கங்குலி, ஷான் இர்வைனின் ஒரு அளவு குறைந்து வந்த பந்தை ஹூக் செய்யப் போய், பந்து மட்டையில் மேல் விளிம்பில் பட்டு ஷார்ட் ஃபைன் லெக் திசையில் போக, அங்கு ஹோண்டா மிக அருமையாக, பின்னால் சாய்ந்து, எம்பி, வில்லைப வளைத்தது போல் உடம்பைப் பின்னோக்கி வளைத்து, கையின் விளிம்பில் அருமையாகப் பிடித்தார். நிச்சயமாக இந்த கேட்ச் இந்தத் தொடரின் ஒரு அற்புதங்களில் ஒன்று என்று சொல்லலாம். அதன்பின், லக்ஷ்மண் அதிக நேரம் நிற்காமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
திராவிட் மீண்டும் ஒருமுறை மிக அருமையாக விளையாடினார். யுவ்ராஜ் களமிறங்கியதால் திராவிட் பொறுமையாக அணிக்கு வலு சேர்ப்பதாக நின்று, நிதானித்து ஆட, யுவ்ராஜ் அடித்து, ஓட்டங்கள் சேர்க்கலானார். பந்து களத்தில் பட்டு மெதுவாகவே வந்ததனால் இந்திய மட்டையாளர்களால் எளிதாக ஓட்டங்களைக் குமிக்க முடியவில்லை. திராவிடும், யுவ்ராஜும் நான்காவது விக்கெட்டுக்கு 114 ரன்களை நேர்த்தபின்னர், ரே பிரைஸின் உள்நோக்கி வந்த சுழற்பந்தில் யுவ்ராஜ் ஆஃப் திசையில் அடிக்க முயன்று, தோற்று, பந்து ஸ்டம்பில் பட்டு அவுட்டானார். அதன் பின்னர் ரோஹன் காவஸ்கரும், திராவிடும் பந்துக்கு ஒரு ரன் வீதம் அடித்து 61 ரன்கள் சேர்த்தனர். கடைசியில் ஓட்டங்களை அதிகரிக்க முயன்று, காவஸ்கர் ஸ்டிரீக் பந்தில் 'பவுல்ட்' ஆனார்; திராவிட் புல்-டாஸ் ஒன்றை கவருக்கு அடித்து கேட்ச் கொடுத்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 255 ரன்களையே எடுக்க முடிந்திருந்தது. இது சற்றே குறைவாகத் தோன்றினாலும், ஆடுகளத்தில் பந்து மிகவும் வேகம் குறைந்து வருவதாலும், ஸிம்பாப்வே அணியில் அனுபவக் குறைவாலும் இதுவே போதும் என்று தோன்றியது.
ஹேமங் பதானியை காவஸ்கருக்கு பதில் அனுப்பியிருந்திருக்க வேண்டும்.
ஸிம்பாப்வே தன் இன்னிங்ஸை ஆரம்பித்த போது நேஹ்ராவும், பதானும் நன்கு பந்துகளை வீசினர். பதான் வீசிய ஒரு அளவு குறைந்து வந்த பந்து, மட்டையின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டின் கம்பிக்கு மேல் புகுந்து மார்க் வெர்முலனின் வலது புருவத்துக்கு மேல் ஆழமாக வெட்டியது. அவர் பாதியில் களத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பதான் வீசிய மற்றொரு பந்தில் டிராவிஸ் பிரெண்டின் கையிலும் அடிபட்டது. ஆனால் இன்ரைய ஆட்டத்தின் ஸ்டார் பௌலர் பாலாஜியே. இன்று நடுவருக்கு அருகாமையிலிருந்து பந்துகளை வீசினார். பந்துகளை ஆஃப் ஸ்டம்பிலிருந்து வெளியே நகருமாறு செய்தார். நல்ல வேகத்துடனும் வீசினார். இவரும், பதானும் வீசிய பந்துகளை அடிக்க முடியாமல், 'பின்ச் ஹிட்டர்' என்று வேகமாக ரன்களை அடிக்க வேண்டியவராக வந்த பிரெண்ட், அவசரமாக ஒரு ரன்னைத் திருடப் போய் கங்குலியால் ரன் அவுட் ஆனார். அதுவரை நிதானமாகவும், திரமையுடனும் ஆடி வந்த கிராண்ட் பிளவர் நேஹ்ராவின் பந்தை டீப் கவருக்குத் தூக்கி அடித்து லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரன்கள் அதிகம் அடிக்காமல் ஆண்டி பிலிக்நாட்டும், பாலாஜியின் பந்து வீச்சில் யுவ்ராஜ் சிங்கிடம் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இன்று கங்குலி காவஸ்கரைப் பந்து வீச அழைக்காமல் தானே ஐந்தாவது பந்து வீச்சாளராகப் பந்து வீச ஆரம்பித்தார். எதிரணி கேப்டன் ஸ்டிரீக்கின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
சிறிது நேர மழை இடைவெளிக்குப் பின்னர், பெருமளவு பின்தங்கியிருந்த ஸிம்பாப்வே ததேந்திர தாய்புவின் விக்கெட்டை கங்குலியிடம் இழந்தது. மிகவும் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த கார்லைல் கங்குலியின் பந்தை வெட்டியாட முயல, பந்து விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலின் கால் காப்பின் மேல் மடலின் இடுக்கில் பொதிந்தது. கேட்ச் பிடித்து விட்டேன் என்று படேல் அழும்பு பிடிக்க, நடுவர் அதை அவுட் என்று தீர்மானித்தார்! (அது அவுட்தான்! ஒருவர் கையால்தான் கேட்ச் பிடிக்க வேண்டும் என்றில்லை, உடலின் பாதுகாப்புக் கவசங்களுக்குள் பந்து மாட்டிக்கொண்டாலும் அது கேட்ச் என்றே தீர்மானிக்கப்படும்.) இப்படியாக கங்குலிக்கு மூன்று விக்கெட்டுகள் கிடைத்திருந்தன. ஆட்டம் இனி இந்தியா கையில் என்றிருக்கும்போது ஒரு மாற்றம் ஏற்பட்டது.
சாதாரணமாகத் துவக்க ஆட்டக்காரராக இருக்கும் டியான் இப்ராஹிம் ஒன்பதாவதாகக் களமிறங்கினார். ஏற்கனவே உள்ளே இருந்த ஷான் இர்வைனுடன் ஒன்று சேர்ந்து கும்ப்ளே, மற்றும் கங்குலியை இருவரும் பந்தாடத் துவங்கினர். ஓட்டங்கள் எங்கிருந்தெல்லாமோ வரத் துவங்கின. ஒரு ரன்னே கொடுக்க வேண்டிய இடங்களில் இந்தியத் தடுப்பாளர்கள் இரண்டு ரன்களை வழங்க ஆரம்பித்தனர். ஆட்டம் மிகவும் நெருக்கமாகப் போய் முடியும் என்ற எதிர்பார்ப்பு ஸிம்பாப்வே ரசிகர்களுக்கு வர ஆரம்பித்தது. ஆனால் இர்வைன், இப்ராஹிம் இருவருமே பந்தை உயரத் தூக்கி அடித்து கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள். கடைசியாக ரே பிரைஸ் ரன் எடுக்கப் போய் ஹோண்டாவை ரன் அவுட்டாக்கினார். அடிபட்டிருந்த வெர்முலன் விளையாட வரமுடியாததனால், ஸிம்பாப்வே இன்னிங்ஸ் முடிந்தது.
யுவ்ராஜ் சிங்கிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
இன்றைய சிறப்பான ஆட்டம்: ராஹுல் திராவிடின் நேர்த்தியான பேட்டிங், யுவ்ராஜ் சிங்கின் பேட்டிங், மற்றும் பாலாஜியின் மிக அருமையான பந்து வீச்சு. இரண்டு விக்கெட்டுகள்தான் இவருக்குக் கிடைத்தது என்றாலும் நேரிலோ, தொலைக்காட்சியிலோ பார்த்தவர்கள் இவரது பந்து வீச்சு எப்படி முந்தைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலிருந்து இன்றைக்கு வெகுவாக முன்னேறியுள்ளது என்பதை உணர்வார்கள். (ஒருவேளை இவர் என்னுடைய வலைப்பதிவைப் படிக்கிறாரோ என்று நினைக்கிறேன். நான் சொன்ன அறிவுரைகளை இன்று நன்கு பின்பற்றியிருந்தார்.)
ஸ்கோர்போர்டு
முந்தைய ஆட்டம்: இந்தியா v ஆஸ்திரேலியா ஒன்று | இரண்டு
பீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு
கண்ணில் படாமல் மறைந்திருந்த செய்தி. இடதுசாரி கம்யூனிஸ்டுகள் இந்திய இராணுவத்தின் 'பீஷ்மா' டாங்குகளில் திரிசூலச் சின்னம் இருப்பதைக் கண்டித்திருக்கிறார்களாம்.
கம்யூனிஸ்டுக் கட்சியின் வரதராஜன் மதச்சின்னங்களை டாங்கில் பொறித்திருப்பது நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிராக உள்ளது என்று புதிதாகக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். நம் நாட்டில் அக்னி, த்ரிஷூல், பீஷ்மா, அர்ஜுன் என்று இந்துப் புராணங்களில் வரும் கடவுளர்கள், நாயகர்கள் பெயர்கள்தான் ஆயுதங்களுக்குப் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது. எதிர்ப்பதாயிருந்தால் இந்தப் பெயர்களையே எதிர்க்க வேண்டியிருக்கும். திரிசூலச் சின்னம் இருப்பதை எதிர்த்தால், த்ரிஷூல் என்று பெயர் வைத்திருப்பதற்கு என்ன சொல்ல? இதனால் பாஜகவுக்கு ஓட்டுகள் அதிகமாக விழுந்திடுமோ என்ற எண்ணமா? பொதுமக்கள் டாங்கில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று தினமும் பார்த்துக் கொண்டா இருக்கிறார்கள்?
கம்யூனிஸ்டுக் கட்சியின் வரதராஜன் மதச்சின்னங்களை டாங்கில் பொறித்திருப்பது நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிராக உள்ளது என்று புதிதாகக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். நம் நாட்டில் அக்னி, த்ரிஷூல், பீஷ்மா, அர்ஜுன் என்று இந்துப் புராணங்களில் வரும் கடவுளர்கள், நாயகர்கள் பெயர்கள்தான் ஆயுதங்களுக்குப் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது. எதிர்ப்பதாயிருந்தால் இந்தப் பெயர்களையே எதிர்க்க வேண்டியிருக்கும். திரிசூலச் சின்னம் இருப்பதை எதிர்த்தால், த்ரிஷூல் என்று பெயர் வைத்திருப்பதற்கு என்ன சொல்ல? இதனால் பாஜகவுக்கு ஓட்டுகள் அதிகமாக விழுந்திடுமோ என்ற எண்ணமா? பொதுமக்கள் டாங்கில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று தினமும் பார்த்துக் கொண்டா இருக்கிறார்கள்?
Monday, January 19, 2004
இர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்
நேற்றைய ஆட்டம் பற்றிய குறிப்பில் பலவற்றைக் குறிப்பிட முடியவில்லை. அதனால் இந்தத் தனிப்பதிவு.
பாலாஜியிடம் என்ன குறை?
பாலாஜியின் பந்து வீச்சில் மிக முக்கியக் குறை அவர் பந்துகளை கிரீஸின் முனையிலிருந்து வீசுவதே. இதனால் இவர் வீசும் பந்துகள், வலது கை மட்டையாளரின் ஆஃப் ஸ்டம்பில் விழுந்தால், லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போகிறது. எந்த நடுவரும் lbw கொடுக்க மாட்டார். இதனைக் கருத்தில் வைத்திருக்கும் மட்டையாளரும் தைரியமாக மட்டையைச் சுழற்றி அடிக்க முடியும். சில முறை slower ball எனப்படும் கையின் பின்புறமாகப் பந்தை மெதுவாக வீசும்போது இவரது பந்து நடு அல்லது லெக் ஸ்டும்பில் விழுந்தால், லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போகிறது. நேற்று கூட இதனால் ஐந்து வைடுகள் கொடுத்தார். திராவிட் போன்ற அரைகுறை விக்கெட் கீப்பரால் இதுபோன்ற பந்துகளைத் தடுக்கவே முடியாது. இந்தத் தொடரில்தான் பாலாஜி வலதுகை மட்டையாளருக்கு வெளியே போகும் பந்துகளை வீசுகிறார். அதாவது ஆஃப் ஸ்டும்பிலோ, அதற்கு வெளியிலோ விழுந்து நேராக, அல்லது ஸ்லிப் திசையை நோக்கி நகரும் பந்து. இவர் கிரீஸின் முனையிலிருந்து வீசாமல், ஸ்டம்பின் அருகே வந்து வீசினால், உள்ளே வரும் பந்து, வெளியே செல்லும் பந்து இரண்டினாலும் விக்கெட் எடுக்க முடியும்.
அப்படியென்றால் நேற்று எப்படி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்ற கேள்வி எழும். பாண்டிங்கின் விக்கெட் வீசிய பந்தின் வேகத்தினால் விழுந்தது. பாண்டிங் 'புல் ஷாட்' அடிக்க முயன்றார், ஆனால் பந்தின் வேகத்தைக் கணிக்க முடியாததனால் முன்னதாகவே 'shuffle' செய்து (இது பாண்டிங் எப்பொழுதும் செய்யும் தவறு, டெஸ்டு போட்டிகளின் இரண்டு முறையாவது இப்படி அவுட் ஆகியுள்ளார்) அடிக்க, பந்து அடி விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. மார்ட்டின் ஆஃப் ஸ்டும்புக்கு வெகு வெளியே வீசிய பந்தை, கால்களை நகர்த்தாமல் பாயிண்டில் அடிக்க, யுவ்ராஜினால் அழகாகப் பிடிக்கப் பட்டது. ஆனாலும் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் இதிலேதான் மிக அருமையாகப் பந்து வீசியுள்ளார் பாலாஜி. சில ஓவர்களில் முதல் நான்கு பந்துகளை மிக அருமையாக வீசுவார், கடைசி இரண்டு பந்துகளில் கோட்டை விட்டு, நான்குகளை வழங்கி விடுவார். இவர் இன்னமும் அதிகம் பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக, ஸ்டம்புக்கு அருகே வந்து பந்து வீசக் கற்க வேண்டும்; ஸ்ரீநாத் மாதிரி மிக அதிகமாக நடு ஸ்டம்பிலிருந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்துகளை வீசாதிருக்க வேண்டும்; வலது கை ஆட்டக்காரருக்கு ஆஃபிலிருந்து வெளியே செல்லுமாறு பந்துகளை வீச வேண்டும். அப்படியெல்லாம் செய்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.
பதானிடம் என்ன நிறை?
இர்ஃபான் பதான் - நம்பிக்கை நட்சத்திரம். இவரது பந்து வீச்சில் ஒரு வேகம் இருக்கிறது. ஹேய்டன், கில்கிறிஸ்ட் போன்ற பெரிய ஆசாமிகளிடம் பந்து வீசும்போது சிறிதும் பயம் இல்லை. நன்கு எழும்புமாறு பந்துகளை வீசுகிறார். டெஸ்டில் கில்கிறிஸ்டை வீழ்த்திய யார்க்கர் ஒன்றிற்கே லட்சம் தரலாம். நேற்று இவர் ஹேய்டனை வீழ்த்தியதே இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கு இரண்டு பந்துகள் முன்னால்தான் ஹேய்டன் முன்னால் வந்து உயரத் தூக்கி அடித்த கேட்ச் பாலாஜியால் நழுவ விடப்பட்டது. மீண்டும் அதுபோல் முன்னேறி அடிக்க வந்தபோது பதான் வீசிய பந்து ஆஃப் ஸ்டும்பில் விழுந்து, நன்கு உயர்ந்து வந்து, சற்றே வெளியேறியது. இந்தப் பந்தை ஹேய்டனால் தொட்டு கேட்ச் மட்டுமே கொடுக்க முடிந்தது. அதேபோல் ஆரம்பத்தில் கில்கிறிஸ்ட் மட்டையைக் கோடாலி போல் சுழற்றிய போதும், விடாது இவர் வீசிய வேகப்பந்துகளினால்தான் சரியாக அடிக்க முடியாமல் பாலாஜியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கில்கிறிஸ்ட். ஒவ்வொரு முறை தொடக்க ஆட்டக்காரர்கள் முன்னேறி வந்து அடிக்க முற்பட்டபோதும், பதான் பந்து வீச்சின் வேகத்தாலும் (140 கிமீ/மணி), குறைந்த அளவில் பந்து வீசியதாலும், மட்டையாளர்களைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே இருந்தார்.
இவர் செய்ய வேண்டியது: கடைசி ஓவர்களில் யார்க்கர் வீசப் பழக வேண்டும், இன்னமும் துல்லியமாக வீச முயல வேண்டும்; வேகத்தை சிறிதும் குறைக்கக் கூடாது.
ரோஹன் காவஸ்கர்
ஒன்றும் பெரிதாக நேற்று செய்து விடவில்லை. பந்து வீச்சு சாதாரணம். ஆனால் அவர் தன் பந்து வீச்சிலேயே பிடித்த கேட்ச் மிக அருமையானது. இந்த ஒருநாள் போட்டித் தொடரின் தலைசிறந்த கேட்ச் என்று சொல்லலாம். பக்கவாட்டில் படுத்தபடி பாய்ந்து non-striker முன்னால் விழுந்து விரலின் நுனியில் பிடித்தார். அதுவும் சைமாண்ட்ஸின் விக்கெட்.
இந்தியாவிற்கு ஆல்-ரவுண்டர்கள் தேவைப்படுவதால் இவரது பெயர் முன்னால் வந்துள்ளது. சஞ்சய் பங்காரை விடப் பொருத்தமானவர். தந்தையின் ஆதரவால்தான் வந்தார் என்றில்லை. இவர் விளையாடுவது மேற்கு வங்காளக் கிரிக்கெட் அணிக்கு. அதனால் கங்குலிக்கு இவரது விளையாட்டில் பரிச்சயம் அதிகம் உண்டு, அதுவும் ஒரு காரணமே.
பாலாஜியிடம் என்ன குறை?
பாலாஜியின் பந்து வீச்சில் மிக முக்கியக் குறை அவர் பந்துகளை கிரீஸின் முனையிலிருந்து வீசுவதே. இதனால் இவர் வீசும் பந்துகள், வலது கை மட்டையாளரின் ஆஃப் ஸ்டம்பில் விழுந்தால், லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போகிறது. எந்த நடுவரும் lbw கொடுக்க மாட்டார். இதனைக் கருத்தில் வைத்திருக்கும் மட்டையாளரும் தைரியமாக மட்டையைச் சுழற்றி அடிக்க முடியும். சில முறை slower ball எனப்படும் கையின் பின்புறமாகப் பந்தை மெதுவாக வீசும்போது இவரது பந்து நடு அல்லது லெக் ஸ்டும்பில் விழுந்தால், லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போகிறது. நேற்று கூட இதனால் ஐந்து வைடுகள் கொடுத்தார். திராவிட் போன்ற அரைகுறை விக்கெட் கீப்பரால் இதுபோன்ற பந்துகளைத் தடுக்கவே முடியாது. இந்தத் தொடரில்தான் பாலாஜி வலதுகை மட்டையாளருக்கு வெளியே போகும் பந்துகளை வீசுகிறார். அதாவது ஆஃப் ஸ்டும்பிலோ, அதற்கு வெளியிலோ விழுந்து நேராக, அல்லது ஸ்லிப் திசையை நோக்கி நகரும் பந்து. இவர் கிரீஸின் முனையிலிருந்து வீசாமல், ஸ்டம்பின் அருகே வந்து வீசினால், உள்ளே வரும் பந்து, வெளியே செல்லும் பந்து இரண்டினாலும் விக்கெட் எடுக்க முடியும்.
அப்படியென்றால் நேற்று எப்படி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்ற கேள்வி எழும். பாண்டிங்கின் விக்கெட் வீசிய பந்தின் வேகத்தினால் விழுந்தது. பாண்டிங் 'புல் ஷாட்' அடிக்க முயன்றார், ஆனால் பந்தின் வேகத்தைக் கணிக்க முடியாததனால் முன்னதாகவே 'shuffle' செய்து (இது பாண்டிங் எப்பொழுதும் செய்யும் தவறு, டெஸ்டு போட்டிகளின் இரண்டு முறையாவது இப்படி அவுட் ஆகியுள்ளார்) அடிக்க, பந்து அடி விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. மார்ட்டின் ஆஃப் ஸ்டும்புக்கு வெகு வெளியே வீசிய பந்தை, கால்களை நகர்த்தாமல் பாயிண்டில் அடிக்க, யுவ்ராஜினால் அழகாகப் பிடிக்கப் பட்டது. ஆனாலும் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் இதிலேதான் மிக அருமையாகப் பந்து வீசியுள்ளார் பாலாஜி. சில ஓவர்களில் முதல் நான்கு பந்துகளை மிக அருமையாக வீசுவார், கடைசி இரண்டு பந்துகளில் கோட்டை விட்டு, நான்குகளை வழங்கி விடுவார். இவர் இன்னமும் அதிகம் பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக, ஸ்டம்புக்கு அருகே வந்து பந்து வீசக் கற்க வேண்டும்; ஸ்ரீநாத் மாதிரி மிக அதிகமாக நடு ஸ்டம்பிலிருந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்துகளை வீசாதிருக்க வேண்டும்; வலது கை ஆட்டக்காரருக்கு ஆஃபிலிருந்து வெளியே செல்லுமாறு பந்துகளை வீச வேண்டும். அப்படியெல்லாம் செய்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.
பதானிடம் என்ன நிறை?
இர்ஃபான் பதான் - நம்பிக்கை நட்சத்திரம். இவரது பந்து வீச்சில் ஒரு வேகம் இருக்கிறது. ஹேய்டன், கில்கிறிஸ்ட் போன்ற பெரிய ஆசாமிகளிடம் பந்து வீசும்போது சிறிதும் பயம் இல்லை. நன்கு எழும்புமாறு பந்துகளை வீசுகிறார். டெஸ்டில் கில்கிறிஸ்டை வீழ்த்திய யார்க்கர் ஒன்றிற்கே லட்சம் தரலாம். நேற்று இவர் ஹேய்டனை வீழ்த்தியதே இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கு இரண்டு பந்துகள் முன்னால்தான் ஹேய்டன் முன்னால் வந்து உயரத் தூக்கி அடித்த கேட்ச் பாலாஜியால் நழுவ விடப்பட்டது. மீண்டும் அதுபோல் முன்னேறி அடிக்க வந்தபோது பதான் வீசிய பந்து ஆஃப் ஸ்டும்பில் விழுந்து, நன்கு உயர்ந்து வந்து, சற்றே வெளியேறியது. இந்தப் பந்தை ஹேய்டனால் தொட்டு கேட்ச் மட்டுமே கொடுக்க முடிந்தது. அதேபோல் ஆரம்பத்தில் கில்கிறிஸ்ட் மட்டையைக் கோடாலி போல் சுழற்றிய போதும், விடாது இவர் வீசிய வேகப்பந்துகளினால்தான் சரியாக அடிக்க முடியாமல் பாலாஜியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கில்கிறிஸ்ட். ஒவ்வொரு முறை தொடக்க ஆட்டக்காரர்கள் முன்னேறி வந்து அடிக்க முற்பட்டபோதும், பதான் பந்து வீச்சின் வேகத்தாலும் (140 கிமீ/மணி), குறைந்த அளவில் பந்து வீசியதாலும், மட்டையாளர்களைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே இருந்தார்.
இவர் செய்ய வேண்டியது: கடைசி ஓவர்களில் யார்க்கர் வீசப் பழக வேண்டும், இன்னமும் துல்லியமாக வீச முயல வேண்டும்; வேகத்தை சிறிதும் குறைக்கக் கூடாது.
ரோஹன் காவஸ்கர்
ஒன்றும் பெரிதாக நேற்று செய்து விடவில்லை. பந்து வீச்சு சாதாரணம். ஆனால் அவர் தன் பந்து வீச்சிலேயே பிடித்த கேட்ச் மிக அருமையானது. இந்த ஒருநாள் போட்டித் தொடரின் தலைசிறந்த கேட்ச் என்று சொல்லலாம். பக்கவாட்டில் படுத்தபடி பாய்ந்து non-striker முன்னால் விழுந்து விரலின் நுனியில் பிடித்தார். அதுவும் சைமாண்ட்ஸின் விக்கெட்.
இந்தியாவிற்கு ஆல்-ரவுண்டர்கள் தேவைப்படுவதால் இவரது பெயர் முன்னால் வந்துள்ளது. சஞ்சய் பங்காரை விடப் பொருத்தமானவர். தந்தையின் ஆதரவால்தான் வந்தார் என்றில்லை. இவர் விளையாடுவது மேற்கு வங்காளக் கிரிக்கெட் அணிக்கு. அதனால் கங்குலிக்கு இவரது விளையாட்டில் பரிச்சயம் அதிகம் உண்டு, அதுவும் ஒரு காரணமே.
Sunday, January 18, 2004
இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி
கிரிக்கெட் பற்றி எழுதக்கூடாது என்று நிலையிலிருந்து சிறிது மாற எண்ணம். இனி, இந்தியா விளையாடும் ஆட்டங்களை, நான் பார்க்க நேரிடும்போது, அவற்றைப் பற்றிய என் எண்ணங்களைப் பதிக்கவிருக்கிறேன்.
இன்று விபி தொடரின் ஐந்தாவது போட்டி, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடந்தது. இந்திய அணியில் சேவாக் இடம்பெறவில்லை. டாஸில் வென்ற கங்குலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். பகலிரவுப் போட்டிகளில் வேறு எந்த முடிவையும் எடுப்பது இந்நாட்களில் உசிதமல்ல.
கங்குலி-டெண்டுல்கர் ஜோடி, பல நாள்களுக்குப் பிறகு ஆட்டத்தைத் துவங்கியது. எழும்பி வந்த ஒரு பந்தை சமாளிக்க முடியாமல் கங்குலி வில்லியம்ஸின் பந்து வீச்சில், அவரிடமே பிடி கொடுத்து ஆட்டத்தை இழந்தார். அதற்கு முன்னரேயே, கங்குலியின் கேட்சை மார்ட்டின் ஸ்லிப்பில் கோட்டை விட்டிருந்தார். கங்குலியைத் தொடர்ந்து விளையாட வந்த லக்ஷ்மண், டெண்டுல்கருடன் இணைந்து 110 ஓட்டங்கள் எடுத்தார். கில்லஸ்பி, வில்லியம்ஸ் இருவரும் நன்கு பந்து வீசினர். ஆனால் தொடர்ந்து பந்து வீச வந்த பிரெட் லீயை டெண்டுல்கரும், லக்ஷ்மணும் கைமா செய்து விட்டனர். மூன்று ஓவர்களின் ஆறு நான்குகள் கொடுத்த லீயின் பந்து வீச்சு அந்த நேரத்தில் 3-0-30-0 என்று இருந்தது. டெண்டுல்கர் 40களில் இருக்கும்போது பந்தினைக் கால்திசையில் திருப்பி ஆடும்போது குதிகால் பிசகி விட்டது. வலியுடனேயே கடைசிவரை விளையாடிக் கொண்டிருந்தார். மாற்று ஓட்டக்காரராக கங்குலியை மட்டுமே பெறமுடியும் என்ற நிலையில் (ஒரு இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்த வீரர்களே ரன்னராக வரமுடியும்.) டெண்டுல்கர் அதற்கு கால்வலியுடன் ஓடுவதே விவேகமானது என்று எண்ணியிருக்கலாம்!
நொண்டிக்கால் டெண்டுல்கரும், சாதாரணமாகவே மெதுவாக ஓடும் லக்ஷ்மணும், எங்கெல்லாம் மூன்று ஓட்டங்கள் எடுக்க முடியுமோ, அங்கு இரண்டும், எங்கு இரண்டு கிடைக்குமோ, அங்கு ஒன்றும், ஒன்று எடுக்கக்கூடிய ஒருசில இடங்களில் ஒன்றுமில்லாமலும் ஓட்டம் எடுத்தனர். அப்படியும், ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்கள் வெகு சாதாரணமாகப் பந்து வீசி, ஓவருக்கு ஐந்திலிருந்து ஆறு ஓட்டங்களை சுலபமாக வழங்கி வந்தனர். ஒரு கட்டத்தில் ஓட்டங்கள் அனைத்தும் கால் திசையிலேயே வந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஐந்து ரன்-அவுட் வாய்ப்புகள் ஆஸ்திரேலிய வீரர்களால் நழுவ விடப்பட்டது. இந்திய அணி பந்து வீசிய போது யுவ்ராஜ் சிங்கும் பதிலுக்கு மரியாதை நிமித்தமாக நாலைந்து ரன்-அவுட் வாய்ப்புகளை நழுவ விட்டார். இப்படி சற்றே தூக்கம் வரவழைக்குமாறு விளையாட்டு போய்க்கொண்டிருந்தபோது ஆட்டத்தின் ஓட்டத்துக்குப் புறம்பாக, சதம் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பிருந்தும், டெண்டுல்கர் சைமாண்ட்ஸின் பந்து வீச்சில் பந்துவீச்சாளருக்கே சுலபமாகக் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
உள்ளே வந்த ராஹுல் திராவிட் ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிக்கே லாயக்கில்லாதவர் என்று பெயரெடுத்தவர். இன்று வந்தது முதற்கொண்டே அருமையாக விளையாடினார். லக்ஷ்மண் தன் பாத்திரத்தைப் புரிந்து கொண்டு, ஒத்து ஊதுபவராகவே கடைசிவரை இருந்தார். இந்தக் கூட்டணி வெறும் 20 ஓவர்களில் 133 ஓட்டங்களைப் பெற்று, ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பியது. 48ஆவது ஓவரில் ஓட்டங்களை அதிகரிக்க, திராவிட், ஹார்வேயின் பந்துகளைத் தூக்கி அடிக்க ஆரம்பித்தார். அந்த ஓவரின் மூன்றாவது, நான்காவது பந்துகள் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்கப்பட்டு நான்கு ரன்களுக்குப் பறந்தன. அதற்கடுத்த பந்தினை மிட்-ஆன் திசையில் மேலே அடிக்க, அங்கு எல்லைக்கோட்டின் அருகே கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார் திராவிட். 50ஆவது ஓவரின் கடைசிப் பந்தை மிட்-ஆன் மேல் தூக்கி அடித்து நான்கு ஓட்டங்களைப் பெற்ற லக்ஷ்மண் தன் சதத்தையும், அணியின் முன்னூறையும் கொண்டு வந்தார்.
இதுதான் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி முதல்முறையாக 300 ஓட்டங்களைத் தாண்டுவது. பிரிஸ்பேனில் நடந்திருக்கும் ஒருநாள் போட்டிகளிலேயே இதுதான் ஒரு அணி பெறும் அதிக ஓட்டங்களாகும்.
ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்திலிருந்தே வெறி கொண்டவர்கள் போல ஆட ஆரம்பித்தனர். கில்கிறிஸ்டும், ஹேய்டனும் ஒவ்வொரு பந்துக்கும் மட்டையைச் சுழற்றினர். முதல் நான்கு ஓவர்களில் 8, 9, 12, 9 ஓட்டங்கள் முறையே வந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒவ்வொரு பந்துக்கும் இறங்கி வந்து மட்டையைச் சுழற்றி அடித்தனர். ஆனால் இர்பான் பதானும், ஆஷிஸ் நேஹ்ராவும் பயந்து நடுங்காமல் பந்து வீச்சை திறம்படவே செய்தனர். ஆறாவது ஓவரில் கில்கிறிஸ்ட் பதான் வீசிய பந்தை உயரத் தூக்கி அடிக்க, மிட்-ஆனில் பாலாஜி நன்கு கேட்ச் பிடித்தார். உள்ளே வந்த பாண்டிங் தயங்கித் தயங்கியே விளையாடினார். பின்னர், பாலாஜி வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் அடிக்கப்போக, விளிம்பில் பட்ட பந்து வானளாவ சென்று ஸ்லிப்பில் லக்ஷ்மணிடம் கேட்சாகிப் போனது. ஆஃப் ஸ்டும்புக்கு வெகு வெளியே வீசப்பட்ட பாலாஜியின் பந்தை மட்டையால் வெட்டி அடித்த மார்ட்டின், அந்தப் பந்து பாயிண்டில் இருந்த யுவ்ராஜ் சிங்கின் கைக்குள் மாட்டியது. ரோஹன் காவஸ்கரின் முதல் ஓவரில் சைமாண்ட்ஸ் பந்துவீச்சாளருக்கே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 141/4 என்ற நிலையில் மைக்கேல் கிளார்க், மாத்தியூ ஹேய்டனுடன் சேர்ந்து விளையாட வந்தார். ஹேய்டனும் தன் ஆட்டத்தை சற்றே நிதானமாக்கி சதத்தைத் தாண்டினார்.
ஹேய்டன் இப்படியே போனால் தாங்காது என நினைத்த கங்குலி பதானைப் பந்து வீச்சிற்கு மீண்டும் அழைத்தார். முதல் பந்தை ஹேய்டன் உயரத் தூக்கி அடிக்க, பாலாஜி கையில் விழுந்த கேட்சை மிட்விக்கெட்டில் எல்லைக்கோட்டுக்கருகே நழுவ விட்டார். ஆனால் அதிகம் சேதமாகாமல், மூன்றாவது பந்தில் ஹேய்டன் விக்கெட் கீப்பர் திராவிடிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவிடம் ஜெயிக்கப் போதுமான பலம் இல்லை. பாலாஜியும், பதானும் ஆட்டம் முழுமைக்குமே அருமையாகப் பந்து வீசினர். இதில் பதான் இந்தியாவிற்குக் கிடைத்திருக்கும் மிக முக்கியமான சொத்து.
ஆட்ட நாயகானாக லக்ஷ்மண் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் திராவிடுக்கே இந்த விருது போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
ஸ்கோர்போர்டு
இன்று விபி தொடரின் ஐந்தாவது போட்டி, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடந்தது. இந்திய அணியில் சேவாக் இடம்பெறவில்லை. டாஸில் வென்ற கங்குலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். பகலிரவுப் போட்டிகளில் வேறு எந்த முடிவையும் எடுப்பது இந்நாட்களில் உசிதமல்ல.
கங்குலி-டெண்டுல்கர் ஜோடி, பல நாள்களுக்குப் பிறகு ஆட்டத்தைத் துவங்கியது. எழும்பி வந்த ஒரு பந்தை சமாளிக்க முடியாமல் கங்குலி வில்லியம்ஸின் பந்து வீச்சில், அவரிடமே பிடி கொடுத்து ஆட்டத்தை இழந்தார். அதற்கு முன்னரேயே, கங்குலியின் கேட்சை மார்ட்டின் ஸ்லிப்பில் கோட்டை விட்டிருந்தார். கங்குலியைத் தொடர்ந்து விளையாட வந்த லக்ஷ்மண், டெண்டுல்கருடன் இணைந்து 110 ஓட்டங்கள் எடுத்தார். கில்லஸ்பி, வில்லியம்ஸ் இருவரும் நன்கு பந்து வீசினர். ஆனால் தொடர்ந்து பந்து வீச வந்த பிரெட் லீயை டெண்டுல்கரும், லக்ஷ்மணும் கைமா செய்து விட்டனர். மூன்று ஓவர்களின் ஆறு நான்குகள் கொடுத்த லீயின் பந்து வீச்சு அந்த நேரத்தில் 3-0-30-0 என்று இருந்தது. டெண்டுல்கர் 40களில் இருக்கும்போது பந்தினைக் கால்திசையில் திருப்பி ஆடும்போது குதிகால் பிசகி விட்டது. வலியுடனேயே கடைசிவரை விளையாடிக் கொண்டிருந்தார். மாற்று ஓட்டக்காரராக கங்குலியை மட்டுமே பெறமுடியும் என்ற நிலையில் (ஒரு இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்த வீரர்களே ரன்னராக வரமுடியும்.) டெண்டுல்கர் அதற்கு கால்வலியுடன் ஓடுவதே விவேகமானது என்று எண்ணியிருக்கலாம்!
நொண்டிக்கால் டெண்டுல்கரும், சாதாரணமாகவே மெதுவாக ஓடும் லக்ஷ்மணும், எங்கெல்லாம் மூன்று ஓட்டங்கள் எடுக்க முடியுமோ, அங்கு இரண்டும், எங்கு இரண்டு கிடைக்குமோ, அங்கு ஒன்றும், ஒன்று எடுக்கக்கூடிய ஒருசில இடங்களில் ஒன்றுமில்லாமலும் ஓட்டம் எடுத்தனர். அப்படியும், ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்கள் வெகு சாதாரணமாகப் பந்து வீசி, ஓவருக்கு ஐந்திலிருந்து ஆறு ஓட்டங்களை சுலபமாக வழங்கி வந்தனர். ஒரு கட்டத்தில் ஓட்டங்கள் அனைத்தும் கால் திசையிலேயே வந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஐந்து ரன்-அவுட் வாய்ப்புகள் ஆஸ்திரேலிய வீரர்களால் நழுவ விடப்பட்டது. இந்திய அணி பந்து வீசிய போது யுவ்ராஜ் சிங்கும் பதிலுக்கு மரியாதை நிமித்தமாக நாலைந்து ரன்-அவுட் வாய்ப்புகளை நழுவ விட்டார். இப்படி சற்றே தூக்கம் வரவழைக்குமாறு விளையாட்டு போய்க்கொண்டிருந்தபோது ஆட்டத்தின் ஓட்டத்துக்குப் புறம்பாக, சதம் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பிருந்தும், டெண்டுல்கர் சைமாண்ட்ஸின் பந்து வீச்சில் பந்துவீச்சாளருக்கே சுலபமாகக் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
உள்ளே வந்த ராஹுல் திராவிட் ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிக்கே லாயக்கில்லாதவர் என்று பெயரெடுத்தவர். இன்று வந்தது முதற்கொண்டே அருமையாக விளையாடினார். லக்ஷ்மண் தன் பாத்திரத்தைப் புரிந்து கொண்டு, ஒத்து ஊதுபவராகவே கடைசிவரை இருந்தார். இந்தக் கூட்டணி வெறும் 20 ஓவர்களில் 133 ஓட்டங்களைப் பெற்று, ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பியது. 48ஆவது ஓவரில் ஓட்டங்களை அதிகரிக்க, திராவிட், ஹார்வேயின் பந்துகளைத் தூக்கி அடிக்க ஆரம்பித்தார். அந்த ஓவரின் மூன்றாவது, நான்காவது பந்துகள் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்கப்பட்டு நான்கு ரன்களுக்குப் பறந்தன. அதற்கடுத்த பந்தினை மிட்-ஆன் திசையில் மேலே அடிக்க, அங்கு எல்லைக்கோட்டின் அருகே கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார் திராவிட். 50ஆவது ஓவரின் கடைசிப் பந்தை மிட்-ஆன் மேல் தூக்கி அடித்து நான்கு ஓட்டங்களைப் பெற்ற லக்ஷ்மண் தன் சதத்தையும், அணியின் முன்னூறையும் கொண்டு வந்தார்.
இதுதான் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி முதல்முறையாக 300 ஓட்டங்களைத் தாண்டுவது. பிரிஸ்பேனில் நடந்திருக்கும் ஒருநாள் போட்டிகளிலேயே இதுதான் ஒரு அணி பெறும் அதிக ஓட்டங்களாகும்.
ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்திலிருந்தே வெறி கொண்டவர்கள் போல ஆட ஆரம்பித்தனர். கில்கிறிஸ்டும், ஹேய்டனும் ஒவ்வொரு பந்துக்கும் மட்டையைச் சுழற்றினர். முதல் நான்கு ஓவர்களில் 8, 9, 12, 9 ஓட்டங்கள் முறையே வந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒவ்வொரு பந்துக்கும் இறங்கி வந்து மட்டையைச் சுழற்றி அடித்தனர். ஆனால் இர்பான் பதானும், ஆஷிஸ் நேஹ்ராவும் பயந்து நடுங்காமல் பந்து வீச்சை திறம்படவே செய்தனர். ஆறாவது ஓவரில் கில்கிறிஸ்ட் பதான் வீசிய பந்தை உயரத் தூக்கி அடிக்க, மிட்-ஆனில் பாலாஜி நன்கு கேட்ச் பிடித்தார். உள்ளே வந்த பாண்டிங் தயங்கித் தயங்கியே விளையாடினார். பின்னர், பாலாஜி வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் அடிக்கப்போக, விளிம்பில் பட்ட பந்து வானளாவ சென்று ஸ்லிப்பில் லக்ஷ்மணிடம் கேட்சாகிப் போனது. ஆஃப் ஸ்டும்புக்கு வெகு வெளியே வீசப்பட்ட பாலாஜியின் பந்தை மட்டையால் வெட்டி அடித்த மார்ட்டின், அந்தப் பந்து பாயிண்டில் இருந்த யுவ்ராஜ் சிங்கின் கைக்குள் மாட்டியது. ரோஹன் காவஸ்கரின் முதல் ஓவரில் சைமாண்ட்ஸ் பந்துவீச்சாளருக்கே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 141/4 என்ற நிலையில் மைக்கேல் கிளார்க், மாத்தியூ ஹேய்டனுடன் சேர்ந்து விளையாட வந்தார். ஹேய்டனும் தன் ஆட்டத்தை சற்றே நிதானமாக்கி சதத்தைத் தாண்டினார்.
ஹேய்டன் இப்படியே போனால் தாங்காது என நினைத்த கங்குலி பதானைப் பந்து வீச்சிற்கு மீண்டும் அழைத்தார். முதல் பந்தை ஹேய்டன் உயரத் தூக்கி அடிக்க, பாலாஜி கையில் விழுந்த கேட்சை மிட்விக்கெட்டில் எல்லைக்கோட்டுக்கருகே நழுவ விட்டார். ஆனால் அதிகம் சேதமாகாமல், மூன்றாவது பந்தில் ஹேய்டன் விக்கெட் கீப்பர் திராவிடிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவிடம் ஜெயிக்கப் போதுமான பலம் இல்லை. பாலாஜியும், பதானும் ஆட்டம் முழுமைக்குமே அருமையாகப் பந்து வீசினர். இதில் பதான் இந்தியாவிற்குக் கிடைத்திருக்கும் மிக முக்கியமான சொத்து.
ஆட்ட நாயகானாக லக்ஷ்மண் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் திராவிடுக்கே இந்த விருது போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
ஸ்கோர்போர்டு
Saturday, January 17, 2004
பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5
![]() |
மகாராஷ்டிர நீதிமன்றம் ஒரு நீதிபதி அடங்கிய விசாரணைக் கமிஷனை நியமித்து ஒரு மருத்துவமனையில் நடந்த குளறுபடிகளை விசாரிக்க உத்தரவிட்டதாம். விசாரித்த நீதிபதி, அந்த விவகாரத்தில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும், சுகாதார அமைச்சர் ஆகியோர் மீது தவறு என்று தன் அறிக்கையை சமர்ப்பித்தாராம். உடனே சட்டமன்றம் அந்த நீதிபதி சட்டமன்ற அவதூறு செய்தார் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதாம்!! இதுவும் பின்னர் மேலிடத் தலையீட்டால் நின்றுபோனதாம்! இது பற்றியும் எனக்குத் தகவல்கள் தேவை. [இதையெல்லாம் பார்க்கும்போது தமிழக சட்டமன்றம் செய்தது வெறும் ஜுஜுபி என்றே தோன்றுகிறது!]
ஆஸ்திரேயாவில் நடைபெற்ற ஒரு உரிமைப் பிரச்சினை வழக்கைப் பற்றிப் பேசிய பக்வான் சிங், ஆஸ்திரேலியா ICCPR (International Covenant on Civil and Political Rights) என்னும் சர்வதேசச் சட்டத்துக்கு 1978இலிருந்து உடன்படுவதாகச் சொல்லியிருந்தனர். அங்கு பாராளுமன்றத்தில் இரண்டு பத்திரிகை நிருபர்கள் மீது ஒரு உரிமை மீறல் பிரச்சினை எழுந்துள்ளது. அதில் ஒரு கமிட்டி விசாரணை செய்து அவ்விருவருக்கும் தண்டனை வழங்கியதாம். உடனே அந்த இருவரும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்காடி, தங்களை விசாரணை செய்த கமிஷனில் உள்ள இரண்டு உறுப்பினர்கள் தங்கள் மீது பிரச்சினையை எழுப்பியவர்கள், ஆகவே அவர்களை உள்ளடக்கிய ஒரு கமிஷனிடமிருந்து தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று முறையிட, சர்வதேச நீதிமன்றமும் அதை ஒத்துக் கொண்டு, அவர்கள் மீதான தண்டனையை ரத்து செய்ததாம்.
ஆனால் தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்படும் உரிமைப் பிரச்சினையில் முறையிடும் கட்சியின் உறுப்பினர்களே விசாரணை செய்து தண்டனை கொடுக்கும் குழுவிலும் உள்ளனர். இதனால் எப்படி நியாயம் கிடைக்கும் என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் முதலமைச்சரின் தோண்டர்கள் (அமைச்சர்கள் மற்றும் இதர அடிப்பொடியினர்) தன் தலைவருக்கு யார்மீது கோபம் உள்ளதோ, அவர்களை நிர்மூலம் செய்வதன் மூலமே தலைவரின் அன்பைப் பெறமுடியும் என்ர வகையில் செயல்படுகின்றனர் என்றார்.
இதன் பிறகு கேள்வி பதில்கள் தொடர்ந்தன. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும்போது நீதிபதி தாமஸ், புகழ்பெற்ற Searchlight வழக்கு நடந்தபோது உத்திரப் பிரதேச சட்டமன்றத்தில் (மேல் சொன்னப்பட்ட) நிகழ்ந்த கூத்து நடந்திருக்கவில்லை. அப்போழுதைய பெரும்பான்மைத் தீர்ப்பில், சட்டமன்றங்களின் உரிமைகள் அதிகமானது என்ற தீர்ப்பே வெளியானது. அப்பொழுதே நீதிபதி சுப்பாராவ் அதனை எதிர்த்து சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கியிருந்தார். தற்போதைய வழக்கு Searchlight வழக்கின்போது இருந்த பெஞ்சை விடப் பெரிய பெஞ்சினால் விசாரிக்கப்பட்டு, இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கலாம் என்றார்.
இது மாதிரியான கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு உள்ள உரிமைகள், பத்திரிகைகளுக்குள்ள உரிமைகள், மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற அதிகார துஷ்பிரயோகங்கள் வெளியாகும். இதுபோன்ற அடுத்த கூட்டம் மும்பையில் நடக்கப்போகிறதாம்.
பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4
![]() |
அரசியல்வாதிகள் வாய்ப்பு கிடைத்தால் மிசா போன்ற எமர்ஜென்சி சமயத்தில் பயன்படுத்திய சட்டங்கள், ஒப்பொழுது நடைமுறையில் உள்ள போடா போன்ற சட்டங்கள் (பொடாவை ஆதரித்த வைகோ இன்று அதன்மூலமே சிறையில் இருப்பதைக் குத்திக்காட்டினார்) போல பத்திரிகைகளை அடக்க ஏதேனும் வழி கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார். அரசியல்வாதிகள் பதவி கிடைத்ததும் தங்களைச் சுற்றி SPG வீரர்களை வைத்துக் கொண்டு, தங்களுக்கு பெருமதிப்பு வந்துவிட்டது போல நடந்துகொள்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், பொதுச்சட்டத்தை எப்படி களங்கப்படுத்துவது என்பதே தங்கள் பணி என்பதுபோலச் செயல்படுகிறார்கள். ஒரு சாதாரணக் குடிமகன் நடுத்தெருவில் சிறுநீர் கழித்தால் அவார் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார். ஆனால் ஒரு சட்டமன்ற, பாராளுமன்ர உறுப்பினர் இதைச் செய்தால் அவரைக் கைது செய்யமுடியாது என்றார்.
சட்டமன்றங்களுக்கு தண்டனை தரும் அதிகாரமே இருக்கக்கூடாது என்றார். உரிமை மீறல் என்று குற்றம் சாட்டி, நாளை சட்டமன்றம் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் என்ன் ஆவாது என்று கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி தாமஸ் ஒரு கேள்விக்குப் பதில் தருகையில் இதனைக் குறிப்பிட்டு, இந்தக் கேள்வி தன்னை வெகுவாகப் பாதித்தது என்றும், இப்பொழுதுள்ள நிலைமையில் ஒரு சட்டமன்றம் வெளியாள் ஒருவருக்கு ஏதோ காரணம் காட்டி ஆயுள் தண்டனை கொடுத்தால் நீதிமன்றங்களால் எந்த சட்டத்தை முற்படுத்தி பாதிக்கப்பட்டவரின் வழக்கை ஏற்றுக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை என்றார். நீதிமன்றங்கள் இதுவரை சட்டமன்றங்கள் வரைந்துள்ள சட்டங்களின் உள்ளாகவே நீதியை வழங்க முடியும். சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் தங்கள் உரிமைகளை உடனடியாக வரைடறுக்காவிட்டால் குழப்பமே மிஞ்சும் என்றார்.
வீரேந்திர குமார் மேலும் பேசுகையில் தமிழக சட்டமன்றம் 'supremacy and majesticity" என்றெல்லாம் பேசுகிறதே? ஆனால் எப்பொழுது அந்த மன்றத்தின் அவைத்தலைவர் முதலமைச்சர் காலில் விழுந்து வணங்குகிறாரோ, அப்பொழுதே அந்த சட்டமன்றத்தின் supremacyக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது; majesticityக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்றார்.
INS சட்டமன்ற உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் ஆகிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு நாடு முழுவதும் செல்லும் என்றார்.
பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3
![]() |
அவையின் உறுப்பினர்களுக்கு அவையில் வாய்க்கு வந்ததைப் பேசும் அதிகாரம் கொடுத்து, பின் அதனை வெளியே சொல்லிவிடாதவாறு அவைக்குறிப்பு நீக்கம், உரிமை மீறல் போன்ற உரிமைகளையும் கொடுப்பது நியாயமாகாது என்றார். ஊடகங்களின் வேலையே அவையில் என்ன நடக்கிறது என்று அப்படியே வெளியில் சொல்லுவதுதான் என்றார். உச்ச நீதிமன்றங்கள் விமரிசனங்களைத் தாங்கக்கூடிய அளவிற்கு முதிர்ச்சி பெற்றுள்ளது என்றும் நாட்டின் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கூட இப்படி முதிர்ச்சி பெற்றுள்ளார்கள் என்றும், மாநிலங்களின் முதலமைச்சர்கள்தான் வரவர இந்த முதிர்ச்சி இல்லாமல் எதற்கெடுத்தாலும் எரிச்ச அடைந்து கூத்தாடுகிறார்கள் என்றும் சொன்னார். 'தி ஹிந்து', தமிழக சட்டமன்ற விவகாரம் நடந்திராவிட்டால் நாட்டில் 90% சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது 'உரிமைகள்' என்னவென்றே தெரிந்திருக்காது என்றும், இப்பொழுது தங்களுக்கு 'வானளாவிய' அதிகாரம் உள்ளது என்று அதைத் தவறாகப் பயன்படுத்த ஆரம்பிக்கப் போகிறார்கள் என்றும், இதனை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவதே சரியானது என்றும், அதற்காக ஊடகங்கள் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பல மாநிலங்களில், சட்டமன்றத்தின் அவைத்தலைவர் என்பவர் முதலமைச்சரின் அடியாளாகத்தான் செயல்படுகிறார் என்றார்.
சோ 'ஊடகங்களுக்கென்று தனியுரிமை எதுவும் வேண்டாம்' என்று சொன்னதைத் தான் ஒத்துக்கொள்ள முடியாது என்றும், முக்கியமாக ஒரு செய்தியின் ஊற்றை ரகசியமாக வைத்துக் கொள்வது போன்ற உரிமைகள் ஊடகங்களுக்கு நிச்சயம் தேவை என்றும் சொன்னார். பத்திரிகைகாரர்கள் தீவிரவாதிகளிடம் பேசியிருந்தால், அரசு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டால், அந்தத் தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது என்றார்.
பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2
![]() |
தன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் தடையுத்தரவை வாங்கிய பின்னர், தமிழக முதல்வர் ஜெயலலிதா 'தமது அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உடன்படும்' என்று ஒத்துக் கொண்டதன் வழியே, தனது அரசும், சட்டமன்றமும் உச்ச நீதிமன்றத்துக்குக் கீழ்ப்படிகிறது என்பதை தெரிந்தோ, தெரியாமலோ ஒத்துக் கொண்டுவிட்டார் என்றார்.
![]() |
கேலியாக மற்றுமொரு ஆழமான விவாதத்தையும் முன்வைத்தார். "சட்டமன்றங்களின் அவைத்தலைவருக்கு, உறுப்பினர்கள் பேசியவை ஒருசிலவற்றை நீக்கும் அதிகாரம் (expunge) உண்டு. அப்படி நீக்கப்பட்டவைகளை ஊடகங்கள் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால், அந்த ஊடகம் சட்டமன்றத்தின் உரிமையை மீறியதாகும். ஆனால் எப்பொழுது ஒன்று அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறதோ, அப்பொழுதே அந்தச் சொற்கள்/செயல்கள் சட்டமன்றத்தில் நடக்கவில்லை என்றாகி விடுகிறது. அப்படியானால் அதை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது ஒரு சட்டமன்றத்திற்கு அந்தச் சொல்லை/செயலை வெளிப்படுத்திய ஊடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க என்ன அதிகாரம் இருக்க முடியும்?"
பத்திரிகைகளுக்கு என்று தனியாக எந்த உரிமைகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஒரு தனிக் குடிமகனுக்கு இருக்கும் உரிமைகளே போதுமென்றும் தன் உரையை முடித்தார்.
பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1
The Indian Newspaper Society, Media Development Foundation, The Madras Union of Journalists ஆகியோர் இணைந்து நடத்திய "Freedom of Press and Legislative Privilege" என்னும் தலைப்பில் ஒரு கூட்டரங்கம் இன்று சென்னையில் நடந்தது. தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறிய 'தி ஹிந்து', 'முரசொலி' தொடர்பான உரிமைப் பிரச்சினை, அதைத் தொடர்ந்து தமிழக போலீஸ் நடத்திய கூத்து, இப்பொழுது உச்ச நீதிமன்றத்துக்கு முன் இருக்கும் வழக்கு ஆகியவை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.
இதழியல் மாணவர்கள், கவலையுற்ற பொதுமக்கள் ஆகியோரிடம் தங்கள் கருத்துக்கள் போய்ச்சேருமாறு நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையுரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து 'தி இந்து' ஆசிரியர் என்.ராம், துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமி, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் ஷேகர் குப்தா, 'தி இந்தியன் நியூஸ்பேப்பர் சொஸைட்டி' தலைவர் வீரேந்திர குமார், சென்னைப் பத்திரிகையாளர்கள் யூனியனின் தலைவர் பக்வான் சிங் ஆகியோர் பேசினர்.
நீதிபதி தாமஸ் அரசியல் நிர்ணயச் சட்டம் சட்டமன்றங்களின், பாராளுமன்றத்தின் உரிமைகள் பற்றி என்ன சொல்கிறது, ஊடகங்களின் சுதந்திரம் எந்த அளவிற்கு என்று சொல்கிறது ஆகியவை பற்றி விளக்கினார். அரசியல் நிர்ணயச் சட்டம் ஊடகங்களுக்கு என்று பிரத்தியேகமாக எந்த உரிமையையும் கொடுக்கவில்லை என்றாலும், தனிக் குடிமகனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளிலேயே ஊடகங்களுக்கான உரிமையும் வந்து விடுகிறது என்றார். இந்த உரிமைகளுக்கும் 'reasonable restrictions' என்று ஒருசில நியாயமான கட்டுப்பாடுகளை அரசியல் நிர்ணயச் சட்டம் விதித்திருக்கிறது என்றார். இவை எட்டு கட்டுப்பாடுகள். அவர் சொன்னதை நான் குறிப்பெடுத்துக் கொள்ளவில்லை. இந்த எட்டு விஷயங்களுக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டியது தனிக் குடிமகன், ஊடகங்கள் ஆகியவற்றின் கடமை. இந்த எட்டுக் கட்டுப்பாட்டில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் கேடு விளைவிக்காமை, சட்டம் ஒழுங்கு, நீதி ஆகியவற்றுக்குக் கேடு விளைவிக்காமை, நீதிமன்றங்களை அவதூறு செய்யாமை ஆகியவை அடங்கும். ஆனால் முக்கியமாக இந்த எட்டில், சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றினை அவதூறு செய்யாமை ஆகியவை கொடுக்கப்படவில்லை என்றார் தாமஸ்.
மேலும், அரசியல் நிர்ணயச் சட்டம், பாராளுமன்றமும், சட்டமன்றங்களும் தங்களுக்குத் தேவையான உரிமைகளை சட்டங்கள் மூலம் இயற்றிக் கொள்ளலாம் என்றும் அவ்வாறு சட்டங்கள் இயற்றும் வரையிலும் தற்காலிகமாக இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கு இருக்கும் உரிமைகளை தாங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசியல் நிர்ணயச் சட்டம் கூறியுள்ளது. அப்படியிருந்தும், இதுநாள் வரையில், சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் தங்களுக்குத் தேவையான உரிமைகளை சட்டங்களாக இயற்றவில்லை. தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த இங்கிலாந்துப் பாராளுமன்ற உரிமைகளை நிரந்தரமாக ஆக்கிவிட்டனர். இதுவே சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்நோக்கை வெளிப்படுத்துகிறது என்றார் தாமஸ்.
எமர்ஜென்சி காலத்தில் நடந்த ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தார் தாமஸ். இந்திரா காந்தி மொரார்ஜி தேசாயை சிறையில் அடைந்திருந்தார். 18 மாதமாக சிறையில் இருந்த மொரார்ஜி தேசாயின் மனைவிக்கு உடல்நிலை மோசமாகவே பரோலில் அவரை வெளியே விட்டார் இந்திரா காந்தி. மொரார்ஜி தேசாய் தன் வீட்டுக்கு போயிருந்த அதே சமயத்தில் இந்திரா காந்தியும் அவர் வீட்டுக்கு வந்து அவருடன் பேச விரும்பினாராம். அப்பொழுது அவருடன் பேச மறுத்த மொரார்ஜி, அவருடன் பேசுவதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்தாராம். (1) புதிதாக யாரைக் கைது செய்தாலும், அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை (2) ஏற்கனவே அரசியல் கைதிகளாக இருப்பவர்கள் அனைவருக்கும் விடுதலை (3) பத்திரிகைகள் மீது அப்பொழுது விதிக்கப்பட்டிருந்த pre-censorship, அதாவது முன்-தணிக்கை நீக்கம்.
அப்பொழுதெல்லாம் பத்திரிகைகள் தாங்கள் என்ன செய்தி அச்சிடப்போகிறோம் என்பதை அரசின் தணிக்கையாளரிடம் காட்ட வேண்டும். அவர்கள் அனுமதித்த செய்தியை மட்டும்தான் அச்சிட வேண்டும்.
இந்திரா காந்தி முதலிரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டாலும் படுவேனே தவிர மூன்றாவது நிபந்தனைக்கு உட்பட மாட்டேன் என்று மொரார்ஜியை மீண்டும் உள்ளே தள்ளிவிட்டாராம்.
இதழியல் மாணவர்கள், கவலையுற்ற பொதுமக்கள் ஆகியோரிடம் தங்கள் கருத்துக்கள் போய்ச்சேருமாறு நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையுரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து 'தி இந்து' ஆசிரியர் என்.ராம், துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமி, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் ஷேகர் குப்தா, 'தி இந்தியன் நியூஸ்பேப்பர் சொஸைட்டி' தலைவர் வீரேந்திர குமார், சென்னைப் பத்திரிகையாளர்கள் யூனியனின் தலைவர் பக்வான் சிங் ஆகியோர் பேசினர்.
![]() |
மேலும், அரசியல் நிர்ணயச் சட்டம், பாராளுமன்றமும், சட்டமன்றங்களும் தங்களுக்குத் தேவையான உரிமைகளை சட்டங்கள் மூலம் இயற்றிக் கொள்ளலாம் என்றும் அவ்வாறு சட்டங்கள் இயற்றும் வரையிலும் தற்காலிகமாக இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கு இருக்கும் உரிமைகளை தாங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசியல் நிர்ணயச் சட்டம் கூறியுள்ளது. அப்படியிருந்தும், இதுநாள் வரையில், சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் தங்களுக்குத் தேவையான உரிமைகளை சட்டங்களாக இயற்றவில்லை. தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த இங்கிலாந்துப் பாராளுமன்ற உரிமைகளை நிரந்தரமாக ஆக்கிவிட்டனர். இதுவே சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்நோக்கை வெளிப்படுத்துகிறது என்றார் தாமஸ்.
எமர்ஜென்சி காலத்தில் நடந்த ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தார் தாமஸ். இந்திரா காந்தி மொரார்ஜி தேசாயை சிறையில் அடைந்திருந்தார். 18 மாதமாக சிறையில் இருந்த மொரார்ஜி தேசாயின் மனைவிக்கு உடல்நிலை மோசமாகவே பரோலில் அவரை வெளியே விட்டார் இந்திரா காந்தி. மொரார்ஜி தேசாய் தன் வீட்டுக்கு போயிருந்த அதே சமயத்தில் இந்திரா காந்தியும் அவர் வீட்டுக்கு வந்து அவருடன் பேச விரும்பினாராம். அப்பொழுது அவருடன் பேச மறுத்த மொரார்ஜி, அவருடன் பேசுவதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்தாராம். (1) புதிதாக யாரைக் கைது செய்தாலும், அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை (2) ஏற்கனவே அரசியல் கைதிகளாக இருப்பவர்கள் அனைவருக்கும் விடுதலை (3) பத்திரிகைகள் மீது அப்பொழுது விதிக்கப்பட்டிருந்த pre-censorship, அதாவது முன்-தணிக்கை நீக்கம்.
அப்பொழுதெல்லாம் பத்திரிகைகள் தாங்கள் என்ன செய்தி அச்சிடப்போகிறோம் என்பதை அரசின் தணிக்கையாளரிடம் காட்ட வேண்டும். அவர்கள் அனுமதித்த செய்தியை மட்டும்தான் அச்சிட வேண்டும்.
இந்திரா காந்தி முதலிரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டாலும் படுவேனே தவிர மூன்றாவது நிபந்தனைக்கு உட்பட மாட்டேன் என்று மொரார்ஜியை மீண்டும் உள்ளே தள்ளிவிட்டாராம்.
Thursday, January 15, 2004
மரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி
மரத்தடி என்னும் யாஹூ! குழுமத்தில் குளிர்காலப் (ஜனவரி, ஃபெப்ரவரி, மார்ச் 2004) போட்டியாக கதைகள், கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. பரிசுகளும் உண்டு. இந்தப் போட்டிகள் ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த யாஹூ! குழுமத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும். படைப்புகளை இந்தக் குழுமத்திற்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். இந்தப் படைப்புகள் வேறெங்கும் வெளிவந்திருக்கக் கூடாது. இந்தப் போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் மரத்தடி இணையத்தளத்தில் இடம்பெறும்.
சிறுகதைப் போட்டிக்கு நடுவர் திண்ணை இணைய இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினர் திரு. கோபால் ராஜாராம்.
புதுக்கவிதைப் போட்டிக்கு நடுவர் எழுத்தாளர் திருமதி காஞ்சனா தாமோதரன்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வளரும் எழுத்தாளர்கள் இணையக் குழுக்களில் எவ்வாறு கலந்து கொள்வது என்று அறிந்து கொள்ள விரும்பினால், தாராளமாக என்னை அணுகலாம்.
| சிறுகதை முதல் பரிசு: ரூ. 5,000 இரண்டாம் பரிசு: ரூ. 2,500 | புதுக்கவிதை முதல் பரிசு: ரூ. 5,000 இரண்டாம் பரிசு: ரூ. 2,500 |
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த யாஹூ! குழுமத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும். படைப்புகளை இந்தக் குழுமத்திற்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். இந்தப் படைப்புகள் வேறெங்கும் வெளிவந்திருக்கக் கூடாது. இந்தப் போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் மரத்தடி இணையத்தளத்தில் இடம்பெறும்.
சிறுகதைப் போட்டிக்கு நடுவர் திண்ணை இணைய இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினர் திரு. கோபால் ராஜாராம்.
புதுக்கவிதைப் போட்டிக்கு நடுவர் எழுத்தாளர் திருமதி காஞ்சனா தாமோதரன்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வளரும் எழுத்தாளர்கள் இணையக் குழுக்களில் எவ்வாறு கலந்து கொள்வது என்று அறிந்து கொள்ள விரும்பினால், தாராளமாக என்னை அணுகலாம்.
Wednesday, January 14, 2004
ஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்
இன்று Economic and Political Weekly தளத்தை மேய்ந்து கொண்டிருக்கும்போது 'autarkic' என்னும் சொல் கண்ணில் பட்டது. அதுவும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் மற்றும் ஸ்வதேஷி ஜாகரண் மஞ்சுக்கு அடைமொழியாக இந்தச் சொல் கொடுக்கப்பட்டிருந்தது.
GRE எழுதிய காலத்தில் கூட இந்தச்சொல் என் கண்ணில் பட்டதில்லை. முதலில் ஏதோ கெட்ட வார்த்தை என்று நினைத்தேன் (fundamentalist என்பது போன்று). தேடியதில் இது 'ஸ்வதேஷி' என்னும் சொல்லுக்கு இணையானது என்பது புரிந்தது.
autarkic = of countries; not relying on imports
GRE எழுதிய காலத்தில் கூட இந்தச்சொல் என் கண்ணில் பட்டதில்லை. முதலில் ஏதோ கெட்ட வார்த்தை என்று நினைத்தேன் (fundamentalist என்பது போன்று). தேடியதில் இது 'ஸ்வதேஷி' என்னும் சொல்லுக்கு இணையானது என்பது புரிந்தது.
autarkic = of countries; not relying on imports
Tuesday, January 13, 2004
தமிழ் இலக்கியம் 2004 - 7
எஸ்.பொவின் புத்தக வெளியீடுகள்
விழாவின் முக்கியக் கட்டமாக ஞாயிறு அன்று காலையில் எஸ்.பொவின் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அவை 'பூ', 'வரலாற்றில் வாழ்தல்', 'நனவிடை தோய்தல்' மற்றும் 'பார்வை'.

'பூ'வினை வெளியிட்டு தோப்பில் முகமது மீரான் பேசினார்.

'வரலாற்றில் வாழ்தல்' என்னும் 2000 பக்கத்துக்கு மேலான இரு தொகுதிகளை கோவை ஞானி வெளியிட, எஸ்.பொவின் பேத்தி பெற்றுக் கொண்டார். கோவை ஞானிக்கு மேடையில் உதவுவது ஆர்.வெங்கடேஷ். இரா.முருகனின் கோவை ஞானி பேச்சு பற்றிய கட்டுரை இங்கே.
மற்ற இரு புத்தகங்களை வெளியிட்டவர்கள் கவிஞர் காசி ஆனந்தனும், விட்டல் ராவும்.
விழாவின் முக்கியக் கட்டமாக ஞாயிறு அன்று காலையில் எஸ்.பொவின் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அவை 'பூ', 'வரலாற்றில் வாழ்தல்', 'நனவிடை தோய்தல்' மற்றும் 'பார்வை'.

'பூ'வினை வெளியிட்டு தோப்பில் முகமது மீரான் பேசினார்.

'வரலாற்றில் வாழ்தல்' என்னும் 2000 பக்கத்துக்கு மேலான இரு தொகுதிகளை கோவை ஞானி வெளியிட, எஸ்.பொவின் பேத்தி பெற்றுக் கொண்டார். கோவை ஞானிக்கு மேடையில் உதவுவது ஆர்.வெங்கடேஷ். இரா.முருகனின் கோவை ஞானி பேச்சு பற்றிய கட்டுரை இங்கே.
மற்ற இரு புத்தகங்களை வெளியிட்டவர்கள் கவிஞர் காசி ஆனந்தனும், விட்டல் ராவும்.
![]() | ![]() |
Monday, January 12, 2004
தமிழ் இலக்கியம் 2004 - 6
மற்றுமொரு புத்தக வெளியீடு
முதலிரண்டு புத்தக வெளியீடுகளில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த என்னை மேடையில் உட்கார வைத்து விட்டனர். அதனால் என்னை நானே படம் எடுத்துக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை. இந்தப் புத்தக வெளியீடு இரவு 20.45க்கு ஆரம்பமாகவிருந்தது. ஆனால் நாள் முழுதும் நிகழ்ச்சிகள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் ஆரம்பிக்க 21.15க்கு மேல் ஆயிற்று. அதுவும் இலக்கிய உலகில் இல்லாத பெரும் பிரபலங்கள் பங்கு பெறும் மேடை (இல்லை, என்னைச் சொல்லவில்லை). இந்த வெளியீட்டில் சிவகாமி இ.ஆ.ப அவர்களின் 'கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதியும், ஆர்.வெங்கடேஷின் 'முதல் மழை' என்ற சிறுகதைத் தொகுதியும், தமிழ் சினிமாவில் அதிகத் தரம் வாய்ந்த பல நல்ல படங்களை வழங்கியுள்ள இயக்குனர் மகேந்திரனின் 'சினிமாவும் நானும்' என்னும் புத்தகமும் வெளியிடப்பட்டன.
ப.சிவகாமியின் புத்தகத்தை வெளியிட்டவர் கிறிஸ்துதாஸ் காந்தி இ.ஆ.ப, பெற்றுக் கொண்டவர் பிரதிபா ஜெயச்சந்திரன். இந்தப் புத்தகத்தை நான் இன்னமும் படிக்கவில்லை. சிறுகதைகள் அனைத்தும் ஜப்பானில் இடம்பெறுவது போல் அமைத்துள்ளார் சிவகாமி. இவர் தமிழக அரசுப்பணி காரணமாக ஜப்பானில் சிலவருடங்கள் இருந்துள்ளாராம். புதிய கோடாங்கி என்னும் சிற்றிதழை நடத்துபவர். புத்தகத்தை வெளியிட்டு பிரதிபா ஜெயச்சந்திரனும் பேசினார். கிறிஸ்துதாஸ் காந்தியும் பேசினார்.
அடுத்து ஆர்.வெங்கடேஷின் புத்தகம். வெளியிட்டவர் வையவன். வாங்கிக்கொண்டது அடியேன். என்னை பேசச் சொல்லக்கூடாது என்று முன்னமே உறுதிமொழி வாங்கிக் கொண்டேன். அரங்கு பிழைத்தது. வையவன் பேசும்போது இவ்வளவு நேரம் கடந்து இந்த வெளியீட்டு விழாவினை வைத்திருப்பது சரியல்ல என்றார். புத்தகம் முதல் நாள்தான் (வெள்ளிக்கிழமை) அச்சானதாம். அன்று இரவு 12.00 மணிக்குதான் வெங்கடேஷ் வையவனைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு பிரதியை அனுப்பி வைத்தாராம். இந்தக் கதைத்தொகுதியையும் நான் இன்ன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் வையவன் வார்த்தையில் இது மத்திய தட்டு மக்களைப் பற்றியது. அந்த மத்தியத் தட்டு மக்களிலும், உயர், இடை, கடை என்று மூன்றாகப் பிரித்தால், அதில் இடை-மத்தியத் தட்டு மக்களைப் பற்றியது. வாழ்க்கையின் அவலங்களை "மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்" தவிக்கும் மக்களைப் பற்றியது. கதைகள் திரும்பத் திரும்ப திருவல்லிக்கேணியையே சுற்றி வருகின்றனவாம். பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், ஆஞ்சநேயர் கோவிலில் இருக்கும் கரப்பான் பூச்சி - ஆதிகாலத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் வாழ்ந்த கரப்பான் பூச்சியின் மரபணுத் தொடர்ச்சியாக வரும் இன்றைய ஆஞ்சநேயர் கோவில் கரப்பான் பூச்சி மாதிரி திருவல்லிக்கேணியின் மரபணு இவரது கதைகளை விட்டு அகல்வதில்லையாம். கதைகளில் டைடல் பார்க்கும், இணையத்தளங்கள் அமைக்கும் மென்பொருளாளனும் வருகின்றனர். படித்து விட்டு எழுதுகிறேன். மேடையில் இருந்ததால் வையவனை கேமராவில் பிடிக்க முடியவில்லை.
கடைசியாக மகேந்திரனின் 'சினிமாவும் நானும்'. இயக்குனர் பாரதிராஜா புத்தகத்தை வெளியிட, இயக்குனர் பாக்யராஜ் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். கேமராக்கள் பளிச்சிட, 'என் இனிய இலக்கிய நண்பர்களே' என்று ஆரம்பித்து பாரதிராஜாவின் உரை தொடர்ந்தது. மகேந்திரன் சினிமாவைப் பற்றி எழுதத் தனக்கிருக்கும் தகுதியைப் பற்றி தயக்கத்துடன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பாரதிராஜா, "உனக்கில்லையென்றால் வேறு யாருக்கும் இல்லை" என்றார். மகேந்திரன் பற்றிய பல புதிய விஷயங்களை பாரதிராஜாவின் பேச்சின் வழியேதான் அறிந்து கொண்டேன். துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த மகேந்திரன் எதேச்சையாகத்தான் சினிமாவில் கதை-வசனம் (ஆடு புலியாட்டம்) எழுதப் போனாராம். அங்கிருந்து 'முள்ளும் மலரும்', 'உதிரிப் பூக்கள்' போன்ற அற்புதப் படங்களை உருவாக்கியுள்ளார். பாரதிராஜாவின் பேச்சைத் தொடர்ந்து பாக்யராஜும் பேச ஆரம்பித்தார். அதிகமாக ஒன்றும் அந்தப் பேச்சில் வெளிவரவில்லை.
மகேந்திரன் நன்றியுரையில், தான் செய்ததெல்லாம் சிறிதும் திட்டம் தீட்டாமல் செய்தது. அப்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்றார். இலக்கிய கர்த்தாக்க்கள் சினிமாவை உதறித் தள்ளக்கூடாது, சினிமாவில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாகப் பேசிய பாரதிராஜாவும் இதையே வலியுறுத்தினார். இந்த அமர்வுக்குத் தலைவராக இருந்த சிற்பி பாலசுப்ரமணியனை சுட்டிக் காட்டி, சிற்பியை ஒரு படத்துக்கு (கிழக்கே போகும் இரயில்) இளையராஜாவுடன் சேர்ந்து தான் பாட்டெழுதக் கூட்டி வந்ததாகவும், அந்தப் பாடல் கடைசியாக படத்தில் இடம் பெறவில்லை என்றும் அதன்பிறகு சிற்பி, சினிமா பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை என்றும் சொன்னார் பாரதிராஜா. அத்துடன் இது சிற்பியின் நல்லகாலம். இல்லாவிட்டால் யாராவது அவரை 'கட்டிபுடி, கட்டிபுடி' என்று பாட்டெழுத வைத்திருப்பர் என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.
![]() |
![]() |
அடுத்து ஆர்.வெங்கடேஷின் புத்தகம். வெளியிட்டவர் வையவன். வாங்கிக்கொண்டது அடியேன். என்னை பேசச் சொல்லக்கூடாது என்று முன்னமே உறுதிமொழி வாங்கிக் கொண்டேன். அரங்கு பிழைத்தது. வையவன் பேசும்போது இவ்வளவு நேரம் கடந்து இந்த வெளியீட்டு விழாவினை வைத்திருப்பது சரியல்ல என்றார். புத்தகம் முதல் நாள்தான் (வெள்ளிக்கிழமை) அச்சானதாம். அன்று இரவு 12.00 மணிக்குதான் வெங்கடேஷ் வையவனைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு பிரதியை அனுப்பி வைத்தாராம். இந்தக் கதைத்தொகுதியையும் நான் இன்ன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் வையவன் வார்த்தையில் இது மத்திய தட்டு மக்களைப் பற்றியது. அந்த மத்தியத் தட்டு மக்களிலும், உயர், இடை, கடை என்று மூன்றாகப் பிரித்தால், அதில் இடை-மத்தியத் தட்டு மக்களைப் பற்றியது. வாழ்க்கையின் அவலங்களை "மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்" தவிக்கும் மக்களைப் பற்றியது. கதைகள் திரும்பத் திரும்ப திருவல்லிக்கேணியையே சுற்றி வருகின்றனவாம். பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், ஆஞ்சநேயர் கோவிலில் இருக்கும் கரப்பான் பூச்சி - ஆதிகாலத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் வாழ்ந்த கரப்பான் பூச்சியின் மரபணுத் தொடர்ச்சியாக வரும் இன்றைய ஆஞ்சநேயர் கோவில் கரப்பான் பூச்சி மாதிரி திருவல்லிக்கேணியின் மரபணு இவரது கதைகளை விட்டு அகல்வதில்லையாம். கதைகளில் டைடல் பார்க்கும், இணையத்தளங்கள் அமைக்கும் மென்பொருளாளனும் வருகின்றனர். படித்து விட்டு எழுதுகிறேன். மேடையில் இருந்ததால் வையவனை கேமராவில் பிடிக்க முடியவில்லை.
![]() |
மகேந்திரன் நன்றியுரையில், தான் செய்ததெல்லாம் சிறிதும் திட்டம் தீட்டாமல் செய்தது. அப்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்றார். இலக்கிய கர்த்தாக்க்கள் சினிமாவை உதறித் தள்ளக்கூடாது, சினிமாவில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாகப் பேசிய பாரதிராஜாவும் இதையே வலியுறுத்தினார். இந்த அமர்வுக்குத் தலைவராக இருந்த சிற்பி பாலசுப்ரமணியனை சுட்டிக் காட்டி, சிற்பியை ஒரு படத்துக்கு (கிழக்கே போகும் இரயில்) இளையராஜாவுடன் சேர்ந்து தான் பாட்டெழுதக் கூட்டி வந்ததாகவும், அந்தப் பாடல் கடைசியாக படத்தில் இடம் பெறவில்லை என்றும் அதன்பிறகு சிற்பி, சினிமா பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை என்றும் சொன்னார் பாரதிராஜா. அத்துடன் இது சிற்பியின் நல்லகாலம். இல்லாவிட்டால் யாராவது அவரை 'கட்டிபுடி, கட்டிபுடி' என்று பாட்டெழுத வைத்திருப்பர் என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.
தமிழ் இலக்கியம் 2004 - 5
ஒரு நாடகமும், ஒரு அமர்வும்
'நாடகமில்லாத ஒரு நாடகம்', 'நாடு-சக-அகம்' என்றெல்லாம் பெயரிட்டு ஒரு வித்தியாசமான நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அளவெட்டி சிறீசுக்கந்தராசா, பேரா.சுமதி ஆகியோர் இருவர் மட்டுமே நடித்த இந்த நாடகத்தில் எனக்குப் புரிந்தது கொஞ்சமே.
"நான் யாழ்பாணத் தமிழில் பேசுவன், அது உங்களுக்குப் புரியாமல் போகலாம், புரியாததும் ஒரு வசதியே" என்று ஆரம்பித்தார் சிறீசுக்கந்தராசா. பின்னணி இசை அதிகமாக இரைந்து பேச்சைப் புரிந்துகொள்ள விடாது தடுத்தது. இது ஒரு பின்-நவீனத்துவ நாடக பாணியோ என்னவோ! மேடையில் விளக்குகளின் வண்ணங்கள் ஒவ்வொரு விநாடியும் மாறி மாறிக் கொண்டே இருந்தன.
மற்றவர்கள் யாரேனும் நாடகத்தைப் பார்த்திருந்தால், புரிந்திருந்தால், அதுபற்றி விளக்கமாக எழுத வேண்டுகிறேன்.
நாடகத்தைத் தொடர்ந்து 'கவிதை, நாடகம், திறனாய்வு' ஆகியவற்றைப் பற்றிப் பேசும் ஒரு அமர்வு நடந்தது. தலைமை தாங்கியவர் சிற்பி பாலசுப்ரமணியம். பேசுகையில் திறனாய்வாளர்களை சற்றே சாடினார். கவிதை பற்றிப் பேசிய இந்திரன், இப்பொழுதுள்ள கவிதைகள் அனைத்தும் தமிழ்க் கவிதைகளாக இல்லை. வேறு மொழிகளின் வடிவத்தைப் பெற்று, தமிழ் சொற்களினால் அமைந்துள்ளது போல் உள்ளது.
அதனை விடுத்து தமிழ் உணர்வுகள், தமிழ் வடிவம் ஆகியவற்றுள் அடங்கியதாக தமிழ்க் கவிதை இருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய பஞ்சாங்கம் மிக அழகாக திறனாய்வைப் பற்றி விளக்கினார். அபிப்ராயம், ஆராய்ச்சி, திறனாய்வு - இவை அனைத்தும் வேறு வேறு. ஒரு எழுத்து நன்றாக உள்ளது, நன்றாக இல்லை என்று சொல்வது அபிப்ராயம். ஏன் அது நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை அன்று கருத்துக்களை முன்வைப்பது வெறும் வறட்டு ஆராய்ச்சி. ஆனால் திறனாய்வு என்பது இதற்கும் ஒருபடி மேலே போய் அதுவே இலக்கியமாக, படைப்பாக முன்வருவது என்றார்.
தான் சிலப்பதிகாரம் பற்றி எழுதப்பட்ட நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்டனவற்றை தன் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ந்ததில், வெறும் இரண்டே நூல்கள்தான் இந்தத் திறனாய்வு என்னும் ஆக்கத்தில் வருபவை என்றார். (அவர் சொன்ன நூல்களுடன் எனக்குப் பரிச்சயம் இல்லாததால் அந்த நூல்களின் பெயர்கள் இப்பொழுது ஞாபகத்தில் இல்லை.)
நாடகம் பற்றிப் பேச வருவதாக இருந்த செ.இராமானுஜம் வரவில்லை. தலைவர் சிற்பி இதுபற்றிப் பேசும்போது தமிழில் நாடகம் எந்த அளவிற்கு வளராத நிலையில் உள்ளது என்பதையே இதுகாட்டுகிறது என்று சொல்லியிருந்தார். சிற்பி மேலும் நாடகம் பற்றிப் பேசும்போது மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை, தன் நாடகம் நடிப்பதற்காக அல்ல என்று சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, அதே புத்தகத்துக்கு இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் (விமரிசகர் பெயர் மறந்துவிட்டது...) விமரிசகர் "நடிப்பதற்காக இந்த நாடகம் இல்லை என்று சொல்வது பலகாரம் செய்துள்ளேன், ஆனால் சாப்பிட அல்ல என்று சொல்வதைப் போலுள்ளது என்று எழுதியிருந்தார்" என்றார்.
கடைசியாகப் பேசிய பா.இரவிக்குமார் தமிழ் நாடகம் வளர்ச்சியடையாததற்கு ஒரு காரணம் 'சிவாஜி கணேசன் என்னும் நாடகக் கலைஞனை தமிழகம் ஏற்றுக் கொள்ளாதது' என்றார். இது எனக்கு முழுதும் விளங்கவில்லை.
'நாடகமில்லாத ஒரு நாடகம்', 'நாடு-சக-அகம்' என்றெல்லாம் பெயரிட்டு ஒரு வித்தியாசமான நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அளவெட்டி சிறீசுக்கந்தராசா, பேரா.சுமதி ஆகியோர் இருவர் மட்டுமே நடித்த இந்த நாடகத்தில் எனக்குப் புரிந்தது கொஞ்சமே.
"நான் யாழ்பாணத் தமிழில் பேசுவன், அது உங்களுக்குப் புரியாமல் போகலாம், புரியாததும் ஒரு வசதியே" என்று ஆரம்பித்தார் சிறீசுக்கந்தராசா. பின்னணி இசை அதிகமாக இரைந்து பேச்சைப் புரிந்துகொள்ள விடாது தடுத்தது. இது ஒரு பின்-நவீனத்துவ நாடக பாணியோ என்னவோ! மேடையில் விளக்குகளின் வண்ணங்கள் ஒவ்வொரு விநாடியும் மாறி மாறிக் கொண்டே இருந்தன.
மற்றவர்கள் யாரேனும் நாடகத்தைப் பார்த்திருந்தால், புரிந்திருந்தால், அதுபற்றி விளக்கமாக எழுத வேண்டுகிறேன்.
![]() |
![]() |
தொடர்ந்து பேசிய பஞ்சாங்கம் மிக அழகாக திறனாய்வைப் பற்றி விளக்கினார். அபிப்ராயம், ஆராய்ச்சி, திறனாய்வு - இவை அனைத்தும் வேறு வேறு. ஒரு எழுத்து நன்றாக உள்ளது, நன்றாக இல்லை என்று சொல்வது அபிப்ராயம். ஏன் அது நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை அன்று கருத்துக்களை முன்வைப்பது வெறும் வறட்டு ஆராய்ச்சி. ஆனால் திறனாய்வு என்பது இதற்கும் ஒருபடி மேலே போய் அதுவே இலக்கியமாக, படைப்பாக முன்வருவது என்றார்.
![]() |
நாடகம் பற்றிப் பேச வருவதாக இருந்த செ.இராமானுஜம் வரவில்லை. தலைவர் சிற்பி இதுபற்றிப் பேசும்போது தமிழில் நாடகம் எந்த அளவிற்கு வளராத நிலையில் உள்ளது என்பதையே இதுகாட்டுகிறது என்று சொல்லியிருந்தார். சிற்பி மேலும் நாடகம் பற்றிப் பேசும்போது மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை, தன் நாடகம் நடிப்பதற்காக அல்ல என்று சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, அதே புத்தகத்துக்கு இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் (விமரிசகர் பெயர் மறந்துவிட்டது...) விமரிசகர் "நடிப்பதற்காக இந்த நாடகம் இல்லை என்று சொல்வது பலகாரம் செய்துள்ளேன், ஆனால் சாப்பிட அல்ல என்று சொல்வதைப் போலுள்ளது என்று எழுதியிருந்தார்" என்றார்.
கடைசியாகப் பேசிய பா.இரவிக்குமார் தமிழ் நாடகம் வளர்ச்சியடையாததற்கு ஒரு காரணம் 'சிவாஜி கணேசன் என்னும் நாடகக் கலைஞனை தமிழகம் ஏற்றுக் கொள்ளாதது' என்றார். இது எனக்கு முழுதும் விளங்கவில்லை.
தமிழ் இலக்கியம் 2004 - 4
புத்தக வெளியீடு

என்.நடேசன் எழுதிய 'வண்ணாத்திகுளம்' புத்தகத்தை சா.கந்தசாமி வெளியிட, எம்.ஜி.சுரேஷ் பெற்றுக்கொண்டார். எஸ்.பொ புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் எழுதிய 'காற்று வெளியினிலே' புத்தகத்தை இதயதுல்லா வெளியிட, துக்ளக் பத்திரிக்கையில் எழுதும் சாவித்ரி கண்ணன் பெற்றுக்கொண்டார்.

'ஜெயந்தீசன் கதைகள்' என்னும் புத்தகத்தை பா.இரவிக்குமார் வெளியிட விழி.பா.இதயவேந்தன் பெற்றுக்கொண்டார்.

என்.நடேசன் எழுதிய 'வண்ணாத்திகுளம்' புத்தகத்தை சா.கந்தசாமி வெளியிட, எம்.ஜி.சுரேஷ் பெற்றுக்கொண்டார். எஸ்.பொ புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் எழுதிய 'காற்று வெளியினிலே' புத்தகத்தை இதயதுல்லா வெளியிட, துக்ளக் பத்திரிக்கையில் எழுதும் சாவித்ரி கண்ணன் பெற்றுக்கொண்டார்.

'ஜெயந்தீசன் கதைகள்' என்னும் புத்தகத்தை பா.இரவிக்குமார் வெளியிட விழி.பா.இதயவேந்தன் பெற்றுக்கொண்டார்.
கொள்கைகளற்ற கூட்டணி
நேற்று வாஜ்பாய், திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கைகளற்ற, சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று பேசியுள்ளார். என்னவோ, பாஜக மட்டும் கொள்கைகளோடுதான் கூட்டணி அமைப்பது போல இருக்கிறது இந்த கேலிப்பேச்சு. அதாவது, ஒரு காலத்தில் காங்கிரஸ், 'திமுக ராஜீவ் கொலைக்குக் காரணம்' என்று சொன்னார்களாம். இப்பொழுது அதை மறந்து விட்டு, கூட்டணி அமைக்கிறார்கள் என்கிறார்.
திமுக ராஜீவ் கொலைக்குக் காரணமாயிருந்தால், பாஜகவும் அவர்களோடு கூட்டணி அமைத்திருக்கக் கூடாது அல்லவா? அப்படி திமுக, ராஜீவின் கொலைக்குக் காரணமில்லை என்றால், காங்கிரஸ் தன் கூற்றின் தவறை உணர்ந்து, பழசை மறந்துவிட்டு திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் தவறில்லைதானே?
அஜித் ஜோகி, திலிப் சிங் ஜுதேவ் ஊழல்கள் பற்றி கண்ணீர் மல்கப் பேசிய வாஜ்பாய் இப்பொழுது தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்?
திமுக ராஜீவ் கொலைக்குக் காரணமாயிருந்தால், பாஜகவும் அவர்களோடு கூட்டணி அமைத்திருக்கக் கூடாது அல்லவா? அப்படி திமுக, ராஜீவின் கொலைக்குக் காரணமில்லை என்றால், காங்கிரஸ் தன் கூற்றின் தவறை உணர்ந்து, பழசை மறந்துவிட்டு திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் தவறில்லைதானே?
அஜித் ஜோகி, திலிப் சிங் ஜுதேவ் ஊழல்கள் பற்றி கண்ணீர் மல்கப் பேசிய வாஜ்பாய் இப்பொழுது தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்?
Sunday, January 11, 2004
தமிழ் இலக்கியம் 2004 - 3
தமிழ் உரைநடை இலக்கியத்தின் எதிர்காலம்
நீல.பத்மநாபன் தலைமை தாங்க, தமிழில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் பற்றிய ஒரு அமர்வு துவங்கியது. நீல.பத்மநாபன் மலையாளத் த்வனியோடு தமிழில் பேசினார். தான் ஒரு சிறு தளத்திலேயே இயங்கிக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் மொழி, நடை, உத்திகள் ஆகியவற்றில் நிறைய வளர்ச்சி வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
எஸ்.ராமகிருஷ்ணன் நாவல்கள் பற்றிப் பேச வந்தார். இரா.முருகன் இந்திரா பார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா'வைப் பற்றிப் பேசுகையில் குந்தர் கிராஸின் (Gunther Grass) கிராப் வாக் (Crabwalk) நாவலின் நடையோடு ஒப்பிட்டு, இ.பா அந்த நடையை விட மேலேறிச் சென்றுள்ளார் தன் நாவலில் என்று குறிப்பிட்டார். ராமகிருஷ்ணன் இதைப் பிடித்துக் கொண்டு தமிழில் நாவல்களே சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை, அதிலும் குந்தர் கிராஸோடு தமிழ் எழுத்தாளர் ஒருவரை ஒப்பிடுவது மகா பாவம் என்ற முறையில் பேச ஆரம்பித்தார். குந்தர் கிராஸ் எப்படி 16 (??) நாவல்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எழுதி, இந்தியாவைப் பற்றிக் கூட (ஷோ யுவர் டங் - Show your tongue) ஒரு நாவல் எழுதியுள்ளார் என்றார். அதன் பின்னர் பல வேற்றுமொழி நாவலாசிரியர்கள் பற்றி ஒருசில எடுத்துக்காட்டுகள் கொடுத்த பின்னர் இந்தியாவிலேயே வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளுக்கு ஈடாக தமிழில் நாவல்கள் இல்லை என்றார். தமிழில் சிறந்த நாவல்கள் என்றால் உடனடியாக மூன்று நாவல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் கிடைக்காது என்றும், அந்த ஓரிரண்டு நாவல்களைச் சொல்வதற்கே அருகில் உள்ள இரண்டு பேருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் சொன்னார்.
தமிழன் தன் வாழ்க்கை முறையினைப் பற்றி தமிழ் நாவல்களில் அதிகம் விளக்கவில்லை; அரசியலைப் பின்னணியாகக் கொண்ட நாவல்கள் தமிழில் இல்லை; வாய்வழிக் கதைகள், புராணங்களை தமிழ் நாவலாசிரியர்கள் 'மீள்-பார்வையில்' மீண்டும் சொன்னதில்லை என்று குற்றச்சாட்டுக்களாக அடுக்கினார். நோபல் பரிசு பெற்ற போர்ச்சுகீசிய நாவலாசிரியர் ஹோசெ சரமாகோவின் (Jose Saramago) நாவலான "யேசு கிறிஸ்துவின் பார்வையில் வேதாகமம்" (The gospel according to Jesus Christ), கிரேக்க எழுத்தாளர் நிக்கோஸ் கசன்சாகிஸின் (Nikos Kazantzakis) "யேசு கிறிஸ்துவின் கடைசிச் சபலம்" (The last temptation of Christ) போன்ற நாவல்கள் தமிழில் இல்லை என்றார். துருக்கிய எழுத்தாளர் ஓர்ஹான் பாமுக்கின் (Orhan Pamuk) "என் பெயர் சிகப்பு" ('My name is red'. சில இடங்களில் 'Call me crimson' என்றும் வெளியாகியுள்ளது போல அறிகிறேன்) என்னும் நாவலைப் பற்றி சிலாகித்துப் பேசினார். (பேசும்போது எகிப்திய எழுத்தாளர் என்று தவறாகச் சொன்னார்.)
எஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சு எதிர்மறையாகவே இருந்தது. அரங்கில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளுமாறு தமிழ் நாவல்களில் என்ன குறைவு, உலக நாவல்களில் என்ன நிறைவு, எப்படி தமிழ் நாவலாசிரியர்கள் இந்த இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறார்கள், அல்லது முயற்சிக்க வேண்டும் என்று பேசியிருந்திருக்கலாம். என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பட்டியல் போடுவது தவறான முயற்சி. ராமகிருஷ்ணனின் பேச்சுக்கு இரா.முருகனின் எதிர்வினை ராயர்காபிகிளப்பில் வந்துள்ளது.
அடுத்துப் பேச வந்த ரெ.கார்த்திகேசு இப்படி சூடு வைக்கவில்லை. ஆனால் சிறுகதைகள் எங்கே போகப்போகின்றன என்பது பற்றி ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார். தான் கி.ராஜநாராயணனிடம் பேசியபோது அவரிடம் 'சிறுகதைகள் எங்கே போகப்போகின்றன' என்று கேட்டதற்கு அவர் பதிலாக 'எப்படிச் சொல்லமுடியும்?' என்று சொன்னார் என்ற ரெ.கா, தைரியமாக கணிக்க ஆரம்பித்தார். ஒருசில கணிப்புகள் "தமிழில் வெகுஜன இதழ்கள் சிறுகதைகளை தொட்டுக்கொள்ள வைத்திருக்குமே தவிர, வளர்க்காது, ஆனால் ஒரேயடியாக வெட்டிவிடாது. அச்சுத்தொழில் வளர்ச்சியினால், சிற்றிதழ்கள் பெருகும்; புத்தகங்கள் வெளியாவதும் பெருகும்; அதனால் சிறுகதைகள் அவற்றின் மூலம் பெருகும். இணையம் மூலம் பல புதிய சிறுகதை எழுத்தாளர்கள் வருவர். சிறுகதைகளுக்கென்றே இதழ்கள் நிறைய வரும். "
கடைசியாகப் பேசிய ராகவன் கட்டுரை இலக்கியம் பற்றி தன் கருத்துகளைச் சொன்னார். அவற்றை அவரது வலைப்பதிவிலேயே காணலாம்.
![]() |
![]() |
தமிழன் தன் வாழ்க்கை முறையினைப் பற்றி தமிழ் நாவல்களில் அதிகம் விளக்கவில்லை; அரசியலைப் பின்னணியாகக் கொண்ட நாவல்கள் தமிழில் இல்லை; வாய்வழிக் கதைகள், புராணங்களை தமிழ் நாவலாசிரியர்கள் 'மீள்-பார்வையில்' மீண்டும் சொன்னதில்லை என்று குற்றச்சாட்டுக்களாக அடுக்கினார். நோபல் பரிசு பெற்ற போர்ச்சுகீசிய நாவலாசிரியர் ஹோசெ சரமாகோவின் (Jose Saramago) நாவலான "யேசு கிறிஸ்துவின் பார்வையில் வேதாகமம்" (The gospel according to Jesus Christ), கிரேக்க எழுத்தாளர் நிக்கோஸ் கசன்சாகிஸின் (Nikos Kazantzakis) "யேசு கிறிஸ்துவின் கடைசிச் சபலம்" (The last temptation of Christ) போன்ற நாவல்கள் தமிழில் இல்லை என்றார். துருக்கிய எழுத்தாளர் ஓர்ஹான் பாமுக்கின் (Orhan Pamuk) "என் பெயர் சிகப்பு" ('My name is red'. சில இடங்களில் 'Call me crimson' என்றும் வெளியாகியுள்ளது போல அறிகிறேன்) என்னும் நாவலைப் பற்றி சிலாகித்துப் பேசினார். (பேசும்போது எகிப்திய எழுத்தாளர் என்று தவறாகச் சொன்னார்.)
எஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சு எதிர்மறையாகவே இருந்தது. அரங்கில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளுமாறு தமிழ் நாவல்களில் என்ன குறைவு, உலக நாவல்களில் என்ன நிறைவு, எப்படி தமிழ் நாவலாசிரியர்கள் இந்த இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறார்கள், அல்லது முயற்சிக்க வேண்டும் என்று பேசியிருந்திருக்கலாம். என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பட்டியல் போடுவது தவறான முயற்சி. ராமகிருஷ்ணனின் பேச்சுக்கு இரா.முருகனின் எதிர்வினை ராயர்காபிகிளப்பில் வந்துள்ளது.
![]() |
கடைசியாகப் பேசிய ராகவன் கட்டுரை இலக்கியம் பற்றி தன் கருத்துகளைச் சொன்னார். அவற்றை அவரது வலைப்பதிவிலேயே காணலாம்.
தமிழ் இலக்கியம் 2004 - 2
![]() |
![]() |
![]() |
அதன்பிறகு புத்தக வெளியீட்டின்போது சிறிது சலசலப்பு இருந்தது. புத்தக வெளியீடுகளைப் பற்றி முன்னமே எழுதிவிட்டேன். வரிசையாக இந்திரா பார்த்தசாரதி, ரெ.கார்த்திகேசு, பழமலய், யுகபாரதி ஆகியோரின் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் பிந்தையதிலிருந்து முந்தையது வரை யுகபாரதியின் புத்தகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்து கடைசியில் இந்திரா பார்த்தசாரதி புத்தகத்தில் முடித்தனர். ஈரோடு தமிழன்பன் மிகவும் நகைச்சுவையுடன் "மன்மத ராசா" புகழ் யுகபாரதியின் காதல் பிசாசு பற்றிப் பேசினார். பேரா.அ.மார்க்ஸ் ஏதோ தவறான கூட்டத்துக்கு வந்துவிட்டவர் போல நெளிந்தவாறே உட்கார்ந்திருந்தவர், தன் வாய்ப்பு வந்ததும் பலமலய் புத்தகத்தைப் அற்றிப் பேசும்போது தன் எரிச்சலை வெளிப்படுத்தினார். ஏற்றி வைத்திருந்த குத்துவிளக்கு அவருக்குப் பிடிக்கவில்லையாம். புத்தக வெளியீட்டின்போது பெண்கள் ஒரு தாம்பாளத்தில் எடுத்துக் கொண்டு வந்து கையில் புத்தகத்தைக் கொடுத்தது பிடிக்கவில்லையாம். வரவர எல்லா அரசு விழாக்களும் வேதகோஷம் முழங்க நடைபெறுவதாகச் சொன்னவர் (அப்படியா?), இந்த விழாவை யுகபாரதியின் 'மன்மத ராசா' பாடித் துவங்கியிருக்கலாம் என்று சொன்னார். 'இலக்கியம் என்பதே கலகம்' என்ற கொள்கை மார்க்ஸுடையது. கலகம் என்றால் சாராய வாசனையும், அடிதடியும், வாய் முழுதும் சென்னை வசவுகளும்தான் என்ற கொள்கை எப்பொழுது ஒழியுமோ? பழமலய்க்கும் கொஞ்சம் திட்டு கிடைத்தது. நல்ல கவிதையும் எழுதுவார், வகுப்புவாதிகளான பாட்டாளி மக்கள் கட்சி கேட்டால் அவர்களுக்கும் பாட்டெழுதித் தருவார் என்று ஒரு சாடல். மார்க்ஸை விழாவுக்குக் கூப்பிடுகிறவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 'பாம்புகள்' புத்தகத்தைப் பற்றி 'இது ஒரு குப்பை, தூக்கி உடைப்பில் போடு' என்றெல்லாம் சொல்லாமல் நல்லபடியாக விட்டதில் சந்தோஷமே.
![]() |
முருகன் இந்திரா பார்த்தசாரதியின் கதை சொல்லும் விதம் குந்தர் கிராஸை (Crab Walk) விட உயர்ந்து விட்டது என்று சொல்லியது அடுத்த அமர்வில் மற்றுமொரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.
தமிழ் இலக்கியம் 2004 பற்றி
எஸ்.பொ என்றழைக்கப்படுகிற எஸ்.பொன்னுதுரை, இலங்கைத் தமிழ் எழுத்தாளர். இதற்கு மேல் இவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இவரது கதைகளை நான் இதுவரை படித்ததில்லை. நேற்றுதான் இவர் எழுதிய, பலத்த சர்ச்சைக்குள்ளான 'தீ' என்ற நாவல் என் கைக்குக் கிடைத்தது. இன்னமும் படிக்க ஆரம்பிக்கவேயில்லை. (எஸ்.பொவுடன் மாலனின் நேர்முகம் திசைகள் இதழிலிருந்து 1 | 2 | 3 | 4)
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆர்.வெங்கடேஷிடம் பேசிக்கொண்டிருந்தபோது 'தமிழ் இலக்கியம் 2004' என்னும் மாநாட்டினை எஸ்.பொ நடத்தப்போவதாகவும், அந்த விழா நடத்தும் குழுவில் தானும் ஒரு அங்கத்தினர் என்றும், தன்னுடைய 'முதல் மழை' என்னும் சிறுகதைத் தொகுதியும் அதில் வெளியிடப்படுகிறது என்றும் சொன்ன வெங்கடேஷ், அந்தப் புத்தகத்தை வெளியிடும்போது அதை நான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்! இந்த மாதிரி ஒரு வாய்ப்பு வந்தால் அதைத் தட்ட முடியுமா? அப்பொழுதுதான் அவரிடம் எஸ்.பொவைப் பற்றி மேலும் கேட்டேன். ஏன் இப்படி ஒரு பிரம்மாண்டமான விழாவை எஸ்.பொ சென்னையில் நடத்துகிறார் என்றேன். வெங்கடேஷ் தனக்கும் தெரியாது என்றார். நேற்றைய விழாவினைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட ரூ. ஐந்து லட்சத்துக்கும் மேல் செலவாகியிருக்கும் என்று தோன்றுகிறது. அத்தனையும் எஸ்.பொ, அவரது மகன் பொன்.அநுர ('மித்ர' பதிப்பகம்) ஆகியோரிடமிருந்து வந்திருக்கின்றன.

தமிழ் இலக்கியம் 2004 - சர் பிட்டி தியாகராயா அரங்கம்
எஸ்.பொ மீது தமிழ் எழுத்துலகம் வைத்துள்ள மரியாதை, தூரத்திலிருந்து பார்க்கும்போது, புரிகிறது. அவருக்கு தமிழ் எழுத்துலகின் மீதுள்ள அபிமானமும் புரிகிறது. எஸ்.பொ, புலம்பெயர்ந்தவர்கள்தான் இனி தமிழ் எழுத்தை முன்னிறுத்திச் செல்வார்கள் என்னும் கருத்துடையவராம். அதை என்னால் ஏற்க முடியவில்லை. அவரது வாழ்வின் அனுபவங்கள் அவரை அந்தக் கருத்துக்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். புலம்பெயர்ந்தவர்களால்தான் ஒரு மொழி பிழைக்கக்கூடும் என்றால் அம்மொழி செத்து விட்டது என்றே பொருள்.
தமிழ் இலக்கியத்துடனான முழுப் பரிச்சயம் எனக்கு ஏற்பட ஆரம்பித்தது ஒன்பது மாதங்களாகத்தான். அதனாலேயே நேற்றைய நிகழ்ச்சி எனக்கு பிரமிப்பூட்டுவதாக இருந்தது. தமிழ் இலக்கிய உலகிற்கு பெருந்தொண்டாற்றிய ஆறு பேர்கள் மேடையிலே வாழ்த்தப்பட்டனர். அவர்களை ஒருசேரக் காண முடிந்தது. சாஹித்ய அகாதெமியின் தற்போதைய தலைவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் (சற்றே நீளமான) ஆங்கில உரையைக் கேட்க முடிந்தது. நடிநடுவே தன் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வாசித்தார். முக்கியமாகச் சொல்லவேண்டியது அவரது 'காந்தியும், ஒரு கவிதையும்' என்ற கவிதை. பொதுமேடையில் மதவாதம், அடிப்படை வாதம், ஒப்புரவாள்கையற்ற நிலை, அரசினால் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறை, அதையெல்லாம் மீறி 'கலை கலைக்காகவே' என்று எழும் இலக்கியம் பற்றி அருமையாகப் பேசினார் சச்சிதானந்தன்.
அதன்பின்னர் சிட்டி, லஷ்மி கிருஷ்ணமூர்த்தி, வல்லிக்கண்ணன், விஜயபாஸ்கரன், தி.க.சிவசங்கரன், டொமினிக் ஜீவா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ஒவ்வொருவரது பங்களிப்பைப் பற்றியும் பேச்சாளர்கள் விளக்க, 94 வயதான சிட்டி முதல் அனைவரும் தங்களை கவுரவித்த விழாக்குழுவினரைப் பாராட்டினர். டொமினிக் ஜீவா பேச்சு கண்கலங்க வைத்தது. வல்லிக்கண்ணன், விஜயபாஸ்கரன், தி.க.சி போன்றோரின் அடக்கம் வியக்க வைத்தது.
Saturday, January 10, 2004
புனை கதை
புத்தக வெளியீடுகளுக்குப் பிறகு 'புனை கதை' என்ற அமர்வு நிகழ்ந்தது. நீல.பத்மனாபன் தலைமையில், எஸ்.ராமகிருஷ்ணன் தமிழில் நாவல்கள் பற்றியும், ரெ.கார்த்திகேசு தமிழ் சிறுகதைகள் எங்கு செல்லப்போகின்றன என்பது பற்றியும், பா.ராகவன் தமிழில் கட்டுரை இலக்கியம் பற்றியும் பேசினார்.
இந்த அமர்வுக்கு 'புனை கதை' என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை. எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில் தமிழில் பல சிறுகதை எழுத்தாளர்களும், சிறுகதைக்கான களங்களும் இருந்தாலும், நாவல் என்று பார்க்கையில் இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளுக்கு முன்பாகவே தமிழ் போட்டிபோட்டு நிற்கமுடிவதில்லை, உலக மொழிகளைப் பற்றிப் பார்க்கையில், வெகுவாகப் பின்தங்கியுள்ளது என்றார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்திஅ நிலை மாறுவதற்கான வாய்ப்புகள் தெரிவதாகச் சொன்னார்.
ராகவன் கட்டுரை இலக்கியம் பற்றிப் பேசும்போது மூன்று வகைகள் கண்ணுக்குத் தெரிவதாகவும், ஒன்று வெகுஜன இதழ்களில் வருபவை, இரண்டாவது சிற்றிதழ்களில் வருபவை, மூன்றாவது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகள் என்றார். ராகவனது முழுக் கட்டுரையும் ராயர்காபிகிளப்பிலும், அவரது வலைப்பதிவிலும் வெளியாகும்.
இந்த அமர்வுக்கு 'புனை கதை' என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை. எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில் தமிழில் பல சிறுகதை எழுத்தாளர்களும், சிறுகதைக்கான களங்களும் இருந்தாலும், நாவல் என்று பார்க்கையில் இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளுக்கு முன்பாகவே தமிழ் போட்டிபோட்டு நிற்கமுடிவதில்லை, உலக மொழிகளைப் பற்றிப் பார்க்கையில், வெகுவாகப் பின்தங்கியுள்ளது என்றார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்திஅ நிலை மாறுவதற்கான வாய்ப்புகள் தெரிவதாகச் சொன்னார்.
ராகவன் கட்டுரை இலக்கியம் பற்றிப் பேசும்போது மூன்று வகைகள் கண்ணுக்குத் தெரிவதாகவும், ஒன்று வெகுஜன இதழ்களில் வருபவை, இரண்டாவது சிற்றிதழ்களில் வருபவை, மூன்றாவது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகள் என்றார். ராகவனது முழுக் கட்டுரையும் ராயர்காபிகிளப்பிலும், அவரது வலைப்பதிவிலும் வெளியாகும்.
புதிய திசைகள், புத்தக வெளியீடுகள்
தமிழ் இலக்கியத்திற்கு பெரும்பங்கு ஆற்றியவர்கள் காலையில் கவுரவிக்கப்பட்டனர். மதியம் நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாகவே ஆரம்பித்தது.
முதலில் பேரா.இன்குலாப் தலைமையில் தமிழ் எழுத்துலகம் எந்த திசைகளில் போகின்றது என்று பேரா.சுதந்திரமுத்து, பேரா.த.சுமதி ஆகியோர் பேசினர்.
அதன் பின்னர் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

இந்திரா பார்த்தசாரதி எழுதிய 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்ற நாவலை அசோகமித்திரன் வெளியிட்டுப் பேசுவதாக இருந்தது. அவரால் வரமுடியாமற் போகவே, இரா.முருகன் நாவலை வெளியிட கலைஞன் பதிப்பகத்தின் மாசிலாமணி பெற்றுக்கொண்டார். இரா.முருகன் புத்தகத்தைப் பற்றிப் பேசியது ராயர்காபிகிளப்பில் வெளியாகும்.

ரெ.கார்த்திகேசுவின் 'ஊசியிலை மரங்கள்' என்னும் சிறுகதைத் தொகுப்பை, மாலன் வெளியிட, எஸ்.பொ பெற்றுக் கொண்டார். பின்னர் மாலன் புத்தகத்தைப் பற்றிப் பேசுகையில் தமிழகத்துக்கு வெளியில் இருந்து தமிழில் எழுதும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் என்று குறிப்பிட்டார்.

பழமலய் எழுதிய 'பாம்புகள்' என்னும் புத்தகத்தை பேரா.அ.மார்க்ஸ் வெளியிட, அமரந்தா பெற்றுக்கொண்டார். மார்க்ஸ் பேசுகையில் குத்துவிளக்கு ஏற்றி இலக்கியவிழா கொண்டாடுவது சரியல்ல, அதற்கு பதில், கலகமாக, யுகபாரதியின் 'மன்மத ராசா' பாட்டைப் போட்டு துவங்கியிருக்கலாம் என்றார்.

'மன்மத ராசா' புகழ் யுகபாரதி எழுதிய 'காதல் பிசாசே' என்னும் பழந்தமிழ் பாடல்களில் காதல் பற்றிய கட்டுரைத் தொகுப்பை ஈரோடு தமிழன்பன் வெளியிட, வெங்கட் சாமிநாதன் பெற்றுக் கொண்டார்.
முதலில் பேரா.இன்குலாப் தலைமையில் தமிழ் எழுத்துலகம் எந்த திசைகளில் போகின்றது என்று பேரா.சுதந்திரமுத்து, பேரா.த.சுமதி ஆகியோர் பேசினர்.
அதன் பின்னர் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

இந்திரா பார்த்தசாரதி எழுதிய 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்ற நாவலை அசோகமித்திரன் வெளியிட்டுப் பேசுவதாக இருந்தது. அவரால் வரமுடியாமற் போகவே, இரா.முருகன் நாவலை வெளியிட கலைஞன் பதிப்பகத்தின் மாசிலாமணி பெற்றுக்கொண்டார். இரா.முருகன் புத்தகத்தைப் பற்றிப் பேசியது ராயர்காபிகிளப்பில் வெளியாகும்.

ரெ.கார்த்திகேசுவின் 'ஊசியிலை மரங்கள்' என்னும் சிறுகதைத் தொகுப்பை, மாலன் வெளியிட, எஸ்.பொ பெற்றுக் கொண்டார். பின்னர் மாலன் புத்தகத்தைப் பற்றிப் பேசுகையில் தமிழகத்துக்கு வெளியில் இருந்து தமிழில் எழுதும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் என்று குறிப்பிட்டார்.

பழமலய் எழுதிய 'பாம்புகள்' என்னும் புத்தகத்தை பேரா.அ.மார்க்ஸ் வெளியிட, அமரந்தா பெற்றுக்கொண்டார். மார்க்ஸ் பேசுகையில் குத்துவிளக்கு ஏற்றி இலக்கியவிழா கொண்டாடுவது சரியல்ல, அதற்கு பதில், கலகமாக, யுகபாரதியின் 'மன்மத ராசா' பாட்டைப் போட்டு துவங்கியிருக்கலாம் என்றார்.

'மன்மத ராசா' புகழ் யுகபாரதி எழுதிய 'காதல் பிசாசே' என்னும் பழந்தமிழ் பாடல்களில் காதல் பற்றிய கட்டுரைத் தொகுப்பை ஈரோடு தமிழன்பன் வெளியிட, வெங்கட் சாமிநாதன் பெற்றுக் கொண்டார்.
டொமினிக் ஜீவா
டொமினிக் ஜீவா உலகப்புகழ் பெற்ற இலங்கைத் தமிழ் எழுத்தாளர். இலங்கைத் தமிழர்களின் இருப்பியல் பிரச்சினைகளை இலக்கியத்தில் பதிவு செய்த முதல் தலைமுறை இலங்கை எழுத்தாளர். அவரை ஸ்ரீதரன் கவுரவிக்க, சிறீசுக்கந்தராசா வாழ்த்திப் பேசினார்.
தி.க.சிவசங்கரன்
தி.க.சி (திறனாய்வாளர்) அவர்களை ப.தி.அரசு கவுரவிக்க, மே.து.ராசுகுமார் வாழ்த்திப் பேசுகிறார். மார்க்சிய அழகியல் என்கிற கருத்தாக்கத்தை தமது நிர்தாட்சண்யமான இலக்கிய விமரிசனங்களில் திறமையாகக் கையாண்டவர் தி.க.சி. தாமரை என்கிற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தபோது பல நல்ல எழுத்தாளர்களையும் விமரிசகர்களையும் உருவாக்கியவர். இன்றுவரை இளம் படைப்பாளிகள் சிறந்த எழுத்தை தரும்போதெல்லாம் யார் எவர் என்று பாராமல் திறந்த மனத்துடன் உடனே கடிதம் எழுதி பாராட்டுபவர் தி.க.சி. நெல்லையில் வசிக்கும் தி.க.சியின் மகனும் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் - பெயர் வண்ணதாசன்.
விஜயபாஸ்கரன்
'சரஸ்வதி' சிற்றிதழ் ஆசிரியர் விஜயபாஸ்கரனை நித்யா கவுரவித்தார். விஜயபாஸ்கரனைப் பாராட்டி எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பேசும்போது தமிழின் முற்போக்கு இலக்கிய சரித்திரம் எழுதப்படும்போது அதில் விஜயபாஸ்கரனின் பங்களிப்பு தனிச்சிறப்பிடம் பெறும் என்றார்.
வல்லிக்கண்ணன்
முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனை ஆர்.வெங்கடேஷ் கவுரவித்தார். எழுத்தாளர் செந்தில்நாதன் வல்லிக்கண்ணனைப் பாராட்டி பேசிக்கொண்டிருக்கிறார். இளவயதில் சினிமாவுக்கு வசனம் எழுத கிடைத்த வாய்ப்பை - சமரசங்கள் செய்யவேண்டி வந்ததால் - தூக்கி எறிந்து விட்டு இலக்கியம் போதும் என்று தமிழுக்குத் தாலிகட்டிக் கொண்டார் (85 வயதான வல்லிக்கண்ணன் ஒரு பிரம்மச்சாரி) என்றார் செந்தில்நாதன்.
லஷ்மி கிருஷ்ணமூர்த்தி
அடுத்து சத்தியமூர்த்தி அவர்களின் மகள் லஷ்மி கிருஷ்ணமூர்த்தி கவுரவிக்கப்பட்டார். இவர் 'வாசகர் வட்டம்' என்கிற பதிப்பகம் மூலம் சுமார் நாற்பது சிறந்த நூல்களை வெளியிட்டவர். நூல் வெளியீட்டிற்காக தன் வீட்டையே அடமானம் வைக்கலாம் என்கிற அளவிற்கு இலக்கிய சேவை புரிந்தவர். இவரைப் பாராட்டி கவிஞர் பழமலய் பேசுகிறார்.
தமிழ் இலக்கியம் 2004 மாநாடு
காலையில் சச்சிதானந்தம் (சாஹித்ய அகாதெமி) சிறப்புரை ஆற்றினார். இப்பொழுது தமிழ் இலக்கியத்திற்கு தொண்டாற்றிய முக்கியமான சிலரை கவுரவிக்கப் போகிறார்கள். முதலில் சிட்டி பெ.கோ.சுந்தரராஜனை பொன்.அநுரா கவுரவிக்கிறார். பெ.சு.மணி, சிட்டியின் சிறப்புகள் குறித்து உரையாற்றுகிறார்.
சிட்டி, தனது 94 வயதிலும், சிறப்புகளை பெற்றுக்கொண்டு பதிலுரை அளித்தார்.
சிட்டியின் வாழ்க்கை வரலாற்றினை நரசையா வலைப்பதிவில் ஏற்றிக் கொண்டிருக்கிறார். அதனை இங்கு படிக்கலாம்.
Friday, January 09, 2004
ப்ரவாஸி பாரதீய திவஸ்
'ப்ரவாஸி பாரதீய திவஸ்' எனப்படும் 'வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தினம்' தற்போதைய மத்திய அரசால் பெரும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தக் கொண்டாட்டத்தில் உருப்படியாக எதுவும் வெளிநாட்டில் வாழும் இந்திய மற்றும் இந்திய வம்சாவளியினருக்குக் கிடைப்பதைப் போலத் தெரியவில்லை.
இன்று இந்த மூன்று நாள் விழாவின் முதல் நாளில் முழங்கப்பட்டவை:
1. ஒருசில நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்
2. வெளிநாட்டு இந்தியரின் பிள்ளைகள் இந்தியாவில் படிக்க வரும்போது அவர்களுக்கு இந்தியர்களுக்கான கட்டணமே வசூலிக்கப்படும்.
3. வளைகுடா மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் கட்டாயக் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும்
4. இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய இருந்த கூரை $100 மில்லியன் விலக்கப்படுகிறது.
5. இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் விவசாயத்துறையில் ஈடுபட முடியாது என்ற தடை விலக்கப்படுதல்
இவற்றைப் பார்க்கும்போது இது எதனாலும் வெளிநாட்டில் வசித்துக் கொண்டு இந்தியாவிற்கு ஆண்டிற்கு 55,000 கோடு ரூபாய்களைக் கொடுக்கும் இந்தியர்களுக்கு எந்தவித உருப்படியான சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றே புரிகிறது. (4) மற்றும் (5) முழுக்க முழுக்க இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள். (3) இலவசமாக எதுவும் கொடுப்பது போலத் தெரியவில்லை. (2) முதலில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து படிக்கும் இந்தியக் குழந்தைகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதே அயோக்கியத்தனம். அதை நீக்குவது என்னவோ பெரிய சாதனை போலக் காட்டப்படுகிறது. (1) மூலம் ஓரளவுக்கு, ஒருசில நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஏதோ கொஞ்சம் உதவி என்று சொல்லலாம். அதன் பிறகு 250 கோடி ரூபாய்கள் செலவில் தில்லியின் ஏதோ அலுவலகம் அமைக்கப்படும் என்கிறார் பிரதமர். அதனால் யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.
வெளிநாட்டுக்குப் படிக்கப் போகும் மாணவர்களுக்கோ, வளைகுடா, தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு வேலைக்குப் போகும் ஊழியர்களுக்கோ எந்த உதவியும் நேரிடையாக அரசு செய்வது போலத் தெரிவதில்லை. சிங்கப்பூரிலும், மலேசியாவிலும், வளைகுடா நாடுகளிலும் ஏமாற்றுக்காரர்களின் பிடியில் மாட்டிக்கொள்ளும் அப்பாவித் தொழிலாளர்களைக் காப்பாற்ற தீவிரமான நடவடிக்கை எதுவும் அரசு எடுப்பதாகத் தெரிவதில்லை. வெளிநாட்டில் நல்ல பணம் ஈட்டியவர்களை இந்தியாவிற்கு வரவழைத்து அவர்கள் இந்தியாவில் தொழில் நடத்துவதற்கு என்று எந்த சிறப்புச் சலுகையும் இந்திய அரசு தருவதில்லை. வெளிநாட்டில் உயர் கல்வி கற்ற, மற்றும் இந்தியாவில் இல்லாத தொழில்களில் பயிற்சி உள்ளவர்களை இந்தியாவிற்கு வரவேற்று இந்திய நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் விதமாக வெளிநாட்டு இந்தியர்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு இடைத்தரகர் வேலையைக் கூட இந்திய அரசு செய்வதில்லை.
இப்படி உப்புச்சப்பில்லாத ஒரு விஷயத்திற்கு ஏன் ஊரைக் கூட்டிக் காசைக் கரியாக்க வேண்டும்? அதற்கு ஏன் டிரினிடாட், மலேசியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் ஆட்சியில் இருக்கும் பெருந்தலைகள் வந்து தங்கள் நேரத்தை வீணாக்குகிறார்கள்?
[பி.கு: இதுதான் என்னை இன்று பிபிசி வானொலி தமிழோசை நிகழ்ச்சியில் நேர்முகம் செய்தபோது நான் சொன்னது. இன்றோ, நாளையோ வரலாம்.]
இன்று இந்த மூன்று நாள் விழாவின் முதல் நாளில் முழங்கப்பட்டவை:
1. ஒருசில நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்
2. வெளிநாட்டு இந்தியரின் பிள்ளைகள் இந்தியாவில் படிக்க வரும்போது அவர்களுக்கு இந்தியர்களுக்கான கட்டணமே வசூலிக்கப்படும்.
3. வளைகுடா மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் கட்டாயக் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும்
4. இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய இருந்த கூரை $100 மில்லியன் விலக்கப்படுகிறது.
5. இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் விவசாயத்துறையில் ஈடுபட முடியாது என்ற தடை விலக்கப்படுதல்
இவற்றைப் பார்க்கும்போது இது எதனாலும் வெளிநாட்டில் வசித்துக் கொண்டு இந்தியாவிற்கு ஆண்டிற்கு 55,000 கோடு ரூபாய்களைக் கொடுக்கும் இந்தியர்களுக்கு எந்தவித உருப்படியான சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றே புரிகிறது. (4) மற்றும் (5) முழுக்க முழுக்க இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள். (3) இலவசமாக எதுவும் கொடுப்பது போலத் தெரியவில்லை. (2) முதலில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து படிக்கும் இந்தியக் குழந்தைகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதே அயோக்கியத்தனம். அதை நீக்குவது என்னவோ பெரிய சாதனை போலக் காட்டப்படுகிறது. (1) மூலம் ஓரளவுக்கு, ஒருசில நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஏதோ கொஞ்சம் உதவி என்று சொல்லலாம். அதன் பிறகு 250 கோடி ரூபாய்கள் செலவில் தில்லியின் ஏதோ அலுவலகம் அமைக்கப்படும் என்கிறார் பிரதமர். அதனால் யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.
வெளிநாட்டுக்குப் படிக்கப் போகும் மாணவர்களுக்கோ, வளைகுடா, தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு வேலைக்குப் போகும் ஊழியர்களுக்கோ எந்த உதவியும் நேரிடையாக அரசு செய்வது போலத் தெரிவதில்லை. சிங்கப்பூரிலும், மலேசியாவிலும், வளைகுடா நாடுகளிலும் ஏமாற்றுக்காரர்களின் பிடியில் மாட்டிக்கொள்ளும் அப்பாவித் தொழிலாளர்களைக் காப்பாற்ற தீவிரமான நடவடிக்கை எதுவும் அரசு எடுப்பதாகத் தெரிவதில்லை. வெளிநாட்டில் நல்ல பணம் ஈட்டியவர்களை இந்தியாவிற்கு வரவழைத்து அவர்கள் இந்தியாவில் தொழில் நடத்துவதற்கு என்று எந்த சிறப்புச் சலுகையும் இந்திய அரசு தருவதில்லை. வெளிநாட்டில் உயர் கல்வி கற்ற, மற்றும் இந்தியாவில் இல்லாத தொழில்களில் பயிற்சி உள்ளவர்களை இந்தியாவிற்கு வரவேற்று இந்திய நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் விதமாக வெளிநாட்டு இந்தியர்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு இடைத்தரகர் வேலையைக் கூட இந்திய அரசு செய்வதில்லை.
இப்படி உப்புச்சப்பில்லாத ஒரு விஷயத்திற்கு ஏன் ஊரைக் கூட்டிக் காசைக் கரியாக்க வேண்டும்? அதற்கு ஏன் டிரினிடாட், மலேசியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் ஆட்சியில் இருக்கும் பெருந்தலைகள் வந்து தங்கள் நேரத்தை வீணாக்குகிறார்கள்?
[பி.கு: இதுதான் என்னை இன்று பிபிசி வானொலி தமிழோசை நிகழ்ச்சியில் நேர்முகம் செய்தபோது நான் சொன்னது. இன்றோ, நாளையோ வரலாம்.]
முறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு
மத்திய அரசின் கேபினட் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக 'சமூகப் பாதுகாப்புத் திட்டம்' ஒன்றினை உருவாக்குவதற்கு முதற்படியாக, முறைசாரா தொழிலாளர்களுக்காக ஒரு திட்டத்தினைக் கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டத்தை ஒரு சட்டமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் முன்னர் முன்னோடியா இந்தியா முழுவதிலுமிருந்து ஐம்பது மாவட்டங்களில் இரண்டு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப் படும். அதன்பின்னர் ஒரு சட்டம் கொண்டுவரப்படலாம். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் கிட்டத்தட்ட 37 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு நன்மை ஏற்படலாம். ஆனால் அதற்குள்ளாகவே செய்தித்தாள்கள் என்னவோ இந்த 37 கோடி தொழிலாளர்களும் இப்பொழுதே நன்மை அடைந்துவிட்டதாக கோஷம் போட ஆரம்பித்து விட்டன. தினமலர் "முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு! 37 கோடி பேருக்கு மத்திய அரசு சலுகை" என்கிறது. உள்ளே செய்திகளிலும் நிறைய தவறுகள் உள்ளன. தி ஹிந்துவும் "The Union Cabinet today approved the Social Security Scheme for workers of the unorganised sector that will benefit 370 million workers." என்கிறது. தினமணி "37 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு" என்கிறது. "Govt. in election mode, Safety net for more workers" என்கிறது பிசினஸ் ஸ்டாண்டர்ட்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது இந்தத் திட்டம் வெறும் முன்னோடித் திட்டம் மட்டுமே. இது உருப்படியாக நடக்குமா என்பதே சந்தேகம். உருப்படியாக நடக்க வேண்டுமானால் மாநில அரசுகள் இந்தத் திட்டத்தில் ஈடுபட வேண்டும். இதில் மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசுகளின் பங்கு என்ன என்பது எனக்குப் புரியவில்லை.
முதலில் இந்த முன்னோடித் திட்டம் என்ன சொல்கிறது? முறைசாராத் தொழிலாளர்கள் யார்?
எந்த ஒரு நிறுவனத்தில் 20க்குக் கீழாக ஊழியர்கள் இருக்கின்றனரோ, அந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வைப்பு நிதி (Provident Fund - PF), ஊழியர் காப்பீடு (Employee State Insurance - ESI) ஆகியவற்றை அவ்ழங்க வேண்டியதில்லை. அதாவது என் வீட்டில் ஒரு சமையற்காரர், வண்டி ஓட்டுனர் ஆகியோர் உள்ளனர். நான் அவர்களுக்கு இதுவரையில் PF, ESI என்று எதுவும் செலுத்த வேண்டியிருந்ததில்லை. தெருவோரப் பெட்டிக்கடை, தையல் கடை, தெருவோரத்தில் இஸ்திரி போடுபவரிடம் வேலை பார்க்கும் சிறுவன் ஆகியோருக்கு PF, ESI கிடையாது. ஒரு புத்தக அச்சகத்தில் 10 பேர் வேலை செய்தாலும் அவர்கள் யாருக்கும் PF, ESI கட்ட வேண்டியது அச்சக உரிமையாளரின் கடமையில்லை.
இப்பொழுது மத்தியக் கேபினட் முடிவின்படி ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் முறைசாராத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் 18-35 வயதுக்குக் கீழ் இருந்தால் ரூ. 50ம், அதற்கு மேல் இருந்தால் ரூ. 100ம் கட்ட வேண்டும். உரிமையாளர்கள், 35க்குக் கீழுள்ளவர்களுக்கு ரூ. 100ம், அதற்கு மேல் இருந்தால் ரூ. 200ம், மத்திய அரசின் ஊழியர் வைப்பு நிதி அலுவலகத்திடம் கட்ட வேண்டும். மத்திய அரசு இந்தத் தொகைக்கு மேல் ஊழியரின் ஊதியத்தில் 1.16% தொகையை (குறைந்த பட்சம் ரூ. 20.88 (1800இல் 1.16%), அதிக பட்சம் ரூ. 75.40 (6500இல் 1.16%)) மாதத்திற்கு சேர்க்கும். இப்படி சேர்ந்த தொகையை வைத்து ஊழியர் ஓய்வடைந்தால் அல்லது வேலை செய்ய முடியாத அளவிற்கு உடல் ஊனமடைந்தால், மாதத்திற்கு ரூ. 500 ஓய்வூதியமாக வழங்கும். அவரது இறப்பிற்குப் பிறகு கணவன்/மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ ஓய்வூதியம் தொடரும். ரூ. ஒரு லட்சம் அளவிற்கு ஆயுள் காப்பீடும் வழங்கப்படும்.
நல்ல திட்டம். எப்படி நடைமுறைப்படுத்தப் படுகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது இந்தத் திட்டம் வெறும் முன்னோடித் திட்டம் மட்டுமே. இது உருப்படியாக நடக்குமா என்பதே சந்தேகம். உருப்படியாக நடக்க வேண்டுமானால் மாநில அரசுகள் இந்தத் திட்டத்தில் ஈடுபட வேண்டும். இதில் மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசுகளின் பங்கு என்ன என்பது எனக்குப் புரியவில்லை.
முதலில் இந்த முன்னோடித் திட்டம் என்ன சொல்கிறது? முறைசாராத் தொழிலாளர்கள் யார்?
எந்த ஒரு நிறுவனத்தில் 20க்குக் கீழாக ஊழியர்கள் இருக்கின்றனரோ, அந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வைப்பு நிதி (Provident Fund - PF), ஊழியர் காப்பீடு (Employee State Insurance - ESI) ஆகியவற்றை அவ்ழங்க வேண்டியதில்லை. அதாவது என் வீட்டில் ஒரு சமையற்காரர், வண்டி ஓட்டுனர் ஆகியோர் உள்ளனர். நான் அவர்களுக்கு இதுவரையில் PF, ESI என்று எதுவும் செலுத்த வேண்டியிருந்ததில்லை. தெருவோரப் பெட்டிக்கடை, தையல் கடை, தெருவோரத்தில் இஸ்திரி போடுபவரிடம் வேலை பார்க்கும் சிறுவன் ஆகியோருக்கு PF, ESI கிடையாது. ஒரு புத்தக அச்சகத்தில் 10 பேர் வேலை செய்தாலும் அவர்கள் யாருக்கும் PF, ESI கட்ட வேண்டியது அச்சக உரிமையாளரின் கடமையில்லை.
இப்பொழுது மத்தியக் கேபினட் முடிவின்படி ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் முறைசாராத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் 18-35 வயதுக்குக் கீழ் இருந்தால் ரூ. 50ம், அதற்கு மேல் இருந்தால் ரூ. 100ம் கட்ட வேண்டும். உரிமையாளர்கள், 35க்குக் கீழுள்ளவர்களுக்கு ரூ. 100ம், அதற்கு மேல் இருந்தால் ரூ. 200ம், மத்திய அரசின் ஊழியர் வைப்பு நிதி அலுவலகத்திடம் கட்ட வேண்டும். மத்திய அரசு இந்தத் தொகைக்கு மேல் ஊழியரின் ஊதியத்தில் 1.16% தொகையை (குறைந்த பட்சம் ரூ. 20.88 (1800இல் 1.16%), அதிக பட்சம் ரூ. 75.40 (6500இல் 1.16%)) மாதத்திற்கு சேர்க்கும். இப்படி சேர்ந்த தொகையை வைத்து ஊழியர் ஓய்வடைந்தால் அல்லது வேலை செய்ய முடியாத அளவிற்கு உடல் ஊனமடைந்தால், மாதத்திற்கு ரூ. 500 ஓய்வூதியமாக வழங்கும். அவரது இறப்பிற்குப் பிறகு கணவன்/மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ ஓய்வூதியம் தொடரும். ரூ. ஒரு லட்சம் அளவிற்கு ஆயுள் காப்பீடும் வழங்கப்படும்.
நல்ல திட்டம். எப்படி நடைமுறைப்படுத்தப் படுகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
Monday, January 05, 2004
போலியோ சொட்டுமருந்து
தமிழகம் முதற்கொண்டு இந்தியாவில் அரசின் முதலீடு சுகாதாரம் மற்றும் தொடக்கநிலை மருத்துவத்தில் போதாக்குறையாகவே இருந்து வருகிறது. ஆனால் போலியோ சொட்டு மருந்து விஷயத்தில் இந்திய அரசின் இயக்கம் வெகுவாகப் பாரட்டப்பட வேண்டியது. போன மாதமே என் வீட்டிற்கு ஒரு சுகாதாரத் துறை அலுவலர் வந்து முதலாம் தவணையாக ஜனவரி நான்காம் தேதி என் குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனார். கடந்த சில நாட்களாகவே தெருவெங்கும் ஆட்டோ வண்டியில் திரைப்படப் பாடல்களைப் பாடிக் கொண்டு, முதல்வர் ஜெயலலிதாவின் குரலில் குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே கொடுத்திருந்தாலும், மீண்டும் கொடுக்கவேண்டும் என்றும் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது.
நேற்று நான் என் வீட்டின் அருகில் உள்ள நகரமன்ற சுகாதார மையத்துக்குச் சென்று என் குழந்தைக்கு சொட்டுமருந்து கொடுத்தேன். மக்கள் உள்ளே வந்தவண்ணம் இருந்தனர். சிறிதும் நேரம் எடுக்காமல் வந்தவுடனேயே ஒரு ஊழியர், ஒரு தாளில், எத்தனையாவது குழந்தை என்று கணக்கிட்டார். அடுத்து மற்றுமொரு ஊழியர் வாயில் இரண்டு சொட்டுகளை விட்டு, கையில் ஒரு 'சாக்லேட்' கொடுத்தார். முதலாமவர் குழந்தையின் கையில் 'அழியா மசி'யினால் குறியிட்டார். மொத்தமாக ஒரு நிமிடம் பிடித்தது. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாது மக்கள் உள்ளே வந்து, வேலையை முடித்துக் கொண்டு, உடனடியாக வெளியேறினர்.
இன்று செய்தித்தாளில், நேற்று 70 லட்சம் பேருக்கு தமிழகத்தில் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது என்று செய்தி வந்துள்ளது. ஒரே நாளில் மிகவும் நேர்த்தியாக தமிழகமெங்கிலும் வேலை நடந்ததோடு, புள்ளி விவரமும் உடனடியாக வந்து சேர்ந்துள்ளது.
நேற்று நான் என் வீட்டின் அருகில் உள்ள நகரமன்ற சுகாதார மையத்துக்குச் சென்று என் குழந்தைக்கு சொட்டுமருந்து கொடுத்தேன். மக்கள் உள்ளே வந்தவண்ணம் இருந்தனர். சிறிதும் நேரம் எடுக்காமல் வந்தவுடனேயே ஒரு ஊழியர், ஒரு தாளில், எத்தனையாவது குழந்தை என்று கணக்கிட்டார். அடுத்து மற்றுமொரு ஊழியர் வாயில் இரண்டு சொட்டுகளை விட்டு, கையில் ஒரு 'சாக்லேட்' கொடுத்தார். முதலாமவர் குழந்தையின் கையில் 'அழியா மசி'யினால் குறியிட்டார். மொத்தமாக ஒரு நிமிடம் பிடித்தது. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாது மக்கள் உள்ளே வந்து, வேலையை முடித்துக் கொண்டு, உடனடியாக வெளியேறினர்.
இன்று செய்தித்தாளில், நேற்று 70 லட்சம் பேருக்கு தமிழகத்தில் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது என்று செய்தி வந்துள்ளது. ஒரே நாளில் மிகவும் நேர்த்தியாக தமிழகமெங்கிலும் வேலை நடந்ததோடு, புள்ளி விவரமும் உடனடியாக வந்து சேர்ந்துள்ளது.
தினமலரில் இன்றைய தலைப்பு
இன்றைய தினமலரில் தலைப்பு
"திருப்பம்!""இன்று வாஜ்பாய் மூலம்" என்றால் என்ன பொருள்? எனக்கு விளங்கவில்லை. வாஜ்பாயிக்கு மூல நோயா? அடுத்த வரியுடன் சேர்த்துப் படித்தாலும் பொருள் கொள்ள முடியவில்லை. வாஜ்பாய் மூலமாக யாராவது இன்று முஷாரப்பை சந்திக்கிறாரா? இல்லை, சார்க் மாநாட்டில் வாஜ்பாய் பேசிய உரையின் மூலப்பிரதியினை தினமலர் நமக்குக் கொடுக்கிறதா?
"இஸ்லாமாபாத்தில் இன்று வாஜ்பாய் மூலம்"
"இன்று முஷாரப்பை சந்திக்கிறார்"
"இஸ்லாமாபாத்தில் இருந்து ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி"
Sunday, January 04, 2004
சங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு
இன்றைய சன் நியூஸ் சங்கம் நிகழ்ச்சியில் மாலன், மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவை சந்தித்து உரையாடினார். இந்த உரையாடல் பொதுவாக மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் எழுத்து பற்றியது. இதற்கு முன்னர் நான் பார்த்த சங்கம் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு புத்தகம், அதன் ஆசிரியர் மற்றும் அவர்களைச் சார்ந்தவை என்று போகும்.
* மலேசியத் தமிழ் எழுத்தில் (ரெ.காவின் எழுத்தில்) இலங்கைத் தமிழின் தாக்கம் இருக்கிறதா என்று கேட்டார் மாலன். (எ.கா: 'கேலி செய்தல்' - தமிழ்நாட்டு வழக்கு; 'பகடி பேசுதல்' - இலங்கை வழக்கு). ரெ.கா இந்தப் பேச்சு மலேசியத் தமிழில் இருப்பதாகவும், அவர்களுக்குள்ளே பேசும்போது இவற்றைப் புழங்குவதாகவும், அதுதான் எழுத்தில் வெளிப்படுகிறதென்றும் சொன்னார்.
* மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை விளக்கினார். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கூலித் தொழிலாளிகளாகப் போனவர்களில் சிலர் அப்பொழுதே எழுதப் படிக்கக் கூடியவர்களாக இருந்தனர். மலேசியாவில் தொடக்கத்தில் தமிழில்தான் புத்தகங்கள் பதிப்பாயின. அதன்பின்னர்தான் சீன, மலாய் மொழிகளில். தொடக்கத்தில் பதிப்பான புத்தகங்கள் மதங்களைப் பற்றியது (இந்து, கிறித்துவம்). பிறகு இந்திய சுதந்திரம் பற்றிய எழுத்துக்கள் வர ஆரம்பித்தன. பின்னர் சீர்திருத்தம் தொடர்பான (பெரியார், திராவிடப் பரம்பரை) எழுத்துக்கள் - தமிழர்களின் வாழ்வு, அது எப்படி சீன, மலாய் மக்களின் வாழ்வை விடப் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பன போன்றவை.
* இப்பொழுதும் இவையே இருப்பதாகவும், 'நவீனத்துவம்', 'மாய யதார்த்தம்', 'பின் நவீனத்துவம்' போன்றவகை எழுத்துக்கள் மலேசியத் தமிழில் இல்லை என்றும் சொன்னார். முன்னர் தான் படிக்கும்போது இம்மாதிரியான நவீன எழுத்துக்களை இரு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாது விட்டுவிட்டதாகவும், இப்பொழுது அவைகளைப் படித்து, அவர்கள் கதை சொல்லும் முறையிலும் 'ஏதோ' ஒன்று இருக்கிறது என்று சற்றே புரிந்துகொள்வதாகவும் சொன்னார். 1992 வரை தன் அலுவல் காரணமாக அதிகம் எழுதியதில்லை, எழுத்து பகுதிநேரப் பொழுதுபோக்காக இருந்தது என்றும், இப்பொழுது ஓய்வுக்குப் பின்னர் முழுநேரம் எழுதும்போதுதான் தான் முன்னர் எழுதியதில் உள்ளது மாதிரி இல்லாமல், அடர்த்தியோடு எழுத முயல்வதாகச் சொன்னார். அவரது தற்போதைய சிறுகதைகளில் மாய யதார்த்தம், நவீனத்துவ சாயல்கள் இருக்கும் என்றார்.
* சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோரது எழுத்துக்கள் தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார். ஜெயகாந்தனது எழுத்துக்களுடன் முன்னமே பரிச்சயம் இருந்தாலும், மீண்டும் அதில் மூழ்கிப் படித்தது கடந்த பத்து வருடங்களில்தான் என்றார்.
* மலேசியத் தமிழர்கள் பள்ளிகளில் மலாயில்தான் படிக்கிறார்கள். இதனால் தமிழ் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது என்கிறார். (தமிழ்நாட்டில் கூட தமிழ் இக்கட்டான சூழலில்தான் இருக்கிறது. இங்கு பலரும் ஆங்கிலத்தில்தான் கல்வி கற்கிறார்கள்.)
* மற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர்களாக பீர் முகமது, ஜீவானந்தன் (மற்றும் இரண்டு பெயர்கள், ஆனால் எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை) ஆகியவர்களைக் குறிப்பிட்டார்.
* மாலன் கணினி/இணையம் பற்றி விசாரிக்கையில், மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கணினி/இணையத்தைப் பயன்படுத்துவதில்லை, இவரும், அறிஞர் ஜெயபாரதி (அகத்தியம் குழு) ஆகிய இருவர் மட்டுமே கணினி/இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் சொன்னார். முரசு அஞ்சல் மென்பொருளை முதலில் பயன்படுத்திய தனி நபர் நுகர்வர் இவர்தான் என்றும் சொன்னார். (கணினியில் தமிழில் எழுதப் வகை செய்யும் முக்கிய மென்பொருளான முரசு அஞ்சலை உருவாக்கிய முத்து நெடுமாறன் மலேசியாக்காரர்.)
===
எழுத்தாளர் ரெ.கா தற்பொழுது தமிழகத்தில்தான் இருக்கிறார். அடுத்த வாரம், 10, 11 தேதிகளில் சென்னையில் நடக்கும் "தமிழ் இலக்கியம் 2004" என்னும் விழாவில் கலந்து கொள்ளப் போகிறார்.
மாலன், வைரமுத்து சந்திப்பு
* மலேசியத் தமிழ் எழுத்தில் (ரெ.காவின் எழுத்தில்) இலங்கைத் தமிழின் தாக்கம் இருக்கிறதா என்று கேட்டார் மாலன். (எ.கா: 'கேலி செய்தல்' - தமிழ்நாட்டு வழக்கு; 'பகடி பேசுதல்' - இலங்கை வழக்கு). ரெ.கா இந்தப் பேச்சு மலேசியத் தமிழில் இருப்பதாகவும், அவர்களுக்குள்ளே பேசும்போது இவற்றைப் புழங்குவதாகவும், அதுதான் எழுத்தில் வெளிப்படுகிறதென்றும் சொன்னார்.
* மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை விளக்கினார். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கூலித் தொழிலாளிகளாகப் போனவர்களில் சிலர் அப்பொழுதே எழுதப் படிக்கக் கூடியவர்களாக இருந்தனர். மலேசியாவில் தொடக்கத்தில் தமிழில்தான் புத்தகங்கள் பதிப்பாயின. அதன்பின்னர்தான் சீன, மலாய் மொழிகளில். தொடக்கத்தில் பதிப்பான புத்தகங்கள் மதங்களைப் பற்றியது (இந்து, கிறித்துவம்). பிறகு இந்திய சுதந்திரம் பற்றிய எழுத்துக்கள் வர ஆரம்பித்தன. பின்னர் சீர்திருத்தம் தொடர்பான (பெரியார், திராவிடப் பரம்பரை) எழுத்துக்கள் - தமிழர்களின் வாழ்வு, அது எப்படி சீன, மலாய் மக்களின் வாழ்வை விடப் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பன போன்றவை.
* இப்பொழுதும் இவையே இருப்பதாகவும், 'நவீனத்துவம்', 'மாய யதார்த்தம்', 'பின் நவீனத்துவம்' போன்றவகை எழுத்துக்கள் மலேசியத் தமிழில் இல்லை என்றும் சொன்னார். முன்னர் தான் படிக்கும்போது இம்மாதிரியான நவீன எழுத்துக்களை இரு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாது விட்டுவிட்டதாகவும், இப்பொழுது அவைகளைப் படித்து, அவர்கள் கதை சொல்லும் முறையிலும் 'ஏதோ' ஒன்று இருக்கிறது என்று சற்றே புரிந்துகொள்வதாகவும் சொன்னார். 1992 வரை தன் அலுவல் காரணமாக அதிகம் எழுதியதில்லை, எழுத்து பகுதிநேரப் பொழுதுபோக்காக இருந்தது என்றும், இப்பொழுது ஓய்வுக்குப் பின்னர் முழுநேரம் எழுதும்போதுதான் தான் முன்னர் எழுதியதில் உள்ளது மாதிரி இல்லாமல், அடர்த்தியோடு எழுத முயல்வதாகச் சொன்னார். அவரது தற்போதைய சிறுகதைகளில் மாய யதார்த்தம், நவீனத்துவ சாயல்கள் இருக்கும் என்றார்.
* சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோரது எழுத்துக்கள் தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார். ஜெயகாந்தனது எழுத்துக்களுடன் முன்னமே பரிச்சயம் இருந்தாலும், மீண்டும் அதில் மூழ்கிப் படித்தது கடந்த பத்து வருடங்களில்தான் என்றார்.
* மலேசியத் தமிழர்கள் பள்ளிகளில் மலாயில்தான் படிக்கிறார்கள். இதனால் தமிழ் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது என்கிறார். (தமிழ்நாட்டில் கூட தமிழ் இக்கட்டான சூழலில்தான் இருக்கிறது. இங்கு பலரும் ஆங்கிலத்தில்தான் கல்வி கற்கிறார்கள்.)
* மற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர்களாக பீர் முகமது, ஜீவானந்தன் (மற்றும் இரண்டு பெயர்கள், ஆனால் எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை) ஆகியவர்களைக் குறிப்பிட்டார்.
* மாலன் கணினி/இணையம் பற்றி விசாரிக்கையில், மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கணினி/இணையத்தைப் பயன்படுத்துவதில்லை, இவரும், அறிஞர் ஜெயபாரதி (அகத்தியம் குழு) ஆகிய இருவர் மட்டுமே கணினி/இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் சொன்னார். முரசு அஞ்சல் மென்பொருளை முதலில் பயன்படுத்திய தனி நபர் நுகர்வர் இவர்தான் என்றும் சொன்னார். (கணினியில் தமிழில் எழுதப் வகை செய்யும் முக்கிய மென்பொருளான முரசு அஞ்சலை உருவாக்கிய முத்து நெடுமாறன் மலேசியாக்காரர்.)
===
எழுத்தாளர் ரெ.கா தற்பொழுது தமிழகத்தில்தான் இருக்கிறார். அடுத்த வாரம், 10, 11 தேதிகளில் சென்னையில் நடக்கும் "தமிழ் இலக்கியம் 2004" என்னும் விழாவில் கலந்து கொள்ளப் போகிறார்.
மாலன், வைரமுத்து சந்திப்பு
Friday, January 02, 2004
ஸ்டார் நியூஸுக்கு அரசின் அனுமதி
Thursday, January 01, 2004
கடந்த காலாண்டில் GDP வளர்ச்சி
மைய அரசின் புள்ளிவிவரத்துறை கடந்த மூன்று மாதங்களில் (காலாண்டில்) அதற்கு முந்தைய வருடத்தின் இதே காலாண்டுடன் (Q3 = அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள்) ஒப்பிடுகையில் பல்வேறு துறைகளில் வளர்ச்சி எப்படி இருந்தது என்று ஒரு ஒப்பீட்டுப் பட்டியல் கொடுத்துள்ளனர்.
இந்த ஒப்பீட்டில் பொருளாதாரத் துறையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் GDP (Gross Domestic Product - இதன் அங்கீகரிகப்பட்ட தமிழாக்கம் என்னவென்று தெரியவில்லை) என்னும் சொல்லின் பொருளை நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். GDP என்பது ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நுகரப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை விலை. GDP = நாட்டின் நுகர்வோர் அனைவரும் செய்யும் செலவு + அரசு மற்றும் தனியார் செய்யும் முதலீடு + ஏற்றுமதியாகும் பொருட்கள்/சேவைகளின் விலை - இறக்குமதியாகும் பொருட்கள்/சேவைகளின் விலை. இதில் கருப்புப்பணம், கருப்புமுதலீடுகள், கடத்தல், கஞ்சா மற்றும் சட்டவிரோதமானவை அடங்காது. இந்த GDPயை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்பது எனக்கு எப்பொழுதும் ஆச்சரியத்தைக் கொடுக்ககூடிய ஒன்று. ஏதோ ஒரு ஊரில் ஒருவர் பெட்டிக்கடை நடத்தச் செய்யும் முதலீடு எப்படி இந்த மையப் புள்ளியியல் துறைக்குத் தெரிய வரும்?
எப்படியோ, ஒவ்வொரு காலாண்டிலும் இந்தத் தகவல் மையப் புள்ளியியல் துறையால் வெளியிடப்படுகிறது. அதன்படி நடந்து முடிந்த காலாண்டில் 8.4% வளர்ச்சி அத்தனை துறைகளிலும் சேர்ந்து நடந்துள்ளது. துறை வாரியாகக் கீழே:
இதில் தனியார் மற்றும் சமூகம் தொடர்பான சேவைகள் என்றால் முடி வெட்டுவது, அழகு நிலையத்தில் கால் நகம் வெட்டுவது, பல் ஆஸ்பத்திரியில் பல் பிடுங்குவது, கல்யாணம் பண்ணிவைக்க ஐயர் காசு வாங்குவது இதெல்லாம் வருமென்று நினைக்கிறேன். இதில் ஒருசில கூட்டுசேர்த்தல் புரியமாட்டேன் என்கிறது. ஏன் வியாபாரத்தையும் (உப்பு, புளி, டயபர், ஷேவிங் கிரீம் விற்பது), தொலைதொடர்பையும் ஒன்றாகப் போட்டுள்ளனர் என்று புரியவில்லை. பிரித்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
தி இந்து செய்தியில், இந்த வருடத்தைய வளர்ச்சியை, போன வருடத்தைய வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.
இந்த ஒப்பீட்டில் பொருளாதாரத் துறையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் GDP (Gross Domestic Product - இதன் அங்கீகரிகப்பட்ட தமிழாக்கம் என்னவென்று தெரியவில்லை) என்னும் சொல்லின் பொருளை நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். GDP என்பது ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நுகரப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை விலை. GDP = நாட்டின் நுகர்வோர் அனைவரும் செய்யும் செலவு + அரசு மற்றும் தனியார் செய்யும் முதலீடு + ஏற்றுமதியாகும் பொருட்கள்/சேவைகளின் விலை - இறக்குமதியாகும் பொருட்கள்/சேவைகளின் விலை. இதில் கருப்புப்பணம், கருப்புமுதலீடுகள், கடத்தல், கஞ்சா மற்றும் சட்டவிரோதமானவை அடங்காது. இந்த GDPயை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்பது எனக்கு எப்பொழுதும் ஆச்சரியத்தைக் கொடுக்ககூடிய ஒன்று. ஏதோ ஒரு ஊரில் ஒருவர் பெட்டிக்கடை நடத்தச் செய்யும் முதலீடு எப்படி இந்த மையப் புள்ளியியல் துறைக்குத் தெரிய வரும்?
எப்படியோ, ஒவ்வொரு காலாண்டிலும் இந்தத் தகவல் மையப் புள்ளியியல் துறையால் வெளியிடப்படுகிறது. அதன்படி நடந்து முடிந்த காலாண்டில் 8.4% வளர்ச்சி அத்தனை துறைகளிலும் சேர்ந்து நடந்துள்ளது. துறை வாரியாகக் கீழே:
| GDP | 2002 Q3 கோடி ரூபாய்கள் | 2003 Q3 கோடி ரூபாய்கள் | விழுக்காடு அதிகம் | |
| 1 | விவசாயம், மீன்வளம், காடு வளம் | 53,105 | 57,033 | 7.4% |
| 2 | கனிம வளம் | 6,999 | 7,157 | 2.3% |
| 3 | பொருள் உற்பத்தி | 55,098 | 59,124 | 7.3% |
| 4 | மின்சாரம், எரிவாயு, தண்ணீர் | 8,042 | 8,272 | 2.9% |
| 5 | கட்டிடம் கட்டுதல் | 16,709 | 17,786 | 6.4% |
| 6 | வியாபாரம், சுற்றுலா (விடுதிகள்+போக்குவரத்து), தொலைதொடர்பு | 74,643 | 83,495 | 11.9% |
| 7 | வங்கி, காப்பீடு, வீட்டு மனை, தொழில் சேவைகள் | 40,944 | 43,924 | 7.3% |
| 8 | தனியார், சமூகம் தொடர்பான சேவைகள் | 42,805 | 46,622 | 8.9% |
| மொத்தம் | 298,345 | 323,414 | 8.4% | |
இதில் தனியார் மற்றும் சமூகம் தொடர்பான சேவைகள் என்றால் முடி வெட்டுவது, அழகு நிலையத்தில் கால் நகம் வெட்டுவது, பல் ஆஸ்பத்திரியில் பல் பிடுங்குவது, கல்யாணம் பண்ணிவைக்க ஐயர் காசு வாங்குவது இதெல்லாம் வருமென்று நினைக்கிறேன். இதில் ஒருசில கூட்டுசேர்த்தல் புரியமாட்டேன் என்கிறது. ஏன் வியாபாரத்தையும் (உப்பு, புளி, டயபர், ஷேவிங் கிரீம் விற்பது), தொலைதொடர்பையும் ஒன்றாகப் போட்டுள்ளனர் என்று புரியவில்லை. பிரித்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
தி இந்து செய்தியில், இந்த வருடத்தைய வளர்ச்சியை, போன வருடத்தைய வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.
முடிக்கு 30 கோடி ரூபாய்
எல்லா நிறுவனங்களும் 2003இல் தாங்கள் என்ன சாதித்தோம் என்று அறிக்கை வழங்குவதுபோல் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் அறிக்கை வழங்கியுள்ளது.
2003இல் பக்த'கோடி'கள் வெங்கடேசனது உண்டியலில் ரூ. 190 கோடியை காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். இது 2002ஐ விட ரூ. 12.5 கோடி அதிகமாம் (7% அதிகம்). இதற்கு மேற்பட்டு, தங்கம், வைரம் என்றெல்லாம் குவிந்திருப்பதைப் பற்றி தனிக்கணக்கு போடவேண்டுமாம். பக்தர்கள் வேண்டி அடித்துக் கொள்ளும் மொட்டை கூட தேவஸ்தானத்துக்கு ரூ. 30 கோடி அளவில் பைசா கொடுத்துள்ளது.
ஆக 2003இல் திருப்பதியின் வருமானம் 500 கோடிக்கும் மேலாகிறதாம். நடக்கும் 2003-04 ஆண்டிற்கான திட்டச் செலவு ரூ. 552 கோடி ரூபாயாம். அப்படியானால் வருமானம் நிச்சயமாக அதற்கு மேல் இருக்க வேண்டும். தேவஸ்தானத்தின் கையிருப்பு ரூ. 1000 கோடிக்கும் மேல் வங்கிகளில் போடப்பட்டிருக்கின்றனவாம்!
2003இல் பக்த'கோடி'கள் வெங்கடேசனது உண்டியலில் ரூ. 190 கோடியை காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். இது 2002ஐ விட ரூ. 12.5 கோடி அதிகமாம் (7% அதிகம்). இதற்கு மேற்பட்டு, தங்கம், வைரம் என்றெல்லாம் குவிந்திருப்பதைப் பற்றி தனிக்கணக்கு போடவேண்டுமாம். பக்தர்கள் வேண்டி அடித்துக் கொள்ளும் மொட்டை கூட தேவஸ்தானத்துக்கு ரூ. 30 கோடி அளவில் பைசா கொடுத்துள்ளது.
ஆக 2003இல் திருப்பதியின் வருமானம் 500 கோடிக்கும் மேலாகிறதாம். நடக்கும் 2003-04 ஆண்டிற்கான திட்டச் செலவு ரூ. 552 கோடி ரூபாயாம். அப்படியானால் வருமானம் நிச்சயமாக அதற்கு மேல் இருக்க வேண்டும். தேவஸ்தானத்தின் கையிருப்பு ரூ. 1000 கோடிக்கும் மேல் வங்கிகளில் போடப்பட்டிருக்கின்றனவாம்!
Wednesday, December 31, 2003
விளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்
"மகனுக்கு மேற்படிப்பா? மகளுக்குத் திருமணமா? எங்கள் வங்கி கடன் கொடுக்கத் தயாராயிருக்கிறது." என்று வங்கிகள் சில வருடங்கள் முன்னர் வரை கூட விளம்பரம் செய்து வந்தன. அரசு ஊழியர்கள் தங்கள் வைப்பு நிதியிலிருந்து முன்பணம் கடனாகப் பெற விரும்பினால் இரண்டு காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மகனது மேற்படிப்பு, மகளது திருமணம்!
சில வருடங்களாக வங்கிக் கடன் விளம்பரங்களில் பெண்களும் பட்டப்படிப்பு பெறுவது போல் காண்பிக்கப்படுகின்றனர். ஆனால் மற்ற பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விளம்பரங்கள் முழுக்க முழுக்க பெண்களை இழிவு செய்யுமாறும், ஆண்களின் ஆதிக்கத்தை சத்தமின்றி ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் அதை மேலும் அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளன.
"சிகப்பழகுக்" களிம்பு
1978 முதல் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் 'ஃபேர் அண்ட் லவ்லி' என்னும் சிகப்பழகுக் களிம்பை விற்று வருகிறது. இப்பொழுது இன்னமும் பல நிறுவனங்கள் இவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு விற்க ஆரம்பித்துள்ளனர். விற்பனை செய்வதில் நமக்கு எந்த சண்டையும் இல்லை. ஆனால் இந்த சிகப்பழகு விற்பனையாளர்கள் தொலைக்காட்சிகளில், அல்லது திரையரங்குகளில் காண்பிக்கும் விளம்பரங்கள் மிகவும் கேடானவை.
1. சிகப்பழகுக் களிம்பைப் பயன்படுத்தும் முன்னர் விளம்பரத்தில் காட்டப்படும் ஒரு இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளையாக ஒரு புகைப்படம் வந்திருக்கும். அதில் வயதான, அழகில்லாத ஆண் வருவார். வீட்டில் அனைவரும் இந்த மாப்பிள்ளையே போதும் என்று எண்ண, ஒரு சிறுவன் மட்டும் கண்ணால் பெண்ணுக்கு சைகை காட்டி இந்த வரன் சரியில்லை என்பான். பெண் தன் முகத்துக்கு இதற்கு மேல் கிடைக்காது என்று வருத்தத்துடன் முடிவு செய்ய, அப்பொழுது விளம்பர அசரீரி 'முகத்தையும் மாற்றலாம், ஜாதகத்தையும் மாற்றலாம்' என்று சிகப்புக் கிரீமை அருளும். அந்தப் பசையை முகத்தில் அப்பிக் கொண்டவுடன் கணினி வரைகலையால் உருவாக்கப்பட்ட அடுத்தடுத்த திரைகளில் அந்தப் பெண்ணின் முகம் புத்துயிர் பெற்று ஒளிரும். அடுத்த காட்சியில் ஒரு அழகான யுவன் அவளது வதனத்தின் ஒளியில் மயங்குவான். வீட்டிலுள்ளோர் அனைவரும் 'ஜாதகமே மாறி விட்டது' என்று ஒத்துக் கொள்வர்.
2. சிகப்பழகுப் பசை பயன்படுத்தும் முன்னர் இளம்பெண் ஒன்றுக்கும் உதவாத வேலையில் இருப்பார். வீட்டில் காப்பிக்கே வழியில்லை. அவளது தந்தையார் சொற்களால் பெண்ணின் மனதை ஈட்டியால் துளைப்பார். பெண்ணின் கண்ணில் விமானப் பணிப்பெண் வேலைக்கான விளம்பரம் விழும். ஆனால் 'இந்த மூஞ்சிக்கு' அந்த வேலையெல்லாம் கிடைக்காது என்று தோன்றும். அப்பொழுது 'விளம்பர அசரீரி'யானது "ஏன் முடியாது? இதோ சிகப்பழகு கிரீம்" என்னும். 'அந்த மூஞ்சி'யில் பசை அப்பியபின் 'அந்த மூஞ்சி' விமானப் பணிப்பெண் நேர்முகத் தேர்வில் கலக்கியடித்து, ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் அப்பாவுக்குக் காப்பி வாங்கித் தரும்.
3. சிகப்பழகுப் பசைக்கு முந்தைய பெண்ணின் முகம் கிரிக்கெட் நேர்முக வர்ணனையை கண்ணாடிக்கு முன்னால் சொல்லிப் பழகும். நீ ஏன் தொலைக்காட்சி வர்ணனையாளராகப் போகக்கூடாது என்ற தோழியின் கேள்விக்கு 'இந்த மூஞ்சி'யால் இதெல்லாம் முடியுமா என்று ஏக்கம் கொள்ளும். வந்ததே சிகப்பழகுப் பசை. அடுத்த காட்சியில் 'பள பள' முகம் ஓரு முன்னாள் கிரிக்கெட் வீரர், இன்னாள் வர்ணனையாளர் பக்கத்தில் இருந்து நேர்முக வர்ணனை செய்யும்.
ஆக, சிகப்பழகுப் பசை இல்லையேல் - திருமணம் நடக்காது, இல்லை ஒரு கிழவனுக்கு இரண்டாந்தரம், வேலை கிடைக்காது. தகுதி இருந்தாலும்... முகத்தழகு இல்லையெனில் பெண்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை. இப்படிப்பட்ட ஒழுக்ககேடான விளம்பரங்கள் இன்னமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் பெண்களின் நிலை சமூகத்தில் கீழிறங்கிக் கொண்டே போகிறது. இந்த விளம்பரங்களை நம்பும் எத்தனையோ பெண்களுக்குத் தங்கள் தோலின் நிறத்தை வைத்துத் தங்களால் வாழ்க்கையில் உயரவே முடியாது என்றதொரு எண்ணம் வரலாம். வந்துள்ளது என்று சிலரிடம் பேசியதில் அறிகிறேன். நிறம் 'மங்கல்' என்பதால் 70 சவரனுக்கு பதில் 150 சவரன் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்களாம்.
இருபாலருக்கும் பொதுவானதில்லை இந்த இழிநிலை செய்யும் விளம்பரங்கள். ஆண்களின் முகத்துக்கு பசை யாரும் விற்பதில்லை. ஆண்களின் நிறத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆண்களுக்கான பிரத்யேக விளம்பரங்கள் முகத்தில் முடி மழிப்பதற்கானது. அந்த விளம்பரங்களும் எதிர்மறையாக வருவதில்லை. நன்றாக மழித்த முகமிருந்தால் பெண்கள் ஓடிவந்து முகத்தைத் தடவி வழிவார்கள் என்று சொல்கிறதே தவிர, முகத்தை மழிக்காவிட்டால் பெண்கள் ஓடிப்போவார்கள் என்று சொல்வதில்லை. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி விளம்பரங்களில். ஏன்?
ஒரே விதிவிலக்கு உடல் நாற்றம் மற்றும் வியர்வை எதிர்ப்பான்களின் (anti-perspirant, deodorant) விளம்பரங்கள். இவ்விளம்பரங்களில் நாற்றமடிக்கும் ஆண்களை ஆடுகள் போல என்று நினைத்துப் பெண்கள் கேலி செய்வது போலவும் காட்சிகள் வரும்.
பெண்களை காட்சிப் பொருளாக மட்டுமே காட்டும் விளம்பரங்கள்
1. "உங்களது நண்பருக்கு ஆளை மயங்கடிக்கும் பெண் மனைவியாய் வாய்த்தால் என்ன? போகட்டுமே" என்கிறது ஒரு சொகுசுக் கார் விளம்பரம். அதாவது அவரிடம் 'அழகான மனைவி' என்னும் சொத்து இருக்கட்டும், உங்களிடம் இந்த அழகான சொகுசுக் கார் இருக்கிறதே என்று சொல்கிறது விளம்பரம். காருக்கு மனைவி சமமா? ஒரு காரைப் போல மனைவி கணவனின் உடைமையா? இது போல ஆண்களைக் காட்சிப்பொருளாக்கும் விளம்பரங்கள் ஏன் இல்லை? பெண் என்றால் கிள்ளுக்கீரையா?
2. ஒரு கண்ணாடி விளம்பரத்தில் இறுக்கமாகக் குட்டையாடை அணிந்து கொண்டு ஒரு பெண், ஒரு அலுவலகக் கட்டிடத்தில், கையில் பல கோப்புகளை எடுத்துக் கொண்டு நடக்கிறார். அவரைப் பார்த்தவுடன் இரு ஆண்கள் வேலையெல்லாவற்றையும் விட்டு விட்டு அவரைப் பின்தொடர்கின்றனர். அவர் 'லிஃப்ட்'டின் உள்ளே நுழையும் போது கோப்பிலிருந்து தாள்கள் சில கீழே விழுகின்றன. அந்தப் பெண் குனிந்து அந்தத் தாள்களை எடுக்கும் போது 'தரிசிக்க' அந்தப் பெண்ணின் உறுப்புகள் ஏதேனும் தெரியுமோ என்று அந்த ஆண்கள் காத்துக் கொண்டிருக்கையில் லிஃப்ட் கதவுகள் மூடிவிடுகிறது. அந்த லிஃப்ட்டுக்குக் கண்ணாடிக் கதவுகள் வைத்திருந்தால் 'எல்லாவற்றையும்' பார்த்திருக்கலாமே என்கிறது விளம்பரம்.
இதை விடப் பெண்களை இழிவு செய்யும் விளம்பரங்கள் ஏதேனும் இருக்க முடியுமா?
3. ஒரு எண்ணெய் விளம்பரம். இந்த எண்ணெய் சர்வரோகநிவாரணியாம். எதை வேண்டுமானாலும் இதன் மூலம் குணப்படுத்தி விடலாமாம். முகம் சிவப்பாக; கால்களில் பித்த வெடிப்பு நீங்க என்று காலிலிருந்து முகம் வரை. ஒரு மனைவி கணவன் 'ஹாய்'யாகக் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு செய்தித்தாள் படிக்கும் போது கொண்டு வந்து காபி தருகிறார். கணவன் மனைவியின் வயிற்றில் உள்ள பிரசவத்தினால் ஆன வரிகளைப் பார்க்கிறார் (வயிறு விரிந்து பிரசவத்துக்குப் பின்னர் திடீரென்று சுருங்குவதால் ஆனது), முகம் சுளிக்கிறார். மனைவியும் வருத்தத்தோடு என்னவெல்லாமோ முயற்சித்து விட்டேன், போகவில்லை என்கிறார். விளம்பர அசரீரி துணைக்கு வருகிறது. வேறென்ன, அதே எண்ணெய்தான், இப்ப வயித்திலயும் தடவுங்க.
நீங்கள் பெண்ணாயிருந்தால் அந்தக் கணவனின் முகம் சுளிக்கும் போது எரிச்சல் வருமா, வராதா சொல்லுங்கள்?
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதில் ஓரிரு பொருட்களைத் தவிர மீதி எல்லாம் பெண்களால் நுகரப்படுவது. பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
1. முதலில் தங்கள் எரிச்சலை வெளிப்படுத்த வேண்டும். இந்த விளம்பரங்களைச் செய்யும் நிறுவனங்கள் பல பங்குச்சந்தையில் உள்ளவை. எனவே அவர்களது வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு (annual general meeting) சென்று கோஷமிடுவதோடு மட்டுமல்லாமல், பிராக்ஸி வாக்குகள் வாங்கி இம்மாதிரி விளம்பரங்களைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற முயலுங்கள். தீர்மானம் நிறைவேறாமல் தோற்றாலும், ஊடகங்களில் வரும் எதிர்மறைச் செய்திகளுக்குப் பயந்து இந்த நிறுவனங்கள் தங்கள் செய்கைகளை மாற்றிக் கொள்ளலாம்.
2. இம்மாதிரிப் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரி, இணைய தள கருத்துப் பக்கங்கள் ஆகியவற்றில் உங்களது கோபத்தை வெளிப்படுத்துங்கள்.
3. இப்பொருட்களை வாங்காதீர்கள். இப்பொருட்களை விற்கும் நிறுவனங்கள் செய்யும் மற்றப் பொருட்களையும் நிராகரியுங்கள். அவர்களது போட்டி நிறுவனங்கள் பெண்களை இழிவுசெய்யாத வகையில் விளம்பரம் செய்யுமானால் அந்தப் பொருட்களை வாங்குங்கள்.
4. சிகப்பு நிறத்தின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் உள்ளார்ந்த விருப்பம், மற்றும் அதன் நீட்சியான கருமை நிறத்தின் மீது உள்ள வெறுப்பு ஆகியவை மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. தீண்டாமைக்கு அடுத்ததாகப் பெரிய பிரச்சினையாக இதைத்தான் சொல்வேன். அதிலும் பெண்கள் மீது மட்டுமே இந்தக் 'குற்றம்' சாட்டப்படுவதால் இந்தப் பிரச்சினை மிகவும் பெரிதாகிறது. இதனை எதிர்கொள்ள ஒரு சமூகப்புரட்சி இயக்கம் தேவை. இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டியது பெண்களே. இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை எதிர்பார்த்தே. சாதீயம், சாதீயவாதிகள் என்ற சொற்களைப் போல 'நிறத்தியம்', 'நிறத்தியவாதிகள்' போன்ற சொற்கள் பழக்கத்தில் வரவேண்டும். அப்படிப் பட்டவர்கள் இனங்காணப்பட வேண்டும். அவர்கள் பகிஷ்கரிக்கப்பட வேண்டும்.
விளம்பரங்கள் பற்றிய முந்தைய பதிவுகள்
1. வர்தான் பீடி பற்றிய பதிவு
2. புள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்
3. சினிமா தியேட்டரில் தேசிய கீதம்
சில வருடங்களாக வங்கிக் கடன் விளம்பரங்களில் பெண்களும் பட்டப்படிப்பு பெறுவது போல் காண்பிக்கப்படுகின்றனர். ஆனால் மற்ற பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விளம்பரங்கள் முழுக்க முழுக்க பெண்களை இழிவு செய்யுமாறும், ஆண்களின் ஆதிக்கத்தை சத்தமின்றி ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் அதை மேலும் அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளன.
"சிகப்பழகுக்" களிம்பு
1978 முதல் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் 'ஃபேர் அண்ட் லவ்லி' என்னும் சிகப்பழகுக் களிம்பை விற்று வருகிறது. இப்பொழுது இன்னமும் பல நிறுவனங்கள் இவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு விற்க ஆரம்பித்துள்ளனர். விற்பனை செய்வதில் நமக்கு எந்த சண்டையும் இல்லை. ஆனால் இந்த சிகப்பழகு விற்பனையாளர்கள் தொலைக்காட்சிகளில், அல்லது திரையரங்குகளில் காண்பிக்கும் விளம்பரங்கள் மிகவும் கேடானவை.
1. சிகப்பழகுக் களிம்பைப் பயன்படுத்தும் முன்னர் விளம்பரத்தில் காட்டப்படும் ஒரு இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளையாக ஒரு புகைப்படம் வந்திருக்கும். அதில் வயதான, அழகில்லாத ஆண் வருவார். வீட்டில் அனைவரும் இந்த மாப்பிள்ளையே போதும் என்று எண்ண, ஒரு சிறுவன் மட்டும் கண்ணால் பெண்ணுக்கு சைகை காட்டி இந்த வரன் சரியில்லை என்பான். பெண் தன் முகத்துக்கு இதற்கு மேல் கிடைக்காது என்று வருத்தத்துடன் முடிவு செய்ய, அப்பொழுது விளம்பர அசரீரி 'முகத்தையும் மாற்றலாம், ஜாதகத்தையும் மாற்றலாம்' என்று சிகப்புக் கிரீமை அருளும். அந்தப் பசையை முகத்தில் அப்பிக் கொண்டவுடன் கணினி வரைகலையால் உருவாக்கப்பட்ட அடுத்தடுத்த திரைகளில் அந்தப் பெண்ணின் முகம் புத்துயிர் பெற்று ஒளிரும். அடுத்த காட்சியில் ஒரு அழகான யுவன் அவளது வதனத்தின் ஒளியில் மயங்குவான். வீட்டிலுள்ளோர் அனைவரும் 'ஜாதகமே மாறி விட்டது' என்று ஒத்துக் கொள்வர்.
2. சிகப்பழகுப் பசை பயன்படுத்தும் முன்னர் இளம்பெண் ஒன்றுக்கும் உதவாத வேலையில் இருப்பார். வீட்டில் காப்பிக்கே வழியில்லை. அவளது தந்தையார் சொற்களால் பெண்ணின் மனதை ஈட்டியால் துளைப்பார். பெண்ணின் கண்ணில் விமானப் பணிப்பெண் வேலைக்கான விளம்பரம் விழும். ஆனால் 'இந்த மூஞ்சிக்கு' அந்த வேலையெல்லாம் கிடைக்காது என்று தோன்றும். அப்பொழுது 'விளம்பர அசரீரி'யானது "ஏன் முடியாது? இதோ சிகப்பழகு கிரீம்" என்னும். 'அந்த மூஞ்சி'யில் பசை அப்பியபின் 'அந்த மூஞ்சி' விமானப் பணிப்பெண் நேர்முகத் தேர்வில் கலக்கியடித்து, ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் அப்பாவுக்குக் காப்பி வாங்கித் தரும்.
3. சிகப்பழகுப் பசைக்கு முந்தைய பெண்ணின் முகம் கிரிக்கெட் நேர்முக வர்ணனையை கண்ணாடிக்கு முன்னால் சொல்லிப் பழகும். நீ ஏன் தொலைக்காட்சி வர்ணனையாளராகப் போகக்கூடாது என்ற தோழியின் கேள்விக்கு 'இந்த மூஞ்சி'யால் இதெல்லாம் முடியுமா என்று ஏக்கம் கொள்ளும். வந்ததே சிகப்பழகுப் பசை. அடுத்த காட்சியில் 'பள பள' முகம் ஓரு முன்னாள் கிரிக்கெட் வீரர், இன்னாள் வர்ணனையாளர் பக்கத்தில் இருந்து நேர்முக வர்ணனை செய்யும்.
ஆக, சிகப்பழகுப் பசை இல்லையேல் - திருமணம் நடக்காது, இல்லை ஒரு கிழவனுக்கு இரண்டாந்தரம், வேலை கிடைக்காது. தகுதி இருந்தாலும்... முகத்தழகு இல்லையெனில் பெண்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை. இப்படிப்பட்ட ஒழுக்ககேடான விளம்பரங்கள் இன்னமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் பெண்களின் நிலை சமூகத்தில் கீழிறங்கிக் கொண்டே போகிறது. இந்த விளம்பரங்களை நம்பும் எத்தனையோ பெண்களுக்குத் தங்கள் தோலின் நிறத்தை வைத்துத் தங்களால் வாழ்க்கையில் உயரவே முடியாது என்றதொரு எண்ணம் வரலாம். வந்துள்ளது என்று சிலரிடம் பேசியதில் அறிகிறேன். நிறம் 'மங்கல்' என்பதால் 70 சவரனுக்கு பதில் 150 சவரன் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்களாம்.
இருபாலருக்கும் பொதுவானதில்லை இந்த இழிநிலை செய்யும் விளம்பரங்கள். ஆண்களின் முகத்துக்கு பசை யாரும் விற்பதில்லை. ஆண்களின் நிறத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆண்களுக்கான பிரத்யேக விளம்பரங்கள் முகத்தில் முடி மழிப்பதற்கானது. அந்த விளம்பரங்களும் எதிர்மறையாக வருவதில்லை. நன்றாக மழித்த முகமிருந்தால் பெண்கள் ஓடிவந்து முகத்தைத் தடவி வழிவார்கள் என்று சொல்கிறதே தவிர, முகத்தை மழிக்காவிட்டால் பெண்கள் ஓடிப்போவார்கள் என்று சொல்வதில்லை. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி விளம்பரங்களில். ஏன்?
ஒரே விதிவிலக்கு உடல் நாற்றம் மற்றும் வியர்வை எதிர்ப்பான்களின் (anti-perspirant, deodorant) விளம்பரங்கள். இவ்விளம்பரங்களில் நாற்றமடிக்கும் ஆண்களை ஆடுகள் போல என்று நினைத்துப் பெண்கள் கேலி செய்வது போலவும் காட்சிகள் வரும்.
பெண்களை காட்சிப் பொருளாக மட்டுமே காட்டும் விளம்பரங்கள்
1. "உங்களது நண்பருக்கு ஆளை மயங்கடிக்கும் பெண் மனைவியாய் வாய்த்தால் என்ன? போகட்டுமே" என்கிறது ஒரு சொகுசுக் கார் விளம்பரம். அதாவது அவரிடம் 'அழகான மனைவி' என்னும் சொத்து இருக்கட்டும், உங்களிடம் இந்த அழகான சொகுசுக் கார் இருக்கிறதே என்று சொல்கிறது விளம்பரம். காருக்கு மனைவி சமமா? ஒரு காரைப் போல மனைவி கணவனின் உடைமையா? இது போல ஆண்களைக் காட்சிப்பொருளாக்கும் விளம்பரங்கள் ஏன் இல்லை? பெண் என்றால் கிள்ளுக்கீரையா?
2. ஒரு கண்ணாடி விளம்பரத்தில் இறுக்கமாகக் குட்டையாடை அணிந்து கொண்டு ஒரு பெண், ஒரு அலுவலகக் கட்டிடத்தில், கையில் பல கோப்புகளை எடுத்துக் கொண்டு நடக்கிறார். அவரைப் பார்த்தவுடன் இரு ஆண்கள் வேலையெல்லாவற்றையும் விட்டு விட்டு அவரைப் பின்தொடர்கின்றனர். அவர் 'லிஃப்ட்'டின் உள்ளே நுழையும் போது கோப்பிலிருந்து தாள்கள் சில கீழே விழுகின்றன. அந்தப் பெண் குனிந்து அந்தத் தாள்களை எடுக்கும் போது 'தரிசிக்க' அந்தப் பெண்ணின் உறுப்புகள் ஏதேனும் தெரியுமோ என்று அந்த ஆண்கள் காத்துக் கொண்டிருக்கையில் லிஃப்ட் கதவுகள் மூடிவிடுகிறது. அந்த லிஃப்ட்டுக்குக் கண்ணாடிக் கதவுகள் வைத்திருந்தால் 'எல்லாவற்றையும்' பார்த்திருக்கலாமே என்கிறது விளம்பரம்.
இதை விடப் பெண்களை இழிவு செய்யும் விளம்பரங்கள் ஏதேனும் இருக்க முடியுமா?
3. ஒரு எண்ணெய் விளம்பரம். இந்த எண்ணெய் சர்வரோகநிவாரணியாம். எதை வேண்டுமானாலும் இதன் மூலம் குணப்படுத்தி விடலாமாம். முகம் சிவப்பாக; கால்களில் பித்த வெடிப்பு நீங்க என்று காலிலிருந்து முகம் வரை. ஒரு மனைவி கணவன் 'ஹாய்'யாகக் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு செய்தித்தாள் படிக்கும் போது கொண்டு வந்து காபி தருகிறார். கணவன் மனைவியின் வயிற்றில் உள்ள பிரசவத்தினால் ஆன வரிகளைப் பார்க்கிறார் (வயிறு விரிந்து பிரசவத்துக்குப் பின்னர் திடீரென்று சுருங்குவதால் ஆனது), முகம் சுளிக்கிறார். மனைவியும் வருத்தத்தோடு என்னவெல்லாமோ முயற்சித்து விட்டேன், போகவில்லை என்கிறார். விளம்பர அசரீரி துணைக்கு வருகிறது. வேறென்ன, அதே எண்ணெய்தான், இப்ப வயித்திலயும் தடவுங்க.
நீங்கள் பெண்ணாயிருந்தால் அந்தக் கணவனின் முகம் சுளிக்கும் போது எரிச்சல் வருமா, வராதா சொல்லுங்கள்?
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதில் ஓரிரு பொருட்களைத் தவிர மீதி எல்லாம் பெண்களால் நுகரப்படுவது. பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
1. முதலில் தங்கள் எரிச்சலை வெளிப்படுத்த வேண்டும். இந்த விளம்பரங்களைச் செய்யும் நிறுவனங்கள் பல பங்குச்சந்தையில் உள்ளவை. எனவே அவர்களது வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு (annual general meeting) சென்று கோஷமிடுவதோடு மட்டுமல்லாமல், பிராக்ஸி வாக்குகள் வாங்கி இம்மாதிரி விளம்பரங்களைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற முயலுங்கள். தீர்மானம் நிறைவேறாமல் தோற்றாலும், ஊடகங்களில் வரும் எதிர்மறைச் செய்திகளுக்குப் பயந்து இந்த நிறுவனங்கள் தங்கள் செய்கைகளை மாற்றிக் கொள்ளலாம்.
2. இம்மாதிரிப் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரி, இணைய தள கருத்துப் பக்கங்கள் ஆகியவற்றில் உங்களது கோபத்தை வெளிப்படுத்துங்கள்.
3. இப்பொருட்களை வாங்காதீர்கள். இப்பொருட்களை விற்கும் நிறுவனங்கள் செய்யும் மற்றப் பொருட்களையும் நிராகரியுங்கள். அவர்களது போட்டி நிறுவனங்கள் பெண்களை இழிவுசெய்யாத வகையில் விளம்பரம் செய்யுமானால் அந்தப் பொருட்களை வாங்குங்கள்.
4. சிகப்பு நிறத்தின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் உள்ளார்ந்த விருப்பம், மற்றும் அதன் நீட்சியான கருமை நிறத்தின் மீது உள்ள வெறுப்பு ஆகியவை மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. தீண்டாமைக்கு அடுத்ததாகப் பெரிய பிரச்சினையாக இதைத்தான் சொல்வேன். அதிலும் பெண்கள் மீது மட்டுமே இந்தக் 'குற்றம்' சாட்டப்படுவதால் இந்தப் பிரச்சினை மிகவும் பெரிதாகிறது. இதனை எதிர்கொள்ள ஒரு சமூகப்புரட்சி இயக்கம் தேவை. இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டியது பெண்களே. இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை எதிர்பார்த்தே. சாதீயம், சாதீயவாதிகள் என்ற சொற்களைப் போல 'நிறத்தியம்', 'நிறத்தியவாதிகள்' போன்ற சொற்கள் பழக்கத்தில் வரவேண்டும். அப்படிப் பட்டவர்கள் இனங்காணப்பட வேண்டும். அவர்கள் பகிஷ்கரிக்கப்பட வேண்டும்.
விளம்பரங்கள் பற்றிய முந்தைய பதிவுகள்
1. வர்தான் பீடி பற்றிய பதிவு
2. புள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்
3. சினிமா தியேட்டரில் தேசிய கீதம்
Tuesday, December 30, 2003
மைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் தனித்தியங்கும் கணினிக்கல்வி சான்றிதழகம் [Department of Electronics Accreditation of Computer Courses (DOEACC)] தனது பாடத்திட்டத்தில் மைக்ரோசாஃப்ட் தொடர்பான சில பாடங்களை விலக்கிவிட்டு லினக்ஸ் இயங்குதளம் பற்றிய பாடங்களை சேர்த்துக் கொண்டுள்ளது என்கிறது இன்றைய ஃபினான்ஸியல் எக்ஸ்பிரஸ்.
கிட்டத்தட்ட 4.6 லட்சம் மாணவர்கள் இந்த அமைப்பின் கீழ் சான்றிதழ் பெறப் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 4.6 லட்சம் மாணவர்கள் இந்த அமைப்பின் கீழ் சான்றிதழ் பெறப் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, December 29, 2003
சிதம்பரம்: வறுமையே.. போ!
ப.சிதம்பரம் - வறுமையே.. போ!
கல்கி 28/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 10
* அரசியல் கட்சிகளிலிருந்து மெதுவாக பொருளாதாரத்தின் பக்கம் வருகிறார் சிதம்பரம் தனது கல்கி தொடரில். வறுமை என்றால் என்ன என்பதற்கு நல்ல விளக்கம் தருகிறார்:
* வறுமையை ஒழித்த காலம் என்று இருபதாம் நூற்றாண்டை மட்டுமே சிறப்பாகக் குறிப்பிட முடியும். 1900இலிருந்து 1950 வரை பல நாடுகளில், பல கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டது. இந்த நேரத்தில் உலகப் போர்கள் நடக்காதிருந்தால் இன்னமும் பல கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கலாம். இந்த நாடுகள் (அதாவது வறுமையை ஒழித்த நாடுகள் - முதலாம் உலக நாடுகள் என்று இப்பொழுது நாம் குறிப்பிடுவது) 1950-1975இல் தங்கள் நாட்டின் செல்வத்தை அதிகரித்தனர் என்கிறார்.
* 1975-2000த்தில் கூட பல ஆசிய நாடுகள் வறுமையை ஒழிப்பதில் சாதனை படைத்துள்ளன. (சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து, தாய்வான், ஹாங்காங், மொரீஷியஸ், மாலத்தீவுகள்)
* வறுமையை ஒழிப்பது என்றால் இந்த நாடுகளில் வறுமையே இல்லை என்பதில்லை. அமெரிக்காவில் கூட ஏழைகள் உள்ளனர், ஆனால் மிகப்பெரும்பான்மையானவர்களுக்குக் கண்ணியமான, வளமான வாழ்க்கை அமைத்திருக்கிறது என்கிறார்.
* வறுமையை ஒழிக்க இந்தியாவிற்கு உள்ள ஒரே வழி முதலாளித்துவப் பொருளாதார முறையை ஏற்பதுதான் என்கிறார். அதே சமயம் இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில் காங்கிரஸ் (நேரு என்று படிக்கவும்) அரசாங்கம் சோஷலிசத்தை ஏற்றுக் கொண்டதில் தவறொன்றுமில்லை, அப்பொழுது அந்த முறைதான் சிறந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டது என்கிறார்.
* சிதம்பரம் வழங்கும் சுவையான புள்ளி விவரம்: 1900 முதல் 1950 வரை (வெள்ளைக்காரன் ராச்சியத்தில்!) இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு வெறும் 1% மட்டுமே. 1950-1980இல் ஆண்டுக்கு வளர்ச்சி 3.5%, 1980க்குப் பிறகுதான் 5% க்கு மேல் வளர்ச்சி. 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்றபின்னர்தான் வளர்ச்சி 6%த்தைத் தாண்டியது. அடுத்த சில இதழ்களில் புதிய பொருளாதாரக் கொள்கையை விளக்குவதாகவும் சொல்கிறார்.
என் கருத்து:
* எனக்கும் சிதம்பரத்தின் கருத்து - அதாவது விடுதலை அடைந்த நேரத்தில் சோஷலிச முறைதான், முதலாளித்துவ முறையை (திறந்த போட்டிப் பொருளாதார முறையை) விட இந்தியாவை வளம்படுத்தும் என்ற காங்கிரஸின் கொள்கை - சரியென்றே படுகிறது. அப்பொழுது முழு முதலாளித்துவ முறையைப் பின்பற்றியிருக்க முடியாது. நம் நாட்டில் பங்குச் சந்தை முறை வளர்ந்திருக்கவில்லை. அரசைத் தவிர வேறு யாரிடமும் தேவையான மூலதனம் இல்லை. நாட்டில் உயர் கல்வி இல்லாமலிருந்தது - முக்கியமாக மேலாண்மைத் துறை, பொறியியல் துறை ஆகியவற்றில். அப்பொழுது அரசே பலவற்றை ஏற்று நடத்த வேண்டியிருந்தது.
* இன்று பலர் அன்றைய காங்கிரஸ் மற்றும் நேருவை சோஷலிசத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்தவர் என்று இகழ்கிறார்கள் (முக்கியமாக காவி வண்ணக் கட்சியினர்). இது தவறான அணுகுமுறை. இன்று சந்தைப் பொருளாதார முறை சரியானதாகத் தோன்றலாம். அன்றைக்கு இராஜாஜி/மினூ மசானி (சுதந்திராக் கட்சியினர்) போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் அந்தக் கருத்து நிலவவில்லை.
* இன்றும் நமது அரசினர் பல சோஷலிசக் கருத்துக்களை மனதில் வைத்திருக்க வேண்டும் - முக்கியமாக சோஷியல் செக்யூரிடி (சமூகப் பாதுகாப்பு) என்னும் கருத்தைக் கொண்டுவராது, முழு சந்தைப் பொருளாதார முறைமை வழிபோவது நல்லதல்ல என்று தோன்றுகிறது. அமெரிக்கா முதற்கொண்டு அத்தனை மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சமூகப் பாதுகாப்புத் திட்டம் முறையில் உள்ளது. இதன்படி, வேலையற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் அரசு அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த உதவித்தொகையில் மூன்று வேளை உணவு நிச்சயம் கிடைக்கும். எப்பொழுது நம் நாட்டில் இந்த நிலைமை வருகிறதோ (அதாவது வேலையற்றோருக்கு அரசு உயிர்வாழத் தேவையான அளவிற்கு உதவித்தொகை வழங்குகிறதோ) அன்றுதான் நம் நாடு ஏழ்மையை ஒழிப்பதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது எனலாம்.
கல்கி 21/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 9
கல்கி 28/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 10
* அரசியல் கட்சிகளிலிருந்து மெதுவாக பொருளாதாரத்தின் பக்கம் வருகிறார் சிதம்பரம் தனது கல்கி தொடரில். வறுமை என்றால் என்ன என்பதற்கு நல்ல விளக்கம் தருகிறார்:
வறுமையின் அடையாளங்கள் என்ன?* ஒரு மனிதனுக்கு மேற்சொன்ன எதுவும் இல்லை என்றால் எப்படி வறுமையிலிருந்து விடுபடுவது? இது கல்வி மற்றும் கைத்திறன் கற்பதிலிருந்துதான் என்கிறார். கல்வி/கைத்தொழில் கற்பதிலிருந்து, வேலையும், வருமானமும் கிடைக்கின்றன, அங்கிருந்து சொத்து சேர்க்க முடிகிறது.
- கல்வி இல்லை.
- கைத்திறன் இல்லை
- சொத்து இல்லை
- வேலை இல்லை
- வருமானம் இல்லை
* வறுமையை ஒழித்த காலம் என்று இருபதாம் நூற்றாண்டை மட்டுமே சிறப்பாகக் குறிப்பிட முடியும். 1900இலிருந்து 1950 வரை பல நாடுகளில், பல கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டது. இந்த நேரத்தில் உலகப் போர்கள் நடக்காதிருந்தால் இன்னமும் பல கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கலாம். இந்த நாடுகள் (அதாவது வறுமையை ஒழித்த நாடுகள் - முதலாம் உலக நாடுகள் என்று இப்பொழுது நாம் குறிப்பிடுவது) 1950-1975இல் தங்கள் நாட்டின் செல்வத்தை அதிகரித்தனர் என்கிறார்.
* 1975-2000த்தில் கூட பல ஆசிய நாடுகள் வறுமையை ஒழிப்பதில் சாதனை படைத்துள்ளன. (சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து, தாய்வான், ஹாங்காங், மொரீஷியஸ், மாலத்தீவுகள்)
* வறுமையை ஒழிப்பது என்றால் இந்த நாடுகளில் வறுமையே இல்லை என்பதில்லை. அமெரிக்காவில் கூட ஏழைகள் உள்ளனர், ஆனால் மிகப்பெரும்பான்மையானவர்களுக்குக் கண்ணியமான, வளமான வாழ்க்கை அமைத்திருக்கிறது என்கிறார்.
* வறுமையை ஒழிக்க இந்தியாவிற்கு உள்ள ஒரே வழி முதலாளித்துவப் பொருளாதார முறையை ஏற்பதுதான் என்கிறார். அதே சமயம் இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில் காங்கிரஸ் (நேரு என்று படிக்கவும்) அரசாங்கம் சோஷலிசத்தை ஏற்றுக் கொண்டதில் தவறொன்றுமில்லை, அப்பொழுது அந்த முறைதான் சிறந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டது என்கிறார்.
* சிதம்பரம் வழங்கும் சுவையான புள்ளி விவரம்: 1900 முதல் 1950 வரை (வெள்ளைக்காரன் ராச்சியத்தில்!) இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு வெறும் 1% மட்டுமே. 1950-1980இல் ஆண்டுக்கு வளர்ச்சி 3.5%, 1980க்குப் பிறகுதான் 5% க்கு மேல் வளர்ச்சி. 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்றபின்னர்தான் வளர்ச்சி 6%த்தைத் தாண்டியது. அடுத்த சில இதழ்களில் புதிய பொருளாதாரக் கொள்கையை விளக்குவதாகவும் சொல்கிறார்.
என் கருத்து:
* எனக்கும் சிதம்பரத்தின் கருத்து - அதாவது விடுதலை அடைந்த நேரத்தில் சோஷலிச முறைதான், முதலாளித்துவ முறையை (திறந்த போட்டிப் பொருளாதார முறையை) விட இந்தியாவை வளம்படுத்தும் என்ற காங்கிரஸின் கொள்கை - சரியென்றே படுகிறது. அப்பொழுது முழு முதலாளித்துவ முறையைப் பின்பற்றியிருக்க முடியாது. நம் நாட்டில் பங்குச் சந்தை முறை வளர்ந்திருக்கவில்லை. அரசைத் தவிர வேறு யாரிடமும் தேவையான மூலதனம் இல்லை. நாட்டில் உயர் கல்வி இல்லாமலிருந்தது - முக்கியமாக மேலாண்மைத் துறை, பொறியியல் துறை ஆகியவற்றில். அப்பொழுது அரசே பலவற்றை ஏற்று நடத்த வேண்டியிருந்தது.
* இன்று பலர் அன்றைய காங்கிரஸ் மற்றும் நேருவை சோஷலிசத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்தவர் என்று இகழ்கிறார்கள் (முக்கியமாக காவி வண்ணக் கட்சியினர்). இது தவறான அணுகுமுறை. இன்று சந்தைப் பொருளாதார முறை சரியானதாகத் தோன்றலாம். அன்றைக்கு இராஜாஜி/மினூ மசானி (சுதந்திராக் கட்சியினர்) போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் அந்தக் கருத்து நிலவவில்லை.
* இன்றும் நமது அரசினர் பல சோஷலிசக் கருத்துக்களை மனதில் வைத்திருக்க வேண்டும் - முக்கியமாக சோஷியல் செக்யூரிடி (சமூகப் பாதுகாப்பு) என்னும் கருத்தைக் கொண்டுவராது, முழு சந்தைப் பொருளாதார முறைமை வழிபோவது நல்லதல்ல என்று தோன்றுகிறது. அமெரிக்கா முதற்கொண்டு அத்தனை மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சமூகப் பாதுகாப்புத் திட்டம் முறையில் உள்ளது. இதன்படி, வேலையற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் அரசு அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த உதவித்தொகையில் மூன்று வேளை உணவு நிச்சயம் கிடைக்கும். எப்பொழுது நம் நாட்டில் இந்த நிலைமை வருகிறதோ (அதாவது வேலையற்றோருக்கு அரசு உயிர்வாழத் தேவையான அளவிற்கு உதவித்தொகை வழங்குகிறதோ) அன்றுதான் நம் நாடு ஏழ்மையை ஒழிப்பதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது எனலாம்.
கல்கி 21/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 9
Sunday, December 28, 2003
சங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு
ஏதோ ஒரு பட்சி சொன்னது இந்த வருட சாஹித்ய அகாதெமி பரிசு பெற்ற 'கள்ளிக்காட்டு இதிகாச'த்தின் ஆசிரியர் வைரமுத்துவுடன்தான் , இன்றைய சன் நியூஸ் சங்கம் சந்திப்பு இருக்குமென்று.இரா.முருகன் ராயர்காபிகிளப்பில் தன் ஆலப்புழை பயணம் பற்றி 'எழுத்துக்காரனின் டயரிக்குறிப்புகள்' என்று ஒரு பயணக்குறிப்பு வரைகையில் (அற்புதமான கட்டுரை இது), தான் ஒரு மலையாளத் தொலைக்காட்சியில் பார்த்த எழுத்தாளரின் நேர்முகம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்:
"நிகழ்ச்சி முடிந்து இன்னொரு மலையாளச் சானல். மலையாள எழுத்தாளர் சாரா ஜோசஃப் கூட அபிமுக சம்பாஷணம். சின்னச் சின்ன மலையாள நகரங்களும், வீடுகளும், பள்ளிகளுமாகத் திரையில் நகர்கின்றன. எல்லாம் சாரா வாழும், வாழ்ந்த, புழங்கிய இடங்கள். ஒவ்வொரு காட்சி வரும்போதும் தன்னுடைய எந்தப்படைப்பில் அந்த இடமும், அவிடத்து மனிதர்களும் வருகிறார்கள் என்று விவரிக்கிறார் சாரா. பேட்டி கண்டவர், எழுத்தாளர் எழுதிய படைப்புகளை எல்லாம் படித்தவர் என்பதால் மேலும் கருத்துப் பரிமாற்றம் நிகழ இயல்பாக வழிசெய்தபடிக்குப் பேட்டியைத் தொடர்கிறார்."முருகன் மாலனிடமும் போனவாரம் இதைப்பற்றிப் பேசினார். மாலன் உடனடியாக இதனை இந்த வாரப் பேட்டியில் செயல்படுத்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது!
நிகழ்ச்சி தொடக்கத்தில் வைரமுத்து வைகை நதியணைக்கு அருகிலிருந்து பேசுகிறார். "சிலருக்கு தந்தையைப் புதைத்த நினைப்பிருக்கும், சிலருக்கு தாயைப் புதைத்த நினைப்பிருக்கும், எனக்கு தாய் மண்ணைப் புதைத்த நினைப்பு" என்று கம்பீரமான குரலில் மனம் கலங்கப் பேசும் திறன் அவருக்கு மட்டுமே. கள்ளிக்காட்டு இதிகாசம் - வைகை அணை கட்டுவதற்காக பதினெட்டு கிராமங்களின் மக்களை இடம்பெயர்க்கச் செய்த கருவிலிருந்து உருவாகிறது. அப்படி கண்ணில் நீர் பொங்க இடம்பெயர்ந்த ஒரு தாயின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்த நாலரை வயதுச் சிறுவன் வைரமுத்துவின் காவியம்தான் சாஹித்ய அகாதெமியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் கதைச் சித்திரம்.
"பல பேர்களின் வாழ்வில் நிகழ்ந்ததை ஒருங்கிணைத்து பேயத்தேவன் என்ற ஒருவனின் குடும்பத்தில் நிகழ்ந்ததாகச் சொன்ன ஒன்றை மட்டும்தான் நான் செய்தேன்" என்று அடக்கத்துடன் சொன்ன வைரமுத்து, அந்த இடப்பெயர்வில் பங்குபெற்ற இருபது பேர்களுடன் இரண்டு நாள் முழுக்கத் தங்கியிருந்து அவர்களது கதை முழுவதையும் கேட்டறிந்து, அதனைத் தன்னுடைய குடும்பத்தில் நிகழ்ந்ததுடன் இணைத்துச் செய்திருக்கிறார் இந்தக் கதையை. "இது முழுக்க முழுக்கக் கற்பனையும் அல்ல" என்கிறார்.
மாலன் நச்சென்று "மண் பேசுகிறது" என்று இந்தப் புத்தகத்துகான விமரிசனத்தை முன்வைத்தார். மண்ணில் தொடங்கி, ஆறு நிலத்தை மூழ்கடிக்குமுன்னர் அந்த மண்ணை எடுக்க முயன்று மூழ்கிப்போனவனின் கதை. வயிற்றுக்கு உணவு மட்டுமின்றி, புண்ணுக்கும் மருந்தான மண். அந்த மண்ணைத் தவிர வேறெதையும் அறியா அப்பாவி மக்களுக்கு சரியான நஷ்ட ஈடு தராத அரசின் மீதுள்ள கோபத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தினார் வைரமுத்து. வீடு கட்டுவதற்கு முன்னால் சொல்லப்படும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தினை மேற்கோள் காட்டி - "மரங்களே, எங்களை மன்னித்து விடுங்கள், உங்களை அழித்துதான் நாங்கள் வீடுகளைக் கட்ட வேண்டும், மரத்தின் மீது கூடு கட்டியுள்ள பறவைகளே, எங்களை மன்னித்து விடுங்கள்" என்றெல்லாம் மரங்களிடமும், பறவைகளிடமும் மன்னிப்பு கேட்ட மனிதர்கள் வாழ்ந்த நாட்டில் இன்று புது நாகரிகத்தின் தேவையான அணைகளைக் கட்டும்போது அதனால் பாதிக்கப்படும் மக்களுக்குச் சரியான நீதி கிடைப்பதில்லை, அவர்கள் வசிப்பதற்கு மாற்றிடம் கிடைப்பதில்லை, நஷ்ட ஈடு சொற்பமே என்று வைரமுத்து சொன்னது மனதைத் தைத்தது. நர்மதா அணைத்திட்டம் கொண்டுவரும் அரசுகள் இன்றும்கூட அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு சரியான ஈடு கொடுப்பதில்லை.
நிகழ்ச்சி முழுதும் ஆங்காங்கே கதையின் காட்சிக்கு இணையாக ஒரு படத்துண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளம்பெண் வண்டியில் ஏறி ஊரை விட்டுப் போகும்போது, முகச்சவரம் செய்யும்போது கீறியதால் வந்த இரத்தம் துடைத்த பஞ்சை அந்தப்பெண் எடுத்து வைத்துக்கொள்வது என்று. அந்தக் காட்சி காண்பிக்கபடும்போது பின்னணியில் வைரமுத்துவின் குரலில் இந்தக் காட்சியை அவர் எழுதியது பற்றி, அவரது சொந்த அனுபவத்தைப் பற்றி அவர் சொல்வது என்று வெகு நேர்த்தியாக செல்லுகிறது நேர்முகம். இதுவரையில் நான் பார்த்த சங்கம் நேர்முகங்களில் நன்கு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி இது. இது சன் டிவி போன்ற முக்கியச் சானலில் வரவேண்டியது.
விவரமான புத்தக விமரிசனம் யாராவது எழுதியிருக்கலாம். நான் இன்னமும் புத்தகத்தைப் படிக்கவில்லை. விகடனில் தொடராக வந்தபோதும் படிக்கவில்லை. அபுல் கலாம் ஆசாத்தின் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், சுந்தர ராமசாமியின் சிறுகதைகளையும் ஒப்புநோக்கிய கட்டுரை இங்கே.
மாலன் - சிவ.கணேசன் சந்திப்பு
நீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்
பிரபு ராஜதுரை மும்பையில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர். தமிழ் யாஹூ! குழுக்களில் சட்டம் பற்றியும் (பிறவற்றைப் பற்றியும்) எழுதுவார். நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, ஒருவழியாகத் தன் வலைப்பதிவை ஆரம்பித்து விட்டார்.
படித்துப் பயன் பெறுங்கள்.
படித்துப் பயன் பெறுங்கள்.
Saturday, December 27, 2003
இந்தியக் கல்வித்துறை பற்றி
பாலா சுப்ராவின் வலைப்பதிவு மூலம் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை படிக்கக் கிடைத்தது (உள்ளே நுழையப் பதிவு செய்ய வேண்டும்).
இந்தியாவிலும் கல்வித்துறை பெரும் தொல்லையில் உள்ளது. என் நண்பன் சத்யநாராயணுடன் பலமுறை கல்விமுறை பற்றி விவாதித்திருக்கிறேன். எனக்குள் பல குழப்பமான கருத்துகள் உள்ளன. எழுத எழுதத்தான் தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் கருத்தினை சுருக்கமாக முன்வைக்கிறேன்.
இப்பொழுதுள்ள கல்விமுறையின் சில பிரச்சினைகள்:
1. ஆரம்பக் கல்வி கூட பலருக்குக் கிடைப்பதில்லை.
2. பொருளாதார உயர் வர்க்கத்தினர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குழந்தைகளை அனுப்பும் நகர்ப்புறப் பள்ளிகளில் அரைகுறைப் படிப்புதான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே குறியாக இருக்கிறது. அறிவு பெறுவது என்பது இரண்டாம் பட்சமோ, மூன்றாம் பட்சமோ. பல கலைகளையும் கற்பது, முக்கியமாக வாழ்க்கைக்குத் தேவையான பொது அறிவு பெறுவது என்பது இம்மியளவும் இல்லை.
3. நகரல்லா மற்ற இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளும், அரசினர் பள்ளிகளும் ஒன்று சேர, தரமற்றதாகவே உள்ளன.
4. தப்பித் தவறி மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருபவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் இடமில்லை. மிஞ்சிப் போனால் அஞ்சல்வழிக் கல்வி கற்கலாம். அவ்வாறு இளங்கலைப் படிப்பிற்கு அஞ்சல் வழிக் கல்வியில் சேருபவர்களால் சரியாகப் மனதை செலுத்திப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.
5. எல்லாப் படிப்பும் முடித்தாலும் வேலை என்று வரும்பொழுது கல்விக் கூடங்கள் சரியான முறையில் பயிற்சி கொடுக்காததனால் மாணவர்களால் 'வேலைக்கு லாயக்கற்றவர்களாக' இருக்கின்றனர். இதனை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். என் அலுவலகத்தில் வேலைக்கு ஆளெடுக்கும்போது நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
இத்தனையையும் மீறி இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் துடிப்புடன் நாட்டை முன்னோக்கி செலுத்தி வருகிறார்கள். அந்நியச் செலாவணி இருப்பிலிருந்து, பல்வேறு பொருளாதார அளவுகோல்களிலும் 'இந்தியா ஜொலித்துக் கொண்டுதான்' இருக்கிறது. ஆனால் நம் நாட்டின் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கினால் இன்னமும் எவ்வளவு ஜொலிப்பு கூடலாம்?
என்னுடைய சில (முற்றுப்பெறாத) விடைகள்:
1. மேல்நிலை வரை கட்டாய இலவசக் கல்வி
மத்திய, மாநில அரசுகள் இதற்கான முழுச்செலவையும் ஏற்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒன்றிலிருந்து பனிரெண்டாவது வரையான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகங்கள், உடை, உணவு ஆகியவை அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும். வீடுகளில் தங்கிப் படிக்க வசதியில்லாத அனைவருக்கும் இலவசமாகத் தங்குமிடமும் அளிக்க வேண்டும்.
பணம் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, போஷாக்கான உணவும், புத்தாடைகளும், கல்வியையும் வழங்கலாம். இல்லாவிட்டால் அரசினர் கல்விக்கூடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து படிக்கவும் வைக்கலாம். அவர்கள் இஷ்டம். ஆனால் மொழி, மத, சாதி, பொருளாதார வித்தியாசம் பார்க்காது, யார் வேண்டுமானாலும் அரசு பள்ளிக்கூடங்களில் இலவசமாகக் கல்வி, உடை, உணவு, புத்தகம் ஆகியவற்றையும், வேண்டுபவர்களுக்குத் தங்குமிடமும் கொடுக்கப்பட வேண்டும்.
2. தனியார் மூலம் அரசின் கல்வி நிலையங்கள் நடத்துதல்
அரசினால் மேற்சொன்ன அளவிற்கு ஆசிரியர்களை நியமித்து வேலை செய்ய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருப்பது போல, தனியார் நிறுவனங்களைக் கொண்டு அரசின் பள்ளிகளை நடத்த வைக்கலாம். அதாவது அரசு பள்ளிக்கூடக் கட்டிடங்களைக் கட்டித் தந்து, ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் நடத்துவதற்கு நீண்ட கால அளவிலான குத்தகைக்குத் தனியார் நிறுவனங்களிடம் விடலாம். இந்தத் தனியார் நிறுவனங்களுக்கான தேர்வு ஏலத்தின் மூலம் முடிவு செய்யப்படும். எந்த நிறுவனம் சிக்கனமாக, அதே நேரத்தில் செழுமையாக, குறைந்த பட்சக் கல்வியறிவைப் புகட்டும் என்பதை மனதில் வைத்து நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இந்தப் பள்ளிகளில், ஒரு குழந்தைக்கு வருடத்திற்கு படிப்புக்கு என்ன செலவாகிறதோ, அதே பணத்துக்கான 'கல்வி வரவு' (education credit) இப்பள்ளிகளில் படிக்காமல் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். மீதிச் செலவினை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வர். இதன்மூலம் யாரும் தங்கள் வரிப்பணம் பிறர் குழந்தைகளை மட்டும் படிக்க வைக்கிறது என்று அலுத்துக்கொள்வதைத் தடுக்கும்.
இந்தத் திட்டத்தை பஞ்சாயத்துகள், நகரமன்றம் ஆகியவற்றின் மூலமாக நடத்த வேண்டும்.
3. மேல்நிலைப் பள்ளிகளுக்கு மேலான கல்வி அனைத்தையும் தனியார் நிறுவனங்கள்தான் முக்கியமாக நடத்த வேண்டும். ஒருசில மாநில அரசுகள் விரும்பினால் கல்லூரிகளைக் கட்டலாம். கல்லூரிப் படிப்பிற்கு மிகக் குறைந்த வட்டியில் வேலை கிடைக்கும் போது திருப்பிக் கட்டுமாறு கடன் வழங்கப்பட வேண்டும்.
அதாவது மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை இலவசக் கல்வி. அதற்கு மேல் கட்டணக் கல்வி. அந்தக் கட்டணத்தையும், மற்ற செலவுகளையும் கட்ட முடியாதவர்களுக்கு மிக எளிதாக கடன் வழங்கப்பட வேண்டும்.
இந்த முறை அமெரிக்காவில் திறம்பட இயங்கி வருகிறது. கடன் வாங்கிய மாணவர், வேலைக்கு சேர்ந்த பிறகு கடனைத் திருப்பிக் கட்ட ஆரம்பித்தால் போதும்!
4. மாறுபட்ட கல்வியினை வளர்த்தல்
மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கு மேல் பள்ளிக்கூடத்தில் கல்வி புகட்ட வேண்டியது அவசியமில்லை என்று தோன்றுகிறது. அப்படி படித்துக் கிழிக்க உண்மையில் ஒன்றுமே இல்லை! ஆதலால் ஒரே பள்ளிக்கூடக் கட்டிடத்தில் மூன்று அடுக்குகளாக ஷிஃப்ட் முறையில் பாடம் நடத்தலாம். காலை 7-10, 11-14, 15-18 என்று மூன்று வகுப்புகள் நடத்தலாம். இரவு நேரத்தில், அதாவது 19.00 மணி முதல் 22.00 வரை வயது முதிர்ந்தோர், படிப்பறிவில்லாத பிறர் ஆகியோருக்கு தொழில்முறைப் பாடம் நடத்த இதே கட்டிடங்களைப் பயன்படுத்தலாம். இதனால் கட்டிடம், நூலகம், கணினி மையம், சோதனைச் சாலைகள், விளையாட்டுப் பயிற்சிக்கூடம் மற்றும் களங்கள் முதலியனவற்றைத் திறம்பட உபயோகிக்கலாம்.
அதைத் தவிர்த்து, சிறு குழுக்களாக அரசின் கல்வித் திட்டத்தின் கீழல்லாது, தேர்ச்சி பெற்ற ஆசிரியரின் கீழ் சொந்தமாகக் கல்வி கற்க விரும்புபவருக்கும் அரசின் கல்விக்கூடங்களில் உள்ள நூலகம், கணினிகள், சோதனைச் சாலைகள் ஆகியனவற்றைப் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும். குருகுலக் கல்வி போல ஒரு ஆசிரியர், அவரிடம் 20 மாணவர்கள் ஆரம்பத்திலிருந்து 12ஆவது வகுப்பு வரை படிக்கலாம். 10ஆவது, 12ஆவது பாடங்களின் தேர்வுகளை அவர்கள் தேசியத் திறந்த வெளிக் கல்விமுறையின் கீழ் எழுதலாம். இவ்வாறு தேர்வெழுதித் தேர்ந்தவர்கள் கல்லூரிகளில் சேரத் தடையெதுவும் இல்லை.
'கல்வி வரவு' முறை மூலம் ஒவ்வொரு மாணவருக்காகவும், போதனை செய்யும் ஆசிரியருக்கு ஒரு குறிப்பிட்ட பணமும், மாணவர் படிப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் கிடைத்து விடும்.
5. இளங்கலைக் கல்லூரிப் படிப்பினை அஞ்சல் வழிக் கல்வி மூலம் அதிகரித்தல்
ஒவ்வொரு ஊரிலும் 'டுடோரியல்' கல்லூரிகள் போலத் தனியார் கல்லூரிகள் அமைக்கலாம். இந்தக் கல்லூரி ஒருவரது வீட்டு மாடியிலேயே நடத்தப்படலாம். மாணவர்கள் அஞ்சல் வழிக் கல்வித்திட்டத்தில் சேர வேண்டும். அதற்கு மேல், இந்த 'மாடிவீட்டுக் கல்லூரியில்' பதிவு செய்து கொண்டு, அங்குள்ள ஆசிரியரிடம் அஞ்சல் வழிக் கல்விக்கான பயிற்சி பெறலாம். கல்வி பயிலும் நேரம் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ள முடியும்.
6. தனியார் கல்லூரிகள் அமைக்க இடர்பாடுகளைக் குறைத்தல்
தற்பொழுது கல்விக்கூடங்கள் அமைக்க அறக்கட்டளைகளால்தான் முடியும் என்ற நிலைமை இருக்கிறது. அதனால் லாபம் செய்ய நினைக்கும் நியாயமான தொழில்முனைவோரால் கல்லூரிகளை அமைக்க முடியாது. திருட்டுத்தனமாக பணத்தைக் கொள்ளையடிக்க நினைப்பவரால்தான் அறக்கட்டளை என்ற பெயரால் கல்லூரிகள் அமைத்து, 'நன்கொடை' என்ற பெயரால் வசூல் செய்ய முடிகிறது. இந்தக் குறைபாட்டினை நீக்க, லாப நோக்கு நிறுவனங்களும் கல்லூரிகளை அமைக்கலாம், அதில் லாபம் ஏற்பட்டால் அதைப் பங்குதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டமாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
இதன்மூலம் மிக அதிக அளவில் மூலதனம் கல்லூரிகள் அமைப்பதில் வரும். இந்தக் கல்லூரிகளும் கல்வி அமைச்சகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் இயங்கும். ஒவ்வொரு படிப்பிற்கும் அதிகபட்சம் எவ்வளவு தொகை கட்டணமாக வசூலிக்கப்படலாம் என்று நிர்ணயிப்பது கல்வித்துறையின் வேலையாகும். இப்பொழுது மின்சாரம் கிட்டத்தட்ட இந்த முறையில்தான் கட்டுப்படுத்தப் படுகிறது. மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் தனியார், விநியோகிப்பதும் தனியார். அரசு, மின்சாரத்தின் அதிகபட்ச விலையை மட்டும் நிர்ணயிக்கிறது. தொலைதொடர்புத் துறையிலும் இவ்வாறே. கல்வித்துறையிலும் இதைச் செய்ய முடியும்.
இப்பொழுது சிறுபான்மையினருக்கு மட்டுமே (கிறித்துவ, இஸ்லாமியர்) அறக்கட்டளை மூலம் கல்விக்கூடங்கள் அமைப்பது எளிதாக இருக்கிறது. இந்தச் சிக்கல்களை நீக்குவது உடனடி அவசியமாகிறது.
---
இதனாலெல்லாம் இந்தியாவில் கல்விக்குறைபாடுகள் ஒரேயடியாக நீங்கி விடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளுவுக்குப் பிரச்சினை குறையும் என்று தோன்றுகிறது. உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
இந்தியாவிலும் கல்வித்துறை பெரும் தொல்லையில் உள்ளது. என் நண்பன் சத்யநாராயணுடன் பலமுறை கல்விமுறை பற்றி விவாதித்திருக்கிறேன். எனக்குள் பல குழப்பமான கருத்துகள் உள்ளன. எழுத எழுதத்தான் தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் கருத்தினை சுருக்கமாக முன்வைக்கிறேன்.
இப்பொழுதுள்ள கல்விமுறையின் சில பிரச்சினைகள்:
1. ஆரம்பக் கல்வி கூட பலருக்குக் கிடைப்பதில்லை.
2. பொருளாதார உயர் வர்க்கத்தினர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குழந்தைகளை அனுப்பும் நகர்ப்புறப் பள்ளிகளில் அரைகுறைப் படிப்புதான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே குறியாக இருக்கிறது. அறிவு பெறுவது என்பது இரண்டாம் பட்சமோ, மூன்றாம் பட்சமோ. பல கலைகளையும் கற்பது, முக்கியமாக வாழ்க்கைக்குத் தேவையான பொது அறிவு பெறுவது என்பது இம்மியளவும் இல்லை.
3. நகரல்லா மற்ற இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளும், அரசினர் பள்ளிகளும் ஒன்று சேர, தரமற்றதாகவே உள்ளன.
4. தப்பித் தவறி மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருபவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் இடமில்லை. மிஞ்சிப் போனால் அஞ்சல்வழிக் கல்வி கற்கலாம். அவ்வாறு இளங்கலைப் படிப்பிற்கு அஞ்சல் வழிக் கல்வியில் சேருபவர்களால் சரியாகப் மனதை செலுத்திப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.
5. எல்லாப் படிப்பும் முடித்தாலும் வேலை என்று வரும்பொழுது கல்விக் கூடங்கள் சரியான முறையில் பயிற்சி கொடுக்காததனால் மாணவர்களால் 'வேலைக்கு லாயக்கற்றவர்களாக' இருக்கின்றனர். இதனை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். என் அலுவலகத்தில் வேலைக்கு ஆளெடுக்கும்போது நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
இத்தனையையும் மீறி இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் துடிப்புடன் நாட்டை முன்னோக்கி செலுத்தி வருகிறார்கள். அந்நியச் செலாவணி இருப்பிலிருந்து, பல்வேறு பொருளாதார அளவுகோல்களிலும் 'இந்தியா ஜொலித்துக் கொண்டுதான்' இருக்கிறது. ஆனால் நம் நாட்டின் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கினால் இன்னமும் எவ்வளவு ஜொலிப்பு கூடலாம்?
என்னுடைய சில (முற்றுப்பெறாத) விடைகள்:
1. மேல்நிலை வரை கட்டாய இலவசக் கல்வி
மத்திய, மாநில அரசுகள் இதற்கான முழுச்செலவையும் ஏற்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒன்றிலிருந்து பனிரெண்டாவது வரையான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகங்கள், உடை, உணவு ஆகியவை அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும். வீடுகளில் தங்கிப் படிக்க வசதியில்லாத அனைவருக்கும் இலவசமாகத் தங்குமிடமும் அளிக்க வேண்டும்.
பணம் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, போஷாக்கான உணவும், புத்தாடைகளும், கல்வியையும் வழங்கலாம். இல்லாவிட்டால் அரசினர் கல்விக்கூடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து படிக்கவும் வைக்கலாம். அவர்கள் இஷ்டம். ஆனால் மொழி, மத, சாதி, பொருளாதார வித்தியாசம் பார்க்காது, யார் வேண்டுமானாலும் அரசு பள்ளிக்கூடங்களில் இலவசமாகக் கல்வி, உடை, உணவு, புத்தகம் ஆகியவற்றையும், வேண்டுபவர்களுக்குத் தங்குமிடமும் கொடுக்கப்பட வேண்டும்.
2. தனியார் மூலம் அரசின் கல்வி நிலையங்கள் நடத்துதல்
அரசினால் மேற்சொன்ன அளவிற்கு ஆசிரியர்களை நியமித்து வேலை செய்ய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருப்பது போல, தனியார் நிறுவனங்களைக் கொண்டு அரசின் பள்ளிகளை நடத்த வைக்கலாம். அதாவது அரசு பள்ளிக்கூடக் கட்டிடங்களைக் கட்டித் தந்து, ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் நடத்துவதற்கு நீண்ட கால அளவிலான குத்தகைக்குத் தனியார் நிறுவனங்களிடம் விடலாம். இந்தத் தனியார் நிறுவனங்களுக்கான தேர்வு ஏலத்தின் மூலம் முடிவு செய்யப்படும். எந்த நிறுவனம் சிக்கனமாக, அதே நேரத்தில் செழுமையாக, குறைந்த பட்சக் கல்வியறிவைப் புகட்டும் என்பதை மனதில் வைத்து நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இந்தப் பள்ளிகளில், ஒரு குழந்தைக்கு வருடத்திற்கு படிப்புக்கு என்ன செலவாகிறதோ, அதே பணத்துக்கான 'கல்வி வரவு' (education credit) இப்பள்ளிகளில் படிக்காமல் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். மீதிச் செலவினை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வர். இதன்மூலம் யாரும் தங்கள் வரிப்பணம் பிறர் குழந்தைகளை மட்டும் படிக்க வைக்கிறது என்று அலுத்துக்கொள்வதைத் தடுக்கும்.
இந்தத் திட்டத்தை பஞ்சாயத்துகள், நகரமன்றம் ஆகியவற்றின் மூலமாக நடத்த வேண்டும்.
3. மேல்நிலைப் பள்ளிகளுக்கு மேலான கல்வி அனைத்தையும் தனியார் நிறுவனங்கள்தான் முக்கியமாக நடத்த வேண்டும். ஒருசில மாநில அரசுகள் விரும்பினால் கல்லூரிகளைக் கட்டலாம். கல்லூரிப் படிப்பிற்கு மிகக் குறைந்த வட்டியில் வேலை கிடைக்கும் போது திருப்பிக் கட்டுமாறு கடன் வழங்கப்பட வேண்டும்.
அதாவது மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை இலவசக் கல்வி. அதற்கு மேல் கட்டணக் கல்வி. அந்தக் கட்டணத்தையும், மற்ற செலவுகளையும் கட்ட முடியாதவர்களுக்கு மிக எளிதாக கடன் வழங்கப்பட வேண்டும்.
இந்த முறை அமெரிக்காவில் திறம்பட இயங்கி வருகிறது. கடன் வாங்கிய மாணவர், வேலைக்கு சேர்ந்த பிறகு கடனைத் திருப்பிக் கட்ட ஆரம்பித்தால் போதும்!
4. மாறுபட்ட கல்வியினை வளர்த்தல்
மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கு மேல் பள்ளிக்கூடத்தில் கல்வி புகட்ட வேண்டியது அவசியமில்லை என்று தோன்றுகிறது. அப்படி படித்துக் கிழிக்க உண்மையில் ஒன்றுமே இல்லை! ஆதலால் ஒரே பள்ளிக்கூடக் கட்டிடத்தில் மூன்று அடுக்குகளாக ஷிஃப்ட் முறையில் பாடம் நடத்தலாம். காலை 7-10, 11-14, 15-18 என்று மூன்று வகுப்புகள் நடத்தலாம். இரவு நேரத்தில், அதாவது 19.00 மணி முதல் 22.00 வரை வயது முதிர்ந்தோர், படிப்பறிவில்லாத பிறர் ஆகியோருக்கு தொழில்முறைப் பாடம் நடத்த இதே கட்டிடங்களைப் பயன்படுத்தலாம். இதனால் கட்டிடம், நூலகம், கணினி மையம், சோதனைச் சாலைகள், விளையாட்டுப் பயிற்சிக்கூடம் மற்றும் களங்கள் முதலியனவற்றைத் திறம்பட உபயோகிக்கலாம்.
அதைத் தவிர்த்து, சிறு குழுக்களாக அரசின் கல்வித் திட்டத்தின் கீழல்லாது, தேர்ச்சி பெற்ற ஆசிரியரின் கீழ் சொந்தமாகக் கல்வி கற்க விரும்புபவருக்கும் அரசின் கல்விக்கூடங்களில் உள்ள நூலகம், கணினிகள், சோதனைச் சாலைகள் ஆகியனவற்றைப் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும். குருகுலக் கல்வி போல ஒரு ஆசிரியர், அவரிடம் 20 மாணவர்கள் ஆரம்பத்திலிருந்து 12ஆவது வகுப்பு வரை படிக்கலாம். 10ஆவது, 12ஆவது பாடங்களின் தேர்வுகளை அவர்கள் தேசியத் திறந்த வெளிக் கல்விமுறையின் கீழ் எழுதலாம். இவ்வாறு தேர்வெழுதித் தேர்ந்தவர்கள் கல்லூரிகளில் சேரத் தடையெதுவும் இல்லை.
'கல்வி வரவு' முறை மூலம் ஒவ்வொரு மாணவருக்காகவும், போதனை செய்யும் ஆசிரியருக்கு ஒரு குறிப்பிட்ட பணமும், மாணவர் படிப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் கிடைத்து விடும்.
5. இளங்கலைக் கல்லூரிப் படிப்பினை அஞ்சல் வழிக் கல்வி மூலம் அதிகரித்தல்
ஒவ்வொரு ஊரிலும் 'டுடோரியல்' கல்லூரிகள் போலத் தனியார் கல்லூரிகள் அமைக்கலாம். இந்தக் கல்லூரி ஒருவரது வீட்டு மாடியிலேயே நடத்தப்படலாம். மாணவர்கள் அஞ்சல் வழிக் கல்வித்திட்டத்தில் சேர வேண்டும். அதற்கு மேல், இந்த 'மாடிவீட்டுக் கல்லூரியில்' பதிவு செய்து கொண்டு, அங்குள்ள ஆசிரியரிடம் அஞ்சல் வழிக் கல்விக்கான பயிற்சி பெறலாம். கல்வி பயிலும் நேரம் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ள முடியும்.
6. தனியார் கல்லூரிகள் அமைக்க இடர்பாடுகளைக் குறைத்தல்
தற்பொழுது கல்விக்கூடங்கள் அமைக்க அறக்கட்டளைகளால்தான் முடியும் என்ற நிலைமை இருக்கிறது. அதனால் லாபம் செய்ய நினைக்கும் நியாயமான தொழில்முனைவோரால் கல்லூரிகளை அமைக்க முடியாது. திருட்டுத்தனமாக பணத்தைக் கொள்ளையடிக்க நினைப்பவரால்தான் அறக்கட்டளை என்ற பெயரால் கல்லூரிகள் அமைத்து, 'நன்கொடை' என்ற பெயரால் வசூல் செய்ய முடிகிறது. இந்தக் குறைபாட்டினை நீக்க, லாப நோக்கு நிறுவனங்களும் கல்லூரிகளை அமைக்கலாம், அதில் லாபம் ஏற்பட்டால் அதைப் பங்குதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டமாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
இதன்மூலம் மிக அதிக அளவில் மூலதனம் கல்லூரிகள் அமைப்பதில் வரும். இந்தக் கல்லூரிகளும் கல்வி அமைச்சகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் இயங்கும். ஒவ்வொரு படிப்பிற்கும் அதிகபட்சம் எவ்வளவு தொகை கட்டணமாக வசூலிக்கப்படலாம் என்று நிர்ணயிப்பது கல்வித்துறையின் வேலையாகும். இப்பொழுது மின்சாரம் கிட்டத்தட்ட இந்த முறையில்தான் கட்டுப்படுத்தப் படுகிறது. மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் தனியார், விநியோகிப்பதும் தனியார். அரசு, மின்சாரத்தின் அதிகபட்ச விலையை மட்டும் நிர்ணயிக்கிறது. தொலைதொடர்புத் துறையிலும் இவ்வாறே. கல்வித்துறையிலும் இதைச் செய்ய முடியும்.
இப்பொழுது சிறுபான்மையினருக்கு மட்டுமே (கிறித்துவ, இஸ்லாமியர்) அறக்கட்டளை மூலம் கல்விக்கூடங்கள் அமைப்பது எளிதாக இருக்கிறது. இந்தச் சிக்கல்களை நீக்குவது உடனடி அவசியமாகிறது.
---
இதனாலெல்லாம் இந்தியாவில் கல்விக்குறைபாடுகள் ஒரேயடியாக நீங்கி விடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளுவுக்குப் பிரச்சினை குறையும் என்று தோன்றுகிறது. உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் திசைகள்?
பாரா பெரிய மனது பண்ணி என்னையும் ஒரு முக்கியமான எழுத்தாளராக்கி விட்டார். அதெல்லாம் ஒன்றுமில்லை.
சிலநாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த ஒரு இலக்கிய சந்திப்புக்கு என்னைக் கூப்பிடவில்லை என்று பெரிய ரகளை செய்துவிட்டேன். அப்பொழுது நான் செய்த அழும்பைப் பார்த்து அதிர்ந்தவர்கள் இப்பொழுது 'இலக்கியம்+சென்னை' என்று எது நடந்தாலும் என்னை அழைக்காமல் இருப்பதில்லை.
போனவாரம் ஒருசில படைப்பாளிகள் மாலனின் வீட்டுக்குப் போனபோது, ஒட்டிக் கொண்டு சென்றேன். கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் சிலர் இணையத்தை ஒருபோதும் தொட்டிருக்காதவர்கள். ஒருசிலர் சென்னைக்கு வெளியேயிருந்து இந்தக் கூட்டத்திற்கெனப் பிரத்தியேகமாக வந்திருந்தனர்.
இந்தக் கூட்டத்திற்கு என்ன பின்புலம்? என்ன அவசியம்? மாலனுக்கும், வந்த மற்றவர்களுக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஒரு வாசகனாக என்னுடைய கருத்துகளை இங்கு பதிவு செய்கிறேன்.
சிறுவயதில் பள்ளிச்சிறுவனாய் இருந்தபொழுது தமிழில் படிப்பது ஆரம்பித்தது. முதலில் காமிக்ஸ் புத்தகங்கள். அற்புதமாக தமிழில் பல காமிக்ஸ் புத்தகங்கள் அப்பொழுது கிடைத்து வந்தன. முழுக்க முழுக்க தமிழ்க்கதைகள் (சுட்டிக்குரங்கு கபீஷ்!), முழுக்க முழுக்க ஆங்கிலக் கதைகள் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டவை (இரும்புக்கை மாயாவி, முகமூடி அணிந்த வேதாளம், மந்திரவாதி மாண்டிரேக்!). இப்பொழுது இவையெல்லாம் எங்கே போயினவென்றே தெரியவில்லை. பின்னர் வாரப்பத்திரிகைகள், மாத நாவல்கள் என்று வெகுஜன இதழ்கள் ஒன்றை விட்டது கிடையாது. [அதற்கப்புறம் பெருமாள் கோயில் வெளிச்சுற்றில், பிற நண்பர்கள் வீட்டில் என்று மறைத்துவைத்துப் படித்த சரோஜாதேவி முதலான உன்னத இலக்கியங்களை வெளியே சொல்ல வேண்டாம்!]
அதையடுத்து அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நூலகத்தில் ஒரு பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தேன். அப்பொழுதுதான் மௌனி, தி.ஜா என்று ஆரம்பித்தேன். பின்னர் கிரிக்கெட் என்னை ஆக்ரமித்துக் கொண்டது. எட்டு வருடங்களுக்கு மேலாகத் தமிழ் படிப்பது முழுதும் நின்றுபோனது. தமிழில் எழுதுவது என்பது வீட்டிற்கு எழுதும் கடிதங்களாக மட்டுமே இருந்து, அதுவும் நின்றுபோய்ப் பத்து வருடங்களாகி இருந்தது. மீண்டும் தமிழ் உலகில் வாசகனாகப் புகுந்தது ஏப்ரல் 2003இல்தான். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப் புத்தகங்கள், அச்சில் வெளிவரும் இதழ்கள் (சிறிது, பெரிது), இணைய இதழ்கள், ராயர்காபிகிளப், மரத்தடி என்று நிறையப் படிக்க ஆரம்பித்தாயிற்று.
இந்த ஒன்பது மாதங்களில் ஒன்பது சந்தேகங்கள் எழுந்தன.
1. விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களில் ஏன் நல்ல படைப்புகள் மிகக் குறைவாகவே வருகின்றன? கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத்தான் தேடவேண்டும் போல் இருக்கின்றது?
2. ஏன் ஒவ்வொரு சிற்றிதழிலும் குறிப்பிட்ட ஒரு சிலரே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு சிற்றிதழில் வாடிக்கையாக எழுதுபவர்கள் அடுத்த சிற்றிதழுக்குக் கூட மாற்றி எழுதுவதில்லை? ஒவ்வொரு சிற்றிதழிலும், வாடிக்கை ஆசாமிகளைத் தவிர வேறு யாரும் எழுதுவதில்லை? (எழுதப்பட விடுவதில்லை?)
3. ஏன் சிற்றிதழ்களில் எழுதும் யாரும் வெகுஜன இதழ்களில் எழுதுவதே இல்லை?
4. சிற்றிதழ்கள் என்று சொல்லப்படுவன ஏன் சிலநூறுகளுக்கு மேல் செல்லுபடியாவதில்லை?
5. இணையத்தில் எழுதும் அற்புதமான ஒருசில எழுத்தாளர்கள் ஏன் வெகுஜன இதழ்கள் அல்லது சிற்றிதழ்களில் காணக் கிடைக்கவே மாட்டேன் என்கிறார்கள்? இது இந்த எழுத்தாளர்களில் பிரச்சினையா அல்லது இதழாசிரியர்களின் பிரச்சினையா?
6. ஒரு அருமையான படைப்பை (அது அச்சிலாகட்டும், இணையத்திலாகட்டும்) ஒருவர் படித்து விட்டு, இணையத்தில் 100-200 பேர் இருக்கும் ஒரு யாஹூ குழுமத்தில், 10-20 மட்டுமே பேசிக் கொண்டால் போதுமா?
7. சுவையான வாசிப்பு அனுபவத்தை பெரும்பான்மைப் பொதுமக்களிடம் கொண்டுபோகவே முடியாதா? அதென்ன அவர்களுக்கு வாய்த்தது வெகுஜன இதழ்களில் வரும் குப்பைகள்தானா? (எல்லாமே குப்பைகள் இல்லை, ஆனால் பெரும்பான்மையானவை குப்பைகள் என்பது என் எண்ணம்.) ஏன் இரா.முருகன் போன்றவர்கள் இப்பொழுது விகடன் போன்ற இதழ்களில் எழுதுவதில்லை, இவர்களை எழுதச் சொல்லி யாருமே கேட்பதில்லையா? இல்லை, இவர்கள் எழுதி அனுப்பினாலும் அவர்கள் தூக்கி எறிந்து விடுகிறார்களா?
8. இணையத்தில் பரவியிருக்கும் உலகத்தமிழர்களை (படைப்பாளிகள்/வாசகர்கள்), தமிழகத்தில் குறுக்கப்பட்டிருக்கும் படைப்பாளிகள்/வாசகர்களுடன் இணைக்க முடியுமா?
9. தமிழ் பேசும், படிக்கும் பெரும்பான்மை மக்களுக்குத் தற்காலத் தமிழில் சிறந்த படைப்பாளிகள் பலரைத் தெரியுமா?
ராகாகி மூலமாக ராகவன், முருகன், வெங்கடேஷ் என்று ஆரம்பித்து சில படைப்பாளிகளின் பழக்கம் கிடைத்தது. பதிப்பகங்கள், சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் ஆகியவை பற்றி பல விஷயங்கள் தெரிய ஆரம்பித்தன.
வாசகனாக, ஒத்த கருத்தினருடன் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. என்னென்ன செய்ய வேண்டும்?
1. படைப்பாளிகளை வாசகர்களுடன் நெருக்கமாக இணைக்க வேண்டும்.
2. சிற்றிதழ், வெகுஜன இதழ் என்ற பேதம் என்னைப் பொறுத்தவரை செயற்கையாகத் தோன்றுகிறது. ஒரு படைப்பாளி படைப்பை வெளிக்கொணரும் முன்னால், 'இது சிற்றிதழுக்கென, இது வெகுஜன இதழுக்கென' என்று நினைத்துச் செயல்படும்போது அந்த படைப்பு குறைபடுகிறது என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு இதழுக்கும் என ஒரு துல்லியமான நோக்கும், குறிக்கோளும் இருப்பதனால் (நிஜமாகவே இது இருக்கிறதா?) சில ஒழுங்குகளும், வரைமுறைகளும் ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். எல்லா படைப்புகளுமே எல்லா இதழ்களுக்கும் பொருந்துமெனச் சொல்ல முடியாது என்றும் புரிகிறது. ஆனாலும் ஒரு படைப்பாளியின் அனைத்துப் படைப்புகளையும் முழுவதுமாக மக்களிடம் கொண்டுபோக வேண்டும். இதற்கு வெகுஜன இதழ், சிற்றிதழ்களுக்கிடையேயான பிளவினைக் குறைக்க வேண்டும்.
3. தற்பொழுது சிறு வட்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை, பெரும்பான்மை மக்களிடம் கொண்டுபோக வேண்டும்.
4. வெளித்தெரியாமல் இருக்கும் திறமை மிக்க படைப்பாளிகளை வெளியே கொண்டுவர வேண்டும். புதிய, இளைய படைப்பாளிகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் களம் அமைத்துத்தர வேண்டும்.
5. இணையம் (வலைப்பதிவுகள், இணையக் குழுக்கள், மின் புத்தகங்கள்), அச்சுப் பதிப்பகம், இதழ் வெளியீடு ஆகிய பலவற்றையும் ஒருங்கிணைத்து, படைப்புகளுக்கான சந்தையை விரிவுபடுத்தி,
(அ) தங்கள் படைப்புகளை வெளிக்கொணர, படைப்பாளிகளுக்கு, ஒரு நல்ல மேடையும், நல்ல வருமானமும்
(ஆ) வாசகர்களுக்குத் தரமான படைப்புகளும்
கிடைக்குமாறு செய்ய வேண்டும்.
வரும் நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
சிலநாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த ஒரு இலக்கிய சந்திப்புக்கு என்னைக் கூப்பிடவில்லை என்று பெரிய ரகளை செய்துவிட்டேன். அப்பொழுது நான் செய்த அழும்பைப் பார்த்து அதிர்ந்தவர்கள் இப்பொழுது 'இலக்கியம்+சென்னை' என்று எது நடந்தாலும் என்னை அழைக்காமல் இருப்பதில்லை.
போனவாரம் ஒருசில படைப்பாளிகள் மாலனின் வீட்டுக்குப் போனபோது, ஒட்டிக் கொண்டு சென்றேன். கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் சிலர் இணையத்தை ஒருபோதும் தொட்டிருக்காதவர்கள். ஒருசிலர் சென்னைக்கு வெளியேயிருந்து இந்தக் கூட்டத்திற்கெனப் பிரத்தியேகமாக வந்திருந்தனர்.
இந்தக் கூட்டத்திற்கு என்ன பின்புலம்? என்ன அவசியம்? மாலனுக்கும், வந்த மற்றவர்களுக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஒரு வாசகனாக என்னுடைய கருத்துகளை இங்கு பதிவு செய்கிறேன்.
சிறுவயதில் பள்ளிச்சிறுவனாய் இருந்தபொழுது தமிழில் படிப்பது ஆரம்பித்தது. முதலில் காமிக்ஸ் புத்தகங்கள். அற்புதமாக தமிழில் பல காமிக்ஸ் புத்தகங்கள் அப்பொழுது கிடைத்து வந்தன. முழுக்க முழுக்க தமிழ்க்கதைகள் (சுட்டிக்குரங்கு கபீஷ்!), முழுக்க முழுக்க ஆங்கிலக் கதைகள் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டவை (இரும்புக்கை மாயாவி, முகமூடி அணிந்த வேதாளம், மந்திரவாதி மாண்டிரேக்!). இப்பொழுது இவையெல்லாம் எங்கே போயினவென்றே தெரியவில்லை. பின்னர் வாரப்பத்திரிகைகள், மாத நாவல்கள் என்று வெகுஜன இதழ்கள் ஒன்றை விட்டது கிடையாது. [அதற்கப்புறம் பெருமாள் கோயில் வெளிச்சுற்றில், பிற நண்பர்கள் வீட்டில் என்று மறைத்துவைத்துப் படித்த சரோஜாதேவி முதலான உன்னத இலக்கியங்களை வெளியே சொல்ல வேண்டாம்!]
அதையடுத்து அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நூலகத்தில் ஒரு பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தேன். அப்பொழுதுதான் மௌனி, தி.ஜா என்று ஆரம்பித்தேன். பின்னர் கிரிக்கெட் என்னை ஆக்ரமித்துக் கொண்டது. எட்டு வருடங்களுக்கு மேலாகத் தமிழ் படிப்பது முழுதும் நின்றுபோனது. தமிழில் எழுதுவது என்பது வீட்டிற்கு எழுதும் கடிதங்களாக மட்டுமே இருந்து, அதுவும் நின்றுபோய்ப் பத்து வருடங்களாகி இருந்தது. மீண்டும் தமிழ் உலகில் வாசகனாகப் புகுந்தது ஏப்ரல் 2003இல்தான். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப் புத்தகங்கள், அச்சில் வெளிவரும் இதழ்கள் (சிறிது, பெரிது), இணைய இதழ்கள், ராயர்காபிகிளப், மரத்தடி என்று நிறையப் படிக்க ஆரம்பித்தாயிற்று.
இந்த ஒன்பது மாதங்களில் ஒன்பது சந்தேகங்கள் எழுந்தன.
1. விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களில் ஏன் நல்ல படைப்புகள் மிகக் குறைவாகவே வருகின்றன? கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத்தான் தேடவேண்டும் போல் இருக்கின்றது?
2. ஏன் ஒவ்வொரு சிற்றிதழிலும் குறிப்பிட்ட ஒரு சிலரே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு சிற்றிதழில் வாடிக்கையாக எழுதுபவர்கள் அடுத்த சிற்றிதழுக்குக் கூட மாற்றி எழுதுவதில்லை? ஒவ்வொரு சிற்றிதழிலும், வாடிக்கை ஆசாமிகளைத் தவிர வேறு யாரும் எழுதுவதில்லை? (எழுதப்பட விடுவதில்லை?)
3. ஏன் சிற்றிதழ்களில் எழுதும் யாரும் வெகுஜன இதழ்களில் எழுதுவதே இல்லை?
4. சிற்றிதழ்கள் என்று சொல்லப்படுவன ஏன் சிலநூறுகளுக்கு மேல் செல்லுபடியாவதில்லை?
5. இணையத்தில் எழுதும் அற்புதமான ஒருசில எழுத்தாளர்கள் ஏன் வெகுஜன இதழ்கள் அல்லது சிற்றிதழ்களில் காணக் கிடைக்கவே மாட்டேன் என்கிறார்கள்? இது இந்த எழுத்தாளர்களில் பிரச்சினையா அல்லது இதழாசிரியர்களின் பிரச்சினையா?
6. ஒரு அருமையான படைப்பை (அது அச்சிலாகட்டும், இணையத்திலாகட்டும்) ஒருவர் படித்து விட்டு, இணையத்தில் 100-200 பேர் இருக்கும் ஒரு யாஹூ குழுமத்தில், 10-20 மட்டுமே பேசிக் கொண்டால் போதுமா?
7. சுவையான வாசிப்பு அனுபவத்தை பெரும்பான்மைப் பொதுமக்களிடம் கொண்டுபோகவே முடியாதா? அதென்ன அவர்களுக்கு வாய்த்தது வெகுஜன இதழ்களில் வரும் குப்பைகள்தானா? (எல்லாமே குப்பைகள் இல்லை, ஆனால் பெரும்பான்மையானவை குப்பைகள் என்பது என் எண்ணம்.) ஏன் இரா.முருகன் போன்றவர்கள் இப்பொழுது விகடன் போன்ற இதழ்களில் எழுதுவதில்லை, இவர்களை எழுதச் சொல்லி யாருமே கேட்பதில்லையா? இல்லை, இவர்கள் எழுதி அனுப்பினாலும் அவர்கள் தூக்கி எறிந்து விடுகிறார்களா?
8. இணையத்தில் பரவியிருக்கும் உலகத்தமிழர்களை (படைப்பாளிகள்/வாசகர்கள்), தமிழகத்தில் குறுக்கப்பட்டிருக்கும் படைப்பாளிகள்/வாசகர்களுடன் இணைக்க முடியுமா?
9. தமிழ் பேசும், படிக்கும் பெரும்பான்மை மக்களுக்குத் தற்காலத் தமிழில் சிறந்த படைப்பாளிகள் பலரைத் தெரியுமா?
ராகாகி மூலமாக ராகவன், முருகன், வெங்கடேஷ் என்று ஆரம்பித்து சில படைப்பாளிகளின் பழக்கம் கிடைத்தது. பதிப்பகங்கள், சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் ஆகியவை பற்றி பல விஷயங்கள் தெரிய ஆரம்பித்தன.
வாசகனாக, ஒத்த கருத்தினருடன் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. என்னென்ன செய்ய வேண்டும்?
1. படைப்பாளிகளை வாசகர்களுடன் நெருக்கமாக இணைக்க வேண்டும்.
2. சிற்றிதழ், வெகுஜன இதழ் என்ற பேதம் என்னைப் பொறுத்தவரை செயற்கையாகத் தோன்றுகிறது. ஒரு படைப்பாளி படைப்பை வெளிக்கொணரும் முன்னால், 'இது சிற்றிதழுக்கென, இது வெகுஜன இதழுக்கென' என்று நினைத்துச் செயல்படும்போது அந்த படைப்பு குறைபடுகிறது என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு இதழுக்கும் என ஒரு துல்லியமான நோக்கும், குறிக்கோளும் இருப்பதனால் (நிஜமாகவே இது இருக்கிறதா?) சில ஒழுங்குகளும், வரைமுறைகளும் ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். எல்லா படைப்புகளுமே எல்லா இதழ்களுக்கும் பொருந்துமெனச் சொல்ல முடியாது என்றும் புரிகிறது. ஆனாலும் ஒரு படைப்பாளியின் அனைத்துப் படைப்புகளையும் முழுவதுமாக மக்களிடம் கொண்டுபோக வேண்டும். இதற்கு வெகுஜன இதழ், சிற்றிதழ்களுக்கிடையேயான பிளவினைக் குறைக்க வேண்டும்.
3. தற்பொழுது சிறு வட்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை, பெரும்பான்மை மக்களிடம் கொண்டுபோக வேண்டும்.
4. வெளித்தெரியாமல் இருக்கும் திறமை மிக்க படைப்பாளிகளை வெளியே கொண்டுவர வேண்டும். புதிய, இளைய படைப்பாளிகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் களம் அமைத்துத்தர வேண்டும்.
5. இணையம் (வலைப்பதிவுகள், இணையக் குழுக்கள், மின் புத்தகங்கள்), அச்சுப் பதிப்பகம், இதழ் வெளியீடு ஆகிய பலவற்றையும் ஒருங்கிணைத்து, படைப்புகளுக்கான சந்தையை விரிவுபடுத்தி,
(அ) தங்கள் படைப்புகளை வெளிக்கொணர, படைப்பாளிகளுக்கு, ஒரு நல்ல மேடையும், நல்ல வருமானமும்
(ஆ) வாசகர்களுக்குத் தரமான படைப்புகளும்
கிடைக்குமாறு செய்ய வேண்டும்.
வரும் நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
Friday, December 26, 2003
பெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி
பாகிஸ்தான் அதிபர் பெர்வீஸ் முஷாரஃப் மீது கடந்த 11 நாட்களில் இரண்டாவது முறையாக கொலைமுயற்சி நடந்துள்ளது. இரண்டாவது தடவையும் முஷாரஃப் தப்பித்துள்ளார். முதல் முறையை விட இரண்டாவது முறை கொலைகாரர்கள் மிக அருகில் நெருங்கியுள்ளனர். முதல்முறை பாலத்தில் அடியில் வைத்திருந்த வெடிகுண்டு வெடிக்காததால் தப்பித்துள்ளார். இரண்டாவது முறை தற்கொலைப்படையினர் முஷாரஃப்பின் கார் மீது இரண்டு வெடிமருந்துகள் நிரம்பிய கார்களைக் கொண்டு மோத வந்துள்ளனர். ஆனால் என்ன நடந்தது என்று சரியாகத் தெரியவில்லை, முஷாரஃப்பின் காரின் கண்ணாடி மீது வெடித்துச் சிதறிய பொருட்கள் விழுந்துள்ளன. முஷாரஃப்பிற்குக் காயம் ஏதும் படவில்லை.
பா.ராகவன் இது நிஜமா, நாடகமா என்று சந்தேகப்பட்டு விளக்கமாக ஆராய்ந்துள்ளார். [ஏற்கனவே தெரியாதவர்களுக்கு: பா.ராகவன் கதையெழுத்தாளர் மட்டுமல்ல, தீவிர உலக அரசியல் விமரிசகரும் கூட. குமுதம் ரிப்போர்டரில் இவரது 'டாலர் தேசம்' என்னும் அமெரிக்கா பற்றிய தொடர் கட்டுரைகள் கடந்த 64 இதழ்களாக வந்துகொண்டிருக்கிறன. பாகிஸ்தான் பற்றி நிறைய எழுதியுள்ளார். சதாம் ஹுஸேன் பிடிபட்டபோது அதைப்பற்றிய இவரது விரிவான கட்டுரைகள் குமுதம் ரிப்போர்டரில் வெளியாகியுள்ளன.]
எனக்கு முதல் கொலைமுயற்சி நாடகம் போல் தோன்றினாலும், இரண்டாவதில் உள்ள தீவிரம் இது நிஜமாக இருக்கலாமோ என்று நம்பும்படியுள்ளது. இன்னமும் விவரங்கள் தேவை.
பா.ராகவன் இது நிஜமா, நாடகமா என்று சந்தேகப்பட்டு விளக்கமாக ஆராய்ந்துள்ளார். [ஏற்கனவே தெரியாதவர்களுக்கு: பா.ராகவன் கதையெழுத்தாளர் மட்டுமல்ல, தீவிர உலக அரசியல் விமரிசகரும் கூட. குமுதம் ரிப்போர்டரில் இவரது 'டாலர் தேசம்' என்னும் அமெரிக்கா பற்றிய தொடர் கட்டுரைகள் கடந்த 64 இதழ்களாக வந்துகொண்டிருக்கிறன. பாகிஸ்தான் பற்றி நிறைய எழுதியுள்ளார். சதாம் ஹுஸேன் பிடிபட்டபோது அதைப்பற்றிய இவரது விரிவான கட்டுரைகள் குமுதம் ரிப்போர்டரில் வெளியாகியுள்ளன.]
எனக்கு முதல் கொலைமுயற்சி நாடகம் போல் தோன்றினாலும், இரண்டாவதில் உள்ள தீவிரம் இது நிஜமாக இருக்கலாமோ என்று நம்பும்படியுள்ளது. இன்னமும் விவரங்கள் தேவை.




















